வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

அப்துல்கலாம்

முதல் வெற்றிக்குப் பின் ஓய்வெடுக்காதீர்கள்,
ஏனென்றால் இரண்டாவதில் நீங்கள் தோல்வியடைந்தால், உங்களின் முதல் வெற்றி வெறும் அதிர்ஷ்டம் என்று பேச பல உதடுகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

தகுதி

உங்களுக்கு  ஒரு தகுதி  வேண்டும் என்றால் ,
அதை  நீங்கள்  பெற்று விட்டதைப் போல் செயல்படுங்கள்.  
அதுவாகவே நீங்கள்  மாறிவிடுவீர்கள்.
                                                  _ வில்லியம் ஜேம்ஸ்.

இயற்கையை காப்போம்

இயற்கை அளித்த மழைத்துளியை
மனிதன் காப்பதில்லை
கடவுள் படைத்த இயற்கையை
மனிதன் காப்பதில்லை
இயற்கை அளித்த நீரும் மணலும் காற்றுகூட
மனிதனின் பணத்தேவையாக மாறி விட்டது
தற்போது மனிதனிடம் ஒன்றும் இல்லை
ஆனால் அழிப்பதில் முன்நிற்கின்றனர்....
இயற்கையை காப்போம்...

6.1.2020 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளியான கவிதை.

வியாழன், 27 பிப்ரவரி, 2020

தத்துவம்

இன்றே செய்ய வேண்டியதை நாளை வரை தள்ளிப் போடாதே.
சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருக்கும் தேனீக்கு தூங்கக் கூட நேரமில்லை.

புதன், 26 பிப்ரவரி, 2020

பொய் மானிடா..... நீ எம் மண்ணிலா..... 

                தமிழ் தோன்றி பல நூறு ஆண்டுகள் ஆகிறது இன்றும் தனிமொழி என்ற சிறப்பினை இழக்காமல் இருக்கிறது.
                ஆனால் , தமிழர்களாகிய நாம் என்ன செய்கிறோம் . நம் தாய்மொழி கல்வியை கற்க விருப்பமில்லாமல் , பிறமொழி கல்வியை கற்றுவருகிறோம்.
                இதில் தான் நம் அடிமைத்தனம் வெளிப்படுகிறது . ஆங்கிலேயர் ஆண்ட காலம் கடந்து சுதந்திர நாடக மாறியது என்று நாம் குறிக்கொண்டிருக்கிறோம் .
                ஆனால் , இன்றும் அந்நிய மொழிக்கு நாம் அடிமைகளாகவே இருக்கிறோம் . அதனையே நம் சந்ததிக்கும் கொடுக்கிறோம் .
                உண்மையிலேயே நமக்கு நம் மண்மீது  பற்று இருந்திருந்தால் , நாம் நம் மொழியை  தான் முதன்மைப்படுத்தி  தாய்மொழி கல்வியை  உயர்த்தியிருக்க வேண்டும். உலகளவு பரவிய மொழியாய் மாற்றியிருக்க வேண்டும். 
                எம்மொழியிலும் இல்லா இலக்கணமும் , சொற்களும் உடையது ,  நம்மொழி .
                எளிதில் கற்க  , உணர வளம் கொண்ட நம் மொழி சிறப்புப்பெற செய்பவனே உண்மையான பற்றுடையோன் செயல் .
               நாம் அனைவருமே இன்றளவில் பொய் மானிடர்களாய் தான் நம் மண்ணில் இருக்கின்றோம் !
               தன் தாய்நாட்டிற்கும் , தாய்மொழிக்கும் வளர்ச்சியை  கொடுக்க செயல்பட்டு உழைப்பவனே என்றும் உண்மையான மானிடன் .
               நாம் எவ்வளவு தான் அறிவியல்  ரீதியாகவும் , பொருளாதாரரீதியாகவும்  உயர்ந்தாலும் நம் நாட்டையும் , மொழியையும் உயர்த்துவதில்லை .
               நீ விண்ணில்  நின்று பேசினாலும் ,விவாதமாய் பேசினாலும் உன் தாய் மொழிக்கு தலைவணங்கு .
       உன் மொழியில் பாடி நில் ! உலகமெங்கும் பரவ  செய் !
               உலகமெங்கும் தமிழர்கள் பல்வேறு இடங்களில் சென்று சாதனை புரிந்தால் அது சரித்திரமில்லை!
தமிழ் மொழியை ஆங்காங்கே பரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் . அதுவே , உண்மையான சரித்திரம் !
               அவர்களை அடிமையாக்கவிட்டாலும் , நம் மொழியின் அருமையையும் , ஆழமும் அறிய செய்ய வேண்டும் .
               அடிமை தன்மையின் வலி உணர்ந்த  தமிழனுக்கு மற்றவர்களை அடிமையாகும் எண்ணம் என்றும் இருக்காது. இருப்பினும் ,
தன் மொழியின் சிறப்பை இழக்க  தமிழனின் மணம் ஏற்காது !
               இவாறான ,தமிழின் பெருமையை உணராது பிறமொழி மோகம் கொண்டு திரிபவனே பொய் மானிடன் !
பொய் மானிடன் எம் மண்ணில் மாண்டாலும் பயனடையான் !