ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

தமிழ் உணவின் சிறப்பு 🌶️🍋🥘


பொதுவாக நம் தமிழ் உணவில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு காரணம் உண்டு. அதுபோல தான் நம் இலையில் ஓரத்தில் உள்ள ஊறுகாய்கும் ஒரு அர்த்தம் உண்டு. ஆம் நமது வயிற்றில் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆக நம் வாயில் எச்சில் நன்றாக சுரக்க வேண்டும். அதனால் தான் இந்த பண்டம் இலையில் வைக்கப்படுகிறது ஏனென்றால் இதில் தான் காரம், உப்பு, புளிப்பு என்ற மூன்று விஷயங்கள் சேர்ந்து உள்ளன. மேலும் இவை அந்த காலத்தில் சுத்தமான நல்லெண்ணெய் மற்றும் கலபடம் இல்லாத பொருளை கொண்டு செய்து ஜாடியில் அடைத்து வைத்தனர் அது நீண்ட காலத்திற்கு கெடாமல் இருந்தன. ஆனால் இப்போது செய்யப்படும் ஊறுகாய் சுத்தம் இல்லாத பொருள்கள் மற்றும் வினிகர் சேர்க்கபடுவதால்  உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே எந்த பொருளையும் அளவுக்கு மீறி சேர்த்து கொண்டால் ஆபத்து தான்.

வாகை🏆🏆🏆🏆

             

நம் வாழ்வில் வெற்றியை தேடி ஓடி கொண்டிருக்கிறோம் ஆனால் இந்த சில விஷயங்களை பின் பற்றினால் நிச்சயம் வெற்றி கிட்டும் என்பதை அனுபவத்தால் உணர்ந்த சில குறிப்புகள் இதோ
1. எந்த பொருளின் மீடும் பற்று கொள்ளாதே. அதற்காக குறிக்கோளை விட்டுவிடாதே.
2.யாரையும் சார்ந்து இருக்காதே. முக்கியமாக நண்பர்களை போல இருக்ககும்  வஞ்சகர்களை நம்பாதே.
3. தாய், தந்தை, இறைவன் இவர்களை தவிர வேறு யாரும் உனக்கு நல்லது எண்ண மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்.
4. காதல், காதல் மாயை இந்த இரண்டிற்கும்உள்ள வேற்றுமையை புரிந்து கொள்.
5.அறிவுரை கூறுபவர்கள் மீது கோபம் கொள்ளாமல் அதை கேட்க பழகு.
6.கோபம் ஏற்படும் நிலையில் கண்களை மூடி பெருமூச்சு விட்டு பின்பு கண்களை விழித்து புன்னகையுடன் அதை எ திர் கொள்.

திங்கள், 18 பிப்ரவரி, 2019

எண்ணத்தில் இன்று நீ


                     எண்ணத்தில்  இன்று  நீ


சிந்தித்து பார்க்கிறேன்  சித்திரமே!!
நாம்  காணும் கணம் தன்னை பற்றி
முந்தி என் அருகிலே நின்று
வந்தனை செய்ய வழி வகுத்திட. .
என்று உன்னை பார்த்தேனோ
அன்று தொடங்கிய  ஊடல் ...
இன்றும்  நடக்க வில்லை கூடல். 

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

கடந்து செல்ல வேண்டும்

காற்றை போல் அனைத்தையும் நொடியில் கடந்து செல்ல முயல்கிறேன் அது இன்பமோ துன்பமோ ஆனால் முடியவில்லை

வியாழன், 14 பிப்ரவரி, 2019

அன்புள்ள அப்பா🏃🏃🏃🏃

 
         



நான் உன் மகளாய் பிறந்தது நான் பெற்ற பாக்கியம் என்று எண்ணினேன்.
நீயோ உன் தாயிற்குச் சமமாய் என்னை எண்ணினாய்,
என்னை தாலாட்டி,வழிநடத்தி,என்னை சீர்தூக்கி வாழவைத்தாய்.
நான் தவறு செய்யும்போது என்னை கண்டித்தாய்,நான் மனம் வருந்தினேன் ,
ஆனால் இன்றோ நான் பிறரால் மனம் வாடாமல் தலைநிமிர்ந்து நிற்கிறேன்.
எல்லாம் உன்னாலே !
நான் பிறந்த முதல் நாளில் இருந்து 
நான் நேசித்த ஒரே ஆண் நீ மட்டும் தான்,
நான் உனக்கு மகளாய் பிறந்தது நீ செய்த புண்ணியம் என்று கருதினாய்,
நான் உன் மனம் நோகடித்து பாவம் புரிவேனோ?
மகளாய் பிறந்த ஒவ்வொரு பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்.✍️✍️✍️