ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

இணைய வசதி இல்லாமலும் கூகுள் மேப்பை பயன்படுத்தலாம்!

Image result for கூகுள் மேப் படம் தமிழ்

கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவைகளுள் ஒன்றான கூகுள் மேப் சேவையின் ஊடாக மில்லியன் கணக்கானவர்கள் பயன்பெறுகின்றனர்.
தற்போது iOS மற்றும் Android சாதனங்களில் பயன்படுத்தும் கூகுள் மேப் அப்பிளிக்கேஷனுக்கான புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் இணைய வசதி இல்லாத நிலையிலும்(Offline Navigation) இச்சேவையினை பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.
இது தவிர அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் கேஸ் விலையினை அறிந்துகொள்ளக்கூடிய வசதியும் இந்த அப்பிளிக்கேஷனில் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
மேலும் இந்த அப்பிளிக்கேஷனை iTunes, Play Store ஆகிய தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
Image result for கூகுள் மேப் படம் தமிழ்

மொபைல் போன்களை சார்ஜ் செய்யும் காற்சட்டை கண்டுபிடிப்பு..!!



இனி பற்றறிகளைச் சார்ஜ் செய்ய நீங்கள் இடம் தேடி அலையத்தேவையே இல்லை. பிற்பாக்கெட்டில் போட்டால் போதும் சார்ஜ் செய்துகொள்ளலாம். 

லண்டனில் உள்ள சவுத்ஹம்டன் பல்கலைக் கழகமும் வோடாபோனும் இணைந்தே இந்தனைக் கண்டுபிடித்துள்ளார்கள். 

நாம் அணியும் கால்சட்டையாக இருக்கலாம் இல்லை என்றால் ஜீன்சாக இருக்கலாம். 

ஆனால் நாம் நடக்கும்வேளை பின் புறத்தில் (அடிப்பகுதியில்) உராய்வு ஏற்படுவது வழக்கம். 

இதனை தான் விஞ்ஞானிகள் டெக்னிக்காகப் பாவித்துள்ளார்கள்.


உராய்வு ஏற்படும் பகுதியில் இவர்கள் ஒருவகையான நார் இழைகளை இணைத்துள்ளார்கள். 

உராய்வினால் ஏற்படும் வெப்பம் மற்றும் அதன் உராய்வை இந்த நார் இழை மின்சாரமாக மாற்றுகிறது.

எனவே நீங்கள் நடந்தால் மற்றும் உங்கள் உடல் உஷ்ணமாக இருந்தால் போதும் உடனே காற்சட்டை மின்சாரத்தை தயாரிக்க ஆரம்பித்துவிடும். 

பின்னர் என்ன அதில் ஒரு வயரைப் பொருத்தி மோபைல் போனுக்கு கொடுத்தால் போதும், அது சார்ஜ் செய்யப் பயன்படும். 

ஐபேட், ஐபொட், வாக்மென், மோபைல் போன் என பல சாதங்களை இனி சார்ஜ் செய்வது சுலபமாகிறது. ஆக நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒன்று தான். இக் கால்சட்டையை அணியவேண்டியது தான். 

இல்லை என்றால் அவர்கள் தரும் ஒரு விதமான நார் இழைகளை உங்கள் கால்சட்டையில் பொருத்தவேண்டும்.

இதற்கு பவர் பாக்கெட் என்று பெயரும் வைத்துவிட்டார்கள்.





இனி மின் வசதி இல்லாமலே மொபைல் போன்களை சார்ஜ் செய்யலாம் போல் இருக்கே..!!!

கூகுள் இல்லம்..!!!

இது பெங்களூருவில் இருக்கும் கூகுள் இல்லம். அந்த நிறுவனம் உருவாக்கும் புதுமையான கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவதற்காக இப்படி ஒரு தியேட்டர் போன்ற இடத்தை அலுவலக வளாகத்தில் அமைத்திருக்கிறார்கள்.


சனி, 27 பிப்ரவரி, 2016

தமிழ் இலக்கண வரலாறு


முன்னுரை
            தமிழ் நூல்களில் மிகப் பழமையாக விளங்கும் நூல் தொல்காப்பியம் ஆகும்.இதனை இயற்றியவர் தொல்காப்பியர்.இவரை சமணர் என்றும் சைவர் என்றும் கருதுவர்,மற்றும் பிற இலக்கண நூல்கள் அபிநயம்,யாப்பருங்கலம்,யாப்பருங்கலக்காரிகை,வச்சனந்திமாலை,நன்னூல் போன்ற இலக்கண நூலின் ஆசிரியர்கள் சமணர்கள் ஆவார்.

