செவ்வாய், 20 ஜூன், 2017

🌺உலக அறிஞர் வாழ்வில் வள்ளுவம்🌺

ஜார்ஜ் பெர்னார்ட் ஷா உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர்; 94 ஆண்டுக் காலம் வாழ்ந்தவர்.

அவர் 'காய்கறி உணவு முறையே சிறந்தது' என்னும் கொள்கையினை கடைப்பிடித்து வந்தவர்.

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிரும் தொழும்”

என்னும் குறட்பாவின் கருத்தினை அவர் அடிக்கடி எடுத்துரைப்பதுண்டு.

1948-ல் 'டைம்ஸ் ஆப் லண்டன்' என்னும் பத்திரிகை ஒரு கருத்துப் படத்தினை வெளியிட்டது. அதில் பெர்னார்ட் ஷா ஒரு நாற்காலியில் அமர்ந்து இருப்பார். அவருடைய காலடியில் ஆடு, மாடு, மான், பன்றி, புறா போன்ற விலங்குகளும் பறவைகளும் நன்றிஉணர்வோடு அவரைப் பார்த்த வண்ணம் படுத்துக் கொண்டும் நின்று கொண்டும் இருக்கும்.

அவரைச் சுற்றிலும் சிங்கம், புலி, கரடி போன்ற கொடிய விலங்குகள் அமைதியாக நின்று கொண்டு அவரை ஆர்வத்தோடு நோக்கிய வண்ணம் இருக்கும்.

இந்தக் கருத்துப் படம் வள்ளுவருடைய 'கொல்லான் புலாலை மறுத்தானை' என்னும் குறட்பாவின் கருத்தினைப் புலப்படுத்துவதற்காக வரையப்பட்டது.

பொருள் பொதிந்த இந்தக் கருத்துப் படத்தினை டில்லியில் இருந்து வெளிவரும் 'ஷங்கர்ஸ் வீக்லி' 1949-ல் அப்படியே வெளியிட்டு, படத்தின் கீழே மேலே காட்டிய திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தது.

'புலால் உணவு உண்பதையே தம் வாழ்க்கைப் போக்காகக் கொண்டுள்ள மேற்கத்திய மக்கள் இடையே புலால் உண்ணாமையே சிறந்த வாழ்க்கை நெறி என்பதனை உணர்த்துவதற்காகப் பெர்னார்ட் ஷா இந்தத் திருக்குறளை மேற்கோள் காட்டி விளக்கி வந்தார்' என்பதனை உணர்த்தவே இந்தக் கருத்துப் படம் வெளியானது.

💐வான்புகழ் வள்ளுவம்💐படம்

ஞாயிறு, 11 ஜூன், 2017

ஊர்களின் பெயர்காரணம்


                       ஊர்களின் பெயர்காரணம்

கோயம்பத்தூர்
         கோவன்களால் உருவாக்கப்பட்ட ஊரானது கோவன்புத்தூர் என்று அழைக்கப்பட்டது.அது பிற்காலத்தில் மருவி கோயம்பத்தூர் என்று மாறிவிட்டதாம்.

திருவான்மியூர்
         வான்மிகம் என்றால் புற்று.புற்றுகள் நிறைந்த பகுதியாக இருந்ததால் இதற்கு திருவான்மியூர் என்று பெயர் வந்தது.

முகலிவாக்கம்
         மௌளி என்றால் கிரிடம்.கோவூர் ஈசனின் கிரிடம் இருந்த இடம் மௌமிவாக்கம்.அது இன்று முகலிவாக்கம் என்று அழைக்கப்படுகிறது.

திருவல்லிக்கேனி
           பார்த்தசாரதி கோவிலின் எதிர் பக்கத்தில் இருக்கும் குளத்தில் நிறைய அல்லி மலர்கள் பூக்குமாம். அதனால் இந்த பகுதிக்கு திருஅல்லிக்கேனி என பெயர் வந்தது.பிற்காலத்தில் அது மருவி திருவல்லிக்கேனி என மாறிவிட்டது.

வேளச்சேரி
        முற்காலத்தில் வேதஸ்ரேணி என்று சொல்லப்பட்ட இடமே இன்று வேளச்சேரி என்று அழைக்கப்படுகிறது.

சனி, 10 ஜூன், 2017

தி கில்டி ப்பர்சன்

                        
அக்ரம் ஒரு பெரிய அரண்மனையில் பணியாளராக பணிபுரிகிறார்.அவர் வேறு வேலைகளையும் அந்த வீட்டில் செய்வார்.அவருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது.ஒவ்வொரு முறையும் வீட்டில் எதையாவது திருடி சாப்பிடுவார்.ஒரு நாள் அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தனர்அக்ரம் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.அப்பொழுது அவர் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்தார்.பிறகு அதிலிருந்த பழச்சாற்றையும்,இனிப்புகளையும் சாப்பிட்டார்.பிறகு இரண்டு ஆரஞ்சு பழங்களையும் சாப்பிட்டார்.





            உடனடியாக யாரோ வீட்டின் மணியை அடித்தனர்.பயந்துவிட்டார் அக்ரம்.அவர் ``வீட்டின் உரிமையாளர் வந்துவிட்டாரோ?இந்த ஆரஞ்சுபழத் தொல்லிகளை நான் என்ன செய்வேன்?’’இதனை மறைத்து வைத்தாலும் அந்த நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தாய் என்ற கேள்வி எழும்.இதனை இங்கேயே வைத்தாலும் பிடிபட்டு விடவேன்’’என்று எண்ணினார்.ஆகையால் அந்த ஆரஞ்சு பழத்தொல்லிகளையும் சாப்பிட்டுவிட்டு கதவைத்திறந்தார். ஆனால் வந்திருந்தது தபால்காரர்.அக்கனம் அக்ரம் யோசித்தார்``ஒரு திருடன் தான் நாம் என்று பிடி படுவோம் என்று பயந்துகொண்டே இருப்பான் நான் இனி திருட மாட்டேன்’’ என்றார்.

தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

தி ப்பாட்டர்ஸ் ப்ரேயர்ஸ்

                            

ஒரு காலத்தில் பானை வியாபாரி ஒருவர் மண்பானைகளை செய்து கொண்டிருந்தார்.அவரது தொழில் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது எனினும் சிலர் அவரது பானை எளிதில் உடையக்கூடியதாக இருக்கிறது என்றனர்.ஆகையால் கடவுளிடம் வேண்டினார்.கடவுள் கண் முன்னே தோன்றிய பிறகு``என்னுடைய பானையை உடையாபடி செய்யுங்கள் ஆகையால் எனது வாடிக்கையாளர்கள் புகார் கூற மாட்டார்கள்’’ என்றார்.



            கடவுளும் அவரை வாழ்த்தி விட்டு மறைந்தார்.இப்பொழுது அவர் செய்யும் எல்லாப் பானைகளும் உடையாமல் இருந்தன.ஆனால் அவருடைய வாடிக்கையாளர்கள் புதிய பானையை வாங்காமல் இருந்தன.மறுபடியும் கடவுளிடம் தாயே நான் செய்தது பிழை எனது பானையை பழைய படி மாற்றிவிடுங்கள் என்றார்.நான் இயற்கைக்கு புறம்பாக மாற நினைத்தேன் அது எனது தவறுதான் என்னை மன்னித்துவிடுங்கள்.அவரது பிராத்தனையை கேட்டு அவரத் கோரிக்கையை நிறைவேற்றினார்.இப்போழுது அவரது தொழில் பழையபடி நன்றாக சென்றது.சில விஷயங்களை நாம் மாற்ற நினைக்கக் கூடாது.

                               தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

வெள்ளி, 9 ஜூன், 2017

தமிழில் டீக்கு "தேநீர்',
காபிக்கு "குளம்பி' என்று
பெரும்பாலோருக்குத் தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!
சப்பாத்தி - கோந்தடை
புரோட்டா - புரியடை
கேக் - கட்டிகை
சமோசா - கறிப்பொதி
பாயசம் - பாற்கன்னல்
பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி
பொறை - வறக்கை
கேசரி - செழும்பம்
குருமா - கூட்டாளம்
ஐஸ்கிரீம் - பனிக்குழைவு
சோடா - காலகம்
ஜாங்கிரி - முறுக்கினி
ரோஸ்மில்க் - முளரிப்பால்
சட்னி - அரைப்பம்
கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு
பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்
போண்டா - உழுந்தை
ஸர்பத் - நறுமட்டு
சோமாஸ் - பிறைமடி
பப்ஸ் - புடைச்சி
பன் - மெதுவன்
லட்டு - கோளினிsouth indian food க்கான பட முடிவு
புரூட் சாலட் - பழக்கூட்டு

தி ஸ்மார்ட் டாக்

                                                          
விவசாயி ஒருவரிடம் ஒரு மந்தை ஆடுகளை வைந்திருந்தார்.அவரும் அவரது மனைவியும் மிக கடினமாக கண்காணித்து வந்தாலும் அவரது ஆடுகளை நரி தின்றுவிடுகிறது .இப்பொழுது மந்தையில் மீதி இருக்கிறது ஒரே ஒரு ஆடுதான்.ஒருநாள் அந்த ஜோடி அமர்ந்து திட்டமிட்டு ஆட்டை விற்றக முடிவுசெய்து விட்டனர்.அவர்களது பேச்சை ஒட்டுக்கேட்ட ஆடு
``நான் கரிகாரனிடம் பலியாவதைவிட சுதந்திரமாக திரிவதையே விரும்புகிறேன்’’.
ஆகையால் அன்று இரவு காவல் நாயுடன் அந்த ஆடு வேளியேர முடிவெடுத்துள்ளது.அந்த வகையில் ஓநாய் ஆடு நாயுடன் செல்வதை பார்த்து அதனை உணவாக்க முடிவெடுத்துவிட்டது.ஆனால், நாய் இருக்கும் வரை ஆட்டை உணவாக்க முடியாது என்று அதற்கு தெரியும்.

            ஆகையால் ஓநாய் ``ஏய்! நான் உனக்கு கொடுத்த சட்டையை திருப்பி கொடு?’’ என்றது.ஆனால் நாய் அதன் உள்நோக்கத்தை அறிந்துகொண்டது.அந்த நாய் அருகில் இருக்கும் வேலியை கவனத்தில் கொண்டு,ஓநாயிடம் ``அங்கு தொங்கிக்கொண்டிருக்கும் புனித கயிற்றை தொட்டால் நாங்கள் உன்னை நம்புகிறோம் என்றது.அந்த நரி அந்த கயிற்றின் அருகில் சென்றதும் வேலியில் சிக்கியது.காலையில் எழுத்தவுடன் அந்த விவசாயிக்கு தனது ஆடுகளை தின்ற ஓநாய் சிக்கிவிட்டது.இப்பொழுது அவை அமைதியாக வீடுதிரும்பின.

                                          தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்