திங்கள், 20 ஜனவரி, 2020

தமிழ் மீது பற்று

பிறக்கையிலே நான் பிடி கொண்டேன்
தாய் தழுவையிலே நான் விழி கொண்டேன்
தந்தை அழைக்கையிலே நான் செவி கொண்டேன்
தாமரை மலர்கையிலே நான் மதி கண்டேன்
தமிழே உன்னைப் படிக்கையிலே
உன் மீது நான் பதி கொண்டேன் 

திங்கள், 13 ஜனவரி, 2020

இறப்பில் தான் பிறப்பு

இன்பமான வீட்டில்,
         இனிக்கும் சொந்தங்கள்,
இனிமையான நாட்டில்,
         இருக்கும் பந்தங்கள்,
இறப்பின் முடிவு,
         இனியொரு பிறவியின் தொடக்கம்,
இருளின் தேடல்தான்
           வெளிச்சம் என்ற வெற்றி !
இவ்வையம்  மூழ்கட்டும்,
            மகிழ்ச்சியில் நிறையட்டும்,
நெகிழிச்சியினம் தொடரட்டும் .........

வெள்ளி, 10 ஜனவரி, 2020

கண்களில் தோன்றிய முகம்

பூமியில் சூரியன் உதிக்க மறந்தாலும்
பூக்கள் எல்லாம் மலர்வதற்கு மறந்தாலும்
பூமிக்கு மழை வராமல் இருந்தாலும்
கடல்அலை என்னைத் தீண்டாமல் போனாலும்
என் கண்களில் தோன்றிய உன் முகம்
என்றும் மறையாது

என்னுள் வந்த மாற்றமோ

நீ என்னைப் பார்த்தபோது
உன் விழி அம்பு எந்தன்
இதயத்தைத் துளைத்தது

கண்களில் கண்ணீராய் வழிந்தது

நான் பார்த்த இடம் எங்கும்
இருள் சூழ்ந்து இருந்தது
உன் பார்வை பட்டதும்
ஒளியாக அனைத்து இடங்களும் மின்னின

நாட்கள் குறைந்தாலும்
உன்னைப் பார்த்த பார்வை குறையவில்லை
இது எல்லாம் என்னுள் வந்த மாற்றமோ

வெள்ளி, 3 ஜனவரி, 2020

கற்பின் வகைகள்

1.தலைக்கற்பு
2. இடைக்கற்பு
3.கடைக்கற்பு

நற்றிணை குறிக்கும் மன்னர்கள்

அத்தியமானஞ்சி
அழிசி 
ஆய் அண்டிரன் 
உதியன் 
ஓரி  
காரி  
குட்டுவன் 
சேந்தன் 
நன்னன் 
பாண்டியன்நெடுன்செழியன்  

நட்பு

நாளைய வெற்றியை நோக்கி
செயல்படும் நீ
இன்றைய பிரிவை நினைத்து
கலங்காதே என் தோழி