இணையதள தொழில்நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இணையதள தொழில்நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 மே, 2016

யான் நுகருகின்ற தமிழ்மணம்..!!





வலைப்பதிவர் தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்களின் கருத்திற்கு இணங்க இன்று இப்பதிவில் தமிழ்மணத்தில் நான் பெற்றுவரும் அனுபவங்களை பகிரவுள்ளேன்.

தங்களுடைய சிந்தனைகளையும்,கருத்துக்களையும் எவ்வித தடைகளுமின்றி எவரும் படிக்க இயலும் என்பது எனக்கு தெரியாது.எங்கள் கல்லூரியில் சேர்ந்த பிறகு எனது தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன்  ஐயா அவர்களின் வலைத்தளத்தை ஒரு நாள் பார்வையிட்டேன்.உடனே அவரிடம் எனக்கும் இதுப் போன்று தங்களின் நட்பு வட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டேன்.அவர் தங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரியுமா என்று கேட்டார் தெரியாது என்றேன்.எனக்கு அதற்கான இலவச மென்பொருளான என்.எச்.எம்.ரைட்டரில்  பயிற்சி வழங்கினார்.பிறகு வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம் வழங்கினார்.

வலைப்பதிவு குறித்து என்னுடைய கருத்து நாம் எழுதுவது யார் படிக்க போகிறார்கள் என்று தான் நினைத்தேன்.ஆரம்பத்தில் எனக்கு எப்படி எழுதுவது என்று தெரியாமல் இருந்தேன்.பிறகு குணசீலன் ஐயா தமிழ்மணம், வலைப்பதிவுகளின் திரட்டியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.தமிழ்மணம் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.அவற்றில் எனது கருத்துக்களை மறுமொழியாக தந்தேன்.

தமிழ்மணத்தில் முதலில் நான் ஒரு மறுமொழியாளராக அறிமுகமானேன்.பிறகு எங்களுடைய கல்லூரி வலைப்பதிவை தமிழ்மணத்தில் இணைத்தோம் பிறகு ஒரு ஆசிரியராக வலம் வந்துக் கொண்டிருக்கிறேன்.

தமிழ்மணத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிவுகளை எளிமையாகப் பெற்றேன்.தொடர்ந்துப் பெற்று வருகிறேன்.உலகில் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் தமிழர்களால் தமிழில் பதிவுகளை தந்துவருகின்றனர்.தமிழ்மணம் மூலமாக எனக்கு ஒரு மிகப்பெரிய  நட்பு வட்டராமே கிடைத்துள்ளது.மூத்த வலைப்பதிவர்கள் நான் எழுதும் ஒவ்வொரு பதிவுக்கும் மறுமொழி அளித்து என்னுடைய தமிழ் எழுத்துகளுக்கு  ஆதரவு தருகின்றனர்.எங்கள் கல்லூரியில் நடைபெற்று வரும் கணித்தமிழ்ப் பேரவையின் சிறந்த மாணவி என்ற விருதும்,வலைப்பதிவின் சிறந்த உபயோகிப்பாளர் என்ற மற்றொரு விருதும் எங்கள் கல்லூரி முதல்வர் மா.கார்த்திகேயன் ஐயா வழங்கி பெருமைப்படுத்தியும் ஆதரவையும்  வழங்கி வருகிறார்.மேலும் கல்லூரி ஆண்டுவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வலைப்பதிவர்  நா.முத்துநிலவன்  ஐயா எனக்கு ஒரு நூலை பரிசாக அளித்தார்.இந்த தமிழ்மணத்தில் எனக்கென்ற ஒரு அடையாளத்தை பதித்து வருக்கின்றேன்.இவை அனைத்திற்கும்  மூலதாரம் என்னுடைய தமிழ் ஆசிரியரான முனைவர்.இரா.குணசீலன் ஐயா.அவர் எனக்கு ஆசிரியராகவும் ஒரு தந்தையாகவும்  இருந்து வழிக்காட்டி வருகிறார்.அவருடைய மாணவியாக அவரை பெருமிதம் அடையச் செய்வேன்.
                 
