திங்கள், 30 மே, 2016

ஜி.பி.ஷா


               ஜி.பி.ஷா—20ஆம் நூ(நாடக த்துறை)


                              ஜார்ஜ் பெர்நாட் ஷா(1856—1950)ஐயர்லேன்டில் டப்லின் என்ற இடத்தில் பிறந்தார்.1884ஆம் ஆண்டு ப்ஃ போபியன் சமூகத்தின் துடுக்கான உறுப்பிணரானார்.பின்னர் 1885 முதல் 1908க்கு இடையில் இவர் ஒரு புகழ்பெற்ற பத்திரிக்கையார்.இவர் ஒரு ஐரிஷ் நாடகத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர்.இவர் திரையரங்கில் தன் வாழ்கையை இழுத்துக்கொண்டு வீட்டு வரையரைங்கள்,சமயம், பண விஷயம்(finance)மற்றும் தூர்விநியோகம் பற்றி எழுதினார்.அறுவதுக்கும் பேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்.அக்காலத்தின் முன்னி நாடக எழுத்தாளராகி 1925 ஆம் ஆண்டு ஆஸ்கர் மற்றும் நோபல் பரிசினை பெற்றார்.ஜி.பி.ஷாவின் முதல் நாடகப் புத்தகமான `ப்லேஸ் அன்பிலசென்ட்`(1895) என்பதில் `வின்டோலர்ஸ் ஹவுஸ்`, `தி பில்லாண்டர்`, மற்றும் `மிஸ்சஸ் வாரன்’ஸ் ப்ரோபசன்ட்` என்பதிலும் `ஆர்ம்ஸ் அன்ட் மேன்`, `கேன்டீடா`, `தி மேன் ஆப் டேஸ்டினி` மற்றும் `யு நேவர் கேன் டேல்` போன்ற பல நாடகத்தை சேர்த்துள்ளார் மேலும் `தி டேவில்’ஸ் டிசிபில்`(1897) `சீசர் அன்ட் கிலியேப்பட்ரா`(1898) மற்றும் `கேப்படன் பிராஸ்போவுன்ட்’ஸ் கான்ரோவிர்சியோன்`(1899—1900) போன்றவையெல்லாம் `திரீ ப்லேஸ்லபார் பியூரிடன்ஸ்` என்பதிலிருந்து தொகுக்கப்பட்டவையாகும். இவரது  சிறந்த படைப்புகளாக `தி ஆப்பில் கார்ட்` மற்றும் `பிக்மாலியன்` என்பதை சொல்வர்.நாடகங்களை அடுத்து நிறைய நாவல்களையும் ஷா வெளியிட்டுள்ளார்.அது இல்லாமல் எண்ணிக்கையில்லாத அரசியல் மற்றும் விமர்சக கதைகளையும் வெளியிடுள்ளார்.

(எ.கா) `தி குஇன்டசேன்ஸ் ஆப் இப்சென்டிசெம்`, `டிராமாடிக் ஒபீனியன்ஸ் அன்ட் எஸ்சேஸ்` என்பன புகழ்பெற்றவையாகும்.

மனித கணிணி......!



சாகுந்தலாதேவி;

