ஆங்கிலத்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆங்கிலத்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

எவை கடினமானவை?

                                எவை கடினமானவை?
1.பணக்காரர்கள் ஏழைகளை கீழே குனிந்து பார்ப்பது கடினம்.

2.வாழ்வில் உழைத்து முன்னேறி, அந்த நிலையில் நிற்ப்பது கடினம்.
3.சக போட்டியாளரின் வெற்றியை மனநிறைவுடன் பாராட்டுவது கடினம்.
4.நமது இலக்கை கவனச்சிரல் இல்லாமல் ஒரு வழியில் செலுத்துவது கடினம்.
5.அடுத்தவரின் குறையை,நிறையை பற்றி பேசாமல் இருப்பது.
6.உண்மையை கண்டறிவது கடினம்.
7.இரக்க மானப்பான்மையுடன் வாழ்வது கடின்னம்.
8.பிறரை தடுக்கி விழும்போது தட்டிக்கொடுத்து மேலே தூக்க முன்வருவது கடினம்.
9.சமூக அவலங்கள் கண்டும் காணாமல் இருப்பது கடினம்

10.மனிதன் பல நேரங்களில் மனிதனாய் இருப்பதே கடினம்.

எமது பேராசிரியர் கூறிய கவரும் பொன்மொழிகள்

                எமது பேராசிரியர் கூறிய  கவரும் பொன்மொழிகள்
1.``ஒரு வேலையை ஒரு முறை சரியாக செய்தால், தவறுதல் என்று ஒன்று நடக்காது”       -முனைவர்.இரா.குணசீலண்.
பின்புரம்; எங்கள் வகுப்பில் மறு தேர்வு, மறு தேர்வு என்று எழுதிக்கொண்டிருந்த வேலையில் மிக பொறுமையாக, விவேகத்துடன் இயா கூறிய அழகான சிந்திக்கத்தக்க பொன்மொழி அது.
2.``எதையும் தொடங்குவது எளிது ஆனால், அதனை தொரட்ந்து செய்வதே கடிறம்”      -முனைவர்.இரா.குணசீலண்

“எந்த ஒரு புதிய திட்டத்தை வகுப்பில் செயல்படுதினால், இந்த பொன்மொழியோடு வாழ்த்துக்கள்  கூறுவர்.அது பல சமயங்களில் எங்களுக்கு ஒத்தும் போகும். பல முறை தொடங்கிய செயல்களை பல காரணங்களால் அப்படியே நிறுத்தி விடுவோம்.
3.``நமது தேடல் பெரிய அளவில் இருக்க வேண்டும்”
                                     -முனைவர்.இரா.குணசீலண்

இளஞர்களகிய நமது தேடல்களை பொறுத்துதான் நம் வாழ்கை அமையும். நமது தேடல்கள் பெறும்பாலான சமயங்களில் முகநூல், யூ-டியுப்களில் மிமிஸை நோக்கியே இருப்பதால் தான் பலரது நேரமும் திறமையும் வீணாகிறது.

உங்களை எது கவரவில்லை?

உங்களை எது கவரவில்லை?
     திரைப்பட வெளியீட்டின் போது, கட்டப்படும் பெரிய பெரிய பதாகைகளும், செய்யப்படும் அபிஷேகங்களும், பல கல்லாரி மாணவர்களின் கட்செவி(what’s up statusநிலை தகவல்களும், என்னை கவரவில்லை. புகழ்பெற்ற நடிகைகள் படங்களுக்கு தடை விழுந்தால், நாடே பொங்கி எழுகிறது. அதற்கு கூடும் கூட்டம் ஏன் ஒரு பொது சமுதாய நலன் கருதி கூடுவதில்லை. மக்களின் இந்த மடிமைத்தனமான எண்ணம் என்னை கவரவில்லை.

``உலகத்திற்க்கே சோறு போட்ட சோழர்களுக்கு வந்த சோதனை” போன்ற மீமிஸ்களை பார்தால் நமக்கு வரவேண்டியது சிரிப்பல்ல சிந்நணை.


