செவ்வாய், 4 ஏப்ரல், 2017

கால்சியம் பற்றாக்குறைக்கு புரோக்கோலி முட்டைகோஸ் காலிஃபிளவர் போன்றவற்றை பயன்படுத்தி உடலுக்கும் மண்ணுக்கும் தீங்கிழைக்கும் உற்பத்தி கலாச்சாரத்தினை ஊக்குவிக்காமல் .......

அகத்தீ கீரையை பயன்படுத்தலாமே .....

அகத்தில்"தீ"சக்தியை உருவாக்குவதாலேயே இந்த பெயர் இருக்க கூடும் உடலுக்கு தேவைப்படும் எரிசக்தி ஆற்றலை வழங்குவதால் இதனை கீரைகளில் முதன்மையானதாகவே கருதி இருக்க கூடும் ....

"அகத்தி கீரை"நோய் எதிர்பாற்றலை உடலில் உருவாக்கும் இரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை வெளியேற்றம் மனநிலையை சரியாக வைத்துகொல்லும் திறன் அகத்தி கீரைக்கு உண்டு அகத்தி கீரையில் கால்சியம் அதிகம் அதனால் குடல் புண்களை போக்கும் உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களையும் தருகிறது விட்டமின்"A"அதிகம்.....மணதக்காளி கீரையை சாப்பிட்டால் அல்சர் குணமாகும் என்பதற்கு காரணமே அவற்றில் உள்ள மிகையான கால்சியம் என்பது நமக்கு தெரியும் அதைவிட இதில் கால்சியம் அதிகம் அதனால் தான் பால் கறக்கும் மாடுகளுக்கு அதிகபடியான அகத்தி கீரையை தருகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுவோம் ....

நாட்டு மருந்து சாப்பிடும் போது இதை சாப்பிட்ட கூடாது என்பதற்கு காரணம் மருந்தில் உள்ள சத்துக்களை வெளியேற்றம் செய்துவிட கூடும் அதனாலேயே அளவாக மாதத்தில் இரண்டு முறை மட்டுமே உட்கொள்ள வேண்டும் ...

அகத்தி பூவை சூப்பாக செய்து சாப்பிட்டால் குடல் புழுக்களையும் வேண்டாத பாக்டீரியாக்களை கொள்ளும் திறன் இந்த பூவிற்கு உண்டு ....

இறப்பு நடந்த வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்பதாம் நாள் இறுதி காரியத்திற்கு பயறுவகைகளுடன் இந்த அகத்தி கீரையை சாப்பிட கொடுப்பது துக்கத்தில் துவண்டு போயிருந்த உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதற்காக தானே ...!!
கால்சியம் பற்றாக்குறைக்கு புரோக்கோலி முட்டைகோஸ் காலிஃபிளவர் போன்றவற்றை பயன்படுத்தி உடலுக்கும் மண்ணுக்கும் தீங்கிழைக்கும் உற்பத்தி கலாச்சாரத்தினை ஊக்குவிக்காமல் .......

அகத்தீ கீரையை பயன்படுத்தலாமே .....

அகத்தில்"தீ"சக்தியை உருவாக்குவதாலேயே இந்த பெயர் இருக்க கூடும் உடலுக்கு தேவைப்படும் எரிசக்தி ஆற்றலை வழங்குவதால் இதனை கீரைகளில் முதன்மையானதாகவே கருதி இருக்க கூடும் ....

"அகத்தி கீரை"நோய் எதிர்பாற்றலை உடலில் உருவாக்கும் இரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை வெளியேற்றம் மனநிலையை சரியாக வைத்துகொல்லும் திறன் அகத்தி கீரைக்கு உண்டு அகத்தி கீரையில் கால்சியம் அதிகம் அதனால் குடல் புண்களை போக்கும் உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களையும் தருகிறது விட்டமின்"A"அதிகம்.....மணதக்காளி கீரையை சாப்பிட்டால் அல்சர் குணமாகும் என்பதற்கு காரணமே அவற்றில் உள்ள மிகையான கால்சியம் என்பது நமக்கு தெரியும் அதைவிட இதில் கால்சியம் அதிகம் அதனால் தான் பால் கறக்கும் மாடுகளுக்கு அதிகபடியான அகத்தி கீரையை தருகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுவோம் ....

நாட்டு மருந்து சாப்பிடும் போது இதை சாப்பிட்ட கூடாது என்பதற்கு காரணம் மருந்தில் உள்ள சத்துக்களை வெளியேற்றம் செய்துவிட கூடும் அதனாலேயே அளவாக மாதத்தில் இரண்டு முறை மட்டுமே உட்கொள்ள வேண்டும் ...

அகத்தி பூவை சூப்பாக செய்து சாப்பிட்டால் குடல் புழுக்களையும் வேண்டாத பாக்டீரியாக்களை கொள்ளும் திறன் இந்த பூவிற்கு உண்டு ....

இறப்பு நடந்த வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்பதாம் நாள் இறுதி காரியத்திற்கு பயறுவகைகளுடன் இந்த அகத்தி கீரையை சாப்பிட கொடுப்பது துக்கத்தில் துவண்டு போயிருந்த உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதற்காக தானே ...!

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க என்ன வழி..?




ரத்த கொதிப்புக்கான மாத்திரைகள் உட்கொண்டு ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். உடல் பருமனை உடற்பயிற்சிகள் மூலம் குறைத்து, சரியான எடை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் உயரத்தை சென்டிமீட்டரில் எடுத்துக்கொண்டு அதிலிருந்து நு}றை கழித்தால் வரும் அளவே உங்களின் சரியான எடையாகும்.

ஒரு கிலோ எடையை குறைத்தால் மூன்றிலிருந்து நான்கு மி.மீ., எச்.ஜி., ரத்த அழுத்தம் குறையும். எடுக்கும் உப்பின் அளவை பாதியாக குறைத்தால், ஏழு மி.மீ., எச்.ஜி., ரத்த அழுத்தம் குறையும். ஊறுகாய், கருவாடு மற்றும் உப்பு போட்டு சமைக்காமல், சாம்பாரில் பாதி உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இரவில், 6-8 மணி நேரம் தூங்குதல், யோகா செய்தல், மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொள்ளுதல் போன்றவற்றால் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம். ரத்த அழுத்தம் சிறிதளவு மட்டும் அதிகமாக இருந்தால், மாத்திரை இல்லாமல் உணவு மற்றும் மன கட்டுப்பாட்டால் சரிசெய்யலாம்.

ரத்த அழுத்தத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?

தினமும் டீ, காபி குடிப்பதை தவிர்த்து, 1 டம்ளர் மோரில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து குடித்து வந்தால், இரத்த அழுத்தம் விரைவில் குறையும்.

முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து, அதை உலர்த்தி பொடியாக்கி, தினமும் இரண்டு வேளைகள் 2 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம் குறையும்.

வெந்தயம், பாசிபயறு, கோதுமை, ஆகியவற்றை சிறிதளவு எடுத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதனுடன் மிளகு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறையும்.

அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து, அதன் சாறு எடுத்து அதனுடன் ஐந்து பங்கு சுத்தமான தண்ணீர் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தம் குறையும்.

அரைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, அதை உலர்த்திப் பொடியாக்கி, தினமும் இரண்டு வேளைகள் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறைந்துவிடும்.

நமது உடல் நலனில் நாம் தனி கவனம் செலுத்த வேண்டும். முறையான தூக்கமும், நிறைவான மன அமைதியும் பல பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கும்.


பாசம்

மூலையில் நின்று எட்டிப் பார்க்கும்
முகம் காட்டாமல் அன்பு செலுத்தும்
கண்டதும் இயல்பு நிலைக்கு மாறும்
காரணமின்றி கண்ணீர் சிந்தும்
கஷ்டம் என்றால் உடனிருக்கும்
கனவிலும் கற்பனை செய்யும்
காதல் என்று பெயர் சொல்லும்
பிரிந்தாலும் பாசம் மாறாமல் இருக்கும்
.
.
.
.
அப்பாவாகவும், அம்மாவாகவும், ஆசிரியராகவும், உடன் பிறப்பாகவும், நண்பர்களாகவும் நம்மீது அன்பு செலுத்தும் அனைவருக்கும் நன்றிகள் பல கூற வேண்டிய தருணம். . . . . . .

வியாழன், 30 மார்ச், 2017

இன்றை சிந்தனை (காணொளி)









வாய்ப்புக்காகக் காத்திருக்காதே உருவாக்கு!
என்று என் மாணவிகளுக்கு அடிக்கடி சொல்வதுண்டு..
என் மாணவிகளுள் தமிழ்மணி முருகன் அவர்கள் எங்கள் கல்லூரியில் வேதியியல்துறை பயின்று வருகிறார். இவருக்கு வானொலி அறிவிப்பாளராகவேண்டும் என்பது பெரிய கனவு.
அதற்கான வாய்ப்புக்காக பலமுறை என்னைச் சந்தித்தார்..
அவருக்கான வாய்ப்பை நான் அவருக்காக உருவாக்கியுள்ளேன்.
இனி நாள்தோறும் ஒரு சிந்தனையை வேர்களைத்தேடி என்னும் யுடியுப் வலைக்காட்சி வழியாக இணையத்தில் பதிவேற்றவுள்ளேன்.
உங்கள் ஊக்குவித்தலுடன் இன்று அவரது குரல் யுடியுப், முகநூல், கட்செவி உள்ளிட்ட பல்வேறு சமூகத் தளங்களிலும் ஒலிக்கிறது.
வாழ்த்துக்கள் தமிழ்மணி முருகன்!
எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும் உங்கள் குரல்!


புதன், 29 மார்ச், 2017

உழைப்பின் அருமை...




