சனி, 5 அக்டோபர், 2019

அன்பு


             

இந்த உலகில் இலவசமாகக் கிடைக்கும் விஷயங்களில் ஒன்று அன்பு. நமக்குச் சிலரைப் பார்த்தவுடன் பிடித்துவிடும். அவர்கள் மீது அளவு கடந்த அன்பு உருவாகும். ஆனால் அந்த அன்பு நமக்கு மீண்டும் கிடைக்காது என்று தெரிந்தும், அவர்கள் மீது செலுத்தும் அன்பைத் தடுக்கமுடியாது. அவர்கள் மீது நாம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்வோம் ஆனால் அவர்களுக்கு நாம் ஒரு முக்கியமான நபராக இருக்கமாட்டோம்.அதனால் யாரிடமும் அன்புக்காகப் பிச்சை எடுக்காதே. நீ தனித்து இருந்தாலும் தனித்துவமாக இருக்க செய்ய வேண்டியவற்றைச் செய். இருள் நிறைந்த பாதையில் தோன்றும் ஓளிபோல உன் வாழ்க்கையில் உனக்காக ஒருவா் உன்னிடம் மட்டுமே அன்பு செலுத்தக் காத்துக்கொண்டு இருப்பார்.

வெள்ளி, 4 அக்டோபர், 2019

கருமை நிறக் கண்ணா

கருமேகம்தான் மழையை உண்டாக்கும்

கரும்புதான் சுவையை உண்டாக்கும்

கரங்கள்தான் உழைப்பை உண்டாக்கும்

கரும்பலகைதான் கல்வியை உண்டாக்கும்

கருமுடி தான் அழகை உண்டாக்கும்

கருநிறம் தான் ஈர்ப்பை  உண்டாக்கும்

கருவிழி தான் காட்சியை உண்டாக்கும்

கற்பு தான் பெண்மையை உண்டாக்கும்

இவையனைத்தும்
கருக்கொண்ட இடம் எங்கோ
அறியவில்லை

இடம் கொண்டது
உன்னில் தான் என் கண்ணா 

வியாழன், 3 அக்டோபர், 2019

எவன்

ஆளக் கற்றவன் மன்னன்

அடக்கக் கற்றவன் தலைவன்

ஆளாக்கியவன் தகப்பன்

அடைகாத்தவன் தோழன்

அருளியவன் சிவன்

இறுதியில் நம்மை அழைப்பவன் எமன் 

செவ்வாய், 1 அக்டோபர், 2019

பூ மகளே

பூமியின் வெப்பத்தினால்
பனிமலை உருகவில்லை ஏனோ

பூமகளின் வெட்கத்தினால்
படைத் தலைவனும் மிரளுகிறான்

உணர்வுகள் உள்ளத்தைத்
தெளிவடையச் செய்கின்றன

உன் கண்களோ
வீரத்தை உதிரியாய்ச் சரிக்கின்றன  

சங்க இலக்கியங்களில்அரிசிக்கு எத்தனை பெயர்கள் தெரியுமா?

அடிசில்
அமலை
அமிந்து
அயினி
அவி
அடுப்பு
உண்ணா
உண்
கூழ்
சதி
சாதம்
சொண்றி
சோ
துப்பு
தோரி
பருக்கை
பாத்து
புகர்வு
புழுங்கல்
புன்னகை
பொம்மல்
மடை
மிதவை
முரல்
வல்சி