திங்கள், 23 அக்டோபர், 2017

விடாமுயற்சி

ஒரு குரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். சீடன் விளையாட்டாக மரத்தில் ஏறிக் கொண்டிருந்தான். அங்கே பட்டாம்பூச்சியின் வலைப்பின்னலைக் கண்டான்.அந்த பூச்சி பின்னலை விட்டு வெளியே வர திணறிக் கொண்டிருந்தது.குழப்பத்துடன் சீடன், “ரொம்ப சிரமப்படுதே! அதற்கு உதவி செய்தாகணும்!” என்ற எண்ணத்துடன் அதை நெருங்கினான்.

கண் விழித்த குரு சீடனைக் கண்டார்.“சும்மாயிரு! அதன் போக்கிலேயே விட்டு விடு!” என்று சொல்லிவிட்டு மீண்டும் உறங்கினார்.சீடனுக்கு மனம் கேட்கவில்லை. குருவுக்கு தெரியாமல், தடுமாறும் அந்த பூச்சியை பின்னல் கூட்டில் இருந்து விடுவித்தான்.ஆனால், அந்த பூச்சி பறக்க முடியாமல் தரையில் விழுந்தது.கண் விழித்த குரு சீடனை நோக்கி,“சொல்லியும் கேட்கவில்லையே! அதன் சிறகை சேதப்படுத்தி விட்டாயே! பட்டாம் பூச்சி பறக்க வேண்டுமானால், அது தானாகவே கூட்டை விட்டு வெளியே வந்திருக்க வேண்டும்” என்று கடிந்து கொண்டார்.

பட்டாம்பூச்சி மட்டுமல்ல! மனிதனுக்கும் இது பொருந்தும். வாழ்வில் குறுக்கிடும் கஷ்ட நஷ்டங்களுக்காக பிறரது உதவியை நாடக்கூடாது. அவனாகவே சமாளிக்கும் ஆற்றலைப் பெற வேண்டும். விடாமுயற்சியுடன் செயலாற்றினால் தான், தடைகளைத் தாண்டி உயர முடியும்.butterfly க்கான பட முடிவு

தூரம்



மாட்டுவண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன்.

குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.
‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான்.
‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.
‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’
‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான்.
சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டுமாட்டு வண்டிக்காரனுக்குக் கோபம். ‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான்.
‘‘போய்த்தான் பாருங்களேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான்.
சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்தி கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.
வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.
கற்பிப்பவன் எவனாயினும் கல்வி என்பது பெறுமதியானது தானே?....mattu vandi க்கான பட முடிவு

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

இந்தியாவில் தடை செய்யவேண்டும் என்றால் என்னவெல்லாம் தடைசெய்வீற்கள்?

இந்தியாவில் தடை செய்யவேண்டும் என்றால் என்னவெல்லாம் தடைசெய்வீற்கள்?

1.மதுவை முற்றிமாக தடைசெய்வேன். ஏனெனல் நமது நாடு மிதமான தட்ப வெப்பம் கொண்டது,
2.அழகு சாதனப்பொருட்கள்
3.தேவையற்ற செய்திகளை பரப்பும் ஊடகங்கள்
1.நான் பத்தாம் வகுப்பு படிக்கையில் எனது வேதியல் பேரிசிரியர் மேற்கத்திய நாட்டவரால் அவர்களது நாட்டின் குளிரை தாங்க இயலாததால் அவ்வர்கள் மதுவைக்கண்டறிந்து அருந்துவார்கள் என்று.பிறகு அவை அனைத்து சூழல்களையும் தாங்கும் சக்தி படைத்த நம் நாட்டவருக்கு எதற்க்கு?
2.அழகு என்பது பெண்ணிற்க்கும் சரி ஆணிற்க்கும் சரி என்னை பொறுத்தவரை பிறர் ஒருவருக்கு கொடுகும் மரியாதையே அழகாகும். மரியாதை என்பது வருவர் மனிதத்தன்மையுடன் நடக்கும்போது பிறக்கும். மனிதனாய் பிறந்தவர் மனிதனாக நடந்துகொண்டாலே போதும் அதற்க்கு அவன் நிற அடிப்படையில் சாயம் பூச அவசியம் இல்லை.

3.போலியான செய்திகளை பரப்புவதில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. மக்கள் யார் பின்னே செல்லவேண்டும்? யாரை உண்மையாக கொண்டாட வேண்டும்? என்பது பெரும்பாலும் ஊடகங்கள் கையிலே உள்ளது.

இந்தியர்களை எந்த மாறியான செய்தி சோகப்படுத்தியுள்ளது?

இந்தியர்களை எந்த மாறியான செய்தி சோகப்படுத்தியுள்ளது?
1பிக்பாஸ் என்ற நிகழ்வில் சில பிரபலங்களின் நடவடிக்கை நம் அனைவரையுமே சோகப்படுத்தியது.
2.சில திரைப்படங்களின் வெளீடு தேதி ஒத்தி வைப்பது நமக்கு சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
ஆனால் இவர்களும் நமது நாட்டில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.
கரீம் பாய்!!!

மாணவர்களுக்கும்,சமுதாய அடிநிலை வகுப்பு குழந்தைகளுக்கும் இலவசமாக செய்தித்தாள் கொடுக்கிறார்.

பாபர் அலி!!!

மிக இளமையான பள்ளி முதல்வர்.தனது 16 வயதில் பள்ளி நடத்தி BBC என்ற நிறுவனத்தில் அங்கிகாரம் பெற்றுள்ளார்.

அடிடீ ச்சுஹான்!!!

EPLஇல் விளையாடிய முதல் இந்தியப் பெண்.



இன்று எந்த செய்தி உங்களை சிரிக்க வைத்தது?

இன்று எந்த செய்தி உங்களை சிரிக்க வைத்தது?

ஒரு மனிதர் அவரது பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அவரது அத்தை திறன்பேசியை கையாள தொடங்கிய காலம். அப்பொழுது அத்தை ஒரு காணோலியை பகிரவேண்டும் என எண்ணிணார். அதற்க்காக அந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஷார் செய்தாராம். (எனக்கு என் முகத்தில் இன்று இந்த பதிவு சிரிப்பை வரவைத்தது உங்களின் இதழ்களின் ஒரத்தில் சிறியதாக சிரிப்பு வந்தாலும் மகிழ்ச்சி)

நன்றி!!!

இன்று தாங்கள் படித்த தகவல்களில் சிறந்த தகவல் எது?

இன்று தாங்கள் படித்த தகவல்களில் சிறந்த தகவல் எது?

உசயின் போல்ட்  மொத்தம் 8தங்க பதக்கங்களை கடந்த 3 ஒலிம்பிக்ஸில் வென்றுள்ளார். இவர் 2நிமிடங்கள் மட்டுமே ஓடும்பாதையில் ஓடியுள்ளார். ஆனால், அது ஒரு வரலாற்றை பதித்துள்ளது.
உசயின் போல்ட் 115 வினாடிக்களுக்கு குறைவாக ஓடி 119 மில்லியன் பணத்தை ஈட்டியுள்ளார். ஒரு வினாடிக்கு ஒரு மில்லியனையும் விட அதி பணத்தை ஈட்டியுள்ளார்.

ஆனால் இந்த 2நிமிட ஓட்டத்திற்காக 20ஆண்டுகள் உழைத்துள்ளார்.

இன்றைய சின்ன செய்தி ;

இன்றைய சின்ன செய்தி ;
ஒரு பெண் ரோட்டில் அடிபட்டுக்கிடந்தவருக்கு உதவிக்கொண்டிருக்கையில் அவர்களிடம் இன்னொறு பெண் வந்து அம்மா சற்று என்னிடம் இதை கொடுத்தால் நான் செய்வேன் ஏனெனில், நான் ஒரு செவிலியர்.


அந்த பெண் விலகி ஒரு புறம் நின்று பார்த்துக்கொண்டே சிரி தங்களுக்கு ஏதாவது உதவி தேவைபட்டாள் என்னை அழையுங்கள் நான் ஒரு மருத்துவர் என்றார்.

