செவ்வாய், 10 அக்டோபர், 2017

அலைகள்

நான் ஒவ்வொரு முறையும்
கரையின் உச்சம் அடைய
முயற்சி செய்தேன்...
என்னால்
முடியவில்லை...
இருப்பினும்,
நான் ஒருபோதும்
ஓயவில்லை,
என் இலக்கை
அடைய..
எனக்குள் ஒரு
நம்பிக்கை,
ஒரு நாள்
இந்த பிரபஞ்சமே
திரும்பி பார்க்கும் அளவிற்கு
ஆழி பேரலையாக
உருமாறுவேன் என்று....

# அலைகள் #

----மு. நித்யா.

கருப்பு பணம்

நான் வெற்று தாளாக
இருக்கும் போது
என்னை மதிக்கவில்லை...
எனக்கு ஒரு வடிவம் தந்து
அடையாளம் தந்த பிறகு
என் மதிப்பு அதிகமானது...
என் மதிப்பு
கூடியதாலோ என்னவோ
தெரியவில்லை,
என்னை பதுக்க ஆரம்பித்தான்...
அப்போது தெரியவில்லை
இதனால் ஏற்படும் விளைவு
என்னவென்று...
அண்டை நாட்டை
பார்த்த போது தான் தெரிந்தது
என் மதிப்பு என்னவென்று...
என்னை வெளி கொண்டுவர
முயற்சி செய்தான்...
என் நிறத்தை மாற்றி பார்த்தான்,
இருந்தும் ஒரு நிறம் மட்டும்
இன்று வரை
வெளி வரவே இல்லை ......

# பணம் #

---மு. நித்யா.

தண்ணீர்

நான் மழையாக பூமிக்கு
வரும் போது செல்ல வேண்டிய
இடம் தெரியாமல்
இருந்தேன்...
அப்போது நீ
சிறு நீரோடையாக வந்து
வழி காட்டினாய்...
நான் செல்ல வேண்டிய
இடத்தையும் சொன்னாய்....
அதற்காக முயற்சி செய்யாமல்
இருக்கும் போது தான்
தீடீரென்று
எனக்குள் வேகம் வந்தது...
எனக்கான இடத்தை
அடைய சிந்திக்க
துவங்கினேன்...
என்னை
நதியாக மாற்றி
அனைவருக்கும் பயன்படும் படி
உருவெடுக்க
நினைக்கிறேன்...
என்னை
பயன்படுத்தாமல்
இருந்தால்,
ஒரு நாள்
கடலாகவும்
மாறுவேன்.....

# தண்ணீர் #

-----மு. நித்யா.

கனவு

நீ என் கண் முன்
வரும் போது எல்லாம்
சிகரத்தையே தொட்டது போல
முகத்தில் ஒரு ஆனந்தம்..
அப்போது தெரியவில்லை
அது வெறும் கனவு என்று..
ஒரு நாள் என் கனவு
கனவாகவே
போகும் போது தான்
தெரிந்தது,
அதன் வலி என்னவென்று..
இருந்தும் ஏன் அடிக்கடி
வந்து போகிறாய்.....

# கனவு #

-----மு. நித்யா.
நான் முதலில் உன்னை காணும் போது
வெறும் செடியாக  தான் தெரிந்தாய்
உன்னிடம் தினமும் பேச
நமக்குள் ஒரு உறவு,
நீயும் செழித்து பூக்களாய் மலர்ந்தாய்
நானும் மகிழ்ச்சியில் மலர்ந்தேன்
சில காலம் ஆனது
பூக்கள் வேறு இடம் செல்லும்
நாளும் வந்தது
நீ என்னைவிட்டு
பிரிய போகிறாய் என்று
தெரிந்தும்
அதை ஏற்காமல்
என் மனம் தவிக்கிறது.....

# அழகான பூக்கள் #

---மு. நித்யா

திங்கள், 9 அக்டோபர், 2017




மங்கல ஆரத்தி ......

மங்கள ஆரத்தி எடுப்பது ஏன் தமிழர் பின்பற்றும் கலாச்சாரத்தின் அறிவியல் பூர்வ நன்மைகள்...!
தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.
படம்

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.


அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷ கிருமிகள் பரவாது தடுக்கிறது.வீட்டினுள் நுழையும் முன்பே சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.
எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.
               