உங்களை எது ஊக்குவிக்கும்?

                                                உங்களை எது ஊக்குவிக்கும்?


என்னதான் தன்னம்பிக்கை மேற்கோள்கள் இருந்தாலும், தன்னம்பிக்கை பேச்சாளர்கள் இருந்தாலும், நமது உற்றார் உறவினர்கள் அனைவரும் நம்மை உற்ச்சாகப்படுத்தினாலும், தனி ஒருவன் மனிதல் எது ஒரு தாக்கைத்தை ஏற்படுத்துகிறதோ, அது தான் அவனை முன்னேறச்சொல்லும். அது சில சமயம் நல்ல அனுபவமாக கிடைக்கும், சில சமயம் கசப்பான நினைவுகளாய் அமையும். நம்மை ஒரு வெறியுடன் செயல்பட்டுத்த நம்மை புகழும் மக்களுடன் இருப்பதைக் காட்டிலும் நம்மை இகழுபவைரை நினைவில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில், புகழ்வோரால் நமக்கு அக்கணம் மனநிறைவு ஏற்பட்டு விடும், ஆனால், இகழ்வோரால் ஒவ்வொறு கணமும் ``நான் அத்தனை இழைத்தவள் அல்ல” என்று நிரூபித்து காட்ட தூண்டும்.

இந்த குடியரசு தினத்தில் புதிய காட்ச்சி

                                                இந்த குடியரசு தினத்தில் புதிய காட்ச்சி



இந்த குடியரசு தினத்தில் 27பெண்கள் கொண்ட எல்லை பாதுகாப்பு பணியாளர்கள், இந்திய வரலாற்றில் முதல் முறையாக ``சீமா பவாணி” என்ற பெயர் கொண்டு ROYAL ENFIELD என்ற இரு சக்கர வாகனத்தில் 16 வகையான களரி விளையாட்டுகளை காட்டினார்கள். அதற்க்கு வானொலி செய்தி பரப்பும்(Broadcasting minister)அமைச்சர் ஸ்மிரிட்டி ஈரானி உள்பட பல அமைச்சர்களும் எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை செய்தனர்.

ரோமனானிய வியக்கத்தக்க புகைப்படம்

                                ரோமனானிய வியக்கத்தக்க புகைப்படம்



இனையத்தில் செய்தி படிக்கும்போலும் இந்த ஓவியத்திற்க்கு பின்பு உள்ள பாசமான மகளின் கதை நெகிழ வைத்தது. அதாவது சைமன் என்ற வயதான மனிதன் ஒருமுறை சிறை அலுவலரால் உணவின்றி சாக உத்தரவிட்டிருந்தார். ஆனால், அந்த வயதான மனிதரை பார்க்க அவரது மகள் பேரூவிற்க்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. சில நாட்கள் ஆகியும் அவர் முன்பு போலவே இருப்பதை சிறை அலுவலர் கவனித்தார். பின்பு மறைமுகமாக உண்மையை அறிந்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். பேரு(PERO) தனது தந்தைக்கு தாயாக மாறி ஆகாரம் அளித்து பிழைக்கவைத்த்தை அனைத்து அரசவை அதிகாரிகளும் அறிந்து சைமனை அவரது மகளின் பாசத்திற்க்காக விடுவித்தனர்.

சனி, 30 டிசம்பர், 2017

இப்டி கூட குருந்திட்டம்(Assignment) தருவாங்களா? யார் இந்த ப்ரோபசர்?

இப்டி கூட குருந்திட்டம்(Assignment) தருவாங்களா? யார் இந்த ப்ரோபசர்?


வட இந்தியாவில் தீன்டையால் பெட்ரிரோலியம் யுனிவர்சிடி என்னும் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியர் அவரது மாணவர்கள்க்கு கொடுத்த தீபாவளி Assignment.இதோ உங்கள் பார்வைக்கு!!!!!


எவை சொல்லப்பட வேண்டும்?

