செவ்வாய், 5 ஜூலை, 2016

ஆல் தி வால்ட்ஸ் எ ஸ்டேஜ்

ஆல் தி வால்ட்ஸ் எ ஸ்டேஜ்
                                    --வில்லியம் ஷேக்ஸ்பியர்
வில்லியம் ஷேக்ஸ்பியர்(1564-1616)சிறந்த நாடக மற்றும் கவிதை எழுத்தாளர். இவரது படைப்புகள் பலவற்றை பல மெழிகளில் மெழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது சில சிறந்த நாடகங்களான ஹாம்லட்,ஒதல்லோ,மாக்பேத்,கிங் லியர், தி மிட் சம்மர் நைட் டிரீம்,தி மெர்சன்ட் ஆப் வினைஸ் மற்றும் தி டேம்பஸ்ட் என்பனவாம்.

      ஷேக்ஸ்பியரது`ஆல் தி வால்ட்ஸ் எ ஸ்டேஜ்` என்ற பகுதி`அஸ் யூ லைக் இட்` என்ற நாடகத்திலிருந்து ஆக்ட்III சீன் 7 பகுதியை இங்கு குறிப்பிடுகிறார்.இதில் வரும் சோகக் கதாப்பாத்திரமான ஜாகுவஸ் கூறும் வாழ்கைத் தத்துவமே இப்பகுதி.அவரைப் பொறுத்த வரை மனித வாழ்வு ஏழு பருவங்களைக் கொண்டது.அவை குழந்தை,பள்ளிச் சிறுவன்,காதலர்,சிப்பாய், வளர்ந்த வருவம்(adult hood),முதுமை பருவம் மற்றும் இரண்டாம் குழந்தை பருவம், என்று கூறுவர்.
      இதில் முதலாம் பருவமான தாய் அரவனைப்பில் உள்ள குந்தை பருவத்தில் எதை சாப்பிடக் கொடுத்தாலும் கக்கிக்கொண்டும்,அழுதுகொண்டும் இருப்பான்.இரண்டாம் பருவத்தில் விருப்மில்லாமல் பள்ளிக்கு செல்வான் பொழுதும் பகார் செய்து கொண்டே இருப்பான்.3ஆம் பருவமான காதலர் பருவத்தில் தன் காதலியை ஆளமாக காதல் செய்வான்,அவளது கண்கள் புருவம் முதலியனவற்றை ஆளமாக வருணித்து பாடுவான்.
பின்னர், 4ஆவர் பருவமான சிப்பாய் பருவத்தில் பல சத்தியங்களை எடுத்துக்கொள்வான்.தனது பெருமை மீது பொறாமை கொள்வான் அதனை காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பான்.
      ஐந்தாம் பருவத்தில் சிறு தொப்பை கொண்டு தனக்கு பிடித்த உணவுகளை உட்கொண்டு பழமொழிகளை தன் வாழ்கை ஆனுபவத்துடன் எடுத்துக் கூறுவர்.6ஆம் பருவமான முதுமையில் மெளிந்து,தளர்ந்து போயிருப்பர்.தனது பார்வைக் குறையால் மூக்கின் மீது கண்ணாடி போட்டுக் கொண்டும்,வெற்றிலை போட்டும் சிறிது பணத்தை தனது கப்பையில் வைத்துக் கொண்டு பெரிய சட்டைகளையெல்லாம் அனிந்து கொண்டிருப்பார். கடைசி பருவமான இரண்டாம் குழந்தை பருவத்தில், மனிதன் முழூ குழந்தையாகவே மாருகின்றார்.பெரும்பாலும் அனைத்தையும் இவ்வயதில் மறந்திருப்பர்.இவரது நினைவாற்றல் குறைந்தே இருக்கும். பற்கள், பார்வை ,சுவை அனைத்தும் தளர்ந்தே இருக்கும்.பின்னர் இந்த நாடகத்தை நிறுத்திவிட்டு உலகம் என்னும் மேடையை விட்டு வெளியேரிவிடுவான் என்கிறார்.


ஞாயிறு, 3 ஜூலை, 2016

பொறுமை!!

   

மனிதனுக்கு  தேவை மொழி                                        
மொழிக்கு      தேவை பேச்சு

பேச்சுக்கு       தேவை படிப்பு

படிப்புக்கு       தேவை கல்வி

கல்விக்கு       தேவை ஆசிரியர்

ஆசிரியருக்கு  தேவை வேலை


வேலைக்கு    தேவை பொறுமை!!!

