புதன், 4 மார்ச், 2020

சங்க தமிழரே ! சரிக்கின்ற தமிழரே !

                     சங்க கால தமிழர்கள் சங்கம் வைத்து தமிழை வளர்த்து சரித்திரம் படைத்தனர். இன்றோ ஆங்காங்கே இருக்கும் பள்ளிக் கூடங்களில் கற்பிக்கப்படும்.  நமது தாய் மொழியான தமிழ் வழி கல்வியை நாமே ஏற்க மறுக்கின்றோம்.
                     வெளிநாட்டவர் இங்கு வந்து தமிழ் கற்று அதனை தங்கள் நாடுகளில்,அவரவர் மொழிகளில் மொழி பெயர்த்து கொண்டனர்.ஆனால், தமிழ் மண்ணில் பிறந்து வாழ்ந்து வாழ்ந்து வரும் தமிழர்களாகிய நாமே தமிழ் வழிக்கல்வியை வெறுக்கின்றனர்.
             வரலாற்றை புரட்டி பார்த்தால் சாதனைகள் எத்துணை சரித்திரங்கள் எத்துணை இருகின்றது நம் தமிழ் மண்ணில் விமானத்தை கண்டெடுக்கும் முன்னரே புராணக்கதைகளில்  பறவைகளை வாகனமாக கொண்டு விண்தொட்ட காட்சிகள் தான் மறக்குமா நமக்கு !
சங்கம் வைத்த தமிழனின் ,சரித்திரத்தை உடைக்கும் நிகழ் மனிதர்களே !
            சாதனைகள் பல புரிந்து தனிமொழியாய் விளங்கி , மொழிகளில் சிறந்தது நம் தமிழ் மொழி . சோதனைகள் பல கடந்து சரித்திரத்தை படைத்தது நம் தமிழ் குலம்.
                  தமிழரின் சிந்தைக்கு நிகரென ஏதேனும் உண்டா 
                       ஒழுக்க நெறிக்கு குருகுலம் ,ஓங்கி உயர்ந்த மலைகளின் இயற்கை வளம் , பண்பாடு போற்றும் தனிக்குலமே நமது தமிழரின் குலம்
பெரியோர் சொல்லுக்கு எதிர்ப்பில்லா இருந்த நமது சமூகம் இன்று பெற்றவர்களையே மறுத்து ,மறந்தும் வருகிறது.
                    வீரம் கோபமாய் மாறியது ,விவேகம் மூடமாய் மாறியது , எண்ணங்கள் எண்ணிக்கைகளில் அடங்கியது. இந்நிலை நீடித்தால் சரித்திரம் பேசிய தமிழர்களின் வாழ்வு ।நமது தலைமுறையோடு  முடிந்துவிடுமா।
எல்லோரும் வெளியூரில் வேலை செய்து அடிமைகளாய் வாழ்வதை காட்டிலும் .உன் ஊரில் நீ உனக்கு வேண்டியதை செய்து மகிழ்வோடு வாழ்வதே மேல்.
இதனை , அறியா இன்றைய தமிழ் சமூகம் சீர்குழைந்த நிலையை எய்தியுள்ளது.இந்நிலையை போக்க வேண்டும்.
தமிழன் வாழ்வதற்காக பிறந்தவனல்ல ஆள்வதற்காக பிறந்தவன் என்பதனை அனைவருமே உணர வேண்டும் !
இன்றளவில் ,பெரும்பாலான மக்கள் வாழ்க்கையை சரியான வழியில் நடத்துவதாக எண்ணி எந்தவிதமான சமுதாய இன்னல்களிலும் ஈடுபடாமல்। தமது சுய வாழ்வை வாழ்ந்துவருகின்றனர் .
முறைகேடுகளை தடுக்கும் முயற்சிகளை விட்டுவிட்டு ஒருவருடன் ஒருவர் எந்தவித தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் .
சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று கேட்டு திரியும் தமிழர்களாகிய நாம் சட்டங்கள் நிறுவப்படாத காலத்தில் நமது சங்க தமிழர்கள் படைத்த சாதனைகளையும் ,போதனைகளையும் செவியேறா கதைகளாய் கொண்டுள்ளனர்.
இன்று உங்கள் செவிகளில் ஏற துடிக்கும் இதுபோன்ற சரித்திரம் சரியவில்லை .நாளை நீங்கள் படைக்க காத்திருக்கும், வரலாரே சரிந்து கொண்டு தான் இருக்கிறது .
நமது சரித்திரத்தை பாதுகாக்க வேண்டியது நம் கடமை ।நமது கடமையை நாம் செய்ய எந்த தயக்கமும் கொள்ளக் கூடாது.
துணிவுடன் செயல்பட்டு ,துன்பங்களை அகற்றி பிறருக்கு தூணாக நிற்பதே நமது வழக்கம் .அதனையே, நாமும் பின்பற்றுவோம் .
சரிவிலிருந்து மீண்டும் எழுவோம் ,தாய் மொழியையும் ,தாய் நாட்டையும் வரலாற்று பெட்டகங்களில் நிகழ்வாக பதிவிடாது ।நிலையான  சரித்திரமாக மாற்றுவோம் .
சங்க தமிழனுக்கே தலை வணங்குவோம் !

               தமிழ் நூல்களும், தமிழர் வாழ்வும்

                   உலகில் எங்கு  சென்று பெற்ற இயலாத வாழ்க்கை தத்துவ நெறிகளை தொகுத்து வழங்கிய சிறப்பு மிக்க செம்மொழி நம் தாய்மொழி.
                   ஐய்யன் வகுத்த திருக்குறளில் இல்லா நெறி அவரது ஈரடி குறளில் இல்லா வழி வாழ்க்கை இதில் மீதும் ஏதேனும் உண்டோ. இன்று நமது  சமூகத்தில் ஏற்படும் அத்துணை இல்லற பிரச்சனைகளுக்கும் நாம் இவ்வாறான நூல்களை தவிர்ப்பதேயாகும்.
                      பகவத்கீதையில் இருக்கும் வாழ்வியல் செயல்திட்ட தத்துவங்கள் ஜென்மங்கள் கடந்து செய்ய  வேண்டிய அறநெறிகளை வலியுறுத்துகிறது.
                      அன்றைய தமிழர்கள் அனைவருமே அதனை கற்று, அதன் நுட்பத்தினை ஏற்று வாழ்க்கையை இன்புற்று வாழ்ந்தனர்.
                      ஆனால், இன்றோ திரைப்படத்தின் மோகத்திற்கு ஆளாகி தமது வாழ்க்கையில் தோற்று அனைத்து விதமான தீமைகளிலும் எளிதில் ஈடுபட்டு வருந்துகின்றனர்.
                       குழந்தைகளை வளர்க்கும் வேளைகளில் தொலைநோக்கு சிந்தனைகள் இன்றி செயல்பட்டு அவர்களையும் வழிநடத்த தவறிவிட்டனர்.அந்தந்த சமயங்களுக்கு ஏற்றவாறு கட்டுப்பாட்டுடன் அனைத்து மக்களும் செயல்பட்டு மகிழ்வோடு வாழ எழுதிய நூல்களை படித்து பயன்பெறாது.
                        சாதி,சமயமாய் மாற்றி ஒரு சில சுயநலவாதிகளால் பொதுமக்களின் வாழ்வியல் நெறிகளை  சிதைத்துவிட்டனர்.  இந்நிலையினை போக்க வேண்டும்.
                        நம் முன்னோர்கள் எவ்வித வேறுபாடும் கருதாமல் சகோதரத்துவத்தினை வளர்த்துவிட்டனர்  இன்றோ உடன்பிறந்த சகோதர்களே வேற்றுமையுணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர்.
                         நாம்,நமது முன்னோர்கள் வாழ்ந்த வரலாற்றை அறியவும், வாழ்வியல் நெறிகளை கற்கவும் நமது சங்க நூல்களே சிறந்த வழியாகும்.
                        அண்டை நாடுகளில்  இருந்து வந்த பிற பொழுதுபோக்கு செயல்களை செய்து நேரத்தினை  செலவழிக்காமல் நல்ல நூல்களை கற்று பின் மற்றவர்களுக்கு கற்பித்து வாழ்வதே இன்பத்தினை தரும்.
                          இத்துணை தலைமுறைகள் ஈடேறாமல் பூண் கட்டுக்கதைகளை பேசி காதுகளை களைப்படைய செய்யாதீர்கள்.
                          வரலாறாய் மாறி வருங்காலம் போற்ற உரமாகுங்கள்!  
                     உயிர் பிரிந்தாலும் உயர்ந்து நிற்பாய்!
                     இவ்வுலகில் தமிழுடன், தமிழனாய் !


                           தமிழும்   தமிழரும்

                               உடலும், உயிருமாய் விளங்கிய தமிழ்மொழியும், தமிழரும் இன்றியமையா  புகழப்படைத்து இவ்வையத்தையே வியப்பில் ஆழ்த்தினர். உடலுக்கு உடையை வைத்தது போல் தமிழுக்கு வைத்தான் சங்க தமிழன்.
             ஆனால், இன்று உயிரான தன் மொழியின் பயன்பாட்டினை குறைப்பதனாலும், தன் தாய்மொழி கல்வியை வெறுப்பதனாலும் உயிரற்ற நடைபிணமாய் வாழ்கிறான் இன்றைய தமிழன்.
              தமிழ்பாடி நாடெல்லாம் திரிந்த அன்றைய தமிழுக்கு அமிர்தமாய் இருந்த நம் தாய்மொழி, இன்று வின்வெளிக்கு செல்லும் அளவிற்கு வளர்ச்சி பெற்று உயர்ந்து நிற்கும் நம் நாட்டு மக்களுக்கு நம் தாய்மொழி விதமாய் தோன்றுகிறது.
              முன்னேற்ற பாதையில் செல்வதை எண்ணி நாம் அனைவருமே நமக்கு சொந்தமான நாட்டை அந்நியனுக்கு கொடுத்துவிட்டு, நிபந்தனைகளை ஏற்று செயல்பட்டு வருகின்றோம்.
              தன்னுடைய தாய்மொழியை மதிக்காத இடத்தில் நின்று பொன், பொருள் தேடி நிற்பது தாயை விட்டு பிறரிடம் யாசிப்பதற்கு சமம்.வளம் மிகுந்த நாட்டின், செல்வங்கள் நிறைந்த நாட்டின் பிள்ளைகளாகிய நாம் மட்டும் யாசிக்கவில்லை.
               அத்துணை வளமும், பலமும் கொண்ட நம் தாய்திருநாட்டின் தரத்தினையும் குறைத்து வருகிறோம்.
                எத்துணை பெரிய துன்பத்திலும், நம் நாட்டை அந்நியரிடம் இருந்து காப்பாற்றி சுதந்திரம் பெற்ற அன்றைய தமிழன் தமிழ் மொழியை தன் உயிராய் ஏற்று, தமிழ்மொழியின் உடலாக செயல்பட்டான்.
                  தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டான்
பண்டையத் தமிழன்!
              கல்வி, தொழில், அறிவியல், வணிகம்,அரசியல் என நாட்டின் அத்தனை செயல்பாடுகளும் என்று நம் தாய்மொழியில் நடக்கின்றதோ அன்று தான் நம் நாடு முழுமையான சுதந்தர நாடாக தோன்றும்.
                   பிற மொழியை கற்பது தவறல்ல! தம் தாய்மொழியையும் பிறர் கற்கும் அளவிற்கு பரவச் செய்பவனே உண்மையான தமிழன்!
                    அன்றைய காலகட்டத்தில் தமிழன், தாய்மொழியில் நுணுக்கமாக பெற்ற அறிவும், ஆளுமையும் இன்னும் அத்துணை அண்டை மொழிகளை கற்றாலும் அதற்கு ஈடாகாது.

செம்மொழியாம் தமிழ்மொழி 

                   சொல்வளங்கள் மிஞ்சும் மொழியாம் செம்மொழி சொற்களுக்கே உரிய மொழியாம் நம் தமிழ்மொழி எம்மொழியும் பெறா இலக்கணம் பெற்ற பொன்மொழியம் தமிழ்மொழி.
                                 செல்வதை மிஞ்சும் மொழியாம் தமிழ்மொழி 
            செய்யுளின் ஆயுள் மொழியாம் செம்மொழி தமிழ்மொழி இறக்கும் வரை புதிய புதிய நடைகளும் இலக்கிய, இலக்கண வகைகளும் தோன்றி கொண்டே தான் இருக்கும்.
                              சேரனின்  ஆட்சிமொழியாம் செம்மொழி 
           முச்சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த சிறப்பு மிக்கமொழி தான் நம் தாய்மொழி . மதுரை மண்ணின் மைந்தனாய் தோன்றிய மொழியே நமது தமிழ்மொழி.
               மாறாத மதிப்பின் மொழியாம்  தமிழ்மொழி .இன்னும் எத்துணை ஆண்டுகள் கழிந்தாலும் துடிப்புடன் செயல்பட்டு விளங்கும் அறிய மொழி தான் நமது தாய்மொழி
                     அன்றும்,இன்றும்,என்றும் தனிமொழி நம் தமிழ்மொழி                     எம்மொழியின் உதவியும் இன்றி பேசுவதற்கு இயன்ற மொழிநடையை உடையது தமிழ்மொழி.
                உணர்வினை ஊட்டும் மொழியான நமது தமிழ் மொழி கேட்ட்கும் செவிகளுக்கு விருந்தாக , பேசும் வாய்ற்க்கு அமுதாக இருக்கின்றது
ஊக்கத்தின் உச்ச நிலையாம் தமிழ்மொழி குழந்தைகளுக்கு பாடும் தாலாட்டு முதலே ஊக்கத்தோடு  செயல்பட உதவும் உன்னதமான மொழியானது நம் தாய்மொழி.
                   விதைகளின் விருட்ச மொழியே தமிழ்மொழி
          விதைகளில் இருந்து விருட்சமாய் வளர்ந்த வீரமான மொழி நம் தமிழ்மொழி புல்வெளியில் பனித்துளியே செம்மொழி அழகிய நடைகளை உடைய மொழியே நம் தமிழ்மொழி
                 இருளின் சுடர் ஒளியே செம்மொழி 
             வாழ்க்கையில் திறன் கொண்டு தத்தளித்த பலருக்கு எளிய நடையில் பேச, படிக்கச் உதவி இருளில் இருந்து மீது ஒளி தந்து உதவிய நட்புணர்வுடையது நம் தமிழ்மொழி
             அன்னையின் அன்புமொழியே தமிழ்மொழி அய்யன் குறளில் மிதந்த ஆற்றல் மிக்க மொழியே செம்மொழி ।  வாழ்க்கை நெறியை தொகுத்து காட்டிய தொன்மையான மொழி
               அழியா  புகழில் ஆழ்ந்த மொழியே செம்மொழி 
              உலகின் உன்னத மொழியே தமிழ்மொழி ஊர் போற்றும் கோவில் மணியாய் விளங்கியது நம் தாய்மொழி 
                     கம்பர் கவியின் வாரியாம் செம்மொழி 
              கற்பதிலும்,கற்றவர் போற்றுவதிலும் என்றுமே செம்மொழியாம் நம் தமிழ்மொழி 

சனி, 29 பிப்ரவரி, 2020

பழமொழி

புலி பசித்தாலும் புல்லை திண்ணாது
 நாய்,பூனை, போன்ற ஒரு சில விலங்குகள் தன் குட்டிகளை ஈன்றவுடன் பிரசவ வலி மற்றும் அப்போது ஏற்படும் அகோர பசியின் காரணமாக அவை ஈன்ற சில குட்டிகளை தானே தின்றுவிடும். ஆனால் புலி இப்படி தன் குட்டிகளை தானே உண்பது இல்லை அவைகளை பத்திரமாகவும் தன் பார்வையில் மிகுந்த கவனத்தோடு பராமரிக்கிறது. அதனாலே புலி பசித்தாலும் புல்லை திண்ணாது என்கிறோம். 

மொழி

தாயும்
தன் குழந்தையும்
பேசிக்கொள்ளும்
சின்ன சிரிப்பே
யாரும் அறியாத
மொழி


வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

அறம் செய் ! புறம் பேசாதே !

                        ஒரு குறையும் இன்றி நாம் நம் வாழ்க்கையை வாழ விரும்பினால் ,அதற்கு ஏற்ற செயலை மட்டும் செய்து மறுபிறவி ஒன்று ஏற்பட்டால் அப்போதேனும் அந்த அறிய வரத்தினை பெற வேண்டும்.
                       அங்ஙனம் இன்றி இன்று நினைப்பதனை இன்றே பெற வேண்டும் என்று எண்ணி ,நாளை என்றொன்று இருப்பதனை மரத்தால் . அதாவது வரும் முன் காப்போம் என்பதனை அறியாதிருத்தல் .
                       எல்லாம் அறிந்தும் அறியாமையை தேடுகின்றனர் இன்றைய தமிழர் இந்நிலை மாற வேண்டும் . அறியாமையிலும் ,அறிவீனம் என்று நினைத்துக்கொண்டு தன் நலத்திற்காக பிறரை துன்புறுத்துகின்றனர் .                    உண்மை கண்முன் என்றாலும் பொய்மையின் பின்னால் கண்மூடி தனமாக கண்ணை திறந்தே நடக்கின்றனர் .
                       பிறரை நோக்கியேனும் அறிவோ , ஆக்கமோ கொள்ளாது பொறாமையும், பேராசையையும் கொள்கின்றனர் . தான் வெல்லாவிட்டாலும் , பிறர் வெல்ல கூடாதென்று சூழ்ச்சிகளை செய்யவும் துணிகின்றனர.
                      மனம் என்ற ஒரு இனம் அறத்தின் வளமாய் இருப்பதனை மறந்து சாதி ,மதம் , குலம் என்னும் என்றோ அறுத்தெறியப்பட்டதை . தான் நூலெடுத்து கோர்ப்பதாய் எண்ணி பிறரை ஊசியால் குத்துகின்றனர் .                  வன்முறையை அளிக்காவிட்டால் ,அறநெறியை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பதனை இன்றளவிலும் உணராது செயல்பட்டு வருகின்றனர். .                         இன்றைய தமிழர் । நம் பிறப்பென்பதை யார் தீர்மானித்தாலும் !இறப்பை எமன் தீர்மானித்தாலும் ! நம் வாழ்வை நாம் தீர்மானிக்க வேண்டும் !                        அவற்றை அறிவாய், அளவாய், அழகாய், அமுதாய் அதாவது "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு " போல  வாழ்க்கையை கழிக்க வேண்டும் ।
                      அழியா வரம் வேண்டாம் , மறையும் வரை வாழ்ந்திடும் (ஆழ்த்திடும் ) வரத்தினை பெறவேண்டும். வாழ்க்கையை அழியா புகழோடும் , அனைவரும் அறியும் மிதலோடும் ,அணுகும் மனதோடும் ,அறியும் குணத்தோடும் வாழ்தல் வேண்டும் .
                       உன் தலையெழுத்து குறையாக இருந்தாலும் உன் கையெழுத்து முறையாக இருக்க வேண்டும் . தம் முன்னால் பிறர் போடாவிட்டாலும் ,பின்னால் பரைய கூடாது .
                                         நன்மை ஒன்றும் செய்யாவிட்டாலும் 
தீமையை என்றும் நீ தீண்டாதே
              கடவுளை காணாவிட்டாலும் உன் உள்ளம் அதை நீ உணர்த்திருக்காதே . காலம்  அது  கரைந்து போகையிலே 
கல்லாய் நீயும் மாறிவிடாதே .
                  கவிதை பேசும் வார்த்தைகள் எல்லாம் கல்லறைகள் கேட்காத என்பது போல,  இன்று உன் முன்னால் பயத்தினாலோ அல்லது எதிர்பார்ப்பினாலோ காலத்தையும் ,சூழ்நிலையையும் ,சுல்லலையும் பார்த்து உன்னை பாடிப் போற்றி பேசினாலும் , பேசாவிட்டாலும் .
                      பின்னால் இகழ்வதனை நீ அனுமதிக்காதே । உன்னை இகழ்வதனை நீ அறியாமல் இருக்காதே அவ்வஞ்ச புகழ்ச்சியினை உன் கல்லறையும் கேட்டவிடாதே
அறத்தினை செய் கூசாதே புரம் நின்று பேசாதே 

நதி உருவாகும் இடம்

சிந்து - பொக்கா - சூ பனியாறு (மானசரோவர் ஏரி)
பிரம்மபுத்திரா - கெமாயுங்டங் பனியாறு (மானசரோவர் ஏரி)
கோதாவாி - திரயம்பதேஷ்வரா் பீடபூமி (நாசிக்)
மகாநதி  - சிஹாவா (ராய்பூர்)

தகுதி

உங்களுக்கு  ஒரு தகுதி  வேண்டும் என்றால் ,
அதை  நீங்கள்  பெற்று விட்டதைப் போல் செயல்படுங்கள்.  
அதுவாகவே நீங்கள்  மாறிவிடுவீர்கள்.
                                                  _ வில்லியம் ஜேம்ஸ்.

இயற்கையை காப்போம்

இயற்கை அளித்த மழைத்துளியை
மனிதன் காப்பதில்லை
கடவுள் படைத்த இயற்கையை
மனிதன் காப்பதில்லை
இயற்கை அளித்த நீரும் மணலும் காற்றுகூட
மனிதனின் பணத்தேவையாக மாறி விட்டது
தற்போது மனிதனிடம் ஒன்றும் இல்லை
ஆனால் அழிப்பதில் முன்நிற்கின்றனர்....
இயற்கையை காப்போம்...

