செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

அதிரடியாக ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக்கின் 'அகுய்லா'..!

மிகப்பெரிய சமூக வலைதலமான பேஸ்புக், இன்டர்நெட் மூலம் உலகை இணைக்கும் திட்டமான சூரிய சக்தி மூலம் இயங்கும் தனது ட்ரோன் ஆன 'அகுய்லா'வை (Aquila) தொடங்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று தொடங்கப்பட்ட இந்த ட்ரோன் தான் உலகை முன்னேற்ற உதவும் முதன்மை இணைய அணுகலை (primary internet access) கொண்டு முதல் முழு அளவிலான டிரோன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அகுய்லா ட்ரான் ஆனது பறக்கவல்ல தற்கால விமானம் வடிவமைப்பின் முன்னோட்டம் என்றும் இதன் மூலம் வளரும் உலகின் அத்தியாவசிய இணைய அணுகல் பெற முடியும் என்றும் பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சூக்கர்பெர்க் பதிவின் கீழ் 'இரண்டு ஆண்டு பொறியியல் வேலைகளுக்கு அகுய்லா ட்ரோன் வெற்றிகரமாக தனது முதல் விமான விமானத்தை தொடங்கியது என்பதை அறிவிக்க பெருமைப்படுகிறேன். சூரிய சக்தி மூலம் இயங்கும் இந்த விமானம் உலகின் தொலை தூர பகுதிகளுக்கு 'பீம்' () வழிமுறையில் இணைய வசதியை வலபிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இறுதியாக நீண்ட ஆளில்லா விமானம் சார்ந்த வரலாற்றை நாங்கள் உருவாக்கிவிட்டோம்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
'மாதிரிகள் மற்றும் விமானம் அமைப்பு மற்றும் வளர்ச்சி குறித்து இரண்டு ஆண்டுகளாய் சேகரிக்கப்பட்ட தரவுவுகளின் கீழே இதன் இயக்கம் இருக்கும். இதற்கு முன்பு நிகழ்த்தப்படாத வண்ணம் 60,000 அடி உயரத்தில் இருந்துகொண்டே லேசர்கள் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் 'அக்குய்லா' ஒரு மாதங்களுக்கும் மேல் வானத்தில் தங்கும்' என்றும் மார்க் சூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
'உலகம் முழுவதையும் இன்டர்நெட் மூலம் இணைப்பது மற்றும் இணைய வசதிக்கான சாத்தியமே இல்லாத 4 பில்லியன் மக்களை ஆன்லைனுக்கு கொண்டு வருவது தான் எங்கள் முக்கிய நோக்கம்' என்றும் மார்க் சூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

ஒன்பது வருட காத்திருப்பு, இஸ்ரோவின் பார்வையில் பட்ட 'ப்ரதம்'..!


மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (Indian Institute of Technology Bombay - IIT-B) 'விண்மீன் கனவுகள்' இறுதியாக ஒன்பது ஆண்டு காத்திருப்பிற்கு பின், அடுத்த மாதம் விண்ணை தொட இருக்கிறது.
10 கிலோ எடைகொண்ட அந்நிறுவனத்தின் 'மாணவர் செயற்கைக்கோள்' (Studebt Satellite) ஆன 'ப்ரதம்' (Pratham), இஸ்ரோ நான்கு கட்ட போலார் எஸ்.எல்.வியை (பி.எஸ்.எல்.வி.) உதவியுடன் வரும் செப்டம்பர் மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்த இருக்கிறது.
இஸ்ரோவின் முக்கிய செயற்கைக்கோள்கள் ஆன ஸ்காட்சாட் (ScatSat) மற்றும் பிற சில முக்கியமான செயற்கைக்கோள்களுடன் சேர்த்து ப்ரதம் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. முதலில் 2007-ஆம் ஆண்டில் இஸ்ரோவினால் உறுதி செய்யப்பட்ட 'ப்ரதம்' செயற்கைக்கோள் பல்வேறு காரணங்களுக்காக தாமதங்கள் உண்டாகி , அதன் வெளியீட்டு அட்டவணை தேதியானது பின்தங்கிகொண்டே போனது.
'ப்ரதம்' ஒரு அயன்மண்டலத்துக்குரிய ஆய்வு செயற்கைக்கோள் என்பதும் இதன் முக்கிய பணி பூமியின் மண்டிலத்தின் (Earth's ionosphere) எலக்ட்ரான்களை எண்ணுவதென்பதும் குறிப்பிடத்தக்கது. நான்கு மாத பணி காலம் கொண்ட ப்ரதம் விண்வெளியில் 720 கி.மீ. என்ற உயரத்தில் நிறுத்தப்படும். அதன் தரவுகள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் ஜி.பி.எஸ் தகவல்களில் உள்ள பிழைகளை திருத்த உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சனி, 9 ஜூலை, 2016

கனவு

                                                             Image result for dream     

கற்பனையை முதலெழுத்தாய் கொண்டிருப்பாய் !
உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் இயக்குனரை
தூக்கத்தில் வெளிக்கொணர்வாய் !
எண்ணுவன எல்லாம் நிறைவேறுவது உன்னில் மட்டுமே !
கடவுளின் கற்பனை இந்த உலகமென்றால் – அந்த
கடவுளும் கனவு கண்டிருப்பாரோ !
சில நேரங்களில் நித்திரையில் வருகிறாய் ;
சில நேரங்களில் நித்தம் நித்தம் வருகிறாய் !
அந்த ஆதி மனிதனும் சக்கரத்தை
முதலில் உன்னில் தான் கண்டானோ !
மனிதனின் நினைவளைகள் நீ என்றால்
உன்னுடைய நினைவளைகள் தான் மனிதனா ?
கனவு என்னும் மூன்றழுத்தும் ,
கற்பனை என்னும் நான்கெழுத்தும் சேர்ந்துதான்

கண்டுபிடிப்பு என்னும் ஏழெழுத்தை உருவாக்கியதோ ?