தமிழ்த்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்த்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 மே, 2016

மூவிடம்



                                     

இடம் மூன்று வகைப்படும். அவை
                        தன்மை
                        முன்னிலை
                        படர்க்கை
தன்மை
தன்னைப் பற்றி கூறும் சொல் தன்மை இடமாகும்.

எடுத்துக்காட்டு- நான் எழுதினேன், நாங்கள் எழுதினோம், நான் செய்தேன்

முன்னிலை
நமக்கு முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை இடமாகும்.

எடுத்துக்காட்டு- நீ கேட்டாயா?, நீங்கள் கேட்டீர்களா?

படர்க்கை
தன்னையோ, முன்னால் நிற்பவரையோ குறிக்காமல் வேறு ஒரு மூன்றாவது நபரைக் குறிப்பது படர்க்கை இடமாகும்.
படர்க்கை உயர்திணை அஃறிணை என்று இரு வகைப்படும்.

எடுத்துக்காட்டு- அவன், அவள், அவர்கள் – படர்க்கை உயர்திணை
                அவை, அது – படர்க்கை அஃறிணை

வியாழன், 5 மே, 2016

அறுவகைப் பெயர்கள்


                            அறுவகைப் பெயர்கள்
பெயர்ச்சொல்
ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை
                            பொருட்பெயர்
                            இடப்பெயர்
                            காலப்பெயர்
                            சினைப்பெயர்
                            குணப்பெயர்
                            தொழிற்பெயர்
பொருட்பெயர்;
பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும். 
 
 


எடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும்.
இடப்பெயர்
இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.


எடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம்.
காலப்பெயர்
காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.



எடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை
சினைப்பெயர்
சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.




எடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை.
குணப்பெயர்
குணம் – பண்பு. பொருட்களின் குணத்தை (பண்பை) குறிப்பது குணப்யெராகும்.




எடுத்துக்காட்டு – உண்மை, பெருமை, வெம்மை, செம்மை, பசுமை.
தொழிற்பெயர்
செய்யும் தொழிலைக் குறிப்பது தொழிற்பெயராகும்.

 





எடுத்துக்காட்டு – தச்சு, உழவு, ஆட்டம், காவலர்.

பின்வரும் சொற்கள் எந்த பெயரைக் குறிக்கும் என கூறுக
கண், பொறுமை, ஓட்டுனர், தை, கடை, கட்டில்.



புதன், 20 ஏப்ரல், 2016

தமிழ் எழுத்துக்கள்



                             தமிழ் எழுத்துக்கள்

முன்னுரை

        தமிழ் எழுத்துகளின் வகைகளையும்  அதை ஒலிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு  பற்றியும் சுருக்கமாக பார்க்கலாம்.
தமிழ் எழுத்துக்களை  உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் என இரண்டு வகையாக பிரிக்கலாம்.  

உயிர் எழுத்துக்கள்
     முதல் வரை உள்ள 12 எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கிறோம். உயிர் இன்றி எந்த உயிரும் உயிர் வாழ முடியாது, அதுபோல உயிர் எழுத்துக்கள் இன்றி எந்த எழுத்தையும் உச்சரிக்க முடியாது. பிற எழுத்துக்கள் பிறப்பதற்கு அடிப்படையாக இருப்பதால் உயிர் எழுத்து எனப் பெயர் பெற்றது. உயிர் எழுத்துக்களை தனியே ஒலிக்கலாம். உதாரணமாக அ-பசு, ஈ-உயிரினம்.

மெய் எழுத்துக்கள்
      க் முதல் ன் வரை உள்ள 18 எழுத்துக்கள் மெய் எழுத்துகள் எனப்படும். மெய் எழுத்துக்களை தனியே ஒலிக்க முடியாது. தனியே ஒலித்தால் பொருள் தராது. க் தனியே ஒலித்தால் எந்த பொருளும் தராது. உயிர் இன்றி மெய் இயங்காது.
க் என்ற மெய் எழுத்திற்கு முன்னால் “இ” என்ற உயிரும் பின்னால் “உ” என்ற உயிரும் மென்மையாக சேரும் போது க் என்ற மெய் எழுத்து தோன்றுகிறது.