சனி, 2 ஜூலை, 2016

கவிதையின் சிறப்பு



 
ஒரு நிமிடம் யோசிக்க வைத்த கவிதை

பல நிமிடங்களில் வாக்கியமானது,                                                         
வாக்கியமான இக்கவிதை பிரபலமானது,

பிரபலமான இக்கவிதை இன்று உலகம்
               
         சுற்றும்  வாலிபனாக திகழ்கிறது!!!                     
   




வெள்ளி, 1 ஜூலை, 2016

பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்படுவதைத் தடுக்கும் வழி..!!!



சில நேரங்களில் உங்களின் பேஸ்புக் கணக்கு வேறு ஒருவரால்  ஹாக் செய்யப்படும் அனுபவம் உங்களுக்கு நேரிட்டிருக்கலாம்.இதுவரை ஏற்படவில்லை என்றாலும் வருமுன் காப்பதற்கு சில நடைமுறைகளை இங்கே பார்க்கலாம்.இவை அனைத்தும் பேஸ்புக் நிறுவனத்தாலேயே அறிவுறுத்தப்படும் விஷயங்கள் ஆகும்.

1.பாஸ்வேர்டு பாதுகாப்பு….;

பேஸ்புக்கில் பயன்படுத்தும் பாஸ்வேர்டு கடினமானதாகவும் வேறு தளங்களில் பயன்படுத்தாததாகவும் இருக்க வேண்டும்.நம்பர் மற்றும் ஸ்டிரிங்கையும் பயன்படுத்தி உருவாக்குவதே சிறந்தது.குறைந்தது 6 எழுத்துகள் வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

2.பிரைவேட் பிரவுசிங்..;

பேஸ்புக்கை பயன்படுத்திய பின்னர் ’லாக் அவுட்’ செய்து எப்போதும் பிரவுசரை பூட்டி விடுங்கள்.முடிந்தால் கணினியை அணைத்துவிடுங்கள்.இன்டர்நெட் சென்டராக  இருந்தால் இது ரொம்பவும் முக்கியம்..”Remember Me”-ஐ  எப்போதும் செக் செய்யக்கூடாது.

3.மின்னஞ்சல் பாதுகாப்பு..;

பேஸ்புக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கையும் எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.ஏனெனில் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்த முடிந்தால் பேஸ்புக்கிலும் எளிதாக நுழைந்துவிடலாம்.இரண்டுக்கும் எப்போதும் வேறு பாஸ்வேர்டை தருவதே நல்லது.

4.பாதுகாப்பு கேள்விகள்..;

பேஸ்புக் கணக்கைத் தொடங்கும்போது சில பாதுகாப்புக் கேள்விகள் கேட்பார்கள்.அவை,பாஸ்வேர்டை மறந்துவிட்டால் கணக்கை மீண்டும் பயன்படுத்த உதவும்.எனினும் இவற்றில் எப்போதும் கடினமான  கேள்வி-பதில்களை தேர்வு செய்யுங்கள்.அவ்வாறு செய்யும்போது மற்றவர்கள் அவற்றை ஊகிக்க முடியாது.இதுவரை கேள்வி-பதில்களை செட் செய்யவில்லை என்றால் Account settings page சென்று அவற்றை உருவாக்கிக் கொள்வது நல்லது.

5.லாகின் செய்யும்போது..;

எப்போதும் Facebook.com சென்ற பின்னரே லாகின் செய்யுங்கள்.மின்னஞ்சலில் வரும் தெரியாத இணைப்புகளில் லாகின் செய்ய வேண்டாம்.

செவ்வாய், 28 ஜூன், 2016

பூத வாத சருக்கம்

நீலகேசி பூதவாத சருக்க விளக்கம்

வேதவாதியை வென்று நிலகேசி வெற்றிகரமாகத் திரும்பிவரும் வழியில், உலோகாயத (அனாத்ம நாஸ்திக) நெறியாகிய பூதவாதத்தின் பேர்போன தலைவனான பிசாசகனைச் சந்தித்தாள். அவன் மதனஜிதனென்ற அரசன் ஆதரவுபெற்று அவன் அரண்மனையிலிருந்தான். எனவே, அவ் அரசன் அவையிலேயே வாதம் தொடங்கிற்று. (இந்நெறியின் முதல்வன் சார்வாகனாதலால் இது சார்வாகம் எனவும் பெயர்பெறும்.
பூதவாதத்தின் அடிப்படைக் கொள்கைகள் யாவை என்று நீலகேசி வினவ, பிசாசகன் அதை விளக்கிக் கூறலானான்.
பிசாசகன் : பொருள் வேறு, பண்பு வேறு என்ற மயி¡¢ழைப் பாகுபாடுகளை நாங்கள் ஏற்பதில்லை. எங்களுக்கு அடிப்படை உண்மைகளாவன ஐந்து பூதங்களே. உலக நடைமுறைகள் எல்லாம் அவற்றினிடமிருந்தே தோன்றி இயங்கபவை. அனல், மண், நீர், காற்று, வெளி என்ற இவ்வைந்து பூதங்களும் நிலையாயன; மெய்ம்மைகள். இவற்றிலிருந்து முறையே கண்கள், மூக்கு, நாக்கு, உடல் காதுகள் அகிய பொறிகள் தோற்றுகின்றன. அவற்றினிடமிருந்து நிறம், மணம், சுவை, ஊறு; ஓசை ஆகிய புலணுணர்வுகள் எழுகின்றன. மா, வெல்லம் முதலாய ஐம்பொருட்களின் சேர்க்கையால் வெறிதரும் சாராயம் உண்டாவதுபோலவே, இவ் ஐந்தின் சேர்க்கையால் அறிவுதோற்றமெய்துகின்றது. அதனிடமாக இன்ப துன்பமுண்டாய், ஐம்பூதங்களின் செறிவுக்கியைய வளர்ச்சியுற்று வேறுபட்டுப் பி¡¢ந்தொழிதலால் இவை யனைத்தும் அறிவுறுகின்றன.
உயிர் என்ற ஒன்று இல்லை. சூழ்ச்சிமிக்கவர் கற்பனையில் தோன்றிய இப்பொய்ம்மையை அறிவற்ற ஆயிரமாயிர மக்கள் நம்பி ஏமாறுகின்றனர். முக்காலத்தும் உயிர் என்ற பொருள் இல்லை; இருப்பவை, இருந்தவை, இருக்கப்போகின்றவை எல்லாம் ஐம்பூதங்களே.
நீலகேசி : உங்கள் முடிந்த உண்மையை நீங்கள் கண்டறிந்தவகை யாது? புலனுணர்வாலறிந்தீர்களா? உய்த்துணர்வாலா? அல்லது நிறையறிவுடைய உங்கள் தலைவர் அறிவாலா? உங்கள் சமயத்தைத் தோற்றுவித்த முதல்வர் யாருமில்லாததால், அதற்கு வாய்மொழியும் இருக்க முடியாது. நிறையறிவுடைய முதல்வர் மட்டுமே வாய்மொழி போன்ற நிறை அறிவுரை தரமுடியும். வினைச்சார்பற்ற அத்தகைய முதல்வருக்கு உங்கள் கோட்பாட்டிலும் இடமிருக்க முடியாது. நீங்கள் ஏற்கும் அளவை கண்கூடு (புலனறிவு) ஒன்றே. அதன் வாயிலாய் புலனறிவுக்கு மூலமான உடல், அதற்கு மூலமான முடிந்த உண்மைகள் ஆகியவற்றை அறிவதெவ்வாறு? பூதங்கள் ஒன்று சேர்வதால் புதிதான உயிர்த் தன்மையுடைய அறிவு தோன்றுவதெவ்வாறு? பூதங்கள் முதற்காரணமா, (மூலப்பொருளா) நிமித்தகாரணமா (செய்வோனா)? முதற் காரணமானால், புலனன்றி அறிவும் உணர்வும் தோன்றுமா?
பிசாசகன் : விறகிலிருந்து தீ தோன்றுவது போலவே தான் புலன்களிலிருந்து உணர்வும்.
நீலகேசி : விறகில் தோன்றும் தீ, விறகைப்போலவே உணர்வற்றது. விறகுடன் எ¡¢ந்து அதனுடன் ஒழிவதேயன்றித் தன் செயலாக எதுவும் உடையதன்று. பூதங்கள் சேர்க்கையில் உயிர் தோன்றுவது அவ்வாறன்று. பூதங்கள் அறிவும் உணர்வும் அற்றவையாயினும் உயிர் அற்றவை உடையது. அப்படியிருக்க, பூதங்களிலிருந்து உயிர் எவ்வாறு தோன்றும்.
மேலும் விறகு மிகுதிப்பட்டால் தீ வளரும். ஆனால் உடல் வளர்ச்சியுடன் உணர்வு வணர்ச்சியடைவதில்லையே. பூதச் சேர்க்கையாலுண்டாகும் புலனறிவு, பூதச் சார்பான பொருள்களை உணர்ந்தும் உயிர், உணர்வு, அறிவு ஆகியவற்றை உணர்வதில்லை.
நல்வினை உணர்வு, தீவினையச்சம், அகச்சான்று ஆகியவைகள் புலனுடன் தொடர்பற்றவை.
ஐம்பூதங்கள் சேர்க்கையால் அறிவு உண்டாகும் என்கிறீர்கள். ஆனால் புலன்கள் அவ்வப்பொறிகள் வாயிலாக மட்டும் அறியப்படுவானேன்? ஐம்பொறிகளுள் சிலபொறிகளே உடைய கீழுயிர்கள் ஐம்பூதங்களில் சில பூதங்கள் குறைய உண்டானவையா? சில பூதங்கள் குறைந்தும் ஒரு பூதமே தனித்தும் புலனறிவுண்டாமெனில், ஐம்பூதமும் ஐம்பொறியும் சேர்ந்தே அறிவுண்டாமெனும் கோட்பாடு வீழ்ச்சியுறுகிறது. இவற்றுக்கும் மேலாகப் பொருளுண்டெனின், ஆன்மாவை ஒப்புக்கொண்டாக வேண்டும்.
பூதங்கள், புலனுணர்வு இல்லாதபோது முன்நினைவு ஏற்படுகிறதே. மனம் என்ற ஒன்றின்றி அது எவ்வாறு ஏற்படும்? பசி, சினம், அவா, சிற்றின்பம் ஆகியவை புலனுணர்விலடங்குபவை அல்லவே? சிறு குழந்தை அழுவது, பால் குடிக்க முனைவது எவ்வறிவின்பாற்படும்? இவை இயற்கையானால், அவை வளர்ச்சிப் பருவந்தோறும் மாறுபடுவானேன்? உயிர்வகைதோறும் வேறுபடுவானேன்?
உயிர்கள் உணர்விழந்த நிலையில் புலனுணர்வில்லாமலும் உயிர் நிலவுகிறதே. புலனுணர்வு கடந்த உயிர் இருக்கவேண்டுமன்றோ? உடலில் பூதச் சேர்க்கை அழியாமலே உயிர் போவதெவ்வாறு?
பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உயிர் இல்லை. அவ்வுணர்வு இல்லாததனால் என்கிறீர்கள். பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் பூத உணர்வில்லாததால் பூதங்களுமில்லை என்று கொள்ளலாமா?
ஒரேவகை உடலுடைய உயிர்கள் பலபடி அறிவு, பல்வகை அறிவுநிலை, இன்பதுன்ப நுகர்வு உடையவையாயிருப்பானேன்?
பொருள் சேமித்துப் புதைத்துவைத்து இறந்தவன் பிள்ளைகளுக்கு இடமறிவிக்கும் நிகழ்ச்சிகள் ஆங்காங்கு ஏற்படுகின்றனவே? இறப்புக்குப்பின் உயிர் இல்லை என்றால், இது எவ்வாறு கூடும்.
பிசாசகன் : (விலாப்புடைக்க நகைத்து) புலனாலறியப் படாதவை பொய்யாகும். பொய்யைப்பற்றி ஏன் இவ்வளவு மயி¡¢ழை ஆராய்ச்சி!
நீலகேசி : ஆசியை நம்பாத உனக்கு நேரிடையாக ஆவியைக் காட்டுகிறேன் என்று கூறித் தன் தெய்வ ஆற்றலால் பிசாசகன் முன் ஒரு பேய் வடிவுடன் தோன்றினாள். பிசாசகன் அஞ்சி உணர்வற்று நின்றான். நீலகேசி அவனைத் தேற்றி, அஞ்சவேண்டாம். இது உன் தாயுருவம்; வேறன்று. நீ பிசாசகன் என்று பெயர்பெற்றதே அதனால்தான்! என்றாள்.
பிசாசகன் நீலகேசியின் அறநெறி ஏறினான். நீலகேசியும் தன் அறப்பணியால் மனநிறைவடைந்து தன் அறிவு நிலையில் நின்று வீடுபேறுற்றாள்.