வெள்ளி, 18 மார்ச், 2016

ஊழல் உருவாகவில்லை உருவாக்கப்பட்டது..!!


Image result for ஊழல்

ஊழல் உருவாகவில்லையா..??உருவாக்கப்பட்டதா..??அப்படினா அதற்கு காரணமானவர்கள் யார்..??எதனால் உருவானது..??எதற்காக உருவாக்கபட்டது..??அதை ஒழிக்க முடியாதா..??அதற்கு என்ன தீர்வு..??ஊழலுக்கும் நமக்கும் என்ன தொடர்பு..?? என்ற பலவிதமான கேள்விகள் அனைவருக்கும் தோன்றும் காரணம்.

ஊழலால் உருவாக்கபட்டது தான் நம் இந்தியா.இந்திய ஊழலில் கடந்த  வருடம் உலக நாடுகளின் கணக்கெடுப்பின்படி 76-வது இடத்தில் உள்ளது என்பது அறியப்பட்டுள்ளது.முதல் இரண்டு இடத்தில் சீனா மற்றும் அமெரிக்கா நாடுகள் தான்.சீனா நம் இந்தியா நாட்டைவிட சிறிய நாடு தான் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.ஆனால் நம் நாட்டு அப்படி என்ன பண கஷ்டமோ தெரியல..??ஊழல் ,இலஞ்சம்,சூது,கொலை,கொள்ளை மற்றும் கற்பழிப்பு என்ற அனைத்திலுமே முதல் பத்து இடத்தில் இடம் பிடித்துள்ளோம்.இது நமக்கு பெருமையா..???அடுத்த தலைமுறைக்கும்,மற்ற நாடுகளுக்கும்  முன்மாதிரியாக இருக்க வேண்டிய நம் நாடு ஏன் பின் உதாரணமாக இருக்கிறது என்று யோசிப்பதுண்டா..??யோசித்தாலும் அதை மாற்ற நினைத்துண்டா..??

Image result for ஊழல்

ஆனால் நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை தான்.இப்ப சாதாரணமா துப்புரவு வேலையிலிருந்து துப்பறியும் வேலை வரை அனைத்திற்கும் இலஞ்சம் தரவேண்டிய சூழலை உருவாக்கியுள்ளோம்.பணம் படைத்தவன்   இலஞ்சம் தந்து வேலை முடித்துக் கொள்கிறான்.ஏழை இலஞ்ச பெருசாளிகள் இடம் மாட்டிக்கொள்கிறார்கள்.

இது மட்டுமா இல்லையே.பஞ்சாயத்துல இருந்து சட்டமன்றம் வரை அனைத்திலும் ஊழல்.பொதுமக்களுக்கு சேவை செய்யும் அரசோ,அரசியலோ இரண்டுமே அதே பொது மக்களிடமிருந்து அவர்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்றால் பணம் தரவேண்டிய ஒரு சூழலை உருவாக்கியுள்ளனர்.

Image result for ஊழல்

இப்படி தாங்க  நாடு பொருளாதாரம்  முன்னேறுதோ இல்லையோ.நல்ல அரசாங்க  வீடுகளும் அரசியல் வீடுகளும் பொருள் தாராளமாக வளர்ச்சியடைந்து வருகிறது.இவ்வளவு ஊழல் வாங்கியுமே பணப்  பற்றாகுறையால் நம் இந்திய அரசு உலக வங்கிகளிலும் கடன் வாங்குகிறது.
அப்படி என்னங்க இவ்வளவு பணமிருந்தும் நம் நாடு வல்லரசாக மாறவில்லை.என்னிடம்  நா.முத்துநிலவன் ஐயா கூறிய கருத்து ஒன்றை இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன்.நம் நாடு வல்லரசாவது பிறகு இருக்கட்டும் முதலில் நல்லரசு ஆகட்டும் என்று கூறினார்.இந்த வரிகளில் எவ்வளவு உண்மையுள்ளன.நம்மை பார்த்து தான் அடுத்த தலைமுறை வளரும் அதை கருத்தில் கொண்டு ஊழல் ஊழல் என்று சொல்லாமல் ஊழலுக்கு வழிவகைக்காமல் ஊழலை தகர்த்து உடைத்திடுவோம்.

Image result for ஊழல்

இனிப்  பிறக்கும் குழந்தையாவது கடன் சுமை இல்லாமல் பிறக்கட்டும்.
ஒரு தேசம் ஊழலில்லாமலும்,அறிவாளிகளின் தேசமாகவும்  இருக்க மூன்று பேரால் மட்டுமே மாற்ற இயலும் தந்தை,தாய் மற்றும் ஆசிரியர் தான் அந்த மூன்று பேர் என்று அண்மையில் விதைக்கப்பட்ட அப்துல் கலாம் ஐயாவின் கூற்றுபடி நம் தேசத்தை ஊழலில்லா நாடாக மாற்றிட  முயற்சி செய்வோம்.
மாற்றம் ஒன்றே மாறாதது.ஒவ்வொருவரும் தன்னை மாற்றினால் கட்டாயம் நம்மை சுற்றி மாற்றங்கள் நிகழும் இது எனது தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் ஐயா எனக்கு கூறியது.

