வியாழன், 29 ஆகஸ்ட், 2019

தனிமை தந்த பதில்

தினமும் நாள் தவறமால் என்னை மட்டும் சந்திக்க வருகிறாயே ஏன்?
தினமும் என்னிடம் மட்டும் சகித்துகொள்ளாமல் இருக்கிறாயே ஏன்?
நான் வேண்டாம் என்று எத்தனையோ
நபர்கள் சென்றுவிட்டன.....
ஆனாலும் என்னுடனே வருகிறாயே ஏன்?
நான் வேண்டியவரே வெறுத்து சென்றுவிட்டனர் நீ மட்டும் வருகிறாயே ஏன் ??
இப்படியெல்லாம் என் தனிமையிடம் கேட்டேன்!!!!
அதுவோ இப்படி பதில் அளித்துவிட்டது!!!!
உன்னிடம் உன்னை தேடி நான் வரவில்லை .....
என்னிடம் புறக்கணிக்கப்பட்டு நீ வந்துவிட்டாய்.......
உன்னை வழி அனுப்ப மனமில்லாமல்
உன் வழியே வருகிறேன் நான் இன்று......

1 கருத்து: