கு.நந்தினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கு.நந்தினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 மே, 2016

மூவிடம்



                                     

இடம் மூன்று வகைப்படும். அவை
                        தன்மை
                        முன்னிலை
                        படர்க்கை
தன்மை
தன்னைப் பற்றி கூறும் சொல் தன்மை இடமாகும்.

எடுத்துக்காட்டு- நான் எழுதினேன், நாங்கள் எழுதினோம், நான் செய்தேன்

முன்னிலை
நமக்கு முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை இடமாகும்.

எடுத்துக்காட்டு- நீ கேட்டாயா?, நீங்கள் கேட்டீர்களா?

படர்க்கை
தன்னையோ, முன்னால் நிற்பவரையோ குறிக்காமல் வேறு ஒரு மூன்றாவது நபரைக் குறிப்பது படர்க்கை இடமாகும்.
படர்க்கை உயர்திணை அஃறிணை என்று இரு வகைப்படும்.

எடுத்துக்காட்டு- அவன், அவள், அவர்கள் – படர்க்கை உயர்திணை
                அவை, அது – படர்க்கை அஃறிணை

வியாழன், 5 மே, 2016

அறுவகைப் பெயர்கள்


                            அறுவகைப் பெயர்கள்
பெயர்ச்சொல்
ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை
                            பொருட்பெயர்
                            இடப்பெயர்
                            காலப்பெயர்
                            சினைப்பெயர்
                            குணப்பெயர்
                            தொழிற்பெயர்
பொருட்பெயர்;
பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும். 
 
 


எடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும்.
இடப்பெயர்
இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.


எடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம்.
காலப்பெயர்
காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.



எடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை
சினைப்பெயர்
சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.




எடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை.
குணப்பெயர்
குணம் – பண்பு. பொருட்களின் குணத்தை (பண்பை) குறிப்பது குணப்யெராகும்.




எடுத்துக்காட்டு – உண்மை, பெருமை, வெம்மை, செம்மை, பசுமை.
தொழிற்பெயர்
செய்யும் தொழிலைக் குறிப்பது தொழிற்பெயராகும்.

 





எடுத்துக்காட்டு – தச்சு, உழவு, ஆட்டம், காவலர்.

பின்வரும் சொற்கள் எந்த பெயரைக் குறிக்கும் என கூறுக
கண், பொறுமை, ஓட்டுனர், தை, கடை, கட்டில்.



திங்கள், 25 ஏப்ரல், 2016

யார் அவர் என்று கண்டுபிடிங்கள்



                யார் அவர் என்று கண்டுபிடிங்கள்


அவரது குழந்தைப் பருவம் கொடூர உணர்வை அவரது மனதில் தூண்டிவிட்டது. சுருங்கச் சொன்னால், குழந்தைப் பருவத்தில் அவர் சந்தோசப்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் கிட்டவில்லை.

வாய்ப்புகளுக்காக அவரது குழந்தை மனம் ஏங்கியது! ஆனால், அந்தக் குழந்தையின் தந்தை  தன் மகன் எந்த வகையிலும் சந்தோசப்படுவதற்கான சந்தர்ப்பங்களைத் தரவில்லை. அவர் தன் மகனுக்குத் தந்ததெல்லாம் என்ன தெரியுமா?

அடி, அடி, அடி என்று இருபத்து நான்கு மணி நேரமும் அடித்துக் கொண்டே இருக்கும் சூழலுக்குள் அந்தக் குழந்தை தள்ளப்பட்டிருந்தது. அதாவது, இதற்கு அடிப்பார்கள், இதற்கு அடிக்க மாட்டார்கள் என்று அந்த நிலைமையைப் புரிந்து கொள்ளும் வகையில் இல்லை.

நின்றால் அடி, அமர்ந்தால் அடி, படுத்தால் அடி, சாப்பிட உட்கார்ந்தால் அடி, உடலில் அந்த அடிகள் உருவாக்கிய தழும்புகளுக்குக் கணக்கில்லை.
இவ்வாறு தந்தையின் கரங்களால் அடிபட்டு அந்தக் குழந்தை துடித்தபோது, வாடா, கண்ணே! என்று அக்குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு, அதன் கன்னத்தில் முத்தமாரி பொழிந்தாள் குழந்தையின் தாய்!

இப்படிப் பட்ட சூழ்நிலையில் அந்தக் குழந்தையின் மனதில் பதிந்த பிம்பம் இதுதான்; “ அப்பா என்றால் அடிப்பவர்; அம்மா என்றால் அணைப்பவர்” அதனாலயே, தன்னை அடிப்பதற்கு தந்தை தன் கையை ஓங்கியபோது, அந்தக் குழந்தை அம்மாவின் பின்னால் பதுங்கிக் கொண்டது. 

