திங்கள், 26 ஆகஸ்ட், 2019

அம்மா

என்னைச் சுவாசிக்க
வைத்தவளுக்கு...
நான் வாசித்த முதல் கவிதை
அம்மா...

அதில் அவள் பெற்ற
ஆனந்தத்தை என்றும்
நான் கொடுக்க  வேண்டும்
என்று நினைக்கிறேன் 

ம.ஆர்த்தி
முதலாமாண்டு கணிதம்

குறிப்பு: “தினத்தந்தி” நாளேட்டின் 29.07.2019-ஆம் தேதியிட்ட பதிப்பில் “மாணவர் ஸ்பெஷல்” என்ற பகுதியில் இக்கவிதை இடம்பெற்றது.




திங்கள், 12 ஆகஸ்ட், 2019

☺☺☺.....வேளைக்கு போய் ஆயுளை கொறச்சிக்காதீங்க.....!!!!☺☺☺☺

முயல்
ஓடுகிறது, தாவுகிறது, குதிக்கிறது, சுறுசுறுப்பாக இருக்கிறது.....
ஆனால் 15வருடங்கள்
தான் வாழ்கிறது.....
ஆமை
ஓடுவதில்லை, குதிப்பதில்லை, ஏன்...!!!! எதுவும் செய்வதில்லை.
ஆனால் 150 வருடங்கள் வாழ்கின்றன.
இதனால் அறியப்படும் நீதி..
வெட்டியா இருந்தால்
உன்னுடைய லைப் கெட்டியாக இருக்கும்... அதனால் யாரும்
வேளைக்கு போய் ஆயுளை கொறச்சிக்காதீங்க.....☺☺☺☺☺☺☺😊😊😊😊☺☺☺☺

சனி, 10 ஆகஸ்ட், 2019

வாழ்க்கை என்பது....!!!


நாம்பா  விரும்புற பாட்டை
போட்டுக் கேட்க ....
வாழ்க்கை ஒன்னும்
Mp3 player இல்ல....
அது FM Radio மாதிரி...
அது போடுற பாட்டை
நாம்ப ரசிக்க தான் கத்துக்கனும்...!!!

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

படித்ததில் பிடித்தது......(சிந்தித்து பாருங்கள்)

மண்ணை வச்சி பொண்ணு செஞ்ச
காலம் மாறி போயாச்சி....
பொண்ணு வித்து மண்ணு வாங்கும்
காலத்துக்கு வந்தாச்சி.....
விளை நிலமா இருந்த மண்ணை
வெறு நிலமா போட்டாச்சி.....
விதை நெல்லு போட்ட மண்ணில்
விஷம் எடுக்க துணிந்தாச்சி......
பாட்டி சொன்ன வைத்தியம் எல்லாம்
முக நூலில் போட்டாச்சி.....
வைத்தியம் சொன்ன பாட்டியோட முகம் கூட .....
மறந்து போயாச்சி.....
விவசாயம் வேணுமுன்னு குறும் படமும் பாத்தாச்சி.....
விவசாயி ஆக மட்டும் .....
யார் மனமும் மறுத்தாச்சி......