அ.கோகிலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அ.கோகிலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 மார்ச், 2017

கண்ணாடி

            Image result for கண்ணாடி      
நான் ஒரு கண்ணாடி நீ
சிரித்தால் நானும் சிரிப்பேன் நீ
அழுதால் நானும் அழுவேன் நீ
கோபம் பட்டால் நானும் கோவபடுவேன் நீ
அடித்தால் நான்  திருப்பி அடிக்க மாட்டேன்
ஏனென்றால் நான் உடைந்து விடுவேன்...

                                                                                                                

வியாழன், 29 டிசம்பர், 2016

விருதுகள் மற்றும் தொடங்கப்பட்ட ஆண்டு


Image result for விருதுகள்

விருதுகள் மற்றும் தொடங்கப்பட்ட ஆண்டு

அசோக சக்ரா விருது      -  1952
சாகித்ய விருது            -  1954
ஞான பீட விருது          -  1961
தாதாசாகிப் விருது         -  1969
வியாஸ் சம்மான் விருது   -  1991
சரஸ்வதி சம்மான் விருது  -  1991

   விளையாட்டு விருதுகள்
அர்ஜூனா விருது        -  1961
துரோனாசார்யா விருது   -  1985
தயான் சந்த் விருது       -  2002



விருதுகள்

     
Image result for விருதுகள்

Ø சாகித்ய விருது
Ø தமிழக அரசின் விருதுகள்
Ø இயல் விருது
Ø எர்ன்ஸ்ட் மற்றும் யங் விருது
Ø வியாஸ் சம்மான் விருது
Ø சரஸ்வதி சம்மான் விருது
Ø சாந்தாராம் விருது
Ø இந்திய  பெருமை விருது
Ø தாதாசாகிப் பால்கே விருது
Ø ஞான பீட விருது
Ø அசோக சக்ரா விருது


சனி, 17 டிசம்பர், 2016

பெண்ணின் நட்பு..!!



Related image


நீ பெண்ணாக இரு
  ஆனால் பெண் அடிமையாக இருக்காதே
நல்ல முறையில் வாழ்
  கெட்டதை செய்ய நினைக்காதே
உறவுடன் இணைந்து இரு
  ஆனால் உறவை பிரிக்காதே
நண்பர்களுடன் பழகு
  ஆனால் நண்பர்களை விட்டு செல்லாதே..!!

புதன், 14 டிசம்பர், 2016

காலத்தின் அருமை


Image result for காலம்
  • தேர்வில் தவறிவிட்ட மாணவனுக்கு தெரியும் ஓர் ஆண்டின் அருமை..!
  • குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை பெற்றெடுத்த தாய்க்க தெரியும் ஒரு மாதத்தின் அருமை..!
  • வார இதழ் ஆசிரியருக்கு தெரியும் ஒரு வாரத்தின் அருமை..!
  • காதலிக்காக காத்திருக்கும் காதலனுக்கு தெரியும் ஒரு மணிநேரத்தின் அருமை..!
  • இரயிலைத் தவற விட்ட பயணிக்குத் தெரியும் ஒரு நிமிடத்தின் அருமை..!
  • விபத்தில் நூலிலையில் தப்பித்தவற்கு தெரியும் ஒரு வினடியின் அருமை..!
 காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எனவே ஆண்டோ மாதமே வாரமே நொடியோ எல்லா நேரத்தையும் பொன் போல போற்றி வாழ்ந்தால் வாழ்கையில் வெற்றி நிச்சயம்..!

                                                                                                             ஐ.ரம்யா,
இரண்டாமாண்டு ஆங்கிலத்துறை.

வெள்ளி, 9 டிசம்பர், 2016

அப்துல்கலாம் நினைவு கவிதை

Image result for a.p.j


அன்று என் பிறந்த நாள் 
      இன்றோ அப்துல்கலாம் இறந்த நாள்
அன்று நான் யோசித்தது என்னமோ
      இன்றோ அவர் கூறும் கனவுகள்
கவிதையின் இனிமையில்
     சுவைத்தது அவர் கதைகள்
காற்றின் சுவாசத்தில்
     மிதந்தது அவர் வார்த்தைகள்
வாழ்வின் எல்லையில்
     அவர் எடுத்த முடிவுகள்

2020-ல் வாழ்க இந்தியா என்று கூற
    அவர் மறைந்தார் கல்லறையில்.....

சனி, 24 செப்டம்பர், 2016

வானம் தொட்டுவிடும் தூரம்தான்


எங்கள் கல்லூரியின் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் வா.சுரேசு அவர்களால் எழுதப்பட்ட கவிதையினை இங்கு பகிரவுள்ளேன்.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

தன்னம்பிக்கை 10




Image result for rama kaviyam
(தன்னம்பிக்கை தொடர்கிறது…)

உங்கள் உறவினர்களில் யாருடனாவது உங்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டிருக்குமெனில், சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். அதிகப்படியான பேச்சுதான் அதற்கு மூல காரணமாக இருந்திருக்கும்.