மனத்தளவில் அந்தக் குழந்தை தாயின் குழந்தையாக மட்டுமே வளர்ந்து வந்தது.இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தக் குழந்தை வளர்ந்து வாலிப் பருவம் எய்தி, பிறரது கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தனது திறமையை வெளிப்படுத்தியது. ஆனால் படிப்பில் ஆர்வம் குறைவாகவே இருந்தது.

டீன் ஏஜ்-க்குள் நுழைந்துவிட்டார் அவர். அதாவது பதினாறவது வயதை அடைந்துவிட்டார். தனது பதிமூன்றாவது வயதில்  தந்தையை இழந்தார். 
அதன் பிறகு மூன்று வருடங்கள் பள்ளியில் பாடங்களுடன் மல்யுத்தமும் நடத்தினார். முடிவில் எந்தத் தகுதியும் பெறாமல் பள்ளியிலிருந்து விடை பெற்றார்.

அவருக்கு படிப்பு ஏறவில்லை என்றாலும், ஓவியத்தில் ஆர்வம் இருந்தது. ஆனாலும் அவரால் சிறந்த ஓவியராக முடியவில்லை. ஓவியத்தைவிட கட்டடக்கலை, சிற்பக்கலையில் ஆர்வம் காட்டும்படி  பிறர் அவரைத் தூண்டினார்கள். அவற்றிலும் நுழைந்து தனது திறமையைக் காட்ட முனைந்தார். ஆனால், அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.

அவர் சிறு வயது முதலே அரசியல் பற்றிய திண்ணைப் பேச்சுக்களைக் கேட்ட வண்ணமிருந்தார். ஆனாலும் அரசியல் புரியாத வயதில், தனது நண்பர்களுடன் அரசியல் பற்றி, அவருக்குத் தெரிந்த அளவுக்கு விவாதம் நடத்தினார்.

இதற்கிடையே வயிற்றுப் பிழைப்பை நடத்துவதற்காக ஓவியம் வரைந்து விற்பனை செய்தார். அவர் பொதுவாக முதலில் சில தினக்கூலி வேலைகள், அப்புறம் சாயப்பட்டறையில் வேலை, பிறகு, வாழ்த்து அட்டைகளை பார்த்து படம் வரைந்து கொண்டுபோய், கடைகளில் கொடுத்து சில்லறை சேர்க்கிற சுய தொழில் என்று வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார் அவர்.

காலமும் பொழுதும் அவரை இந்தப் பொழப்பு உனக்கு வேண்டாம் என்று மூலதனம் தேவைப்படாத தொழிலான அரசியலில் மூக்கை நுழைத்து, தலை தூக்கிப் பார் என்று அவரைத் தள்ளிவிட்டன.

அரசியலில் கொள்கையை விடவும், யுக்தியும், சொல்லாடலும் மட்டுமே இருந்தால், குறுகிய காலத்தில் மிக உயர்ந்த இடத்திற்கு சென்றவிட முடியும் என்பதை புரிந்து கொண்டார் அவர்.

பேச்சுக்கலையில் குரல் ஏற்ற இறக்கங்களில், எந்தச் சொல்லுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், எந்தச் சொல்லை வருடிக் கொடுக்க வேண்டும், எப்போது குரலை உயர்த்த வேண்டும், எப்போது சொற்பொழிவை  சங்கீதமாக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர் மிக விரைவில் கற்று, அக்கலையில் விற்பன்னர் ஆகிவிட்டார்.

எந்த அரசியலில் அவர் மூக்கை நுழைத்து, அதில் அவர் தன்னை முடிசூடா மன்னர் ஆக்கிக் கொண்டாரோ, அந்த அரசியல் களத்தில் தனக்கு எதிராக எவரும் மூக்கை நுழைத்துவிடக்கூடாது என்பதில் கண்கொத்திப் பாம்பாக இருந்தார் அவர்.

காலமும் சூழலும் அவருக்கு கைக் கொடுத்தது. அவரை அரசியல் அரியணையில் ஏற்றிவிட்டு, காலம் அவரை வேடிக்கை பார்த்தது.
இளம் வயதில் ஓரிரு ரொட்டித் துண்டுகள் கிடைக்காதா என்று தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டிருந்த அவர், ஆட்சி பீடம் ஏறியதும், ஆட்சியில் இருந்ததும் சொற்பகாலமே! அதாவது பன்னிரெண்டு ஆண்டுகள்!

கொலைகளைச் செய்வதற்கென்ற பிறந்து, ஆட்டம் போட்டு அடங்கி போன அவர் யார் என்று கண்டுபிடிங்கள்????

புதன், 20 ஏப்ரல், 2016

தமிழ் எழுத்துக்கள்



                             தமிழ் எழுத்துக்கள்

முன்னுரை

        தமிழ் எழுத்துகளின் வகைகளையும்  அதை ஒலிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு  பற்றியும் சுருக்கமாக பார்க்கலாம்.
தமிழ் எழுத்துக்களை  உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் என இரண்டு வகையாக பிரிக்கலாம்.  

