ஞாயிறு, 21 அக்டோபர், 2018

பாரதிக்கு ஓர் புகழாரம்

முண்டாசு கட்டாலும் ,
முருக்கு மீசையாலும் ,
என்னை மூழ்கடித்தாய்.

அடர்ந்த புருவத்தாலும் ,
அனல் பார்வையாலும் ,
என்னை ஆட்கொண்டாய்.

புரட்சி வார்த்தைகளாலும் ,
புதிய சிந்தனையாலும் ,
என்னை பூரிக்க வைத்தாய்.

ஓர் மகளாய் உன்மேல்
மாறாத காதல் கொண்டேன்.



திங்கள், 15 அக்டோபர், 2018

Dr. A.P.J.Abdul kalam

Man of humanity;
Man of love;
Man of divine;
Man of honor;
Man of mission;
Man of respect;
And the person of
Dedication that is
Dr A.P.J ABDUL KALAM”

கலாமுக்கு எனது கவிகளின் சலாம்..




என்னை செதுக்கிய சிற்பிக்கு பிறந்தநாள்..
என்னை வழிநடத்திய குருவிற்கு பிறந்தநாள்..
என்னை தளரவிடாமல் செய்த தன்னம்பிக்கைக்கு பிறந்தநாள்..
என்னை தலையில் குட்டும் சிந்தனையாளனுக்கு பிறந்தநாள்..
என்னை துன்பத்தில் இருந்து காக்கும் காவலனுக்கு பிறந்தநாள்..
என்னை முத்தமிடும் எண்ணங்களின் எழுத்தாணிக்கு பிறந்தநாள்..
என்னை ஆதரித்த அழகியத்தமிழ் மகனுக்கு பிறந்தநாள்..
என்னை தழுவி அனைத்து கொண்ட அன்னைக்கு பிறந்தநாள்..
என்னை வீழாமல் தோள் கொடுத்த தோழனுக்கு பிறந்தநாள்..
என்னை மனிதியாக வெளிவர உதவிய சிறகுக்கு பிறந்தநாள்..
என்னை மட்டுமல்ல பல இளைஞர்களை கனவு காண செய்த கனவு நாயகனுக்கு பிறந்தநாள்..
என்னை பெறாமல் நான் தத்தெடுத்த என் தந்தைக்கு பிறந்தநாள்..
உன்னை போற்றி பேசிட என்னிடம் வார்த்தைகள் இல்லை..
எனவே உனது கால்களை முத்தமிட்டு வணங்கி தொழுகிறேன்.. 


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கலாம் அப்பா..

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

வெற்றியை நோக்கி

                    சிந்திக்க முயலும் சில நொடியும்

                    சிறைபிடிக்கப்படுகிறது.

                    கவலையால் அல்ல,

                    வாழ்க்கைப் பற்றிய கற்பனையால்.

                    கற்பனை உண்மையாகும் வரை

                    காய்நகர்த்தப் போகிறேன்.

                    இடையில் துவண்டுபோவேன். 
                    
                    ஆனால் தோற்கமாட்டேன்.

வியாழன், 11 அக்டோபர், 2018

எனது மற்றொரு பாதி

எங்கு இருந்தோ வந்து
     ஒன்று கூடினோம்
இக்கல்லூரி தாயின் கருவறையில்
      சிரித்துப் பேசிய நாட்களும்
சிந்தித்து பேசிய நாட்களும்           
      சொல்லும் நம் கல்லூரி தாயின்
கருவறை இரகசியம் என்னவென்று
      வெகுதூரம் செல்லுமா என்று
தெரியாத உறவிது, ஆனால்
      தேன் சிந்தும் மாலையில் கண்ட காதலனை விட, கண்ணீர் சிந்தும்
      வேளையில் யான் கண்ட நட்பு
பெரிதென்று கூறுவேன் நம்
      நட்பின் பெருமையை!!!
       
   

வாழ்நாள் பயணம்

வாழ்நாள் என்னும் கடலில்
        வாழ்க்கை என்னும் கப்பலில்
          கல்லறை என்னும் கடற்கரையை அடைய எத்தனை எத்தனை போராட்டங்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது...........




செவ்வாய், 9 அக்டோபர், 2018

என் தங்கத் தாரகைக்கு

                           சற்றும் எதிர்பாராத நேரத்தில் ,
                           
                           சாவின் வலியை  உணர்த்தும் , ஓர்
                           
                           உன்னத ஆயுதம் என் தாயின் கண்ணீர் .
                            
                          
                           அதே போல்
                       
                           சாகா வரம் தரும் , ஓர்
                       
                           சத்தியச் சாரல்

                           என் அன்னையின் புன்னகை .