வியாழன், 7 மார்ச், 2019

மகளிர் தினம்👰👰👰👰


                     
நாளை நாடு முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட காத்து கொண்டு இருக்கிறோம். அதற்கு முன்பு  இதை எதற்காக கொண்டாடுகிறோம். எப்போது தொடங்கப்பட்டது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
18ஆம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவில் பெண்களுக்கு சம உரிமை கிடைக்கவில்லை. பின்பு 1857ஆம் ஆண்டு தொழிற்சாலைகள், நிலக்கரி சுரங்ககள் ஆகியவற்றில் பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது ஆனால் ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இளைக்கப்பட்டது. இதனை எதிர்த்து 1857ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி இந்த போராட்டத்தை துவக்கினார். அப்போது இருந்த அரசாங்கம் இதனை எதிர்த்தது. பெண்களும் பல போராட்டங்களை நடத்தினர்.1910 ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டில் பெண்களுக்கான மாநாடு நடந்தது. அதில் பங்குபெற்ற ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர்  கிளாரே செர்கினே மார்ச் 8 ஆம் தேதியை மகளிர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று போராடினார். பின்பு 1920 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில்  நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அலெக்ஸ்சாண்டிரா ஆண்டுதோறும் மார்ச் 8 உலக மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று அறிவித்தார்.

2 கருத்துகள்: