அழகின் வடிவமே - நீ
அசைவுடன் வசிப்பில்
இருக்கும் வண்ணம்... !!
முள்ளுடன் கதைப்பது
தான் ஏன்.... ??
உன் பாதையில்
தவழ்கின்றேன்.... !!
தடமின்றி தொலைந்த
என்னை... !!
உனை காணும்
நொடியிற்காக
என்றும் என்
காத்திருப்பு....!!!
எனை உன்னில்
தொலைக்க... !!
இவளின் வசிப்பே
கடலின் உள்ளத்தை
நேசித்ததேனோ...!!!!
உன் ஓசையை ரசித்த
என்னை
நனைய வைத்தாய் ...!!!
என்று உன் ஆழமனதில்
இடம் பிடிப்பேனோ....!!!
ஓசையின்றி என்
மனதை உன்னுடன்
இசைக்கும்
காதலி இவள்
உன்னிடத்தில் ஆழ்கடலே... !!!
ஒளியில் ஒளியின்றி
தவித்த
இவளின் வழிக்கு
ஒளியாய்
வந்த கவியின்
இருளே...!!
உன் விழி வழி கவியாய்
ஒளிந்தாய்... !!!
கண்ணின் கேள்வி
காணும் கணமே நேரிடுமோ....!!!!
என்னவளே (தனிமை)
உனைக் கண்ட கணமே
கேள்வியே விடையாய்
மாறிய என் கண்கள்....!!!
தென்னைமரத்தின் பின்னால்
ஒளிந்து கொள்கிறது சூரியன்...
கிழக்கு திசையில் இருந்து
சென்றுவிட்டாயா?
என எட்டிபார்க்கும் சந்திரன்...
- Shastika.s III BCOM FMA
வட்ட மான வெண்ணிலா
வானில் காணும் வெண்ணிலா!
தட்டுப் போன்ற வெண்ணிலா
தாவிச் செல்லும் வெண்ணிலா!
பாதி மாதம் தேய்கிறாய்
பாதி மாதம் வளர்கிறாய்!
சோதி காட்ட வருகிறாய்!
சொல்லி நாங்கள் மகிழுவோம்!
M.Sanmati II-BSC Computer science
மாமலை மீதி ருந்தே,
மாமழை பெய்ய வீழும்!
வீழ்ந்திடும் அருவி நீரால்,
விளைந்திடும் தாவ ரங்கள்!
குறிஞ்சியின் குழந்தை யன்றோ,
குதித்திடும் அருவி தானும்!
ஆறுகள் அருவி யாலே,
ஆவதும் உண்மை யன்றோ!
-M.Sanmati II-BSC Computer Science.