எவை சொல்லப்பட வேண்டும்?
1.யாரையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது.
2.துன்பம் வருகையில் யாரிடமும் அனுதாபத்தை எதிர்ப்பார்க்கக்கூடாது.அது நம்மை பலவீனமாக்கிவிடும்.
3.துன்பம் வரும்போது மிகப் ப்பொறுமையாக விஷயங்களை கையாள வேண்டும்.
4.அனைவருக்கும் பிடித்வர்களாக இருப்பது கடினம்.
5.வாழ்க்கையில் சில நெருக்கமானவர்களை கொள்வது அவசியம்.
6.எவ்வளவு நெருங்கிய நன்பனாக இருந்தாலும் சில விஷயங்களை பகிரக்கூடாது.

7.உழைப்பால் உயர்தவர்களால் தான் உண்மையான வெற்றியை உணர முடியும்.
8.இந்த உடல் தான் நாம் வாழ்வதற்க்கான இடம்.
9.மற்றவர்களை உண்மையா நேசிப்பது மிக க்கடினம்.

10.இவ்வுலகில் பலர் முயற்ச்சி செய்கின்றனர், சிலர் விடாமுயற்ச்சி செய்கின்றன.

திங்கள், 23 அக்டோபர், 2017

நன்பனிற்க்கும் உயிர்தோழனிற்கும் என்ன வித்தியாசம் ?

நன்பனிற்க்கும் உயிர்தோழனிற்கும் என்ன வித்தியாசம் ?

நான்; இன்று தேர்வு சரியாக எழுதவில்லை. மதிப்பெண் கண்டிபாக குறைவாகதான் வரும்,மிகவும் வருத்தமாக உள்ளது!
நன்பன் ; விடு அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்.வருத்தம் வேண்டாம்!
உயிர் தோழன் ; இப்ப அதிகமா வாங்கி என்ன பன்ன போற? போட்டு விடு? வா சாப்ட போலா.பைத்தியோ!friend best friend க்கான பட முடிவு

(அவனை கவலையிலிருந்து விடுபட செய்பவன் நன்பன்! கவலையே உனக்கு இல்லை என்பவன் உயிர் தோழன்)

எ.கா2;
பாலு ; என காதல் தோல்வி அடைந்து விட்டது?
நன்பன் ; வாழ்வில் நீ இனி இதை பற்றி யோசிக்கக் கூடாது! முன்னேறி செல் யாரையும் திரும்பி பார்க்காதே!
உயிர் தோழன் ; போட நீ அவள பாக்கும்போதே தெரியு இப்புடி ஆகூனு !

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

இந்தியாவில் தடை செய்யவேண்டும் என்றால் என்னவெல்லாம் தடைசெய்வீற்கள்?

இந்தியாவில் தடை செய்யவேண்டும் என்றால் என்னவெல்லாம் தடைசெய்வீற்கள்?

1.மதுவை முற்றிமாக தடைசெய்வேன். ஏனெனல் நமது நாடு மிதமான தட்ப வெப்பம் கொண்டது,
2.அழகு சாதனப்பொருட்கள்
3.தேவையற்ற செய்திகளை பரப்பும் ஊடகங்கள்
1.நான் பத்தாம் வகுப்பு படிக்கையில் எனது வேதியல் பேரிசிரியர் மேற்கத்திய நாட்டவரால் அவர்களது நாட்டின் குளிரை தாங்க இயலாததால் அவ்வர்கள் மதுவைக்கண்டறிந்து அருந்துவார்கள் என்று.பிறகு அவை அனைத்து சூழல்களையும் தாங்கும் சக்தி படைத்த நம் நாட்டவருக்கு எதற்க்கு?
2.அழகு என்பது பெண்ணிற்க்கும் சரி ஆணிற்க்கும் சரி என்னை பொறுத்தவரை பிறர் ஒருவருக்கு கொடுகும் மரியாதையே அழகாகும். மரியாதை என்பது வருவர் மனிதத்தன்மையுடன் நடக்கும்போது பிறக்கும். மனிதனாய் பிறந்தவர் மனிதனாக நடந்துகொண்டாலே போதும் அதற்க்கு அவன் நிற அடிப்படையில் சாயம் பூச அவசியம் இல்லை.

3.போலியான செய்திகளை பரப்புவதில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. மக்கள் யார் பின்னே செல்லவேண்டும்? யாரை உண்மையாக கொண்டாட வேண்டும்? என்பது பெரும்பாலும் ஊடகங்கள் கையிலே உள்ளது.

இந்தியர்களை எந்த மாறியான செய்தி சோகப்படுத்தியுள்ளது?

இந்தியர்களை எந்த மாறியான செய்தி சோகப்படுத்தியுள்ளது?
1பிக்பாஸ் என்ற நிகழ்வில் சில பிரபலங்களின் நடவடிக்கை நம் அனைவரையுமே சோகப்படுத்தியது.
2.சில திரைப்படங்களின் வெளீடு தேதி ஒத்தி வைப்பது நமக்கு சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
ஆனால் இவர்களும் நமது நாட்டில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.
கரீம் பாய்!!!

மாணவர்களுக்கும்,சமுதாய அடிநிலை வகுப்பு குழந்தைகளுக்கும் இலவசமாக செய்தித்தாள் கொடுக்கிறார்.

பாபர் அலி!!!

மிக இளமையான பள்ளி முதல்வர்.தனது 16 வயதில் பள்ளி நடத்தி BBC என்ற நிறுவனத்தில் அங்கிகாரம் பெற்றுள்ளார்.

அடிடீ ச்சுஹான்!!!

EPLஇல் விளையாடிய முதல் இந்தியப் பெண்.



இன்று எந்த செய்தி உங்களை சிரிக்க வைத்தது?

இன்று எந்த செய்தி உங்களை சிரிக்க வைத்தது?

ஒரு மனிதர் அவரது பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அவரது அத்தை திறன்பேசியை கையாள தொடங்கிய காலம். அப்பொழுது அத்தை ஒரு காணோலியை பகிரவேண்டும் என எண்ணிணார். அதற்க்காக அந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஷார் செய்தாராம். (எனக்கு என் முகத்தில் இன்று இந்த பதிவு சிரிப்பை வரவைத்தது உங்களின் இதழ்களின் ஒரத்தில் சிறியதாக சிரிப்பு வந்தாலும் மகிழ்ச்சி)

நன்றி!!!

இன்று தாங்கள் படித்த தகவல்களில் சிறந்த தகவல் எது?

இன்று தாங்கள் படித்த தகவல்களில் சிறந்த தகவல் எது?

உசயின் போல்ட்  மொத்தம் 8தங்க பதக்கங்களை கடந்த 3 ஒலிம்பிக்ஸில் வென்றுள்ளார். இவர் 2நிமிடங்கள் மட்டுமே ஓடும்பாதையில் ஓடியுள்ளார். ஆனால், அது ஒரு வரலாற்றை பதித்துள்ளது.
உசயின் போல்ட் 115 வினாடிக்களுக்கு குறைவாக ஓடி 119 மில்லியன் பணத்தை ஈட்டியுள்ளார். ஒரு வினாடிக்கு ஒரு மில்லியனையும் விட அதி பணத்தை ஈட்டியுள்ளார்.

ஆனால் இந்த 2நிமிட ஓட்டத்திற்காக 20ஆண்டுகள் உழைத்துள்ளார்.

இன்றைய சின்ன செய்தி ;

இன்றைய சின்ன செய்தி ;
ஒரு பெண் ரோட்டில் அடிபட்டுக்கிடந்தவருக்கு உதவிக்கொண்டிருக்கையில் அவர்களிடம் இன்னொறு பெண் வந்து அம்மா சற்று என்னிடம் இதை கொடுத்தால் நான் செய்வேன் ஏனெனில், நான் ஒரு செவிலியர்.


அந்த பெண் விலகி ஒரு புறம் நின்று பார்த்துக்கொண்டே சிரி தங்களுக்கு ஏதாவது உதவி தேவைபட்டாள் என்னை அழையுங்கள் நான் ஒரு மருத்துவர் என்றார்.

எந்த மாதிரியான விஷயங்கள் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்?