                          


தமிழர்களின் ஒரு குரல்,தமிழனின் அடையாளம்,வலைப்பூக்களின் பூந்தோட்டம்,தமிழின் மண் வாசனை அனைத்தும் ஒரே இடத்தில் சேர்ந்து நான் நுகருகின்ற  வாசனை தான் தமிழ்மணம்.பதிவு நீண்டு வருகிறது என்பதால் முடிகிறேன்.பொறுமையாக வாசித்த அனைவருக்குமே என்னைடைய நன்றிகள்.தொடர் ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

திங்கள், 28 மார்ச், 2016

இலவசமாகப் புத்தகங்களை தரவிறக்கலாம்..!!

கணினித் துறையில் உள்ள அனைத்து வகையான புத்தகங்களையும் ஆன்லைன் மூலம் எப்படி இலவசமாக தரவிலரக்கலாம் என்பது பற்றிய பதிவு தான்.

வெள்ளி, 18 மார்ச், 2016

தமிழ் விக்கிப்பிடீயாவை உருவாக்கியது ஒரு தமிழன்..!!

Image result for e.mayooranathan writer photo

தமிழ் விக்கிப்பீடியாவின் வரலாறு 2003, செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இன்று தமிழ் விக்கிப்பீடியாவில் பக்கங்கள் 2,47,367, கட்டுரைகள் 85,133, கோப்புகள் 9,020, தொகுப்புகள் 21,16,060, பயனர்கள் 96,425, சிறப்பு பங்களிப்பாளர்கள் 292, தானியங்கிகள் 182, நிருவாகிகள் 37, அதிகாரிகள் 4 என வளர்ந்து நிற்கின்றது. இதன் ஆரம்பக் காலம் எப்படி இருந்திருக்கும் எனும் கேள்வி விக்கிப்பீடியாவுக்குள் நுழையும் ஒவ்வொரு பயனருக்கும் ஏன் எனக்கும் மட்டுமன்றி, தமிழ் விக்கிப்பீடியா பற்றி அறிந்துக்கொள்ள முற்படும் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகின்றன. அதேவேளை விக்கிப்பீடியா குறித்தக் கருத்துக்கள், கட்டுரை எழுதுதல், உரையாடல்கள், ஆய்வுகள் நிகழும் போதும் இக்கேள்விகள் முதன்மையாகின்றன.

தமிழ்  விக்கிப்பீடியாவைப் பொருத்தவ வரையில்  இ. மயூரநாதன் தமிழ் விக்கிப்பீடியாவின் ஆரம்ப வளர்ச்சிக்கு வித்திட்டார். ஆரம்பக்காலங்களில் சிலர் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கும், இடைமுகத்தை உருவாக்குவதற்கும் என சிற்சில முயற்சி செய்துப்பார்த்துள்ளனர். இருப்பினும் இலங்கை, யாழ்பாணத்தைச்  சேர்ந்த இ. மயூரநாதன் என்பவரே 2003 நவம்பர் 20 ஆம் தேதி இணைந்து தமிழ் விக்கிப்பீடியாவின் இடைமுகத்தை உருவாக்கி, முறைமைப்படுத்தி ஆரம்பம் முதல் முனைப்புடன், தமிழ் விக்கிப்பீடியாவை ஒரு வளர்ச்சிப் பாதை நோக்கி கொண்டுவந்தவராவர். இன்றோ உலகெங்கும் வாழும் தமிழர்களின் முன்னெடுப்பால் தமிழ் விக்கிப்பீடியா ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்து, மேலும் முன்னேற்றத்துடன் முன்னோக்கிச் செல்கிறது.