உயிர்மெய்எழுத்துக்கள்
     முதல் வரை உள்ள 216 எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் எனப்படும். உயிரும் மெய்யும் சேர்ந்து தோன்றுவது உயிர்மெய் எழுத்தாகும். க் என்ற மெய் எழுத்தோடு “அ” என்ற உயிர் சேர்ந்தால் “க” என்ற உயிர்மெய் எழுத்து தோன்றுகிறது. இவ்வாறே பிற எழுத்துக்களும் தோன்றுகிறது.

மாத்திரை
     உயிர் மெய்  எழுத்தை  ஒலிக்க எடுத்துக் கொள்ளும்  கால அளவு மாத்திரை எனப்படும். ஒரு முறை கண்ணிமைக்கும் நேரம் அல்லது ஒரு முறை கைநொடிக்கும் நேரம் ஒரு மாத்திரை எனப்படும். எழுத்துக்களுக்கு ஏற்றார் போல் கால அளவு மாறுபாடுகிறது.

குறில் எழுத்துக்கள்
     ஒரு எழுத்தை உச்சரிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு குறைவாக இருந்தால் அது குறில் எனப்படும்.  அ, இ, உ, எ, ஒ போன்ற எழுத்துக்கள் ஒலிக்க  குறைந்த கால அளவு அதாவது ஒரு மாத்திரை கால அளவு எடுத்துக் கொள்வதால் இது குறில் எனப்படுகிறது.

நெடில் எழுத்துக்கள்
      ஒரு எழுத்தை உச்சரிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு அதிகமாக இருந்தால் அது நெடில் எனப்படும். ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஔ போன்ற எழுத்துக்களை உச்சரிக்க அதிக கால அளவு அதாவது இருமாத்திரை கால அளவு எடுத்துக் கொள்வதால் இது நெடில் எனப்படுகிறது.

மெய் எழுத்திற்குரிய மாத்திரை
      மெய் எழுத்துக்கள் குறுகிய காலத்தில் மறைந்து விடும். மெய் எழுத்தை உச்சரிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு அரை மாத்திரை ஆகும். உயிரும் மெய்யும் சேரும் போது உயிர் தெரியாது மெய் மட்டுமே தெரியும். க் என்ற மெய் எழுத்தோடு அ என்ற உயிர் எழுத்து சேரும் போது க என்ற உயிர்மெய் தோன்றும் க என்ற மெய்யே தெரியும். அ என்ற உயிர் எழுத்து தெரியாது.

ஆய்த எழுத்து
     ஆய்த எழுத்து எப்போதும் உயிருக்கும் மெய்யுக்கும் நடுவில் தான் இருக்கும். அஃது என்ற சொல்லில் வருவது போல உயிர்மெய் நடுவில் மட்டுமே ஆய்தம் இடம்பெறும். எனவே இது உயிருக்கும் மெய்யுக்கும் நடுவில் வைக்கப்படுகிறது. ஆய்த எழுத்து ஒலிக்க ஆகும் கால அளவு சில இடங்களில் ஒரு மாத்திரையாகவும் சில இடங்களில் இரண்டு மாத்திரையாகவும் இருக்கும்.

முடிவுரை
      இத்தகைய பாகுபாடு தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் இல்லை எனலாம். தமிழ் மொழியில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. இக்கட்டுரையில் தமிழ் எழுத்துக்களின்  வகைகளையும் அதை ஒலிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு பற்றியும் பார்த்தோம். 





திங்கள், 11 ஏப்ரல், 2016

ஏலாதி

                   Image result for ஏலாதி நூல்

முன்னுரை:

    பதிணெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் கணிமேதாவியர். இது 80 வெண்பாக்களைக் கொண்டது.ஏலம் முதலிய வாசனைப் பொருட்களை சேர்த்து தயாரிக்கும் மருந்தை ஏலாதிப்பொடி என்றும் ஏலாதிக் குளிகை என்றும் கூறுவர். இதை போன்று மனதிற்கு உகந்த நல்ஒழுக்கங்களை முதலாவதாக வைத்து புனையப்பட்ட பாடல்களை உடையதால் இது ஏலாதி எனப்பட்டது.