Image result for டால்ஸ்டாய்...



 இரஷ்ய நாட்டில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர் இருந்தார். அவ்வப்போது உழவுத்தொழிலையும்  செய்து வந்தார்.  ஒருமுறை தொடர்வண்டி நிலையத்தில் அவர் நின்றிருந்தபோது, அங்கிருந்த பெண்மணிஒருவர் அவரைக் கையைத்தட்டி அழைத்தார். அவரின் தோற்றம் ஒரு கூலிக்காரர்போல் இருந்ததோ என்னவோ?

ஐயா, தொடர்வண்டி புறப்படும் நேரமாகிவிட்டது.  என் கணவர் அருகிலுள்ள சிற்றுண்டி விடுதியில் உள்ளார்.  அவரை, இங்கு அழைத்து வாருங்கள். நீங்கள் செய்கின்ற இந்த உதவிக்குக் கூலி பெற்றுக்கொள்ளுங்கள்எனக் கூறிய அப்பெண்மணி, அவருடைய கணவரின் தோற்ற அடையாளங்களைக் குறிப்பிட்டார்.

அவரும் ஒப்புக்கொண்டு அப்பெண்மணியின் கணவரை உடனடியாக அழைத்து வந்தார்.  அவர் செய்த வேலைக்கான கூலியாகச் சிறுதொகையைப் பெற்றுக்கொண்டார்.

சிறிதுநேரங்கழித்த பின்னர்தான்  அப்பெண்மணிக்கு, அவர்தாம் இரஷ்ய நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் என்பது தெரிந்தது.

தான் செய்த தவற்றை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டார் அப்பெண்மணி.  ஆனால் டால்ஸ்டாயோ, “அதனால் என்ன, நீங்கள் சொன்ன வேலைக்காகப் பெற்றுக்கொண்ட கூலியைத் திருப்பித் தரமாட்டேன்என்றார். புகழ் பெற்றவராயினும் உழைப்பின் அருமையை அவர் அறிந்திருந்தார்.

உழைத்து உண்ணும் உணவே சுவைக்கும். உழைக்காமல் உண்பது பிறர் உழைப்பைச் சுரண்டுவதற்கு ஒப்பாகும்.  எந்த வயதினராக இருப்பினும், உழைத்தே உண்ணுதல் வேண்டும்.  அப்பொழுதுதான் அந்த வீடும் நாடும் முன்னேறும்……

புதன், 22 மார்ச், 2017

நம்பிக்கை



அண்ட வெளியில் சுற்றித் திரியும்
சூரியன், பூமி, நட்சத்திரம் யாவும்
தன்னைத்தவிர வேறு ஒருவரை
நம்பி இல்லை!
நண்பனே நீயும் உன்னை
முழுமையாக நம்பு
உன்னை வெற்றி கொள்ள
வேறொருவர் இங்கில்லை!

திங்கள், 20 மார்ச், 2017

நல்லதை செய் நல்லதே நடக்கும்


                               
  ஒரு வகுப்பில் முத்து, கண்ணன் என்னும் சிறுவர்கள் இருந்தார்கள்.அதில் முத்து என்பவன் நாய், பூனை, அணில், ஓணான் போன்ற வாயில்லா பிராணிகளை கண்டால் கல்லால் அடித்து மகிழ்வான். அவனுடைய பெற்றோர் எவ்வளவோ அறிவுரை கூறியும் அவன் திருந்தவில்லை. ஒரு நாள் அவன் தன் வீட்டின் முன் உட்காந்து வாழைப்பழம் சாப்பிட்டான். சாப்பிட்டு விட்டு அத்தோலை தெருவில் வீசினான். ஒருவர் அதில் வழுக்கி விழுவதைக்கண்டு அவன் சிரித்து மகிழ்ந்தான். மீண்டும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை தெருவில் வீசினான் வழியே வந்த ஒருவர் அதில் வழுக்கி விழுவதைக் கண்ட முத்து மிகவும் மனம் வருந்தி அழுதான் காரணம் அது அவனுடைய ”தந்தை”.

          கண்ணன் என்பவன் அனைவரிடமும் அன்பாக பழகுவான். ஒருவருக்கு உதவி செய்ய எந்த நிலையிலும் தயங்க மாட்டான். ஒருமுறை அவனுடைய நண்பன் ஒருவன் மதிய உணவு கொண்டு வரவில்லை. அவன் மிகவும் பசியினால் வாடினான். அதையறிந்த கண்ணன் தன்னுடைய உணவை நண்பனிடம்  கொடுத்தான். இருப்பினும் அவனுக்கு பசி இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் கண்ணனை அழைத்து அவனுடைய உணவை இருவரும் பகிர்ந்து உண்டார்கள். இதனால் அவனுடைய பசியும் அடங்கியது.

மையக்கருத்து: நாம் செய்கின்ற செயல் நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் அது நமக்கே திரும்பும்.