செவ்வாய், 17 மார்ச், 2020

சனி, 14 மார்ச், 2020

இன்றைய தினம்

இன்றைய தினம்
        ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்.
        கார்ல் மார்க்ஸ் நினைவு தினம்.
        கோட்பாட்டு இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் நினைவு தினம்.
தமிழின் பதினாறு சிறப்புப் பெயர்கள் 
1.தொன்மை
2.முன்மை
3.எண்மை
4.ஒண்மை
5.இளமை
6.வளமை
7.தாய்மை
8.தூய்மை
9.செம்மை
10.மும்மை
11.இனிமை
12.தனிமை
13.நுண்மை
14.திருமை
15.இயன்மை
16.வியன்மை
சாமுவேல் பட்லர்
        வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக் கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
மெக்காலே
       உணர்ந்து படிக்கும் ஒரு பக்கம், விரைந்து படிக்கும் ஒரு நூலை விட மேலானது.
இன்றைய வெளிச்சம்
        அளவற்ற உழைப்பே மேன்மை தரும்.
        குழந்தைகளை குறை சொல்வோரை விட, அவர்களுக்கு வழிகாட்டுவோரே அதிகம் தேவை.

வியாழன், 12 மார்ச், 2020

இன்றைய தினம்

இன்றைய  தினம் 
       ஏர்ல் நைட்டிங்கேல் பிறந்த தினம்
       உலக சிறுநீரக தினம்
திறனாய்வு வகைகள்
1.விதிமுறைத் திறனாய்வு
2.முடிபுமுறைத் திறனாய்வு
3.ஒப்பீட்டு முறைத் திறனாய்வு
4.வரலாற்று முறைத் திறனாய்வு
5.விளக்கமுறைத் திறனாய்வு
6.முருகியல் முறைத் திறனாய்வு
7.மதிப்பீட்டு முறைத் திறனாய்வு
8.வாழ்க்கை வரலாற்று வழித் திறனாய்வு
9.உளவியல் முறைத் திறனாய்வு
10.நலம் பாராட்டும் திறனாய்வு
ஸ்டாலின் 
       ஆற்றல்களில் மிஞ்சிய ஆற்றல் மனிதனின் மன ஆற்றல் தான்.
வில்லியம் பென்
        வேதனையின்றி வெகுமதியில்லை, முள் இன்றி அரியனை இல்லை.
இன்றைய வெளிச்சம் 
        அடிமையைப் போல் உழைப்பவன் அரசனைப் போல உண்பான்.
        உற்சாகமான உழைப்பு இல்லாமல் உயர் வெற்றி எதையும் சாதிக்க முடியாது.

வெள்ளி, 6 மார்ச், 2020

தன்னாட்சியை இழந்த நமக்கு
தமிழர்  என்ற பெயர் எதற்கு ?