எந்த மாதிரியான விஷயங்கள் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்?

பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த லாலு பிரசாத் யாதவிஇன் மகனிற்கு யுனிவர்சிட்டி ஆப் தக்ஸிலா  டாக்டரேட் பட்டம் வழங்கியிருக்கிறது.அவரது பெயர் தேஜ் பிரடாப் யாதவ்.



என் படுக்கையிலிருந்து தினமும் நான் ஏன் எழுந்திட வேண்டும்?

என் படுக்கையிலிருந்து தினமும் நான் ஏன் எழுந்திட வேண்டும்?

1.இந்த நாளின் சுவாரசியங்களைக் காண
2.காலம் பொன்னை விட விலை உயர்ந்தது அதை நமக்கு பிடித்தவாரும் சில பயனுள்ளவாரும் செலவிட.
3.பிறரிடம் அன்பினை பெறவும் கொடுக்கவும்.
4.நமக்கு வெற்றியை தேடித்தரும் படிக்கள்ளாக கூட ஒரு நாள் அமையும்.
5.இந்த உலகத்தை பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது.
6.நானும் இந்த உலகினில் ஏதாவது ஒன்றை ஒருநாள் சாதிப்பேன் அது இன்றாக கூட இருக்காலாம் என்று காட்ட.

7.உன்னையும் உன் நட்பையும், உன் வருகையையும் எதிர்ப்பார்த்து பலர் காத்திருப்பர் அவர்களின் ஆசையை நிறைவேற்ற. 

ஒரு இந்தியனாக நாம் எதற்க்காக வருத்தப்படவேண்டும்?

                          ஒரு இந்தியனாக நாம் எதற்க்காக வருத்தப்படவேண்டும்?
இன்று ஜாய்டா மான்டல்(joyita mondal) என்பவர் வெஸ்ட் பெங்காலின் முதல் திருனங்கை நீதிபதியானார்.



இந்தியாவின் முதல் திருநங்கை கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்தார். காரணம் அவர்களுடன் பணிபுரிபவர்கள் அவருக்கு சரியான ஒத்துழைப்பு தரவில்லை.

காலம் என்றாவது உங்களுக்கு அறிய ஒரு அறிவுறை கொடுத்திருக்கிறதா? எனது வாழ்வில் நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. எனினும் எனது விழியில் என்றாவது எதாவது சாதிக்க வேண்டும் என்று நான் எண்ணிக்கொண்டே தான் இருப்பேண். நான் என்னை எந்த வேலையிலாவது ஈடுபடுத்திக்கொண்டால், அதில் எனக்கு என் சோம்பல்தனம், விருப்பமின்னை, பணிச்சுமை ஏன் பல நண்பர்கள் கூட தடையாக இருந்திருக்கிறார்க்ள ஆனால், இதனைக் கண்டு நான் முதிலில் கோபம் கொண்டு நான் செய்யும் வேலையை செய்யாம்ல நிறுத்தி இருக்கிறேன். ஆனால், பலன் ஒன்றுமில்லை காலப்போக்கில் நான் இவ்வாறான மனிதர்களுக்கும் சூழ்நிலைக்கும் பழகிவிட்டேன் இதற்க்கு தீர்வு எண்ண என்று யோசிக்கையில் பொறுமை தான். நமக்கு தடையாய் இருப்பது என்னவாக இருந்தாலும், சிறிது நிதானத்துடன், அவற்றை நம் வெற்றி பாதையின் தடை என எண்ணி கடந்து செல்லவேண்டுமே ஒழிய அதனை எண்ணி நம் மனதினையும்,உடலினையும் வருத்தி நேரத்தை வீணாக்கக் கூடாது!!!!!!

காலம் என்றாவது உங்களுக்கு அறிய ஒரு அறிவுறை கொடுத்திருக்கிறதா?



