திங்கள், 17 பிப்ரவரி, 2020

வெற்றி

காலை நேரத்தில் கடுமையாக உழைத்துப் பழகியவன்
வாழ்க்கையில் துரிதமாக வெற்றியை அடைவான்.
                   எஸ்.தோனிஸா 

இந்தியாவின் முதல் பெண்மணிகள்

ஜனாதிபதி                      -     பிரதீபா பாட்டில்
பிரதமர்                            -     இந்திரா காந்தி
முதல் - மந்திரி             -     சுசேதா கிருபளானி
கவர்னர்                           -     சரோஜினி நாயுடு
வக்கீல்                             -      ரெஜினா குகா
மருத்துவர்                     -      ஆனந்திபாய்   ஜோஷி
பொறியாளர்                  -      லலிதா
ஐ.ஏ.எஸ்                          -      அன்னா ஜார்ஜ்
ஐ.பி.எஸ்                         -       கிரண் பெடி
நீதிபதி                              -       அன்னா சாண்டி

சனி, 15 பிப்ரவரி, 2020


47.இறப்பில் தான் பிறப்பு
இன்பமான வீட்டில்
இனிக்கும் சொந்தங்கள்
இனிமையான நாட்டில்
இருக்கும் பந்தங்கள்
இறப்பின் முடிவு
இனியொரு பிறவின் தொடக்கம்
இருளின் தேடல் தான்
வெளிச்சம் என்ற வெற்றி
இவ்வையம் மூழ்கட்டும்
மகிழ்ச்சியில் நிறையட்டும்
நெகிழ்ச்சியின்னம் தொடரட்டும்..

48.நினைப்பதெல்லாம் செய்திடுவோன்
நீ சொல்ல நினைப்பதெல்லாம்;
என்னிடம் சொல்வதில்லை;
நான் கேட்க தவிப்பதெல்லாம்;
உனக்கு தெரிவதில்லை,
நீ சொல்லிவிட்டால், நான் கேட்டிடுவேன்
உன்னை சொல்ல வைத்து, நான் பார்த்திடுவேன்.


49.இறுதிவரை உடனிருப்பேன்
உன்னை காண காலையெழுந்து
கதிரவனை காலை தொழுது
கரம் ஈட்டிய காரம் உண்டு
கதை பேசிய கவியை மறந்து
காற்றோடு தான் உன்னை தொடர்ந்து
கரையோடு, தான் காத்திருந்தேன்.
கண் இமைக்கும் நொடியினிலே
காலை என்னும் விடியலிலே
கண் இமைக்குள் வந்து நின்றாய்,
கள்ளகபடமில்லா காதல் தந்தாய்,
காலமெல்லாம் கை பிடித்து,
கடைசிவரை உடனிருப்பேன்………
50.துயரம்
காலம் என்பது வரையறையானது
கனவுலகில் எல்லாம் வன்முறையானது
கடலில் நிலவும் கலங்கியே போனது
கடைசியில் வானும் வரட்சியில் வாழ்ந்தது





41.உன்னை விட்டு பிரியிலே
கண்கள் கூட கலங்கவில்லை
கைகள் கூட அசைக்கவில்லை
நெஞ்சம் கொஞ்சம் தயங்கவில்லை
நினைவை தேடி ஏங்கவில்லை
மனதில் என்றும் மாற்றமில்லை
மயக்கம் தான் மரணமில்லை
நம்
உறவிற்கு என்றும் முடிவேயில்லை..


42.காத்திருக்கிறோம், கரையேருவோம்
விடியலுக்காக காத்திருக்கிறது சூரியன்
சூரியனிற்காக காத்திருக்கிறது தாமரை
மாலைக்காக காத்திருக்கிறது நிலவு
நிலவிற்காக காத்திருக்கிறது நதிகரை
நீண்ட வானில் நீயும் நானும்
சூரியனாய், நிலவாய்
முழுமதி பெற காத்திருக்கிறோம்
நிகழ்காலத்தால் காய்த்திரிக்கிறோம்
நிறைவேற்றியே கரையேருவோம்.



43.கருமை நிற கண்ணா
கருமேகம் தான் மழையை உண்டாக்கும்
கருக்கரும்பு தான் சுவையை உண்டாக்கும்
கரம் ஒன்று தான் உழைப்பை உண்டாக்கும்
கரும்பலகை தான் கல்வியை உண்டாக்கும்
கருமுடி தான் அழகை உண்டாக்கும்
கருநிறன் தான் ஈர்ப்பை உண்டாக்கும்
கருவிழி தான் காட்சியை உண்டாக்கும்
கற்பு தான் பெண்மையை உண்டாக்கும்
இவையனைத்தும்
கருக்கொண்ட இடம் எங்கோ அறியவில்லை
இடம் கொண்டது
உன்னில் தான் என் கண்ணா
44.எனக்கெனவே
அன்பாய் என்னை பார்த்துக்கொள்
ஆறுயிரில் என்னை சேர்த்துக்கொள்
அழகாய் நீயும் பூத்துக்கொள்
-என் மனதில் மட்டும்!



45.இளைய சமுதாயமே கைகொடுப்பீர்
சிந்தையில் சிந்தித்தால்,
நான் மந்திரம் போதித்தால்,
விந்தையால் விதை விதைத்தால்,
மந்தையில் வளம் நீ படைத்தால்,
சந்தையில் சாதிப்பாய், சரித்திரம் நீ படைப்பாய்,
சாகச உடைஉடுப்பாய், சாதியை நீ உடைப்பாய்,
சமரசம் அதை தொகுப்பாய், சங்கமம் நீ தொகுப்பாய்,
சங்க நூல் வழி மதிப்பாய்நீ
தமிழனாய் தடம் பதிப்பாய்

46.இளமையிலே வலிமைகளே
இளமை காலமிது, இனிமை காலமாம்,
இனிமை காலமிது, இன்பம் காணுமாம்,
இகழ்ச்சி தனை, இன்று ஏற்குமாம்,
இழிவுதனை, கொன்று புதைக்குமாம்,
புகழ்ச்சி அதை மனதில் பதுக்குமாம்,
வளர்ச்சி பெற நாளும், உழைக்குமாம், - தன்
உயிரைவிட, உறவை வளர்க்குமாம்,
உயர்ந்த உச்சிகளும், அதற்கு
உதிரி பூக்கலாம்!..




36.உன்னோடு நான்
உன்னோடு உயிராக, உயிரோடு உயர்வாக
உன்னத உணர்வோடு உந்தன் உரவோடு
உயிர்வாழ்வேன், உலகினிலே!
ஊசலாய் உய்வேன், உன் மனதினிலே!
உன்னால் தானே, உரைந்தேன் காதலிலே..






37.காதல் கவிதை
கவிதை சொல்ல நினைக்கிறேன்உன்
கண்கள் கண்டு வியக்கிறேன்
கடந்து செல்ல நினைக்கிறேன்
கரைந்தும் நான் கிடக்கிறேன்
கடலில் கலைய நினைப்பினும்
கரையோரம் நின்று தவிக்கிறேன்
கண் முன்னால் நீ நின்றால்
கண் இமைக்க கூட வெறுக்கிறேன்
காதல் சொல்ல நினைக்கிறேன்
உன் பெயரை தானே ஜெபிக்கிறேன்
38.உன்னை கண்டேன்
உன்னை ஏனோ நான் கண்டுக்கொண்டேன்
என்னை நானே உன்னில் விட்டுச்சென்றேன்
தன்னால் நானும் பற்றுக்கொண்டேன்-உன்
முன்னால் நானும் கற்றுக்கொண்டேன்-உன்னை
உற்று நான் கற்றுக்கொண்டேன்……..






39.தலைவா
கவிதை என்ற தலைப்பில்
தலைவா உன்னை நானும் சந்திக்கிறேன்
சரித்திரம் என்ற தலையனை
சொல்லை கற்பித்தேன்
கலைகளை எல்லாம் உன்
கண் முன்னாலே சிற்பித்தேன்.
கவனம் சிதறா கவனிக்க உன்னை
என் கண்களை நானும் அற்பித்தேன்
அழகுற காதல் சிற்பம் அமைய
நானே முற்பித்தேன்
அனைவரும் வண்ணம் களையரவே
நான் வெற்பித்தேன்
வேண்டுதல் இன்றி காணுதல் இல்லை
உன்னை என்று மெய்ப்பித்தேன்




40.தொடர்வோம்
நான் என்பது வினா?
நீ என்பது விடை!
நாம்  என்பது தொடர் கதை……