செவ்வாய், 25 டிசம்பர், 2018

மகளிர் முன்னேற்றம்

இதிகாசங்கள் புராணங்கள் என அனைத்தும் பெண்களை அடிமைப் படுத்தியிருக்கிறது.
அதற்கான சான்று.

சூதில் பணயமாக தன்னை வைத்த தருமனைப் பாஞ்சாலி மன்னித்தாள்.

நடுக்காட்டில் நள்ளிரவில் விட்டு விட்டு ஓடிய நளனைத் தமயந்தி மன்னித்தாள்.

நெருப்பு குளியல் நடத்த சொன்ன ராமனின் சிறுமையை சீதை மன்னித்தாள்.

மாதவியிடம் மையலுற்று கைப் பொருளை இழந்து வந்த கோவலனைக் கண்ணகி மன்னித்தாள்.

ஆனால்.

இந்திரனிடம் தன்னை இழந்த அகலிகையை மன்னிக்க மனமில்லாமல் கௌதம முனிவன் கல்லாக்கினான்.

ரேணுகையை மன்னிக்காத ஜமதக்னி மகன் பரசுராமனை அழைத்து தாயின் தலையைத் துண்டிக்க செய்தார்.

ஏங்கிய பெண்களின் கைகள் எல்லாம் இன்று ஓங்கி இருக்கிறது.

அறிவியல் முதல் ஆன்மீகம் வரை

பொறியல் முதல் பொறியியல் வரை அனைத்திலும் பெண்கள் சாதிக்கிறார்கள்...

பேச்சுரிமை எழுத்துரிமை என அனைத்தும் ஒரு காலத்தில் மறுக்கப்பட்டது.

ஆனால் இன்று பெண்கள்

பாரதி கண்ட புதுமைப்பெண்களாகவும்.

பெரியார் கண்ட புரட்சிப் பெண்களாகவும் எல்லோரும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இது எம்முடைய கல்லூரியின் 1000 வது வலைப்பதிவு.

பெண்களுக்கு இன்று எல்லா உரிமைகளும் கிடைத்து விட்டது.

அவர்கள் எங்கும் எல்லாவற்றிலும் சாதிக்கிறார்கள் என்பதற்கு நாங்களும் ஒரு சான்று தான்.

வானமும் எங்களுக்கு தொட்டு விடும் தூரம் தான்.
இனி அதையும் நாங்கள் எங்கள் உழைப்பைக் கொண்டு எட்டிப் பிடிப்போம்.

ஊழலின் தொடக்கம்

நாம் எல்லோரும் கோடி கோடியாய் பணம் பரிமாறுவதைத் தான் ஊழல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் உண்மையான ஊழல் என்பது எதிலிருந்து தொடங்குகிறது தெரியுமா.

மளிகை கடைக்காரரிடம் ஒரு ரூபாய் சில்லரைக்கு பதிலாய் மிட்டாயை வாங்குகிறோம் அல்லவா அங்கு தான் ஊழலுக்கு தொடக்கப் புள்ளி வைக்கப்படுகிறது.

இனிமேல் சில்லரைக்கு பதிலாய் மிட்டாய்களை வாங்காமல் அந்த சில்லரைகளை சேர்த்து வைத்து பேனா வாங்கி நாளைய பாரதத்தின் தலையெழுத்தை மாற்றுவோம்.

கண்ணியம்

கல்லூரிச் சுற்றுலாவிற்காக ஊட்டி சென்றிருந்தோம்.
எல்லா இடங்களையும் பார்வையிட்டு விட்டு இல்லூரியை நோக்கி புறப்பட்டோம்.
எனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் உனக்கு அக்கா யாரும் இருக்கிறார்களா மா என எங்களை வழிநடத்திச் சென்ற வழிகாட்டி கேட்டார்.
அதற்கு அவள் இல்லை என பதில் கூறினாள்.
அவர் அவருடைய அலைபேசியில் இருந்து ஒரு புகைப்படத்தை காட்டி இந்த பெண் போலவே அந்த பெண்ணும் இருந்ததால் தான் கேட்டேன் என்று புகைப்படத்தைக் காட்டினார்.
இந்த பெண்ணைப் போல இங்கு யாரையோ பார்த்தேன் அதனால் தான் கேட்டேன் என்று சொல்லி திரும்பி பார்த்தார்.

உடனே எங்கள் வகுப்புப் பொறுப்பாசிரியர் இவுங்க எல்லாரும் என் புள்ளைங்க. என் அணுமதி இல்லாமல் யாரையும் நீங்க திரும்பி  கூட பார்க்க கூடாது அவர்கள் அனைவரையும் அவர்கள் பெற்றோர்கள் என்னை நம்பி அணுப்பி வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் நான் தான் பொறுப்பு என்று சொல்லி அவரிடம் பேசினார்.

அவர் இவுங்க எல்லாரும் என் பிள்ளைங்க என்று சொல்லும் போதே எங்கள் மாணவிகளின் மனதில் மகிழ்ச்சி உச்சத்திற்கு சென்றது.

