புதன், 2 மார்ச், 2016

சிக்கனமும் சேமிப்பும்

Image result for சிக்கனமும் சேமிப்பும்

சிறு துளி பெறுவெள்ளம் போல
     
      சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்!

சேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும்!
     
      ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை!

ஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை!
     
      உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை

தாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால்
     
      சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்

நீ வாழ்க்கை என்னும் படியை

வெற்றியுடன் தாண்ட முடியும்!

சேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ
     
     விரும்பிய படி கொண்டு செல்லலாம்!


சிக்கனமாய் இரு! சேமித்து பழகு!

முகடு

                                முகடு



முகடு என்பது ஒரு மையப்போக்கு அளவாகும். எந்த மதிப்பு அதிக எண்ணிக்கையில் இருக்கிறதோ அதுவே முகடு ஆகும்.
எடுத்துக்காட்டாக நாம் ஒரு  கடைக்கு  போனால் எந்த என்ன செய்வோம், எந்த பொருள் அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளதோ அதையே நாமும் வாங்குவோம். அது தான் முகடு எனப்படும்.
2 4 5 2 1 2 3 4 4 6 2
முகடு = 2
நீங்க கேட்கலாம் 4 அதிக அளவில் வந்துள்ளது அதுவும் முகடுதானே என்று. ஆனால் எந்த மதிப்பு அதிக எண்ணிக்கையில் திரும்ப வந்துள்ளதோ அது மட்டுமே முகடு. இரண்டாவது மதிப்பை நாம் முகடாக எடுத்துக்கொள்ளமாட்டோம்.

1. 22 25 21 22 29 25 34 37 30 22 29 25 முகடு காண்க?

சி.ஆர்.ராவ்








கல்யம்புடி ராதாகிருஷ்ண ராவ் என்னும் இவா் புள்ளியல் நிபுணா் ஆவார்.  இவர் கா்நாடக மாநிலத்தில் பிறந்தார்.  ஆந்திராவிலுள்ள பல்வேறு நகரங்களில் பள்ளிப் படிப்பை முடித்தார்.  பிறகு, விசாகப்பட்டினம் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.  அதன் பிறகு ஆந்திர பல்கழை கழகத்தில் எம்.ஏ கணிதம் பட்டம் பெற்றார்.
     இவருக்கு சிறுவயதிலிருந்தே புள்ளியயலின் மீது ஆர்வம் அதிகம்.  அதன் காரணமாக “மதிப்பீட்டுத் தேற்றத்”தைக் (theory of estimation) கண்டுபிடித்தார்.  மதிப்பீட்டுத் தேற்றத்தின் மூலம் சேமித்து வைத்துள்ள ஏராளமான தகவல்களிலிருந்து, ஒரு குறிப்பிட்ட அளவு தகவல்களின் அளவுகளைக் கண்டறிய முடியும்.
     “கிரேம்ஸ் – ராவ் இனீக்குவாலிட்டி“, ஃபிஷர்-ராவ் தியரம், மற்றும் “ராவ்-பிளாக் வெலிசேஷன்” போன்ற ராவ் கண்டுபிடித்த சூத்திரங்களும், தேற்றங்களும் புள்ளியியல் பாடப் பிரிவில் பாடங்களாக அமைந்துள்ளன.
     புள்ளியியல் என்பது மனித விஞ்ஞானம் என்று ராவ் கருதினார்.  செங்கோண முக்கோணம் பற்றிய ராவின் ஆய்வுகள் பல தொழில் நிறுவனங்களில் உற்பத்தியைப் பெருக்குவதற்கு பயன்பட்டு வருகின்றன.
     இவரது கண்டுபிடிப்புகள் உயிரியலில் பல அளவுகளைக் கணக்கிட உதவுகின்றன.  உதாரணமாக பூ, இலை மற்றும் சிறு உயிரிகளின் நீள-அகலங்களையும் கணக்கிட உதவுகின்றன.
     மஹலானோபிஸ் என்னும் அறிஞர், ராவின் உயிரியல் அளவீடுகள், உயிரியல் அளவீட்டு அட்டவணைகள் போன்றவற்றை வியந்து கூறியுள்ளார்.
     சி.ஆர். ராவ் “சங்க்யா” என்னும் இந்திய புள்ளியியல் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
        குறிப்பு: படித்ததில் பிடித்தது
        நூல் :  உலக கணித மேதைகள்

அப்துல் கலாம்

               அன்புள்ள கலாமுக்கு

Image result for அப்துல் கலாம்

  கோடி மக்களில் ஒருத்தியாய் பல கோடி மனங்களின் பிரதிபலிப்பாய் நான் யார் எனக் கூட அறிந்திராத உனக்காக நான் எழுதும் சில வார்த்தைகள் இதோ`……..

        இந்த எழுத்துக்கள் யாவும்
        உன் அஞ்சலிக்காகவோ
        சாதனைக்காகவோ
       சிறந்த விஞ்ஞானிக்காகவோ
       சாதனைகளின் சொந்தக்காரன் என்பதற்காகவோ
       குடியரசு தலைவன் என்பதற்காகவோ
       உன் மனித நேயத்திற்காகவோ அல்ல…
       காரணம் ஒன்று மட்டுமே
என் கலாம் ஒரு ஆசிரியர் என்பதுவே அது என் கண்கள் ஒரு முறை கூட உன்னை நேரில் கண்டதில்லை.
ஆனால் உன்னை பற்றி நான் எழுதுவதை எண்ணி நானும் என் பேனா முனையும்  பெருமை கொள்கிறோம்.
உலகின் மாசுபாட்டை பற்றி சிந்தித்தாய்
இளைஞர்களை பற்றி சிந்திதாய், கனவுளை பற்றி சிந்தித்தாய்
நீ ஒருவன் இல்லையெனில் நாங்கள் அனைவரும் என்ன செய்வோம்
என்பதை மட்டும் சிந்திக்க மறந்து விட்டாயா?
   நான் கேள்வியுற்றேன்.
உன்னை  நேசிக்கும் ஒரு சிறு மாணவி கூறினாளாம்…..
கலாமை ஒரு முறை கண்டிராத
நான் ஏன் ஒரு கலமாக மாறி
நம் நாட்டிற்க்கு சேவை செய்யக்கூடாதென?

உன் மீது எத்தனை அன்பு பார்த்தாயா!.....

கணித்தமிழ்ப் பேரவை தொடக்கவிழா






கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் இன்று (02.03.16 ) கணித்தமிழ் பேரவையின் தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை தாளாளா் அரிமா கே.எஸ்.ரங்கசாமி எம்ஜே.எப் அவா்கள் தொடங்கிவைத்தாா். விழாவில் செயலாளா் திரு ஆா் சீனிவாசன் அவா்களும், செயல் இயக்குநர் திருமதி கவிதா சீனிவாசன் அவா்களும் முன்னிலை வகித்தனா். முதல்வர் முனைவா் மா.காா்த்திகேயன் அவா்கள் வாழ்த்துரை வழங்கினாா். கணித்தமிழ்ப் பேரவையைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றிய தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணை இயக்குநரும் கணித்தமிழ்ப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி அவா்கள் கணித்தமிழின் தேவையை எடுத்துரைத்து. இணையத்தில் தமிழை உள்ளீடு செய்வதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்தாா். மாணவா்கள் கணித்தமிழ் குறித்த பல்வேறு நுட்பங்களையும், வலைப்பதிவு, விக்கிப்பீடியா, குறுஞ்செயலிகள், மென்பொருள்கள் என பல வழிகளிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்தும் முறைகள் குறித்து அறிந்துகொண்டனா். கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளா் முனைவா் இரா.குணசீலன் அவா்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுபெற்றது.