எவ்வளவு அதிகமாக வீண் வார்த்தைகளைப் பேசுகிறோமோ, அவ்வளவு அதிகமாகப் பாவம் செய்கிறோம் என்று பொருள். எவ்வளவு கண்ணியத்துடன் அமைதி காத்துக் கொள்கிறோமோ அவ்வளவு புண்ணியம் செய்கிறோம் என்று பொருள்.

நம்உடம்பிலுள்ள கெட்ட கொழுப்புகள் ஏற்படுத்தக்கூடிய பிரச்சனைகளைவிட, ‘வாய்க்கொழுப்பு’ ஏற்படுத்துகின்ற பிரச்சனைகள் மிகக் கொடியவை. எனவே நாம் எதை அடக்குகிறோமோ இல்லையோ நாவை அடக்குவது அவசியம்.

‘அவரை மாதிரி ஒரு ஆளை நீங்க பார்க்கவே முடியாது. வம்புதும்பு கிடையாது. அளவோட அருமையா பேசுவாரு. ரொம்ப அமைதியான மனுஷன்’ என்று ஒருவரைப் பற்றிச் சொல்லக் கேட்கும்போது, அந்த மனிதர் மீது தானாக ஏற்பட்டுவிடுகிறது.

எந்தச் சூழ்நிலையிலும் உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக இருந்து பாருங்கள். அநீதியாகப் பேசுகிறவர்களும் அக்கிரமக்காரர்களும் உங்களை விட்டு விலகி ஓடிவிடுவார்கள்.

எனவே அளவோடு பேசி, உங்கள் மதிப்பையும் மகிழ்ச்சியையும் காத்துக் கொள்ளுங்கள்.

அதுதான் வாழ்வெனச் சொல்லுகிறேன்.
நீங்கள் வாழ்வாங்கு வாழ்ந்திடச்  சொல்லுகிறேன்.
                     
                        நன்றி!!!



தன்னம்பிக்கை 9

                 Image result for rama kaviyam

(தன்னம்பிக்கை தொடர்கின்றது..)

பரதா ! நம் தந்தை நான்கு பிள்ளைகளைப் பெற்றார். மூத்தவன் ‘எனக்கு நாடு வேண்டாம். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய காடுதான் வேண்டும்’ என்று சொல்லிச் சென்றுவிட்டான். அவனுக்கு உறுதுணையாக இருப்பதே பெருமை என்று இலக்குவன் அவனுடன் சென்று விட்டான். இப்படிச் சென்றவர்கள் இருவரும் உரிய காலம் கடந்தும்கூட இன்னும் வரவில்லை என்பதால் நீயோ  நெருப்பில் விழப்போவதாகக் கூறுகிறாய். அப்படியானால் ஆட்சியை ஏற்றுக்கொள்ள நான்தான் கிடைத்தேனா?’ என்று கேட்கிறான்.

ராம காவியத்தில் சத்ருக்கனன் பேசியது இவ்வளவுதானே. ஆனால் சரியான நேரத்தில் நறுக்கென்று பேசிகிறான் அவ்வளவுதான்!

ஆனால் இங்கே நிலைமை வேறு. நாம் பார்க்கும் இடங்களிலெல்லாம், பெரும்பாலான மனிதர்கள் நிறைய பேசிகிறார்கள்; பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

அவர்கள் பேச்சுகளில் பெரும்பகுதி வீண்கதைகள்; பொய்யான தகவல்கள்; அர்த்தமற்ற வாக்குகள்வாதங்கள்.

அடுத்தவரைக் கெடுத்துப் பேசுவதென்றால் விடியவிடிய ஒரு சொட்டுத் தண்ணீர்கூட குடிக்காமல் பேசுவார்கள். வீண்பழி சுமத்துவதென்றால் அது அவர்களுக்குத் தேன் குடிப்பதுபோல்.

‘புறம் பேசுதல் என்பது இறந்துபோன தன் சகோதரனின் இறைச்சியைப் புசிக்க விருப்பம் கொள்ளுதலுக்கு சமம்’ என்று திருக்குர் ஆன் கூறுகிறது. ஒருவரை ஒருவர் நிந்தனை செய்தால், வீண்பழி சுமத்தினால், அதனால் விளைகின்ற பாவம், யார் அந்தச் செயலை முதலாவது தொடங்கினாரோ அவரையே சாரும் என்றும் அது நம்மை எச்சரிக்கிறது.