                                                                 பொறுமையின் ஆதாயம்...


edison க்கான பட முடிவு 


          தாமஸ் ஆல்வா எடிசன் வெஸ்‌டர்ன் யூனியன் கம்பனி ,வணிகம் சம்பந்தமாகப் பேச அழைத்திருந்தது . அவர் கண்டுபிடித்திருந்த தந்திப்பதிவு நாடா உரிமையை அவர்கள் கேட்டிருந்தார்கள். தன் கண்டுபிடிப்புக்கு என்ன விலை கோருவதென்று எடிசன் தீர்மானித்திருக்க வில்லை அந்த நிறுவனத்தாரிடம் இரண்டு நாள் அவகாசம் கேட்டார்.
தன் மனைவி உடன் ஆலோசித்து 20,000டாலர் விலையாக கோரலாம் என்று முடிவு செய்தார்.
பிறகு, அந்த நிறுவனத்தின் சார்பாய் அவரை வரவேற்ற அதிகாரி கேட்டார் 'நல்லது மிஸ்‌டர் .எடிசன்,நீங்கள் என்ன விலை எதிர் பார்க்கிறீர்கள் ?என்று .
20000டாலர் அதிகமோ என அமைதியாக அமர்ந்திருந்தார்எடிசன். எடிசனின் பதிழுக்காக அதிகாரி காத்திருந்தார் ....
ஆயினும் எடிசன் வாய் திறந்து பேசவில்லை ....
அதிகாரி அதற்கு மேலும் பொறுக்கமுடியாமல் பேச முனைந்தார் .'எடிசன்! ஒரு லட்சம் டாலர்கள் ,சரியா?என்று விலை வைத்தார்.....
    பொறுமையோடிருந்த எடிசனுக்கு ஆதாயம் .பொறுமை இழந்த அதிகாரியால் நிறுவனத்திற்கு இழப்பு.....

எந்த செயலையும் பொறுமையோடு செய்தால் வெற்றி நிச்சயம்...மாறாக அவசர அவசர மாக செய்தால் தோல்வி தான் மிஞ்சும்...

வெள்ளி, 6 அக்டோபர், 2017

தாயின் அருமை

                                            தாயின் அருமை           
                                           

    "அம்மா!...வலித் தாங்க முடியலயே ..அம்மா!...."
"கொஞ்சம் பொறுத்துக்கோ மாலதி ஒண்ணும் ஆகாது நான் இருக்கேன் "
"முடியலங்க ரொம்ப வலிக்குது" ... என்று பிரசவ வலியில் துடிதுடித்து போனாள் மாலதி .
திவாகருக்கு இப்படியெல்லாம் துன்ப பாடுவாள் என நினைத்திருந்தால்  உள்ளே வந்திருக்க மாட்டான்
திடீரென அம்மாவின் நியாபகம் ,...அவனையும் சேர்த்து ஆறு பேர் ,..நாலு ஆண் ரெண்டு பெண் ...எப்படித் துன்ப பட்டிருபாள் ......
    "உங்களுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது "என கூறி சென்றாள் மருத்துவர் .
மாலதி மயங்கி கிடந்தாள் ...
ஆனால் திவகருக்கு தன் தாயின் நினைவாகவே இருந்தது .
யாருக்கோ அவசரமாய் போன் பண்ணினான் .
"மேடம்! நான் திவாகர் பேசறேன்" .
"சொல்லுங்க திவாகர் நேத்தே எல்லா பில்லும் கட்டிடிங்களே!"
"இல்லை மேடம் நான் என் அம்மாவை கூட்டிச் செல்ல இருக்கிறேன் ...அதற்கு தேவையான ஏற்பாடுகளை செயுங்கள்" ...என்றான் திவாகர்.
  "சரி திவாகர் நான் ஏற்பாடுகளை செய்து விட்டு மீண்டும் தங்களுக்கு தெரிவிக்கிறேன்"..என்று கூறி வைத்தார் அந்த முதி
யோர் இல்ல நிர்வாகி. mother image in tamil க்கான பட முடிவு


வயதான தாய் தந்தையிடம் நாலு வார்த்தை அன்பாக பேசினாலே போதும் அவர்களை மகிழ்ச்சியாய் வைத்திருக்க ...ஏன் என்றால் அவர்கள் தேவைகளை விட உணர்வுகளை அதிகம் நேசிப்பவர்கள் ....