                   தமிழர் தமது குல தொழில்களை பரம்பரை ,பரம்பரையாக செய்து கொண்டு அவரவர் பழக்க ,வழக்கங்களை பின்வரும் சந்ததியருக்கு கற்பித்து வாழ்ந்து வந்தனர் .
                   எவரும் ஒருவருக்கொருவர் சாலைப்பிள்ளை என்று தன்னாட்சியாக நின்று உழைத்தனர் .அவரவர் கடமைகளை கருத்தோடு செய்வதுமட்டுமின்றி, திறமைகளை வளர்த்துக்கொள்வதிலும் ஆர்வம் கொண்டனர்.  அனால்,          இன்றோ விவசாயின் மகன்! பர்கர்,பீசாவை கேட்கிறான்!
                   சோற்றையும், சேற்றையும் வெறுக்கிறான்.பட்டினம் தேடி பட்டினி கிடக்கின்ற இந்நிலைக்கு நாம் தலைப்படவில்லை நாமே துள்ளிக் குதித்துவிட்டோம்.
                   தமிழர் வலிமையிலும்,திறமையிலும் பிறரை பார்த்து போட்ட காலம் போய் வாகனங்களையும்,வசதிகளையும் பார்த்தும் பேராசைக் கொள்கின்றனர்.
                  நெல்லின் இடுப்பொடியாமல் நுட்பமாக சேற்றில் ஊன்றிய காலம் போய் இன்று தொழிலநுட்பம் என்ற பெயரில் நம் இடுப்பெலும்பு ஊனற்று போக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
                  இயற்கையினை பாதுகாக்க ஊரோடு இணைந்து செய்யப்பட்ட நாம், இன்றளவில் இல்லறத்தையே விட்டு விலகி இல்லம் சேரா அனாதைகளாய் வாழ்கிறோம்.
                  ஏழைகளின் முகத்தில் இறைவனை காண சொன்ன காலங்கள் மாறி இப்போதெல்லாம் ,இறைவனே ஏழைகளை தன்னை தரிசிக்க கட்டணமின்றி அனுமதிப்பதில்லை.
                 ஐந்து முதல் எட்டு நபர்கள் வரை பயணிக்கும் மாட்டுவண்டி ஏற்படுத்தாத காற்று மாசுபாட்டை இன்று தனி ஒருவரின் இருசக்கர வாகனம் ஏற்படுத்துகிறது.
                 தானாய் விளைந்த புல்லிற்கு பதிலாய் பால்,தயிர்,நெய் மற்றும் உரமாக சாணம் என எண்ணற்ற இயற்கை பொருட்களை தந்த மாடுகளை விட்டுவிட்டு.
                காற்றை மாசுபடுத்தும் இயந்திர வாகனத்திற்கு செலவு செய்து வருகிறோம் .
அழிந்து வருவது மாடுகளின் இனம் அல்ல! 
மனுடனின் மானம்!
                எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உதவிய கரங்கள், இன்று யாசிக்கின்ற நிலைமைதான் ஏனோ?
சுய தொழில் செய்வதை விட்டு! 
சுக வாழ்வு கேட்ட தமிழன் !
                 இன்றைக்கு தன சுயமரியாதையை விட்டு சுயநலத்திற்காக வாழ்ந்து வருகின்றார்.
                  சுக துக்கங்களை விட்டு சுற்றத்தோடு இன்பமாய் வாழ்ந்த தமிழன். இன்று சுதந்திரம் இழந்து தனது குடும்பத்துடனும் எவ்வித இணைப்பும் இன்றி பிறரின் கட்டளைகளுக்கு செவிசாய்த்து தன்னை தானே தாழ்த்தி வருகிறான்.
                 ஒற்றை பிடி சோற்றில் பங்கு போட்ட தமிழர்,ஒன்றாக கூடிய காட்சியை தான் நம் இன்று காணாமல் விடுகிறோம்.
                 தமிழன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த போதிலும் கூட தன்னாட்சியாக வாழ்ந்தான்। தன் வீட்டிற்கு தானே ராஜாவாக இருந்தான்.தன் தொழிலுக்கும் முதல்வனாய்,தனக்கு வேண்டிய பொருளை தானே தேடி, தன்னம்பிக்கையை கைவிடாதும் இருந்தான்.
                  முயற்சிகளுக்கு இடைவிடாது செயல்பட்டான் முயன்றதில் கிடைத்ததை மூலதனமாய் கொண்டான். முயற்சி பல மேலும் செய்து முதன்மை நிலையை தானாய் வென்று இருந்தான்.
தன்னாட்சியாய்! தனித்துவமாய் !
தனிமனிதனாய்! தமிழனாய்!
இன்றோ தன்னாட்சியை இழந்து தமது பெயரில் மட்டும் தமிழர் என்பதனை வைத்து வருகின்றனர்। நம் கொள்கையை பின்பற்றா நமக்கு தமிழன் என்ற பெயர் எதற்கு ?

இமயமலை

இயற்கையான அழகை
செயற்கையாலே பெறலாம்..
தேர்ச்சி என்னும் பலத்தை
பயிற்சியாலோ பெறலாம்
முயற்சி என்ற கடலே
இமயமலை எனலாம்.

3.1.2020 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளியான கவிதை.