அபிநயம்
            அகத்தியரின் மாணவர் அவிநயரால் இயற்றப்பட்ட இலக்கணநூல் இது. இது அகவலாலும்,வெண்பாவலும் ஆனது.இந்த நூல் எழுத்து,சொல்,யாப்பு, பாட்டியல் பற்றி கூறும்.இதன் காலம் கி.பி.5அல்லது 6 ஆம் நூற்றாண்டு. யாப்பருங்கலவிருத்தி,வீருத்தி,வீரசோழியம்,நேமிநாதம்,மயிலைநாதர் உரை ஆகியவற்றில் 90-ஆம் மேற்பட்ட அவிநயனார் நூற்பாட்கள் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளன.இது முத்தமிழ் பற்றியதாக இருக்கலாம் என்பர்.
யாப்பருங்கலம்
            இதன் ஆசிரியர் அமிர்தசாகர்,குணசேகரர் என்றும் கூறுவர்.இந்த நூல் சந்தம்,தாண்டகம் ஆகியவற்றிற்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது.இது சூத்திப்பாவால் ஆன யாப்பு நூல்.இதன் காலம் 10-ஆம் நூற்றாண்டு.

யாப்பருங்கலங்காரிகை
            இதன் ஆசிரியர் அமிர்தசாகர்.இது கட்டளை கலித்துறையால் ஆனது.இதன் உரை ஆசிரியர் குணசாகரர்.``காரிகை கற்று கவிபானடலாம்’’. இதன் உரை ஆசிரியர் குணசாகரர்.காரிகை காலம் 10-ஆம் நூற்றாண்டு.
நேமிநாதம்
            22-ஆம் தீர்த்தங்கர் நேமிநாதர் பெயரால் இந்நூல் அமைந்தது. இதன் ஆசிரியர் குணவிர பண்டிதா.இதன் அதிகாரங்கள் எழுத்தும்,சொல்லும் 96-சூத்திரங்களை கொண்டுள்ளது.இதன் அளவு கருதி சின்னூல் என்பர்.

வச்சணந்திமாலை
            இதனை வெண்பா பாட்டியல் என்பர்.இந்த நூல் 96-வகை பிரபந்தங்கள்,மங்கள எழுத்து ஆகியன பற்றி கூறும்.மொழி,செய்யுள்,பொது எனும் மூன்று இயல்களை பெறும்.இதன் ஆசிரியர் குணவீர பண்டிதர்.அலர் தன் ஆசிரியர் அச்சணந்தி பெயரால் யாத்தார்.என்பர்.இதன்ர காலம் கி.பி.13-ஆம் நூற்றாண்டு.

நன்னூல்
            தொல்காப்பியம் இதன் முதல் நூல்.இருப்பினும் பல இடங்களில் மாற்றம் கொண்டுள்ளது.எளிமையும்,தெளிவும்,பகுப்பு வகைகளும் கொண்டுது. இதற்கு காண்டிகை உரை,விருந்தி உரை உள்ளன இந்த நூலுக்கு மயிலைநாதர்,சங்கரநமச்சிவாயர்,இராமானுஜ கவிராயர்,சிவஞானமுனிவர் போன்ற பல சமயத்தாரும் உரைகூறியுள்ளனர்.இதன் ஆசிரியர் பவணந்திமுனிவர்.இதன் காலம் 13-நூற்றான்டின் பகுதி ஆகும்.

நம்பியகப்பொருள்
            இந்நூலை அகப்பொருள் விளக்கம் என அழைப்பர்.இதன் ஆசிரியர் நற்கவிராசநம்பி அகம் பற்றிக் கூறும் இந்நூல் அகத்தினையில்,ஒழியல் எனும் ஐந்து இயல்களை கொண்டது.தஞ்சை வாணண் கோவை.இந்நூலின் துறைகளுக்கு ஏற்ற இலக்கியமாக,இயற்றப்பட்டது.

முடிவுரை

            இவ்வாறாக மேலே கூறப்பட்ட இலக்கண நூல்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு பெற்று சிறந்து விளங்குகின்றன.

பங்கு சந்தை வர்த்தகம்..!!

Image result for share market photo in tamil

அன்புடையீருக்கு வணக்கம்,
 கடந்த பதிவு(ஏன் தேவை பங்கு சந்தையில் முதலீடு) இதுக் குறித்து இன்று  ஒரு தொலைநோக்கு பார்வையை பார்க்கலாம் நண்பர்களே..!!