இப்ப சொல்லுங்க ஊழலால் உருவானதா நம் தேசம்..??அல்லது தேசத்தை ஊழல் நிறைந்தாய் மாற்றப்பட்டதா.??

Image result for ஊழல்


எழில் நிரலாக்க மொழி



எழில் (Ezhil), தமிழில் எழுதும்வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிரலாக்க மொழியாகும்.[4]. இதில் தமிழ் கலைச் சொற்களைக் கொண்டே நிரல்கள் எழுத முடியும். இது இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒரு நிரல் மொழியாகும். இம்மொழி இன்னோர் பிரபல மொழியாகிய பைத்தானு(Python)டன் ஒத்து இயங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. பைத்தானின் நிரலகங்களைப் பயன்படுத்தி இயங்கும் இந்த மொழியில், ஆங்கிலத்திலும் நிரல்களை எழுதமுடியும்.
தற்சமயம் சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த மொழி, விரைவில் முழுச் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு எழில் நிரலாக்கம்

செவ்வாய், 15 மார்ச், 2016

மீத்தேன் திட்டம் ,மக்கள் திண்டாட்டம்..!!


தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டியதாம் என்ற ஒரு பழமொழி உண்டு.இப்போது அந்த பழமொழி உண்மையாகி வருகிறது.ஆமாங்க தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சையில் தான் இது நிலவுகிறது.இந்த கட்டுரையில் மீத்தேன் எரிவாயு குறித்த சிறிய விழிப்புணர்வை பகிரவுள்ளேன்.

திங்கள், 14 மார்ச், 2016

ரசத்தின் மகிமை


Image result for இரசம்

மிளகு:
     சுவை அரும்புகள் தூண்டுவது; புரதத்தை உடைத்துச் செரிக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் கொண்டது.
சீரகம்:
     செரிமானத்திற்கான வயிற்றுச்சுவர்களைச் சரி செய்வது. மனிதத் தேவைக்கான மக்னீசியம் கொண்டது.
பூண்டு:
     கிருமிகளின் முதல் எதிரி. கொழுப்புகளை உடைப்பது; பக்கவாதம் தடுப்பது; ரத்த அழுத்தம் சீர் செய்யும் செலினியம், கால்சியம், பொட்டாசியம்
கொண்டது.
கடுகு:
     எட்டு மடங்கு உமிழ்நீர் சுரக்க வைப்பது; நல்ல கொழுப்பு உடையது.
புளி:
     வயிற்றுக் கோளாறு சரிசெய்து, இருதயம் வலிமை செய்வது.
தக்காளி:
     வெய்யிலுக்கெதிராய்த் தோல்நலம் காப்பது; வைட்டமின் ஏ, டி இரண்டும் உடையது. மாரடைப்பு புற்றுநோய் இரண்டையும் தடுப்பது.
மிளகாய்:
     வைட்டமின் ஏ, சி இரண்டும் கொண்டது. ரத்த ஓட்டம் அதிகரிப்பது.
கருவேப்பிலை:
     தோல் தொற்று தடுப்பது; சிறுநீரக வலி நிவாரணியாய்ச் செயல்படுவது; தாதுக்களும் நார்ச்சத்தும் மிக்கது.
மல்லித்தழை:
     இரும்புச்சத்து மிக்கது; எழும்புத் தேய்மானம் தடுப்பது.
                                           (படித்ததில் பிடித்தது)

நாம் அன்றாடம் உட்கொள்ளும் ரசத்தில் இவ்வளவு மகிமை இருக்கிறது என்று தெரிய வரும் போது ஆச்சரியமாய் இருக்கிறது. நம் முன்னோர்கள் உணவு பொருட்களில் கையாண்டுள்ள அறிவியலும் தெரியவருகிறது.

உன்னை உலக்கிற்கு அறிமுகம் செய்

   உன்னை உலகிற்கு அறிமுகம் செய்
 
Image result for அப்துல் கலாம்


v  துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு,ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே!

v  ஒரு முறை வந்தால் கனவு! இருமுறை வந்தால் ஆசை! பலமுறை வந்தால் லட்சியம்!

v  உலகம் உன்னை அறிவதைவிட உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்!

v  வெற்றி என்பது உன் நிழல் போல, நீ அதை தேடிப்போகவேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும்!

v  கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே. உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார்; காணாமல் போய்விடும்.




                          -டாகடர் அப்துல் கலாம்