வியாழன், 14 செப்டம்பர், 2017

ஆண், பெண் மூளையின் வித்தியாசம் அறிவோம்

உண்மையில் ஆண், பெண் இரு பாலினத்தவருக்கும் உடல் மட்டும் வித்தியாசப்படவில்லை, மூளையும் வித்தியாசப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த ஆண்களும், பெண்களும் நினைப்பது என்னவென்றால், ஆண், பெண் இருவருக்கும் உடலமைப்புகள் தான் வித்தியாசம். மற்றபடி மனம், மூளை போன்றவை ஒன்றுதான் என்று நினைக்கிறார்கள். உண்மையில் இரு பாலினத்தவருக்கும் உடல் மட்டும் வித்தியாசப்படவில்லை. மூளையும் வித்தியாசப்படுகிறது.

இப்படி மூளை வித்தியாசப்படுவதால் தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆணின் மூளையும், பெண்ணின் மூளையும் வெவ்வேறு விதமாக வேலை செய்கின்றன என்பதுதான் அவர்கள் சொல்லும் காரணம்.

பெண்களின் மூளை அமைப்பு மூன்று மையங்களை கொண்டதாக இருக்கிறது. முதல் மையம் உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இரண்டாவது மையம் மொழி வளத்துக்கானது. இது வார்த்தைகளையும், உரையாடலையும் ரசிக்கும் தன்மை கொண்டது. மூன்றாவது மையம் முகத்தின் சாயலை கொண்டு ஒருவரை துல்லியமாக எடைபோடும் தன்மை கொண்டது.



ஆண் மூளையிலும் இந்த மூன்று வகையான மையங்கள் உள்ளன. ஆனால், அது வேறுவிதமாக செயல்படுகிறது. ஒரு விஷயத்தை பெண் பேசுவதுபோல் விவரித்து, கொஞ்சம் வளவளவென்று இழுத்து கூற முடிவதில்லை. ஒரு ஆண், தான் உணரும் அந்த உணர்ச்சியை ஒரு பெண்ணைப் போல் மொழியால் விவரிக்க முடிவதில்லை. எதிராளியின் முக அமைப்பை கொண்டு அவர் மனதை புரிந்துகொள்ள முடிவதில்லை.

ஆணுக்கான மூளை அமைப்பு கண்ணில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. அதனால்தான் அவனுக்கு பெண்ணின் கவர்ச்சியான காட்சிகளை பார்த்தால் மட்டுமே மகிழ்ச்சியளிக்கிறது. பெரும்பாலும் அழகான பெண்களையே ஆண்கள் விரும்புவதற்கு மூளையே காரணம். ஆனால், பெண்ணின் மூளை இப்படியல்ல. பெண்ணுக்கு பார்வை இன்பம் என்று ஒன்று இல்லை. அதனால் பெண்ணுக்கு பார்ப்பதால் மகிழ்ச்சி கிடைப்பதில்லை.

அவளுக்கு பேச்சு மூலம்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் ஆணை பெண்களுக்கு பிடிக்கிறது. ஆண் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதுபோன்ற அடிப்படையான குண வேறுபாடுகள் ஆண், பெண் இருவருக்கும் உண்டு. இதைப் பற்றி சரியான புரிதல் இரு பாலருக்கும் இல்லாததாலேயே காதலிக்கும் போதும், திருமணத்திற்கு பிறகும் ஏமாற்றம் அடைகிறார்கள்.

ஆண் தன்னிடம் ஆசையாக நாலு வார்த்தை பேசவில்லை என்று பெண் புலம்புவதும், தனது பாலியல் தேவைகளை பெண் புரிந்துகொள்ளவே இல்லை என்று ஆண் நொந்துகொள்வதும் நடந்து கொண்டேயிருக்கிறது. மண வாழ்க்கையிலும், காதலிலும் விரிசல் ஏற்படாமல் இருக்க ஆண், பெண் புரிந்து கொள்தல் மிக மிக அவசியம் என்கிறார்கள் உளவியலாளர்கள்.படம்