மயூர நாதன் வரவின் பின்னரே தமிழ் விக்கிப்பீடியாவுக்கான ஒரு இடைமுகம் உருவாக்கப்பட்டுள்ளது. அவரின் முதல் தொகுப்பு 2003 நவம்பர் 20 ஆம் தேதி பதிவாகியுள்ளது. அவர் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான இடைமுகத்தை வடிவமைத்தப்போதும், ஏற்கெனவே பயனர்கள் செய்த தொகுத்தல் முயற்சிகளை அழிக்காமல் அப்படியே விட்டுள்ளார். அத்துடன் தமிழ் விக்கிப்பீடியாவின் தோற்றத்தின் போது மற்றவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளிலும் மயூரநாதன் முன்மாதிரியாக நின்று, அவற்றை முறையாக நெறிப்படுத்தி வந்திருப்பதை, தமிழ் விக்கிப்பீடியாவின் வரலாற்றுப் பக்கங்கள் சான்றுகளாக  காட்டுகின்றன. தற்போது விக்கிப்பீடியாவில் பயனர்கள் 96,425 பேர் புகுபதிகை செய்துள்ளனர். அதில் முன்னிலையில் நின்று பங்களிக்கும் சிறப்புப் பயனர்கள் 292 உள்ளனர். இப்போதைக்கு அனைத்துப் பயனரின் பங்களிப்புடன் தமிழ் விக்கிப்பீடியாவில் காணப்படும் கட்டுரைகளின் எண்ணிக்கை 85,133 ஆகும். இதில் சிறப்பு என்னவென்றால் 18% கட்டுரைகள் இ. மயூரநாதனுடையதாகவே இருப்பதே. 2015 ஆம் ஆண்டின்படி மயூரநாதன் எழுதியக் கட்டுரைகள் 4000 எனும் எண்ணிக்கையினை கடந்துச் செல்கிறது.

இவரது பயனர் பக்கம் 2003 நவம்பர் 25 ஆம் திகதி தொகுக்கப்பட்டுள்ளது. இவரது பயனர் பேச்சு தொடக்கம் 2005 மே 2 ஆம் திகதி என காணப்படுகின்றது.

தமிழன் என்று தலைநிமிரலாமே..!!தமிழன் கண்டுபிடிக்காதவை என்று எதுவுமில்லை இன்று..!!


எழில் நிரலாக்க மொழி



எழில் (Ezhil), தமிழில் எழுதும்வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிரலாக்க மொழியாகும்.[4]. இதில் தமிழ் கலைச் சொற்களைக் கொண்டே நிரல்கள் எழுத முடியும். இது இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒரு நிரல் மொழியாகும். இம்மொழி இன்னோர் பிரபல மொழியாகிய பைத்தானு(Python)டன் ஒத்து இயங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. பைத்தானின் நிரலகங்களைப் பயன்படுத்தி இயங்கும் இந்த மொழியில், ஆங்கிலத்திலும் நிரல்களை எழுதமுடியும்.
தற்சமயம் சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த மொழி, விரைவில் முழுச் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு எழில் நிரலாக்கம்

வெள்ளி, 11 மார்ச், 2016

'போட்டோஷாப்' தமிழன்..!!

ல்யாணம், காது குத்து முதல் ஃபேஸ்புக் வரை பல அலப்பறைகளையும், அட்ராசிட்டிகளையும் உண்டாக்க மிக முக்கிய காரணம் போட்டோஷாப். தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய சக்சஸுக்கு காரணம் இந்த  போட்டோ ஷாப் சாப்ட்வேர் தான். அப்துல் கலாமுடன்,  மகேந்திர சிங் தோனியுடன், நடிகர் ரஜினிகாந்துடன், கூகுள் 'சுந்தர் பிச்சை' உடன் என யாருடன் வேண்டுமானாலும் நாம் இணைந்து நிற்கும்படியான புகைப்படம் ரெடி பண்ண போட்டோஷாப் தான் உதவி புரியும்.
அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப்  சாப்ட்வேர் தான் முதன் முதலில் வெகுஜன மக்கள் பயன்படுத்தும் விண்டோஸ் ஓ.எஸ்.-ல் வந்து இன்றளவும் டாப்பில் இருக்கிறது. ஒவ்வொரு முறை போட்டோஷாப் இயக்கும்போதும், சீதாராமன் நாராயணன் என்ற பெயர் வரும். யார் இந்த சீதாராமன் நாராயணன் என்று என்றைக்காவது  நீங்கள் தேடியிருக்கிறீர்களா?
அவர் வேறு யாரும் இல்லை, நமது  தஞ்சாவூர்காரர் தான். போட்டோஷாப்பில் புரட்சியை ஏற்படுத்தியவர். இன்றைக்கு நாம் பயன்படுத்தும் போட்டோஷாப்பை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் இவர். சமீபத்தில் தமிழகம் வந்திருந்த அவருடன் சில நிமிடங்கள் உரையாடியதில் இருந்து சில துளிகள் இங்கே.


