வியாழன், 3 மார்ச், 2016

மயக்கும் ஓவியம்

வில்லியம் காங்ரீவ்

                                             வில்லியம் காங்ரீவ்(19ஆம் நூற்றாண்டு)

வில்லியம் காங்ரீவ் பார்ட்செ என்ற இடத்தில் பிறந்தார்,தனது பட்டப்படிப்பை டிரினீடி கல்லூரி டப்லினில் படித்தார்.அங்கு அவர் ஜொனதன் ஸ்விஃட்டை சந்தித்து நன்பரானார்.அவரது அனைத்து நாடக நூல்கல் அனைத்தும் அவரது முப்பது வயதிற்குள் எழுதி முடித்தார்.ஏனைய காலங்களில் சமுதாயத்தில் நல்ல ஒரு தலைசிரந்த மனிதராய் களித்தார்.மேலும் அரசாங்கமிடம் இருந்து அவருக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.பின்பு வில்ஸ் தேனீர் விடுதியில் டிரைடனை சந்தித்து அவரது நெறிகளை பின்பற்றினார்.
இவர் பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர்.இவர் எழுதிய முதல் நாடகம்
                        ``த ஓல்ட்டு பாசுலர்’’.
இந்த நாடகம்``டுரூரி லேன்’’என்ற திரையரங்கிள் தயாரிக்கப்பட்டது.இதனையடுத்து
`                       ``டபுல் டீலர்’’
என்ற நாடகம் அவரது நகைச்சுவை நயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது.தம் முப்பது  வயதில் இவர்
``லவ் ஃஆர் லவ்’’,
``தி வே ஆப் தி வேல்ற்டு’’
என்ற நகைச்சுவை நாடகத்தை இயற்றினார் பின்னர்
``தி மார்னிங் பிரிட்ச்’’
என்ற ஒரு சோகக்கதை எழுதினார்.இவர் எழுதிய நூல்களில் சமக்காலத்தில் ஆண்ட அரசியான எலிசபெத்தின் ஆட்சியை பற்றியும் அந்த சமூகத்தை பற்றியும் இவர் குறிப்பிடவில்லை.
அவரது படைப்புகளில் ``நகைச்சுவை நயதை’’சிறந்த முறையில் வடிவமைத்திருப்பார்.மேலும் இவரது கதைளில் தெளிவு,உயிரோட்டம்,வரிகளில் இசையின் கலப்பு, கதாப்பாத்திரங்களை விவரிக்கும் முறை,ஆகியன தனித்துவம் வாய்ந்தவை.ஒரு நாடக எழுத்தாளராய் இவரது பணிகாலம் மிகவும் குறைவு.சிறு காலங்கள் இவர் கவிதை,மொழிபெயர்ப்பு ஆகியன செய்தார்.இவர் ஒரு திருமணம் ஆகாதவர்.ஆனால், ஹென்ரீடா என்ற பெண்னுடன் விவகாரம் இருந்தது.மேரி என்ற குழந்தையும் இருந்ததாக கருதப்பட்டது. இவர் கான்டிராஸ்ட்(கண்களில் நீர் வழிதல்) கவுட்(மூட்டுகளில் வலி)போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டார்.பின்பு லண்டனில் ஒரு விபத்தை சந்தித்து அதிலிருந்து மீள முடியாமல்1729இல் மரணம் அடைந்தார். இவரது சடலம் வெஸ்ட் மினிஸ்டர் அபே இல் புதைக்கப்பட்டது.

                  