இலைச்சாற்றில் ஆரோக்கியம் :-

* அருகம்புல் சாறு - ஆரோக்கியத்தை தரும்.
* இளநீர் சாறு - இளமையை கொடுக்கும்.
* வாழைத்தண்டு சாறு - வயிற்றுக்கல் போக்கும்.
* வல்லாரை சாறு - நரம்பு வலிகளை போக்கும்.
* புதினா சாறு - விக்கல் போன்ற நோய்களை நீக்கும்.
* நெல்லிக்கனி சாறு - நல்ல அழகை கொடுக்கும்.
* துளசி சாறு - தொண்டைச்சளி, சோர்வு நீக்கும்.
* முசுமுசுக்கை சாறு - மூக்கு நீர் வற்றும்.
* அகத்தி இலை சாறு - அடிவயிற்று மலத்தை நீக்கும்.
* கடுக்காய் சாறு - கட்டுடலை கொடுக்கும்.
* முடக்கத்தான் சாறு - மூட்டுவலி போக்கும்.
* கல்யாண முருங்கை சாறு - உடலை குறைக்கும்.
* தூதுவளை சாறு - தும்மல், சளி எல்லாம் நீக்கும்.
* ஆடாதொடா சாறு - ஆஸ்துமா தொல்லை நீக்கும்.
* கரிசலாங்கண்ணி சாறுதொடர்புடைய படம் - கண் பார்வை அதிகரிக்கும்.

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!!

                                                                                                                                                                              தமிழ் அழிந்துக்கொண்டு வருவதற்கான முக்கியமான காரணமே பள்ளி கல்லூரிகள் தான். நம் நாட்டின் அடையாளமே  தமிழ் தான் ஆனால் இன்று எந்த பள்ளி , கல்லூரிகளில் அனைத்து நிகழ்வுகளும் தமிழில் நடத்தப்படுகின்றன. தமிழ் நாட்டிலேயே  தமிழ் இல்லையெனில் தமிழின் நிலை என்ன? நமது  கொங்கு தமிழ் இருக்கும் போது எதற்காக நாம் ஆங்கிலத்தை கையாள வேண்டும்.  மற்ற நாடுகளில் எல்லாம் பிற  மொழிகளில் எந்த நிகழ்வு நடைப்பெறுவதில்லை. நாம் மட்டும்  எதற்காக மற்ற மொழிகளை கையாள வேண்டும். இனி நாமும் நம் மொழியையே கையாள்வோம். வாழ்க தமிழ் வளர்க தமிழ் என முழக்கமிடுவோம்.

தயவு செய்து அனைத்து பள்ளி கல்லூரிகளும் நிகழ்ச்சிகளை தமிழில் நிகழ்த்துங்கள்.

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

பச்சை மிளகாய் என்றால் கொஞ்சம் பயம் உண்டு நம் வீட்டு ஆட்களுக்கும் சரி பிள்ளைகளும்
சரி ஏன் என்றால் அதில் இருக்கும் காரம், ஆனால்
வட மாநிலங்களில் பச்சை மிளகாய்ப் உணவில் சரிபதியாக சேர்த்து கொள்வதால் என்னவெ வலிமையும் நிறைந்து இருக்கிறார்கள், சரி அதில் இருக்கும் பயன்களை பார்ப்போம்.
நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் கேப்சைசின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் பச்சை மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மைக் கொண்டது. ஏனெனில் பச்சை மிளகாயில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைக்க உதவும்.
பச்சை மிளகாயில் அதிகமான ஆன்டி-ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. நம் உடலின் இயக்க உறுப்புகளின் பாதிப்பிலிருந்து நம் உடலை பச்சை மிளகாய் காக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோயிலிருந்து காக்க உதவுகிறது.
பச்சை மிளகாயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், உணவு செரிமானம் வேகமாக நடைபெறும். மிளகாய்கள் மூளைக்குள் என்டோர்ஃபின்ஸை உற்பத்தி செய்யும். இது நம் மனநிலையை நன்றாக வைத்திருக்கும்.
பச்சை மிளகாயை உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோயினால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கலாம். பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கிறது.
பச்சை மிளகாயில் இயற்கையாகவே இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே பெண்கள் அடிக்கடி உணவில் இதைச் சேர்த்துக் கொள்வது மிகவும் உடலுக்கு நல்லது.
பச்சை மிளகாயில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவுகிறது. அதனால் காரசாரமான உணவை சாப்பிட்டால் நல்ல சருமத்தை நம்மால் பெற முடியும்.
பச்சை மிளகாயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. பச்சை மிளகாயை பயன்படுத்துவதால் மூக்கடைப்பு சரியாகும்படம்