தமிழ்நாடு ஓவர் டூ போட்டோஷாப் எப்படி சாத்தியமானது?

கும்பகோணம் அடுத்துள்ள ஸ்ரீவாஞ்சியம் தான் என் சொந்த ஊர். வளர்ந்தது எல்லாம் மெட்ராஸில் தான். சென்னை சாந்தோம் பள்ளியில் தான் எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு முடிச்சேன். பிறகு, திருச்சி என்.ஐ டி-யில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்  முடிச்சேன். 1980களில், அப்போது தான் கம்ப்யூட்டர் வளர்ச்சி அடுத்தகட்ட நிலைக்கு தாவிக்கொண்டு இருந்தது. மெக்கனிக்கல் படிச்சாலும் எனக்கு கம்ப்யூட்டர் மேல் இருந்த மோகம் அடங்கவில்லை.
அந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டர் சைன்ஸ் குரூப்பே கிடையாது. வெளிநாடுகளில் தான் படிக்க வேண்டும் என்ற நிலை. அப்பாவும், அம்மாவும் கவர்மென்ட் வேலையில் இருந்தார்கள். எனக்கு 4 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன். கணினி மேல் இருந்த ஆர்வத்தில் பி.இ. முடிச்சவுடனே அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு அப்ளை செஞ்சேன்.
மெரிட்டில் சதர்ன் இல்லினோயிஸ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடச்சுது. ஆனால் மெக்கானிக்கல் படிக்க தான் சீட் கொடுத்தாங்க. அதனால, வேற வழியில்லாம எம்.எஸ். மெக்கானிக்கல் பண்ணிட்டு  பிறகு எம்.எஸ். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சேன். அதன் பிறகு கிறிஸ்டல் கிராஃபிக்ஸ் நிறுவனத்தில் 3டி கிராபிக்ஸ் செய்யும் வேலையில் இருந்தேன். அடுத்த இரண்டு வருடத்தில் அடோப் நிறுவனத்தில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

இன்றைய நவீன முறையில் பயன்படுத்தப்படும் போட்டோஷாப் மென்பொருளை எப்படி கட்டமைத்தீர்கள்?

தாமஸ் நோல், ஜான் நோல் என்ற இருவரும் தான் உலகிலேயே முதன் முதலில் கருப்பு-வெள்ளை படங்களை ஸ்கேன் செய்ய 'பார்னி ஸ்கேன்' என்ற சாப்ட்வேரை வடிவமைத்தார்கள். பின்னர் அந்த சாப்ட்வேரை அடோப் நிறுவனத்திற்கு அவர்கள் விற்று விட்டார்கள். விண்டோஸ் நிறுவனம், அதன் இயக்க மென்பொருளுக்கு ஏற்றவாறு போட்டோஷாப்  சாப்ட்வேரை மாற்ற அடோப் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தது.
அடோப்பின் முயற்சிகள் தோற்றுபோய் கொண்டிருந்த சமயத்தில் நானும், பீட்டர் மெரில் இருவரும் இணைந்து பல கட்ட சோதனைகளுக்கு பிறகு விண்டோசில் சி ++ மொழி உதவியுடன் நிரல் எழுதி வெற்றிகரமாக இயக்க வைத்தோம். அப்போது அது வரவேற்பை பெற்றாலும், மிக பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வரவில்லை.
டிஜிட்டல் கேமரா வந்த பிறகு தான் ஒரு மாபெரும் தாக்கத்தை அது உலகம் முழுவதும் ஏற்படுத்தியது. நாங்கள் முதன் முதலில் விண்டோசில் பயன்படுத்தப்படும் போட்டோஷாப் 2.5ஐ உருவாக்கி ஏறக்குறைய 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதும், என் தலைமையிலான குழு ஒவ்வொரு வெர்சனிலும் புது புது மாற்றங்களை கொண்டுவந்து கொண்டே இருக்கிறோம் .