பெரியோர்க்கு உரிய தன்மைகள்:   
                   
தானே ஒருவனை கொலை செய்யாமல் இருத்தல். பிறர் கொலை செய்தலையும் விரும்பாதல், பொய் சொல்லாமல் இருப்பவர் பிறர் மனைவியை விரும்பாதவர். கீழ்மக்களுடன் சேர்தலை விரும்பாதவர். தீய சொற்களை பேசாமல் இருத்தல் ஆகிய இயல்புகள் பெருந்தன்மையில் பெரியவனுக்கு உரியனவாம்.

எளிது அரிது:

 சாவது எளிது, அரிது, சான்றாண்மை, நல்லது
 மேவல் எளிது, அரிது, மெய்போற்றல், ஆவதன் கண்
 சேறல் எளிது, நிலை அரிது, தெள்ளியர் ஆய்
 வேறல் எளிது, அரிது, சொல்.

விளக்கம்:

சாவது எளிது ஆனால் கல்வியில் சிறந்து விளங்குதல் அரிது திருமண வாழ்வை ஏற்பது எளிது ஆனால் பற்றற்ற ஒழுக்கத்தை காத்தல் அரிது. துறவறத்தின் கண் செல்லுதல் எறிது ஆனால் அதன் படு நடப்பது அரிது. எதனையும் சொல்லுதல் எளிது. ஆனால் தெளிந்து அதன்படி நடத்தல் அரிது.

நண்பர்களுக்கான ஆறு குணங்கள்:

 சாதல், பொருள் கொடுத்தல், இன்சொல், புணர்வு உவத்தல்
 நோதல், பிரிவில் கவறலே, ஓதலின்
 அன்புடையார்க்கு உள்ளன ஆறுகுணம் ஆக,
 மென் புடையார் வைத்தார் விரித்து
.
விளக்கம்:

 நண்பர்கள் இறந்தவிடத்து தாமும் துக்கம் தாங்காமல் இறத்தலும் அவர்களுக்கு பொருள்குடுத்து உதவி செய்தலும், இனசொல் கூறுதலும், அவர்களுடன் இருப்பதை விரும்புதலும், அவர்கள் வருந்தும்போது வருந்துதலும் , அவர்கள் பிரியும்போது, கலங்குதலும் ஆன ஆறு இயல்புகளும் நண்பர்களுக்கு இருக்க வேண்டிய குணமாகும்.

மங்கையற்கு அறிவுரை:

 மையேர் தடங்கண் மயில் சாயலாய்!
 மெய்யே உணர்ந்தார் மிக உரைப்பர்; பொய்யே
 குறளை, கடுஞ்சொல், பயன்இல் சொல்நான்கும்
 மறலையின் வாயினவாம் மற்று.

விளக்கம்:
 மைதீட்டிய அழகான பெரிய கண்கனையுடைய மயிலைப் போன்ற பெண்ணே! சான்றோர் மேன்மையான நற்சொற்களையும் மெய்யையும் மிகவும் பேசுவார்.பொய்யும் புறங்கூறலும் வன்சொல்லும் பயனில்லாத சொற்களும் ஆகிய இவை நான்கும் புல்லறிவு உடையான் வாயில் வருவனவாம்.

உதவ வேண்டியவர்கள்:
 தாய்இழந்த பிள்ளை, தலை இழந்த பெண்டாட்டி
 வாய் இழந்த வாழ்வினார், வாணிகம் போய் இழந்தார்
 கைத்தூண் பொருள் இழந்தார், கண்ணிலவாக்கு ஈந்தார்
 வைத்து வழங்கி வாழ்வார்

விளக்கம்:
தாயை இழந்த மகனுக்கும், தன் மணவனை இழந்த மனைவிக்கும், ஊமைக்கும், வாணிகத்தில் பொருள் இழந்தவர்க்கும், கண்ணில்லாத குருடர்களுக்கும் வேண்டுவன கொடுத்தவர்கள் பொருளை மிச்சமாய் வைக்காமல் தனக்கும், மற்றவர்க்கும் கொடுத்து உதவுவர்.


 முடிவுரை:

 இவ்வாறு வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களை கணிமேதவியார் ஏலாதியில் கூறியுள்ளார்.