உயிர் எழுத்துக்கள்
     முதல் வரை உள்ள 12 எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கிறோம். உயிர் இன்றி எந்த உயிரும் உயிர் வாழ முடியாது, அதுபோல உயிர் எழுத்துக்கள் இன்றி எந்த எழுத்தையும் உச்சரிக்க முடியாது. பிற எழுத்துக்கள் பிறப்பதற்கு அடிப்படையாக இருப்பதால் உயிர் எழுத்து எனப் பெயர் பெற்றது. உயிர் எழுத்துக்களை தனியே ஒலிக்கலாம். உதாரணமாக அ-பசு, ஈ-உயிரினம்.

மெய் எழுத்துக்கள்
      க் முதல் ன் வரை உள்ள 18 எழுத்துக்கள் மெய் எழுத்துகள் எனப்படும். மெய் எழுத்துக்களை தனியே ஒலிக்க முடியாது. தனியே ஒலித்தால் பொருள் தராது. க் தனியே ஒலித்தால் எந்த பொருளும் தராது. உயிர் இன்றி மெய் இயங்காது.
க் என்ற மெய் எழுத்திற்கு முன்னால் “இ” என்ற உயிரும் பின்னால் “உ” என்ற உயிரும் மென்மையாக சேரும் போது க் என்ற மெய் எழுத்து தோன்றுகிறது.

உயிர்மெய்எழுத்துக்கள்
     முதல் வரை உள்ள 216 எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் எனப்படும். உயிரும் மெய்யும் சேர்ந்து தோன்றுவது உயிர்மெய் எழுத்தாகும். க் என்ற மெய் எழுத்தோடு “அ” என்ற உயிர் சேர்ந்தால் “க” என்ற உயிர்மெய் எழுத்து தோன்றுகிறது. இவ்வாறே பிற எழுத்துக்களும் தோன்றுகிறது.

மாத்திரை
     உயிர் மெய்  எழுத்தை  ஒலிக்க எடுத்துக் கொள்ளும்  கால அளவு மாத்திரை எனப்படும். ஒரு முறை கண்ணிமைக்கும் நேரம் அல்லது ஒரு முறை கைநொடிக்கும் நேரம் ஒரு மாத்திரை எனப்படும். எழுத்துக்களுக்கு ஏற்றார் போல் கால அளவு மாறுபாடுகிறது.

குறில் எழுத்துக்கள்
     ஒரு எழுத்தை உச்சரிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு குறைவாக இருந்தால் அது குறில் எனப்படும்.  அ, இ, உ, எ, ஒ போன்ற எழுத்துக்கள் ஒலிக்க  குறைந்த கால அளவு அதாவது ஒரு மாத்திரை கால அளவு எடுத்துக் கொள்வதால் இது குறில் எனப்படுகிறது.

நெடில் எழுத்துக்கள்
      ஒரு எழுத்தை உச்சரிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு அதிகமாக இருந்தால் அது நெடில் எனப்படும். ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஔ போன்ற எழுத்துக்களை உச்சரிக்க அதிக கால அளவு அதாவது இருமாத்திரை கால அளவு எடுத்துக் கொள்வதால் இது நெடில் எனப்படுகிறது.

மெய் எழுத்திற்குரிய மாத்திரை
      மெய் எழுத்துக்கள் குறுகிய காலத்தில் மறைந்து விடும். மெய் எழுத்தை உச்சரிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு அரை மாத்திரை ஆகும். உயிரும் மெய்யும் சேரும் போது உயிர் தெரியாது மெய் மட்டுமே தெரியும். க் என்ற மெய் எழுத்தோடு அ என்ற உயிர் எழுத்து சேரும் போது க என்ற உயிர்மெய் தோன்றும் க என்ற மெய்யே தெரியும். அ என்ற உயிர் எழுத்து தெரியாது.

ஆய்த எழுத்து
     ஆய்த எழுத்து எப்போதும் உயிருக்கும் மெய்யுக்கும் நடுவில் தான் இருக்கும். அஃது என்ற சொல்லில் வருவது போல உயிர்மெய் நடுவில் மட்டுமே ஆய்தம் இடம்பெறும். எனவே இது உயிருக்கும் மெய்யுக்கும் நடுவில் வைக்கப்படுகிறது. ஆய்த எழுத்து ஒலிக்க ஆகும் கால அளவு சில இடங்களில் ஒரு மாத்திரையாகவும் சில இடங்களில் இரண்டு மாத்திரையாகவும் இருக்கும்.

முடிவுரை
      இத்தகைய பாகுபாடு தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் இல்லை எனலாம். தமிழ் மொழியில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. இக்கட்டுரையில் தமிழ் எழுத்துக்களின்  வகைகளையும் அதை ஒலிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு பற்றியும் பார்த்தோம்.