வியாழன், 24 டிசம்பர், 2015

சங்க நாதம்- பாரதிதாசன்..

                       

தமிழின் சிறப்பு;

தமிழ்  என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது  வருகின்ற ஆனந்தம் வேறு எம்மொழியிலும் இல்லை..பிறந்த குழந்தை உச்சரிக்கும் முதல் வார்த்தை  அ..அதாவது அம்மா  இம்மொழியை யாருமே சொல்லித்  தந்து  அந்த குழந்தை பேசுவது இல்லை..அது தான் நம் மொழி தமிழ்..




நான் பிற மொழிகளை ஏழனமாய் கூறவில்லை..நாம் தமிழர் என்ன ஒரு இணைப்பில் உள்ளோம்..தமிழ் அவமானம் அல்ல..அடையாளம் என்பது உண்மையே..

நான் பாரதி தாசன் கவிதைகளில் ஒன்றான சங்க நாதம் பகுதியில் உள்ளதை பகிர உள்ளேன்..


Image result for bharathidasan photo

                                                     சங்க நாதம்_-பாரதி தாசன்


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு..!!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே..!!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கும் ஞாபகம் செய் முழங்கு சங்கே..!!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு..!!

சிங்களஞ் சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீர ரென்றூது சங்கே..!!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு..!!
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்..!!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்..!!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்..!!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு..!!






செவ்வாய், 22 டிசம்பர், 2015

கணித மேதை இராமானுஜா் பிறந்த நாள் விழா

இன்று (22.12.2015) கணித மேதை  இராமானுஜா் பிறந்தநாளை முன்னிட்டு  கணிதவியல் துறை மாணவா்கள்   அவரைப் பற்றியும், கணிதம்  நம் வாழ்வில்  எந்தளவு பயன்படுகின்றது என்பதை பற்றயும்  கண் காட்சி மூலம் தெளிவாக  விளக்கினாா்கள். 

கண்தானம் மற்றும் கண் பாிசோதனை முகாம்

19.12.15 அன்று நாட்டுநலப்பணித் திட்டம் மற்றும் இளம் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பாக மாணவிகளுக்கு கண்தானம் குறித்த விழிப்புணா்வும் கண்பாிசோதனை முகாமும் நடைபெற்றன.



எய்ட்ஸ் விழிப்புணா்வு

19.12.15 அன்று நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சுருள்ச் சங்கம் சாா்பாக மாணவிகளுக்கு எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது.



திங்கள், 21 டிசம்பர், 2015

ஜூடோ போட்டி



பொியாா் பல்கலைக்கழகம், செங்குந்தா் கலை அறிவியல் கல்லூாியில் நடத்திய ஜூடோ போட்டியில் வெற்றிபெற்ற, ( பி.நந்தினி முதலாமாண்டு வேதியியல், என். கீா்த்தனா முதலாமாண்டு கணிதம்) மாணவிகளை வாழ்த்துகிறோம்.

வெள்ளி, 18 டிசம்பர், 2015

வாசகா் வட்டம்





18.12.15 இன்று நடைபெற்ற வாசகா் வட்டத்தில் இரண்டாமாண்டு கணிதவியல் துறையைச் சாா்ந்த நந்தினி, முதலாமாண்டு வணிகவியல் துறையைச் சாா்ந்த வைசாலி ஆகியோா் நூல் விமா்சனம் செய்தனா்.