      கணிதத்தில் பிறவி மேதை என்று கூறப்படுபவர். உலக அளவில் பாராட்டப்படுபவர். கின்னஸ் புத்தகத்தில் இவரது சாதனை பதிவாகி உள்ளது.
      கணிணி வேகமா? அல்லது இவரது மனம் வேகமா? என்று தீர்மானிப்பது கடினம். இவரை ”மனித கணிணி” என்று கூறுவதும் உண்டு. ஆனால் இவர் அதை விரும்புவது இல்லை.
     மனித மூளை கணிணியை விட நுட்பமானது என்னும் கருத்தை உடையவர். 1980ம் ஆண்டு ஜுன் மாதம் 18 ஆம் தேதி அன்று லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கணிணி தேர்ந்தெடுத்து கொடுத்த 7,686,369,774,870 மற்றும் 2,465,099,745,779 என்கிற இரண்டு 13 இலக்க எண்களை மனதினாலேயே பெருக்கி சரியான விடையை 28 நொடிக்குள் கூறிவிட்டார்.
     1939 ஆம் ஆண்டில் பெங்களூரில் பிறந்தவர். சாகுந்தலா தேவியின் தந்தை சர்க்கஸில் பணிபுரிந்து வந்தவர். சாகுந்தலா தேவி மனதினாலேயே பெருக்கும் திறமை அவரது மூன்றாம் வயதிலேயே வெளிப்பட்டது.
     அவருக்கு ஆறு வயதான போது மைசூர் பல்கலைகழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவருடைய திறமை நிரூபிக்கப்பட்டது. அதன் பிறகு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவரது திறமை மீண்டும் உறுதி செய்யப்பட்டது. அப்போது அவருக்கு வயது 8.
     1980 ஆம் ஆண்டில் மீண்டும் இரண்டு 13 இலக்க எண்களை பெருக்கி 28 நிமிடங்களுக்குள் கூறினார். எல்லாம் மனதாலேயே அவர் செய்தார். சரியான விடையை மனதால் கண்டுபிடிக்க எடுத்துக்கொண்ட நேரத்தை விட, அந்த விடையை எண்களாக கூற எடுத்துக்கொண்ட நேரமே அதிகம் என்று பின்னர் தெரிவித்தார்.
     தான் சிறந்த கணித மேதையாக இருப்பது மட்டுமல்லாமல் தன்னைப் போன்ற கணித மேதைகள் உருவாக எப்படி பயிற்சி அளிக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்க பல புத்தகங்கள் எழுதி உள்ளார்.
                                   


ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்..??


இப்பதிவு எனக்கு கொடுத்த நண்பர் தினேஷ் அவர்களுக்கு நன்றிகள்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்? ஐந்து முக்கிய காரணங்கள்...


மருத்துவ துறை செலவு பணவீக்கம் கடந்த சில வருடங்களாக இரட்டை இலக்கத்தில் அதிகரித்து வருகிறது. இந்தச் சமயத்தில் இந்தியாவில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பவர்களின் எண்ணிக்கை உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது மிக மிகவும் குறைவாகதான் உள்ளது. பல்வேறு ஆய்வுகளின்அடிப்படையில் பார்க்கும் போது, இந்திய மக்கள் தொகையில் சுமார் 11-13 சதவிகிதம் பேர் தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார்கள். அதுமட்டுமின்றி உலக வங்கியின் அறிக்கையின்படி மருத்துவ செலவுகளுக்காக பெரும்பாலானோர் கடன் வாங்கியும், சொத்துகளை விற்றும் செலவழிக்கிறார்கள். இப்படி செய்யாமல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எப்படி பயன்படுத்தி பயன்பெறலாம் என்றும் ஏன் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம் தேவை என்பது குறித்தும் பார்ப்போம்.

ஞாயிறு, 29 மே, 2016

ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்...



 


ஆப்பிள் நிறுவனத்தின்
ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்...

நான் வணிக உலகில்
வெற்றியின் உச்சத்தை
அடைந்திருக்கிறேன்.

பிறரின்
பார்வையில் என் வாழ்க்கை
வெற்றிகரமானது.
எப்படியிருந்தாலும் என்
பணிச்சுமைகள் எல்லாம்
தாண்டி நானும் வாழ்க்கையில்
சிறிது சந்தோசங்களை
அனுபவித்திருக்கிறேன்.

பணமும் வசதிகளும் மட்டுமே
வாழ்க்கையில்லை என்பதை
இறுதியில் தான் அறிந்து
கொண்டேன்.

இதோ இந்த மரணத்தருவாயில், நோய் படுக்கையில் படுத்து
கொண்டு என் முழு
வாழ்க்கையையும் திரும்பி
பார்க்கும் இந்த தருணத்தில்
வாழ்க்கையில் எனக்கு கிடைத்த
அங்கீகாரங்கள், பணம் , புகழ்
எல்லாம் செல்லா காசாக ,
அர்த்தமற்றதாக மரணத்தின் முன்
தோற்று போய் நிற்பதை
உணர்கிறேன்.

இந்த இருளில் என் உயிரை தக்க
வைக்க போராடிக் கொண்டிருக்கும் மருத்துவ
இயந்திரங்களின் மெல்லிய
சத்தங்கள் மட்டுமே காதுகளில்
ரீங்கரிக்கிறது.
கடவுளின்
மூச்சுக்காற்றையும் மரணத்தையும் மிக அருகில்
உணர்கிறேன்.