இது ஒரு சிறிய சம்பவமாக இருந்தாலும் அவர் மேல் இருந்த மரியாதை மேலும் ஒரு படி உயர்ந்தது.

உண்மையிலெ இது போன்ற ஆசிரியர்களை எல்லாம் பார்க்கும் போது மிகுந்த மனமகிழ்வாய் இருக்கிறது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர் எங்கள் பொறுப்பாசிரியர் சங்கர் சார்.

பழைய பஞ்சாங்கம்

செவ்வாய் கோளுக்கும் சென்று வாழ முடியுமா என்பதை பார்த்து விட்டு வந்து விட்டோம்.
ஆனால் இன்னும் செவ்வாய் தோஷம் எனும் பெயரில் பழைய பஞ்சாங்கத்துக்கு அடிமையாயிருக்கிறோம்.

ஆறிலிருந்து அறுபது வரை




நாம் சின்ன பிள்ளைகளாய் குழந்தைகளாய் இருக்கும் போது நம்முடைய தாத்தா பாட்டி அம்மா அப்பா அத்தை மாமா என எல்லா உறவுகளும் நாம் நடப்பதை அவ்வளவு பொறுமையாய் வேடிக்கை பார்ப்பார்கள்.
நாம் மெல்ல மெல்ல நடப்போம்.
எத்தனை வேலை இருந்தாலும் அதை விட்டு விட்டு நம்மைஆனால் ஒரு இருபது வருடங்கள் கழித்து பாருங்களேன்.
நாம் வளர்ந்திருப்போம்.
அவர்களுக்கெல்லாம் வயதாகியிருக்கும்‌.
நாம் குழந்தைகளாய் இருக்கும் போது தத்தி தத்தி நடந்ததை பொறுமையாய் வேடிக்கை பார்த்த அவர்கள் வயதான பிறகு மெதுவாய் நடப்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை கவனிப்பார்கள்.

அவர்களை திட்டுகிறோம்.
இல்லையென்றால் அவர்களை விட்டு விட்டு வந்து விடுகிறொம்.
ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்களேன்.
நாம் சின்ன பிள்ளைகளாய் இருக்கும் போது அவர்கள் அப்படி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்.
யோசித்துப் பாருங்களேன்.
இனியாவது அவர்களை அன்பாய் பார்த்துக் கொள்வோம்.
ஆதரவாய் அவர்களோடு கைகோர்த்து நடப்போம்.

ஞாயிறு, 23 டிசம்பர், 2018

எது காதல்??💓💓

       
           

   இன்று மாணவர்கள் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் பொது ஏதோ ஒரு ஆசையில் பிறர் மீது விருப்பபடுவது சாதாரண ஒன்று. ஆனால் இந்த அன்பு காதல் என்ற புதிய அத்தியாயத்தை அடையும் போது தான் அது விபரீதம் ஆகிறது.  எது உண்மை எது பொய் என்று புரிந்து கொள்ளாமல் சிலரின் வாழக்கை தொடங்கும் முன்பே முடிந்து விடுகிறது. காரணம் வாழ்க்கை பற்றின சரியான புரிதல் இல்லாதது தான்.

       காதல் தவறில்லை 
       தோழிகளே காதல் தவறில்லை
       ஆனால் தவறான நேரத்தில்,
       தவறான புரிதலில், தவறான             நபரோடு ஏற்படும் போது  
       காதல் தவறாகி விடுகிறது.

புதன், 19 டிசம்பர், 2018

அன்பே மனிதம் 👼👼


           

மனிதனுக்கு  மனிதனே கருணை காட்ட மறுத்ததால் தான் இன்று நமக்கு இயற்கை கூட கருணை காட்ட மறுகிறது. சாலையில் விபத்து ஏற்பட்டால் அம்புலன்ஸை கூப்புடுவதை விட போட்டோ எடுத்து whatsupp ல் ஷேர் செய்து இதை பகிர்ந்தால் ஓர் உயிரை காப்பாற்றலாம் என்று வதந்தியை பரப்பும்  கும்பல் தான் அதிகம். நாம்  இந்த உலகில் மனிதனாய் வாழ்வதை விட மனிதாபிமானம் உள்ள ஒருவனாக வாழ்வது கடினம். எனவே சமூக வலைத்தளங்களில் வெறும் போட்டோக்களை பகிர்வதை விட ஒரு உயிருக்கு மற்றோரு உயிர் அன்பை பரிமாற்றம் செய்ய வேண்டியது தான் இன்று அவசியமான ஒன்று. நாம் எவ்வாறு வாழ்க்கையை அன்போடு வாழ்ந்தோம் என்பது நாம் இறந்தபின் நமக்காக உண்மையாக எத்துணை பேர் வருத்தப்பட்டனர் என்பதில் தான் உள்ளது. எனவே பணம், பொருள் என்று சுயநல வாழ்க்கையை விடுத்து அன்போடும் கருணையோடும் வாழுவோம். ஏனென்றால் அன்பே மனிதம்.