நந்திதா கண்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நந்திதா கண்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

அஞ்சல் குறியீட்டு எண்

       
                                                          அஞ்சல் குறியீட்டு எண் அல்லது பின்கோடு என்பது இந்தியாவில் அஞ்சல்துறைகாக அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் எண் ஆகும். இந்த முறை ஆகஸ்ட் 15 1972ஆம் நடைமுறைக்கு வந்தது. இதில் மொத்தம் ஆறு எண்கள் உள்ளது. அஞ்சலக சுட்டு எண்ணின் முதல் இலக்கம் அஞ்சலகம் அமைந்துள்ள மண்டலம். இரண்டாவது இலக்கம் உள் மண்டலம். மூன்றாவது இலக்கம் மாவட்டத்தையும் குறிக்கிறது. இறுதி மூன்று இலக்கங்கள் குறிப்பிட்ட அஞ்சலகத்தை குறிக்கும்.

மனிதாபிமானம்

 தெரசா ஒரு நாள்  ஒருவரிடம் இல்லாதவருக்காக உதவி கேட்க அவரோ உமிழ் நீரை உமிழ்ந்தார் ஆனால் அன்னையோ கோப படாமல் எனக்கு இதை தந்து விட்டீர்கள் அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்ட தெரசா வாழ்ந்த இந்த ஊரில் ஏழைகளுக்கு உதவ அனைவரின் உள்ளம் மறுக்கிறது.                             ஒரு நாள் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தேன் அப்போது ஒரு மெலிந்த உடலும், அழுக்கான துணியையும், தடுமாறிய நடையும் உடைய முதியவர், ஒருவரிடம் பிச்சை கேட்க அவரோ கண்டு கொள்ளாமல் திரும்பி கொண்டார் அந்த ஈமுதியவரோ பாவமாக மீண்டும் தடுமாறி சென்று விட்டார். நான் அவரை தேடி போய் என்னால் முடிந்த பணத்தை தந்து உதவினேன். இன்றைய சமுகத்தின் அவலமே இது தான். இல்லாதவர்க்கு உதவ நம்மில் பலருக்கு மனம் வருவதில்லை காரணம் கேட்டால் அவர்கள் கூறும் விடையோ கோபம் அளிக்கிறது.  அவர்கள் இவர்களை ஏமாற்றிவிடுவாங்களாம். மாதம் முன்னூறு ரூபாய்க்கு போனுக்கு டேட்டா கார்டு போடுவோம், இருநூறு ரூபாய்க்கு பீட்ஸா வாங்கி மூன்று துண்டுகள் சாப்பிட்டு ஒரு துண்டை குப்பையில் எரியும் நாம் இல்லாதவருக்காக ஒரு பத்து ரூபாய் கொடுத்தால் ஏமார்ந்துவிடுவோமாம். 