எந்த மாதிரியான விஷயங்கள் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்?

எந்த மாதிரியான விஷயங்கள் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்?

பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த லாலு பிரசாத் யாதவிஇன் மகனிற்கு யுனிவர்சிட்டி ஆப் தக்ஸிலா  டாக்டரேட் பட்டம் வழங்கியிருக்கிறது.அவரது பெயர் தேஜ் பிரடாப் யாதவ்.



என் படுக்கையிலிருந்து தினமும் நான் ஏன் எழுந்திட வேண்டும்?

என் படுக்கையிலிருந்து தினமும் நான் ஏன் எழுந்திட வேண்டும்?

1.இந்த நாளின் சுவாரசியங்களைக் காண
2.காலம் பொன்னை விட விலை உயர்ந்தது அதை நமக்கு பிடித்தவாரும் சில பயனுள்ளவாரும் செலவிட.
3.பிறரிடம் அன்பினை பெறவும் கொடுக்கவும்.
4.நமக்கு வெற்றியை தேடித்தரும் படிக்கள்ளாக கூட ஒரு நாள் அமையும்.
5.இந்த உலகத்தை பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது.
6.நானும் இந்த உலகினில் ஏதாவது ஒன்றை ஒருநாள் சாதிப்பேன் அது இன்றாக கூட இருக்காலாம் என்று காட்ட.

7.உன்னையும் உன் நட்பையும், உன் வருகையையும் எதிர்ப்பார்த்து பலர் காத்திருப்பர் அவர்களின் ஆசையை நிறைவேற்ற. 

ஒரு இந்தியனாக நாம் எதற்க்காக வருத்தப்படவேண்டும்?

                          ஒரு இந்தியனாக நாம் எதற்க்காக வருத்தப்படவேண்டும்?
இன்று ஜாய்டா மான்டல்(joyita mondal) என்பவர் வெஸ்ட் பெங்காலின் முதல் திருனங்கை நீதிபதியானார்.



இந்தியாவின் முதல் திருநங்கை கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்தார். காரணம் அவர்களுடன் பணிபுரிபவர்கள் அவருக்கு சரியான ஒத்துழைப்பு தரவில்லை.

காலம் என்றாவது உங்களுக்கு அறிய ஒரு அறிவுறை கொடுத்திருக்கிறதா? எனது வாழ்வில் நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. எனினும் எனது விழியில் என்றாவது எதாவது சாதிக்க வேண்டும் என்று நான் எண்ணிக்கொண்டே தான் இருப்பேண். நான் என்னை எந்த வேலையிலாவது ஈடுபடுத்திக்கொண்டால், அதில் எனக்கு என் சோம்பல்தனம், விருப்பமின்னை, பணிச்சுமை ஏன் பல நண்பர்கள் கூட தடையாக இருந்திருக்கிறார்க்ள ஆனால், இதனைக் கண்டு நான் முதிலில் கோபம் கொண்டு நான் செய்யும் வேலையை செய்யாம்ல நிறுத்தி இருக்கிறேன். ஆனால், பலன் ஒன்றுமில்லை காலப்போக்கில் நான் இவ்வாறான மனிதர்களுக்கும் சூழ்நிலைக்கும் பழகிவிட்டேன் இதற்க்கு தீர்வு எண்ண என்று யோசிக்கையில் பொறுமை தான். நமக்கு தடையாய் இருப்பது என்னவாக இருந்தாலும், சிறிது நிதானத்துடன், அவற்றை நம் வெற்றி பாதையின் தடை என எண்ணி கடந்து செல்லவேண்டுமே ஒழிய அதனை எண்ணி நம் மனதினையும்,உடலினையும் வருத்தி நேரத்தை வீணாக்கக் கூடாது!!!!!!

காலம் என்றாவது உங்களுக்கு அறிய ஒரு அறிவுறை கொடுத்திருக்கிறதா?