தூங்கிற நேரம் தவிர மீதி நேரமெல்லாம் பேசிக் கொண்டே இருப்பவர்கள் பிரச்சினைக்குரியவர்கள். அநீதியான வார்த்தைகளும், பொய்யும் புரட்டும் அவர்களிடமிருந்து வெளிப்படும்.

                    
                                         (தொடரும்..)     

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

தன்னம்பிக்கை 8


Image result for ramayana kaaviyam photos


(தன்னம்பிக்கை தொடர்கின்றது…)
   
    நிறைய பேச வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சொல் பேசினாலும் மனதிற்கு நிறைவாகப் பேச வேண்டும். இல்லையென்றால் மவுனமாக இருப்பது உத்தமம்.
    
   பன்னீராயிரம் பாடல்களைக் கொண்ட ராமாயணத்தில் சத்ருக்கனன் எங்கே பேசுகிறான்? அவன் வாய்திறந்து பேசியதாக ஒரே ஒரு பாடலைத்தானே கம்ப காவியத்தில் நாம் காண முடிகிறது.
    
    வனவாசம் சென்ற ராமன், பதினான்கு ஆண்டுகள் ஆகியும் நாட்டுக்குத் திரும்பிவரவில்லை. எனவே, பரதன் ஏற்கனவே ராமனிடம் சொல்லியிருந்தபடி நெருப்பில் வீழ்ந்து உயிரைத் துறக்க முடிவு செய்கிறான்.
     
    நாட்டின் பொறுப்பை ஒருவரிடம் தந்து, அதை ராமனிடம் ஒப்படைக்கச் செய்ய வேண்டும். எனவே சத்ருனக்கனனை அழைத்து, அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறான்.
     
    அப்போதுதான் சத்ருக்கனன் அந்த முழுக்காவியத்திலும் முதன் முறையாக வாய்திறந்து ஒரே ஒரு பாடல் மூலம் தன் கருத்தைத் தெரிவிக்கின்றான்.

                                            
                            (தொடரும்..)

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

தன்னம்பிக்கை 7

Image result for மன அமைதி


(தன்னம்பிக்கை தொடர்கின்றது…)

    அடிதடி, கூச்சல், அலறல், அழுகை – நிம்மதியற்ற வீடுகள். அந்தக் குடும்பங்களிலுள்ள பிள்ளைகள்தான் பாவம்! எப்படி படிப்பார்கள்? அமைதியான சூழலும் மகிழ்ச்சியும் இல்லையென்றால் அவர்கள் எப்படித்தான் வளர்ச்சியடைவார்கள்!
   
   இருவரில் ஒருவர் அமைதியாக இருந்துவிட்டால் போதும். இன்னொருவரின் பயங்கரமான வார்த்தைகள் எல்லாம் பலமிழந்து விழுந்துவிடும்.
   
   தெருவீதிகளில் திடீர் திடீரென சண்டை சம்பவங்களைப் பார்க்க முடியும். இருவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர்களில் இன்னொருவனை அரிவாளால் வெட்டிவிடுகிறான். எதிர்பாராதவிதமாக ஒரு கொலையே நடந்து முடிந்துவிடுகிறது.
   
   காரணம் என்ன? அனல்தெறிக்கும் வார்த்தைகளின் மோதல்கள். எனவே எப்போதும் அமைதி காப்பதே நலம்.

                                (தொடரும்..)

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

தன்னம்பிக்கை 6


Image result for தன்னம்பிக்கை சித்தர்

(தன்னம்பிக்கை தொடர்கின்றது..)
    
   ஒவ்வொரு நாளும் ஒருமணி நேரமாவது அமைதியாக இருந்து பாருங்கள். மயக்கங்கள் நீங்கி மனதில் தெளிவு ஏற்படும். எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதெல்லாம் புரியவரும். பிரச்சனைகளை சர்வ சாதாரணமாக மேற்கொள்வதற்கான மனோபலம் வந்துவிடும். ஒருமணி நேர அமைதி என்பது ஒருமணி நேர தியானத்தைப்போல் உங்களுக்குள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
    
   அமைதி, மவுனம், நிதானம் எல்லாம் ஒன்றுதான். அது நமக்குள் இல்லையெனில், நிம்மதியும் இல்லாமல் தான் போய்விடும்.
    
   சில வீடுகளில் கணவன்-மனைவி சண்டை தெருக்கோடி வரையிலும் கேட்கும். அவன் ஒரு வார்த்தை சொன்னால், பதிலுக்கு அவள் பத்து வார்த்தை பேசுவாள். அவள் பேசிவிட்டால் கையில் கிடைத்ததைத் தூக்கி அவன் எறிவான்.
                      
                               (தொடரும்..)