எனது வாழ்வில் நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. எனினும் எனது விழியில் என்றாவது எதாவது சாதிக்க வேண்டும் என்று நான் எண்ணிக்கொண்டே தான் இருப்பேண். நான் என்னை எந்த வேலையிலாவது ஈடுபடுத்திக்கொண்டால், அதில் எனக்கு என் சோம்பல்தனம், விருப்பமின்னை, பணிச்சுமை ஏன் பல நண்பர்கள் கூட தடையாக இருந்திருக்கிறார்க்ள ஆனால், இதனைக் கண்டு நான் முதிலில் கோபம் கொண்டு நான் செய்யும் வேலையை செய்யாம்ல நிறுத்தி இருக்கிறேன். ஆனால், பலன் ஒன்றுமில்லை காலப்போக்கில் நான் இவ்வாறான மனிதர்களுக்கும் சூழ்நிலைக்கும் பழகிவிட்டேன் இதற்க்கு தீர்வு எண்ண என்று யோசிக்கையில் பொறுமை தான். நமக்கு தடையாய் இருப்பது என்னவாக இருந்தாலும், சிறிது நிதானத்துடன், அவற்றை நம் வெற்றி பாதையின் தடை என எண்ணி கடந்து செல்லவேண்டுமே ஒழிய அதனை எண்ணி நம் மனதினையும்,உடலினையும் வருத்தி நேரத்தை வீணாக்கக் கூடாது!!!!!!

சிறிய போராலிகளை வரலாறு பதிப்பதில்லை ஏன்?

சிறிய போராலிகளை வரலாறு பதிப்பதில்லை ஏன்?


BAJI ROUT பாஜி ரவுட் ஆங்கில சிப்பாய்களின் தோட்டாக்களை நெஞ்சில் வாங்கிய பிஞ்சு!!!!

பாஜி ரவுட் 5ஆக்டோபர் 1926 ஆம் ஆண்டு ஒரிசா மானிலத்தில் உள்ள தின்கனல் என்ற இடத்தில் பிறந்தவர். இவர் தந்தை ஒரு படகோட்டி,ஆனால் பாஜி சின்னதாக இருக்கும்போதே மறைந்துவிட்டார்.சிறு வயதிலேயே மக்கள் நலகுழுவின் ஆர்வலராக செயல்பட்டுக்கொண்டிருந்தார் பாஜி. ஒரு இரவில் ஆங்கிலப் படையினர் ஆற்றை கடப்பதற்க்காக பாஜியை படகுஓட்டசொல்லி கேட்டனர்.பாஜி ``எனது இந்த படகு மக்களுக்கானது, அவர்களின் எதிரியான உங்களுக்கு இதை கொடுக்க மாட்டேன்’’ என்றது அந்த பிஞ்சு குரல்.உடன் அவனது இரு நண்பர்களான லஷ்மன், ஃபாகு என்பவரும் இருந்தனர். பாஜியின் மறுமொழியை கேட்ட ஆங்கிலயர் கையில் இருந்த துப்பாக்கியால், பாஜியையும் அவரது நன்பர்களையும் சுட்டனர்.

டீனேஜ் பெண்களுக்கும் ஆண்களுக்கும் எது பொது?

டீனேஜ் பெண்களுக்கும் ஆண்களுக்கும் எது பொது?

1.உரிமைகள் பொகு.
2.சில உணர்வுகள் பொது.
3.கணிதத்தில் நாம் பூஜியம் என்ற எண்ணம் பொது.
4.ஒரு பிரச்சணைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று எண்ணுவது.
5.முன்கோபம்
6.துணிவு
7.உடல் சக்தி

இப்படி ஒவ்வொன்று ஒவ்வொறு வயதினருக்கும் பொதுவாக இருக்கும். ஆனால், நாம் நமது உணர்வுகளையும், எண்ணங்களையும் எவ்வாறு கையாலுகிறோம் என்பதிலேயே இருக்கிறது. கண்கள் கண்டு வியக்கும் பொருள்களின் பின் சென்றவர் அனைவருமே வாழ்வில் வெற்றி பெற வில்லை! அவர்கள் எல்லாம் தமக்கு என்று ஒரு கொள்கைகளையும் மனப்போக்கையும் வைத்துக்கொண்டு சாதணை எண்ணங்களுடன் வளர்ந்தவர்க்ள.