எனது வாழ்வில் நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. எனினும் எனது விழியில் என்றாவது எதாவது சாதிக்க வேண்டும் என்று நான் எண்ணிக்கொண்டே தான் இருப்பேண். நான் என்னை எந்த வேலையிலாவது ஈடுபடுத்திக்கொண்டால், அதில் எனக்கு என் சோம்பல்தனம், விருப்பமின்னை, பணிச்சுமை ஏன் பல நண்பர்கள் கூட தடையாக இருந்திருக்கிறார்க்ள ஆனால், இதனைக் கண்டு நான் முதிலில் கோபம் கொண்டு நான் செய்யும் வேலையை செய்யாம்ல நிறுத்தி இருக்கிறேன். ஆனால், பலன் ஒன்றுமில்லை காலப்போக்கில் நான் இவ்வாறான மனிதர்களுக்கும் சூழ்நிலைக்கும் பழகிவிட்டேன் இதற்க்கு தீர்வு எண்ண என்று யோசிக்கையில் பொறுமை தான். நமக்கு தடையாய் இருப்பது என்னவாக இருந்தாலும், சிறிது நிதானத்துடன், அவற்றை நம் வெற்றி பாதையின் தடை என எண்ணி கடந்து செல்லவேண்டுமே ஒழிய அதனை எண்ணி நம் மனதினையும்,உடலினையும் வருத்தி நேரத்தை வீணாக்கக் கூடாது!!!!!!

சிறிய போராலிகளை வரலாறு பதிப்பதில்லை ஏன்?

சிறிய போராலிகளை வரலாறு பதிப்பதில்லை ஏன்?


BAJI ROUT பாஜி ரவுட் ஆங்கில சிப்பாய்களின் தோட்டாக்களை நெஞ்சில் வாங்கிய பிஞ்சு!!!!

பாஜி ரவுட் 5ஆக்டோபர் 1926 ஆம் ஆண்டு ஒரிசா மானிலத்தில் உள்ள தின்கனல் என்ற இடத்தில் பிறந்தவர். இவர் தந்தை ஒரு படகோட்டி,ஆனால் பாஜி சின்னதாக இருக்கும்போதே மறைந்துவிட்டார்.சிறு வயதிலேயே மக்கள் நலகுழுவின் ஆர்வலராக செயல்பட்டுக்கொண்டிருந்தார் பாஜி. ஒரு இரவில் ஆங்கிலப் படையினர் ஆற்றை கடப்பதற்க்காக பாஜியை படகுஓட்டசொல்லி கேட்டனர்.பாஜி ``எனது இந்த படகு மக்களுக்கானது, அவர்களின் எதிரியான உங்களுக்கு இதை கொடுக்க மாட்டேன்’’ என்றது அந்த பிஞ்சு குரல்.உடன் அவனது இரு நண்பர்களான லஷ்மன், ஃபாகு என்பவரும் இருந்தனர். பாஜியின் மறுமொழியை கேட்ட ஆங்கிலயர் கையில் இருந்த துப்பாக்கியால், பாஜியையும் அவரது நன்பர்களையும் சுட்டனர்.

டீனேஜ் பெண்களுக்கும் ஆண்களுக்கும் எது பொது?

டீனேஜ் பெண்களுக்கும் ஆண்களுக்கும் எது பொது?

1.உரிமைகள் பொகு.
2.சில உணர்வுகள் பொது.
3.கணிதத்தில் நாம் பூஜியம் என்ற எண்ணம் பொது.
4.ஒரு பிரச்சணைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று எண்ணுவது.
5.முன்கோபம்
6.துணிவு
7.உடல் சக்தி

இப்படி ஒவ்வொன்று ஒவ்வொறு வயதினருக்கும் பொதுவாக இருக்கும். ஆனால், நாம் நமது உணர்வுகளையும், எண்ணங்களையும் எவ்வாறு கையாலுகிறோம் என்பதிலேயே இருக்கிறது. கண்கள் கண்டு வியக்கும் பொருள்களின் பின் சென்றவர் அனைவருமே வாழ்வில் வெற்றி பெற வில்லை! அவர்கள் எல்லாம் தமக்கு என்று ஒரு கொள்கைகளையும் மனப்போக்கையும் வைத்துக்கொண்டு சாதணை எண்ணங்களுடன் வளர்ந்தவர்க்ள.