செவ்வாய், 23 ஜூலை, 2019

நகைச்சுவை கவிதை

         நகைச்சுவை கவிதை

சிறப்பாக இருந்த என்னை...
    செருப்பாக மாற்றினாய் ....
தினமும் உன்னிடம்...
      மாட்டிக் கொண்டு         
           தேய்கிறேன்....!!!!!!

  😊☺😊☺😊☺😊☺😊☺😊☺

கள்ளி செடியின் கதறல்

            கள்ளி செடியின் கதறல்

கள்ளிச் செடி ஓரம்
சிறு சிறு கல்லறையில்
கண்ணீரை காணும் போதெல்லாம்
கண்ணீர் வடிக்கும் கள்ளிச்செடி....

சிறுச் செடியாக இருந்த போதே
கிள்ளி எறிந்திருந்தால்
என் அருகில்
இத்தனை பாடைகள்            இருந்திருக்காது....!!!!!!!

பட்டாடையில் படுக்க வேண்டிய குழந்தைகளுக்கு....
ஏன் ...பால் கொடுத்து பாடையில்
படுக்க வைத்தனர்....!!!

கொஞ்சி விளையாடும் குழந்தைகளை..
பூமாலைச் சூடி...
புதைக் குழியில் படுக்க வைத்து
பாமாலைப் பாடி ...
பொன்னுஞ்சல் ஆடி...
புதைத்து விட்டனர்...!!!

பிறந்ததைத் தவிர வேறு யாதும்
தவறு செய்யாத பிஞ்சு
உயிரை  வேரோடு
அழிப்பது
ஏணோ..!!!!

வியாழன், 18 ஜூலை, 2019

வாழ்க்கை பாதை

               வாழ்க்கை                                           

   ஓடும் நீரோடைபோல்                          
       ஒடிக்கொண்டே ....இரு
   உனக்காக பாதை உருவாகும்...!!!
       ஆனால் நீரைப்போல்
          தெளிவாய் ஓடு....!!!!

ஞாயிறு, 14 ஜூலை, 2019

தளராத இதயம்......!!!!

    தளராத இதயம்
        உள்ளவனுக்கு
            இவ்வுலகில்
                முடியாதது
                   என்று
                      எதுவும்
                          இல்லை......!!!!

                   💐💐👍👍👍💐💐