புதன், 2 மார்ச், 2016

வியக்க வைக்கும் எறும்புகள்

           வியக்க வைக்கும் எறும்புகள்


முன்னுரை

எறும்புகள் வரிசையாக போவதைப் பார்த்து நாம் வியப்படைந்ததுண்டு. நாம் அதை சில நேரங்களில் கலைத்துவிட்டு மகிழ்ச்சி அடைவதுண்டு. எறும்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை குலையாமால் போவதிற்கு  காரணம் வாசனைதான். 
வாசனையால் பின் தொடரும் எறும்பு
முன்னாள் போகும் எறும்பு ஒருவித வாசனையை தரையில் அல்லது சுவரில் விட்டுச் செல்கிறது. பின்னால் வரும் எறும்புகள் அந்த வாசனையை முகர்ந்து கொண்டு ஒரே வரிசையாக செல்கின்றன. எறும்புகள் வரிசையாக செல்வதை  நீங்கள் பார்த்தால் அவற்றின் பாதையில் ஒரு இடைவெளி கிடைத்தால் அந்த இடத்தை தேய்த்து விட்டால், அப்போது அங்கு வரும் எறும்புகள் சற்று தடுமாறும். முன்னால் சென்ற எறும்பு விட்டுச் சென்ற அதற்கு வாசனை கிடைக்காமல் போவதுதான் இதற்கு காரணம். எறும்புகளுக்கு கண் உண்டு. ஆனாலும் வாசனையை வைத்துதான் வரிசையாக செல்கின்றன. 
ஒற்றுமையே பலம்
  ஒற்றுமையே பலம் சொன்னது நாம் தான். ஆனால் நாம் ஒற்றுமையாக இருக்கிறோமா என்றால் அது கேள்விக்குறிதான். ஆனால் மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களும் ஒற்றுமையாகத் தான் இருக்கின்றன. எறும்பைப் பார்த்தோம் என்றால் அது நமக்குப் புலப்படும்.அவற்றை போன்று ஒழுங்கான உயிரினத்தை பார்ப்பது கடினம். எல்லாமே மிகவும் சிநேகிதமாக இருக்கக்கூடியவை. எறும்புகள் தங்கள் கூட்டுக்குள் பூச்சிகளை கட்டிப்போட்டு வளர்கின்றன. சில எறும்புகள் மற்ற எறும்புகளின் கூட்டுக்குள் சென்று அங்கிருக்கும் எறும்புகளை கடத்தி வந்து அடிமைகளாக வைத்துக் கொள்கின்றன. 
ராணுவ அதிகாரிகள் வியப்பு
 எறும்புகளின் செயல்களைக் கண்டு ராணுவ அதிகாரிகளே வியப்பில் ஆழ்ந்ததுண்டு. இவ்வளவு சிறிய உயிரினத்துக்கு இந்த ஒற்றுமையை யார் சொல்லித் தந்தார் என்று நாமே வியப்பில் ஆழ்வதுண்டு.அவற்றிலும் ஆக்கிரமிப்பு உண்டு. நமக்கு படைகள் அதற்கு அதிகாரிகள் இருப்பது போன்று ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா எறும்பு வகைகள், ராணுவ அதிகாரிகள் வியக்கும்படி, தங்களது படைகளை படு எச்சரிக்கையுடன் நடத்திச் செல்கின்றன. அவைகளில் முன்னணிப்படை, பக்கவாட்டுப் படை, ஒற்றர்கள் எல்லாம் உண்டு. 
எறும்புகளின் ஆயுதம்

உடவை கச்சிதமாக அடுக்கி வைக்க சின்னக்குச்சி, இலை நுனி போன்றவற்றை ஆயுதமாக உபயோகிக்கும் எறும்புகளும் உண்டு. இவை எல்லாமே கூட்டமாக இருக்கும் போதுதான். தனி எறும்பு என்று பார்த்தால் ஒன்றுக்கும் பயன்படாத பூஜ்யம்தான். எறும்புகளில் ஆயிரம் வகைகள் உள்ளன. பாலைவனத்திலும் எறும்புகள் உண்டு. கடற்கரையில், மலைச்சாரலில் காட்டில் என்று எல்லா இடத்திலும் (எவரெஸ்ட் சிகரத்தைத் தவிர) இருக்கின்றன. 20 அடி உயரத்துக்கு புற்றுகள் கட்டும் எறும்புகளும் உண்டு.

நாலடியார்

         Image result for நாலடியார்

அறியாமையை நீக்கும் மருந்து;

        பாடல்:

            இம்மை பயக்குமால்; ஈயக் குறைவு இன்றால்;              
            தம்மை விளக்குமால்; தாம் உளராக் கேடு இன்றால்;
            எம்மை உலகத்தும் யாம் காணேம், கல்விபோல்
            மம்மர் அறுக்கும் மருந்து.

          பொருள்;

                 கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும் பிறர்க்குத் தருவதால் குறைவாகாது கற்றவர் புகழை எங்கும் பரவச் செய்யும்.நம் உயிர் உள்ளவரை கல்வி என்றுமே அழியாது. அதனால் இந்த உலகத்தில் கல்வியைப்போல அறியாமையைப் போக்கும் மருந்தையாம் கண்டதில்லை.