பங்குச்சந்தை என்றால் என்ன?

            பொருட்களை வாங்கவும் விற்கவும் பலரும் கூடுமிடம் சந்தை எனப்படுவது போல, பங்குகளை வாங்கவும் விற்கவுமான இடமே பங்குச் சந்தை எனப்படும். ஆனால், காய்கறிக்கோ, மற்ற பொருட்களுக்கோ தேவைப்படுவது போல, பங்குச்சந்தைக்கு ஒரு குறிப்பிட்ட இருப்பிடம் தேவையில்லை. கணிணி மூலமாகவும், முகவர்கள்(Brokers) மூலமாகவும் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். இன்றைய தேதியில் உலகப் பொருளாதாரம் பங்குச்சந்தையைப் பெரும்பாலும் சார்ந்துள்ளது என்றால் அது மிகையன்று. எனவே பங்குச் சந்தையைப் பற்றி நாம் அறிந்துகொள்வது இன்றியமையாதாகிறது. 


பங்குச்சந்தையைப் பற்றி அறிந்துகொள்ளுமுன் வேறு சிலவற்றைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.அவற்றைப் பார்ப்போமா?


Image result for share market photo in tamil


முதலீடு செய்யும் வழிகள் :

                                மிகவும் கடினமாக உழைத்து நாம் சேமித்த பணத்தை, சரியான முறையில் முதலீடு செய்வது அவசியம். முதலீடு செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றின் சாதக பாதகங்களைப்  பார்க்கலாமா?


அசையும் சொத்துகள்;

     நகை,வங்கிச்சேமிப்புகள்,கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள்  முதலியவை இவ்வகைச் சாரும்.தங்கள் என்பது நல்ல முதலீடாக கருதப்படுகிறது.ஆனால் அதை பாதுகாப்பு குறித்து சற்று பயம் தான்.ஆனால் தங்கத்தை வாங்கி அதை விற்றால் அதிக இலாபம் ஈட்டலாம்.விலை உயரும் போது நல்ல இலாபம் பெற இயலும்.

வங்கிச் சேமிப்புகள்(Bank Deposits) நடுத்தர வர்க்கத்தினராலும், முதியவர்களாலும் மிகவும் விரும்பப் படுவது. அபாயமில்லாதது(Risk free). பரிவர்த்தனைகள் (Transactions) எளிமையானவை. ஆனால், இதில் வரவு, சற்றே குறைவுதான். கடன் பத்திரங்கள் (Bonds) பொதுவாக வங்கிச்சேமிப்புகளை விட அதிகமாகவும், பங்குகளை விடக் குறைவாகவும் லாபம் ஈட்டித்தரும் முதலீடுகள்.

அசையாச் சொத்துகள்;

     நிலம், வீடு முதலியவற்றில் செய்யப்படும் முதலீடு மிகவும் லாபகரமானது. இவற்றின் மதிப்பு பொதுவாக உயருமே அன்றிக் குறைவதில்லை. ஆனால், இது, சிறு முதலீட்டிற்கு ஏற்றதில்லை. நிலமோ, வீடோ வாங்கவேண்டுமானால், பொதுவாகப் பெருந்தொகை தேவைப்படக்கூடும். மேலும், இவற்றை, இலகுவாக அவசரத் தேவையின்போது விற்க இயலாது, மொத்தமாக, ஏதேனும் உபரிப்பணம் வரும்போது, நீண்ட காலத்தேவையை மனதில் கொண்டு, செய்யக்கூடிய சிறந்த முதலீடு இது எனினும், சிறு வருமானம் உடையவர்களோ, குறுகிய காலத்தில் தமது முதலீட்டைப் பணமாக மாற்ற வேண்டுமென்று நினைப்பவர்களோ இவ்வகை முதலீட்டினை மேற்கொள்ளுவது கடினம்.

சரி பங்கு என்றால் என்ன அதற்கு முதலில் விடை வேண்டுமல்லவா..??

Image result for பங்குகள்

பங்குகள்;

    நீங்கள் ஒரு தொழிலை தொடங்க வேண்டும் என்றால் அதற்கு மூலதனம் வேண்டுமல்லவா..??.........................................................


என்ன புரியவில்லையா நண்பர்களே இப்படினா இந்த பதிவு தொடரும் என்ற அர்த்தம்.தொடர்ந்து இணைந்திருங்கள் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்.நன்றி..

Image result for பங்குகள்