Image result for சீதாராம நாராயணன் போட்டோ சாப்

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி  பிரமிப்பாக இருக்கிறதே . மாணவர்கள் சி++ கற்றுக்கொண்டு இருக்கும்போதே ஆண்ட்ராய்ட் வந்துவிட்டதே... மாணவர்கள் எப்படி அப்டேட் செய்து கொள்வது? 

நாம் பேசும் மொழி போல தான் கணினி மொழியும். கணினி மொழிகளில் ஏதாவதொன்றை நன்றாக கற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால், சி, சி++, ஜாவா. ஆண்ட்ராய்ட் என  எல்லாவற்றையும் அரைகுறையாக கற்றுக்கொள்வதே பிரச்னை. எந்த வழியில் ஒரு பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடிக்க போகிறோம் என்பது முக்கியமல்ல, எப்படி தீர்வு கண்டுபிடிக்க போகிறோம் என்பதே முக்கியம். இதை புரிந்துகொண்டால்போதும். சி++, ஜாவா, ஆண்ட்ராய்ட் என எதை கற்றாலும் நன்றாக கற்று அதிலேயே தீர்வை கண்டுபிடிக்கலாம். புரோக்ராம் நீளம் கொஞ்சம் கூட குறைய இருக்கலாம் அவ்வளவு தான்.

மொபைல் போன்களில் போட்டோஷாப் பயன்பாடு வெற்றி பெறவில்லையே ஏன்?

மொபைல் போன் தொடு திரைகளில் நாம் தொட்டு நகர்த்தும் துல்லியம் போய்விடுகிறது. பெரும்பாலும் ஆண்ட்ராய்டு தொழில்நுட்ப போன்களில் ஸ்டிக் பயன்படுத்தப்படுவதில்லை, ஸ்டிக் பயன்படுத்தினாலும் கூட கணிப்பொறியில் கிடைக்கும் துல்லியம் கிடைக்காது. ஏர் பிளாட்பார்மில் ஆண்ட்ராய்ட் போன்களில் நாங்கள் வெளியிட்டுள்ள அப்ளிகேஷனும் போதிய வரவேற்பு பெறவில்லை. ஆனால் நம்பிக்கை இழக்கவில்லை. விரைவில் கணினியில் பயன்படுத்தும் அதே போட்டோஷாப்பை மொபைலிலும் கொண்டு வருவோம். வெயிட் அண்ட் சீ என்றார்.

தமிழன்  தமிழின் ஓசையை உலகளவில் பரப்பி உள்ளனர்.இதை அறிந்துக் கொண்டு பெருமை அடைவோம் நாம் தமிழன் என்றும் தமிழ் நம் தாய்மொழி என்றும் தலை நிமிர்ந்து நிற்கலாம்..!!
நன்றிகள் பல நான் இதை அறிந்துக் கொள்ள உதவியது விகடன் செய்தித்தாள்..

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

கூகுள் இல்லம்..!!!

இது பெங்களூருவில் இருக்கும் கூகுள் இல்லம். அந்த நிறுவனம் உருவாக்கும் புதுமையான கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவதற்காக இப்படி ஒரு தியேட்டர் போன்ற இடத்தை அலுவலக வளாகத்தில் அமைத்திருக்கிறார்கள்.