வாழ்க்கையில் நாம் வாழ்வதற்கு
போதுமான பணம் சம்பாரித்த
பின், பணத்திற்கு
சம்மந்தமில்லாத
விஷயங்களையும் சம்பாரிக்க
தொடங்க வேண்டும் என்பது
இப்போது புரிகிறது.
அது
உறவாகவோ, இல்லை எதாவது
கலை வடிவமாகமாவோ , நம் இளமையின் கனவாகவோ
இருக்கலாம். அது தான் வாழ்வில் மிக முக்கியமானது.

அதைவிட்டு பணத்தை மட்டுமே
நோக்கமாக கொண்டு ஓடும்
மனிதனின் வாழ்க்கை
முற்றிலும் வேறு திசையில்
திரும்பிவிடுகிறது என்
வாழ்க்கையை போல.

கடவுள் நம் புலன்களின் மூலம்
அனைவரின் மனதில் இருக்கும்
அன்பை உணரசெய்யும் சக்தியை
கொடுத்திருக்கிறார், பணத்தால்
நாம் உண்டாக்கியிருக்கும் எல்லா சந்தோசங்களும் வெறும்
பிரமைகள் தான்.

நான் சம்பாரித்த பணம் எதையும்
இங்கு கொண்டுவர முடியாது.
நான் மகிழ்ந்திருந்த என்
நினைவுகள் மட்டுமே
இப்போது என்னுடன்
இருக்கிறது.

அன்பும் காதலும் பல மைல்கள்
உங்களுடன் பயணிக்கும்.
வாழ்க்கைக்கு எந்த
எல்லைகளுமில்லை. எங்கு
செல்ல ஆசைப்படுகிறீர்களோ அங்கு செல்லுங்கள்.
தொட
நினைக்கும் உயரத்தை தொட
முயற்சியுங்கள்.

நீங்கள்
வெற்றியடைவது உங்கள்
எண்ணத்திலும் கைகளிலும்
தான் உள்ளது.
உங்கள் பணத்தை வைத்து நீங்கள்
என்ன வேண்டுமானாலும் வாங்கலாம்,
ஆனால் அந்த
பணத்தின் மூலம் உங்கள்
வலியை, உங்கள் துயரை யாரும்
வாங்கிகொள்ளுமாறு செய்ய
முடியாது.

பணத்தின் மூலம் வாங்கும்
பொருட்கள்
தொலைந்துவிட்டால் மீண்டும்
வாங்கிவிடலாம்.
ஆனால் நீங்கள்
தொலைத்து அதை பணத்தால்
வாங்க முடியாது என்ற ஒன்று
உண்டென்றால் அது உங்கள்
வாழ்க்கை தான்.

வாழ்க்கையில் எந்த கட்டத்தில்
நீங்கள் இருந்தாலும்
பரவாயில்லை , இப்போது
வாழ்க்கையை வாழ
ஆரம்பியுங்கள்.

நாம் நடித்து
கொண்டிருக்கும் வாழ்க்கை
எனும் நாடகத்தின் திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை
நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் குடும்பத்தினருக்கு, மனைவிக்கு, நண்பர்களுக்கு,
அன்பை வாரி வழங்குங்கள்.

உங்களை நீங்கள் சந்தோசமாக
வைத்து கொள்ளுங்கள்.
அனைவரையும் மனமார
நேசியுங்கள்.
மரணப்படுக்கையில் ஸ்டீவ்.

அனைவருக்கும் ஸ்டீவ் கூறிய வரிகள் புரிந்து இருக்கும்.எனவே பணம் தான் வாழ்க்கை என்று கூறிய சிலரின் வாழ்க்கையை மரணம் எட்டிப் பார்க்கையில் தான் அவர்களுக்கு வாழ்க்கையின் அர்த்தம் புரிகிறது.

அவரின் மரணத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...!!!


உங்க கம்யூட்டர் வேகமாக இருக்கணுமா..??




எனது மடிக்கணினி பழுதாக இருந்த போது பல்வேறு இணைத்தளங்களிலும்,பலரிடமும் உதவியை நாடினேன்.அப்போது நான் ஒரு இணையத்தில் படித்ததை தங்களோடு இப்பதிவில் பகிரவுள்ளேன்.