சிக்கனமும் சேமிப்பும்

Image result for சிக்கனமும் சேமிப்பும்

சிறு துளி பெறுவெள்ளம் போல
     
      சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்!

சேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும்!
     
      ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை!

ஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை!
     
      உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை

தாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால்
     
      சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்

நீ வாழ்க்கை என்னும் படியை

வெற்றியுடன் தாண்ட முடியும்!

சேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ
     
     விரும்பிய படி கொண்டு செல்லலாம்!


சிக்கனமாய் இரு! சேமித்து பழகு!

முகடு

                                முகடு



முகடு என்பது ஒரு மையப்போக்கு அளவாகும். எந்த மதிப்பு அதிக எண்ணிக்கையில் இருக்கிறதோ அதுவே முகடு ஆகும்.
எடுத்துக்காட்டாக நாம் ஒரு  கடைக்கு  போனால் எந்த என்ன செய்வோம், எந்த பொருள் அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளதோ அதையே நாமும் வாங்குவோம். அது தான் முகடு எனப்படும்.
2 4 5 2 1 2 3 4 4 6 2
முகடு = 2
நீங்க கேட்கலாம் 4 அதிக அளவில் வந்துள்ளது அதுவும் முகடுதானே என்று. ஆனால் எந்த மதிப்பு அதிக எண்ணிக்கையில் திரும்ப வந்துள்ளதோ அது மட்டுமே முகடு. இரண்டாவது மதிப்பை நாம் முகடாக எடுத்துக்கொள்ளமாட்டோம்.

1. 22 25 21 22 29 25 34 37 30 22 29 25 முகடு காண்க?

சி.ஆர்.ராவ்








கல்யம்புடி ராதாகிருஷ்ண ராவ் என்னும் இவா் புள்ளியல் நிபுணா் ஆவார்.  இவர் கா்நாடக மாநிலத்தில் பிறந்தார்.  ஆந்திராவிலுள்ள பல்வேறு நகரங்களில் பள்ளிப் படிப்பை முடித்தார்.  பிறகு, விசாகப்பட்டினம் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.  அதன் பிறகு ஆந்திர பல்கழை கழகத்தில் எம்.ஏ கணிதம் பட்டம் பெற்றார்.
     இவருக்கு சிறுவயதிலிருந்தே புள்ளியயலின் மீது ஆர்வம் அதிகம்.  அதன் காரணமாக “மதிப்பீட்டுத் தேற்றத்”தைக் (theory of estimation) கண்டுபிடித்தார்.  மதிப்பீட்டுத் தேற்றத்தின் மூலம் சேமித்து வைத்துள்ள ஏராளமான தகவல்களிலிருந்து, ஒரு குறிப்பிட்ட அளவு தகவல்களின் அளவுகளைக் கண்டறிய முடியும்.
     “கிரேம்ஸ் – ராவ் இனீக்குவாலிட்டி“, ஃபிஷர்-ராவ் தியரம், மற்றும் “ராவ்-பிளாக் வெலிசேஷன்” போன்ற ராவ் கண்டுபிடித்த சூத்திரங்களும், தேற்றங்களும் புள்ளியியல் பாடப் பிரிவில் பாடங்களாக அமைந்துள்ளன.
     புள்ளியியல் என்பது மனித விஞ்ஞானம் என்று ராவ் கருதினார்.  செங்கோண முக்கோணம் பற்றிய ராவின் ஆய்வுகள் பல தொழில் நிறுவனங்களில் உற்பத்தியைப் பெருக்குவதற்கு பயன்பட்டு வருகின்றன.
     இவரது கண்டுபிடிப்புகள் உயிரியலில் பல அளவுகளைக் கணக்கிட உதவுகின்றன.  உதாரணமாக பூ, இலை மற்றும் சிறு உயிரிகளின் நீள-அகலங்களையும் கணக்கிட உதவுகின்றன.
     மஹலானோபிஸ் என்னும் அறிஞர், ராவின் உயிரியல் அளவீடுகள், உயிரியல் அளவீட்டு அட்டவணைகள் போன்றவற்றை வியந்து கூறியுள்ளார்.
     சி.ஆர். ராவ் “சங்க்யா” என்னும் இந்திய புள்ளியியல் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
        குறிப்பு: படித்ததில் பிடித்தது
        நூல் :  உலக கணித மேதைகள்