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

புறம் பேசுதல் ஒரு பெரு குற்றம்


சித்திர குப்தரும் எமனும் ஒரு வழக்கை பற்றி பேசி கொண்டு இருந்தனர்,  எம தர்ம ராஜாவிடம் தீர்ப்பு கேட்க விஷயத்தை கூறினார். ஒரு நாட்டில் ஒரு ராஜா தன் ஊரில் உள்ள அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார் அப்போது ஒரு கருடன் பாம்பை தூக்கி கொண்டு சென்றது அந்த பாம்பு வலி தாங்க முடியாமல் நஞ்சை கக்கியது அந்த நஞ்சோ உணவின் மீது விழுந்துவிட்டது அதை அறியாமல் அந்த உணவை சமையல்காரர் பரிமாற அதை உண்டு மூன்று பேர் இறந்து விட்டனர். சித்ர குப்தருக்கு இபோது இந்த இறப்பு பாவத்தை யார் மீது சுமத்துவது என்ற சந்தேகத்தை எமனிடம் கேட்டார்,ஏனென்றால் ராஜா நல்ல எண்ணத்தில் உணவு கொடுத்தார் அதில் விஷம் உள்ளது அவருக்கு தெரியாது, சமையல் காரரும் விஷம் உள்ளது தெரியாமல் பரிமாறி விட்டார், கருடன் தன் உணவிற்காக பாம்பை தூக்கி சென்றது, பாம்போ வலி தாங்காமல் விஷத்தை கக்கி விட்டது இவர்கள் யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்று குப்தர்  கேட்க எமனோ பொறுங்கள் காலம் வரும் போது விடை கூறுகிறேன் என்றார். சிறிது காலம் கழித்து அந்த ஊருக்கு புதிதாக  இரண்டு பேர் வந்தனர் அவர்கள் ராஜா அன்னதானம் வழங்குவதை அறிந்து அங்கு போக விரும்பி ஒரு பெண்ணிடம் வழி கேட்டனர் அனால் அவளோ அவர்களிடம் பாத்து போங்கள் எண்ணென்றால் அங்கு உணவு உண்பவர் அனைவரும் செத்து போகிறார்கள் என்று நக்கலாக கூறுகிறாள் இப்போது எமன் சித்ர குப்தரிடம் அந்த இறப்பு பாவத்தை இவள் மீது சுமத்து என்றார். பாவம் அவள் மீது சுமத்த படுகிறது. ஒரு நல்ல செயலை தப்பான எண்ணத்தில் பிறரிடம் புறம் கூறுவது கூட ஒரு பெரும் பாவம் தான். 

சனி, 25 ஆகஸ்ட், 2018

கல்லூரி வழி பயணம்




இளஞ்சூடான வெயிலில் பள்ளிக்கு செல்லும் சிறு பிள்ளைகள் மத்தியில் நானும் தயாரானேன் என் கல்லூரிக்கு செல்ல !!

பரபரபரப்பான நகரத்தை தாண்டி என் கல்லூரிக்கு செல்ல அழகான அமைதியான ஒரு காட்டு வழி பாதை !!

பனி போல் பொழியும் சாரல் மழையில் குளங்கள் சிரித்திட, 
அதில் உள்ள அல்லி மலர்கள் ஆனந்தத்தில் மூழ்கிட ! 

ஊரை காவல் காத்தப்படி உள்ள எல்லை சாமியை ரசித்தவாறு பயணம் தொடர்கிறது 
மழை பெய்தால் இரு புறமும் ஓடைகள் அதில் முளைக்கும் கோரைகள் ,
பச்சை போர்வை போர்த்தியது போல் உள்ள கடலை  சாகுபடி ,
பெண் மயிலை கவர தொகை விரிதாடும் ஆண் மயிலின் சிறகு ஓசையில் நான் சிலிர்த்தட!! 

ஏர் உழுத இடத்தில் தாயுடன் உணவு தேடும் மயில் குஞ்சுகள் 
அதை விரட்ட வந்த கிழவி வீட்டு தோட்டத்தில் உள்ள வாழை கன்றை கன்று குட்டி திங்க , 
அதன் மேல் ஒய்யாரமாய் காதல் பேசும் இரட்டை வால் குருவிகள், 
கரையோர பனைகள் அதில் பனங்காய்களை விட அதிகமான கல் பானைகள் அதன் சுவையில் மயங்கிய வண்டுகளின் கூட்டம் , 
மீனை எதிர்நோக்கும்  மீன்கொத்தி, பாறை மீது தண்டால் எடுக்கும் ஓணான், தார் ஊற்றிய சாலையில் ஒரு புறம் திதிப்பான கரும்பும், மறுபுறம் சூரியனும் ஈடு தரும் நிறத்தில் மாம்பழங்கள்.

தாயிடம் பால் குடிக்க ஓடும் இளங்கன்று அதனை மெய்தபடி மரத்தடி நிழலுக்கு ஓடும் பாசமிகு அண்ணன் தங்கையின் அளவில்லா ஆனந்தத்தை ரசித்தவாரு கல்லூரிக்குள் நுழைந்தேன் என் எதிர்காலத்தை நோக்கி?????