6.1.2020 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளியான கவிதை.

புதன், 26 பிப்ரவரி, 2020

பொய் மானிடா..... நீ எம் மண்ணிலா..... 

                தமிழ் தோன்றி பல நூறு ஆண்டுகள் ஆகிறது இன்றும் தனிமொழி என்ற சிறப்பினை இழக்காமல் இருக்கிறது.
                ஆனால் , தமிழர்களாகிய நாம் என்ன செய்கிறோம் . நம் தாய்மொழி கல்வியை கற்க விருப்பமில்லாமல் , பிறமொழி கல்வியை கற்றுவருகிறோம்.
                இதில் தான் நம் அடிமைத்தனம் வெளிப்படுகிறது . ஆங்கிலேயர் ஆண்ட காலம் கடந்து சுதந்திர நாடக மாறியது என்று நாம் குறிக்கொண்டிருக்கிறோம் .
                ஆனால் , இன்றும் அந்நிய மொழிக்கு நாம் அடிமைகளாகவே இருக்கிறோம் . அதனையே நம் சந்ததிக்கும் கொடுக்கிறோம் .
                உண்மையிலேயே நமக்கு நம் மண்மீது  பற்று இருந்திருந்தால் , நாம் நம் மொழியை  தான் முதன்மைப்படுத்தி  தாய்மொழி கல்வியை  உயர்த்தியிருக்க வேண்டும். உலகளவு பரவிய மொழியாய் மாற்றியிருக்க வேண்டும். 
                எம்மொழியிலும் இல்லா இலக்கணமும் , சொற்களும் உடையது ,  நம்மொழி .
                எளிதில் கற்க  , உணர வளம் கொண்ட நம் மொழி சிறப்புப்பெற செய்பவனே உண்மையான பற்றுடையோன் செயல் .
               நாம் அனைவருமே இன்றளவில் பொய் மானிடர்களாய் தான் நம் மண்ணில் இருக்கின்றோம் !
               தன் தாய்நாட்டிற்கும் , தாய்மொழிக்கும் வளர்ச்சியை  கொடுக்க செயல்பட்டு உழைப்பவனே என்றும் உண்மையான மானிடன் .
               நாம் எவ்வளவு தான் அறிவியல்  ரீதியாகவும் , பொருளாதாரரீதியாகவும்  உயர்ந்தாலும் நம் நாட்டையும் , மொழியையும் உயர்த்துவதில்லை .
               நீ விண்ணில்  நின்று பேசினாலும் ,விவாதமாய் பேசினாலும் உன் தாய் மொழிக்கு தலைவணங்கு .
       உன் மொழியில் பாடி நில் ! உலகமெங்கும் பரவ  செய் !
               உலகமெங்கும் தமிழர்கள் பல்வேறு இடங்களில் சென்று சாதனை புரிந்தால் அது சரித்திரமில்லை!
தமிழ் மொழியை ஆங்காங்கே பரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் . அதுவே , உண்மையான சரித்திரம் !
               அவர்களை அடிமையாக்கவிட்டாலும் , நம் மொழியின் அருமையையும் , ஆழமும் அறிய செய்ய வேண்டும் .
               அடிமை தன்மையின் வலி உணர்ந்த  தமிழனுக்கு மற்றவர்களை அடிமையாகும் எண்ணம் என்றும் இருக்காது. இருப்பினும் ,
தன் மொழியின் சிறப்பை இழக்க  தமிழனின் மணம் ஏற்காது !
               இவாறான ,தமிழின் பெருமையை உணராது பிறமொழி மோகம் கொண்டு திரிபவனே பொய் மானிடன் !
பொய் மானிடன் எம் மண்ணில் மாண்டாலும் பயனடையான் !

கருப்பு அடைமொழி

கருப்பு நிறைந்த அடைமொழியாக கொண்ட வார்த்தை
கருப்புக் கண்டம்          -      ஆப்பிரிக்கா
கருப்பு நாடு                     -      பிட்லாந்து
கருப்பு நோய்                  -      பிளேக்
கருப்புச்சட்டம்              -       ரவுலட் சட்டம்
கருப்பு விதவை            -       ஒருவகை சிலந்தி
கருப்பு அழகி                  -       கிளியோபாட்ரா