வியாழன், 27 செப்டம்பர், 2018

புதன், 26 செப்டம்பர், 2018

எவன் சிறந்தவன்

எவன் சிறந்தவன் பணம் உள்ளவனா.....
இல்லவே  இல்லை...
பெற்றோர் உடன் உள்ளவனே
சிறந்தவன்.....

அன்புள்ள அம்மா

உன் கருவரையை எனக்கு
வசிப்பிடம் ஆய் தந்தவள் நீ
நான் கொடுக்கும் வலியிலும்
இன்பம் கண்டவள் நீ
நான் தவழ்ந்து நடக்கும்
நடையில் நயம் கண்டவள் நீ
என் மழலைப் பேச்சினை
ரசித்தவள் நீ....
என் அறியா பருவம் முதல்
இன்றுவரை எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி என்னை
காதலித்ததும் நீ...... என்னுயிர் தாயே

ஊழல்

    

      ஊழல் என்பது புற்றுநோய் போல் வளர்ந்து கொண்டிருக்கும் இந்நிலையில் உச்சநீதிமன்றதின் புதிய யோசனை.
 
  தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களும் தன் மேல் உள்ள வழக்கின் விவரம் பற்றியும் குற்றங்களை பற்றியும்  அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.   

     ஓட்டு போட வேண்டும் என்ற அதிகாரம் உள்ள மக்களுக்கு யார் மெல் எவ்வளவு குற்றங்கள் உள்ளது என்பது பற்றியும் தெரிந்து கொள்ள உரிமை உண்டு.

    மேலும் தன் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் வழக்கு ரீதியான செய்திகளை தன் கட்சி இணையத்தில் வெளியிட வேண்டும்.

       மேலும் இவ்வாறு செய்வது மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான வழி இல்லை. நம் ஓட்டை யாருக்கு போட வேண்டும் என்பதை யார் அதிகமாக பணம் தந்துள்ளார் என்பதை சார்ந்து இருக்க கூடாது.

   அரசால் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது. மக்களாகிய நாமும் ஒரு படி சென்று ஊழலை அழிக்க முற்பட வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்குவதும், இலவசத்தை எதிர்பார்ப்பதும் ஒரு வகையில் ஊழல் என்பதை மக்கள் உணர வேண்டும்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

முதல் பிரிவு

என் கண்களில் ஒரு நீர்த்துளி
நம் காதலை எண்ணி....
எனது இதழ்களில் சிறிது சிரிப்பு
நம் கால நினைவுகளை எண்ணி
மறுவாழ்வு தேடி சென்றது
நீயா? அல்லது உன் நிழலா?
நீ சென்றுவிட்டாய்...
இருப்பினும் ஏன் உன் நிழல்
மீண்டும் நான் உன் காதலியாக வேண்டும் என்று
என் பின்னே நிற்கிறது?