சனி, 3 டிசம்பர், 2016

டாக்கடர்.கிராக்கி

                                                                டாக்கடர்.கிராக்கி
                         
 ஒரு நாள் தவளை ஒன்று தன் குலத்தை விட்டு அருகே காட்டுப்பகுதிக்கு உள்ளே உள்ள நதிக்கு இடம் மரியது.அந்த வனப்பகுதிக்குள் ஒரு வீட்டை அமைக்க சென்றது.அங்கு சென்ற பின் எந்த விலங்குகளையும் தவளை காணவில்லை.ஆனால், தவளைக்கு அனைவரையும் கண்டு அவர்களுடன் நட்பு கொள்ள வேண்டும் என்று ஆசை.ஆதலால், பெரிய கரடின்மேல் ஏரி ``நண்பர்களே அனைவரும் வெளியே வாருங்க்கள் நான் உங்களை சந்தித்து நண்பனாக வேண்டும்.நான் அருகாமையில் இருக்கும் கிராமத்திலிருந்து வந்திருக்கிறேன்’’.இந்த தவளையின் குரல் கேட்டு அனைத்து விலங்குகளும் வந்தது.மான்,ஆமை,வாத்து,பட்டாம்பூச்சி, மற்றும் நரி அனைத்தும் வந்தது. ``முதலில் நான் என்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறேன்.என் பெயர் டாக்டர்.கிராக்கி நான் அனைத்து விதமான நோய்களையும் தீர்ப்பதற்கான மருந்துகளையும் வைத்திருக்கிறேன் என்னை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கலாம்’’ என்றது.இதனைக் கேட்ட நரி ``உன்னால் அனைத்து நோய்களையும் தீர்க்க முடியும் என்றால், உன்னுடைய ஊனமுற்றது போன்ற கால்களை ஏன் சரி செய்ய இயலவில்லை? நீ எப்படி அமர்ந்திருக்கிறாய் பார்’’என்று கோலி செய்தது.அதனைக் கேட்ட அனைத்து விலங்குகளும் சிரித்துக்கொண்டே வீடு திரும்பினர்.

                                                                  (தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி.


வெள்ளி, 2 டிசம்பர், 2016

டூ யு நோ ஸ்விம்மிங் ?

                                                            டூ யு நோ ஸ்விம்மிங் ?

ஒரு முறை கஞ்சதனமான ஞானி ஒருவர் எப்பொழுதும் மக்களை ``உனக்கு இந்த  வேலையைகூட செய்ய இயலவில்லை ? உங்களுக்கேல்லாம்  சமயத்தைபற்றியும் வாழ்க்கை தத்துவத்தை பற்றி ஏதுவும் தெரியவில்லை ஆகையால் உங்கள் வாழ்க்கை அர்த்தமற்றது’’.என்று பழிப்பார்.ஒரு நாள் அவர் ஒரு வேலைக்காக ஆற்றை கடக்கவேண்டிய நிலை.அங்கு ஒரு சிறிய படகை கண்டார் அதனுள் ஏறி அமர்ந்தார்.அந்த படகின் உரிமையாளர் எனக்கு அதற்காக நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்றார்.`` ! நீ என்னிடம் பணம் கேட்கிறாயா? நான்,செல்லும் வழியில் உனக்கு நிறைய அறிவுச்செல்வத்தை தருகின்றேன்’’ என்றார்.
            ``உனக்கு துளசி தாஸ்ஸை தெரியும் இல்லை இராமாயண் பற்றி ஏதாவது தெரியுமா?.....என்றார்.அவர் அவனுக்கு பணம் தருவதை தவிர்க்க நிறைய செய்திகளை அவனிடம் ``உனக்கு தெரியுமா?’’ என்றே கேட்டுக்கொண்டு வந்தார்.இந்நிலையில் நடூ ஆற்றில் சுழல் ஒன்னு வந்தது. அந்த படகு உரிமையாளரால் படகை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை ஆகையால் அந்த ஞானியிடம்``உங்களுக்கு நீச்சல் தெரியுமா?’’ என்று கேட்டார்.அதற்கு அவர் ``எனக்கு தெரியாது’’ என்றார். இத்தனை விஷயங்கள் தெரிந்த உங்களுக்கு இந்த சிறு உயிர் காக்கும் கலை தெரியவில்லையே இப்போது நான் குதித்துவிடுவேன் தாங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?என்று கூறி குதித்தான்.அந்த ஞானி சுழலில் சிக்கி இறந்தார்.
                                                     
                                                            (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி


வியாழன், 1 டிசம்பர், 2016

உணவு பழமொழி..!!


குறள்;945

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

விளக்கம்;

ஒருவன் உடம்பிற்கு ஒவ்வாத உணவுகளை விலக்கி உண்டால்,அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.


செவ்வாய், 29 நவம்பர், 2016

மின்னூல் உருவாக்குவது எப்படி?

LibreOffice Writer,  sigil,  Calibre  போன்ற கட்டற்ற இலவச மென்பொருட்கள் கொண்டு மின்னூல் உருவாக்குவது எப்படி?
காணொளி – https://youtu.be/0CGGtgoiH-0
FreeTamilEbook.com ல் மின்னூல் வெளியிட விரும்பும் நூலாசிரியர்களும்,
பங்களிப்பாளர்களும் இந்தக் காணொளியைக் காண வேண்டுகிறேன்.
இனி நீங்களே எளிதில் மின்னூல் உருவாக்கி அனுப்பலாம்.


நன்றி இலவச மின்னூல் தகவல் மையம்.

ஞாயிறு, 27 நவம்பர், 2016

தி கவர்ட்’ஸ் எபிலிடி

                                                               தி கவர்ட்ஸ் எபிலிடி
சிறிய கிராமம் கோழையாக, பயந்த ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார்.அவருக்கு சிறிய சத்தம்கூட பயந்தை ஏற்படுத்தும்.ஒருமுறை முரசு அறிவிப்பவன் ``அரசர் எல்லா இளஞர்கர்களையும் தனது படையில் சேர்ந்துகொள்ள ஆனையிட்டிருக்கிறார்.இதனை எல்லோரும் கடைபிடிக்கவேண்டும் ! ‘’என்று கூறினான்.இவர் இப்பொழுது கட்டாயநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஆகையால், படையில் சேர நகரத்திலிருந்து விடைபெற்றார்.


            வழியில் பெரிய, அடர்ந்தமரம் ஒன்றை கடந்தார்.அதில், நிறைய காகங்கள் அமர்ந்து கூச்சலை ஏற்படுத்திக்கொண்டிருந்தன.அவைகளின் கூச்சல் இந்த கோழை மனிதரை நடுங்க செய்தன.ஆகையால்,அவர் நடுங்க செய்தன.ஆகையால்,அவர் அங்கேயே நின்று விட்டார்.சில காலம் நின்ற பிறகு முன்னோக்கி நடந்தார்.அப்பொழுதும் அந்த காகங்கள் கூச்சலிட்டனர்.மறுபடியும் பயத்தால் உரைந்து போன அவர்`` ! கூச்சலிடுங்கள் உங்களால் எவ்வளவு இயலுமோ?அவ்வளவு கூச்சலிடுங்கள், எனக்கு தெரியும் உங்களால் இயலுமோ? அவ்வளவு கூச்சலிடுங்கள், எனக்கு தெரியும் உங்களால் என்னை ஒன்னும் தின்று விட முடியாது !’’ என்றார். ஏனெனில்,அந்த காக்கைகள் அவர் தின்றுவிடும் என்று பயம்.ஆனால், உண்மையில் இவர்க்கு படையில் சேர தகுதியே இல்லாதவர்.ஒரு மனிதன் அவனுக்கு தகுந்த, திறமைக்கு ஏற்ற வேலையைத்தான் செய்ய வேண்டும்.

                                                      (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி



தி ஹன்டர்’ஸ் டாக்

                                                            தி ஹன்டர்ஸ் டாக்

ஒரு முறை காட்டில் சில முயல்களை வேட்டையாட வேடன் ஒருவன் தன்,நாயுடன் சென்றான்.இருவரும் இப்படி நிறைய முறை வேட்டையாடி இருக்கின்றனர்.ஒருமுறை வேட்டையாடையில் செடியை விளக்கி முயலை தேடும்போது பாம்பும் கீரியும் சண்டையிடுவதைக் கண்டனர்.சில சமயம் அந்த விசப்பாம்பு சீரி கீரியைக்கொத்தியது. சில சமயம் அந்த கீரி பாம்பைக் கொத்தியது.அவைகளின் இந்த சண்டையை தீர்க்க முடிவு செய்து, வேடன் தன் துப்பாக்கியால் கீரியின் தலையில் சுட்டார்.பின் அதனை கவ்வி எடுத்து வரும்படி தன் நாய்க்கு ஆணையிட்டார்.
           

            நாயும் தன் உரிமையாளருக்கு விசுவாசமாக அந்த இடத்திற்கு சென்றது.இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த கீரியின் தலையை கவ்வும்போது, பாம்பு நாயை கொத்தி கொன்றது.அப்போது வேடன், ``நான் தவரு இழைத்துவிட்டேன் உண்மையான எதிரி பாம்புதான்.கீரியை சுட்டு என் விசுவாசமான நாயை இழந்துவிட்டேன்’’ என்று வருந்தினான்.

                                                            (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி