ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

கடந்து செல்ல வேண்டும்

காற்றை போல் அனைத்தையும் நொடியில் கடந்து செல்ல முயல்கிறேன் அது இன்பமோ துன்பமோ ஆனால் முடியவில்லை

வியாழன், 14 பிப்ரவரி, 2019

அன்புள்ள அப்பா🏃🏃🏃🏃

 
         



நான் உன் மகளாய் பிறந்தது நான் பெற்ற பாக்கியம் என்று எண்ணினேன்.
நீயோ உன் தாயிற்குச் சமமாய் என்னை எண்ணினாய்,
என்னை தாலாட்டி,வழிநடத்தி,என்னை சீர்தூக்கி வாழவைத்தாய்.
நான் தவறு செய்யும்போது என்னை கண்டித்தாய்,நான் மனம் வருந்தினேன் ,
ஆனால் இன்றோ நான் பிறரால் மனம் வாடாமல் தலைநிமிர்ந்து நிற்கிறேன்.
எல்லாம் உன்னாலே !
நான் பிறந்த முதல் நாளில் இருந்து 
நான் நேசித்த ஒரே ஆண் நீ மட்டும் தான்,
நான் உனக்கு மகளாய் பிறந்தது நீ செய்த புண்ணியம் என்று கருதினாய்,
நான் உன் மனம் நோகடித்து பாவம் புரிவேனோ?
மகளாய் பிறந்த ஒவ்வொரு பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்.✍️✍️✍️

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

சிறு புறாக்கள்🕊️🕊️🕊️



       

    நம் வீட்டில் பாசமாக வளர்க்கும் புறாக்கள் வெளியே இரை தேடி செல்லும் ஆனால் மீண்டும் வரும் போது சில புறாக்கள் இருக்காதம்.  வழியில் கழுகுகள் அதை பிடித்து தின்று தன் பசிக்கு உணவாக்கி கொள்ளும். அது போல தான் இன்று மனிதன் என்னும் முகமூடி அணிந்து கொண்டு இருக்கும் பல இரக்கம் இல்லாத கழுகுகள், குழந்தைகளாகிய சிறு புறாக்களின் வாழ்க்கையையும் அவர்களின் கணவுகளையும் சிதைத்து அவர்களின் பசிக்கு உணவாக்குகின்றனர்.இந்நிலை மாற சட்டங்கள் கடுமையாக்க பட வேண்டும்.

சனி, 2 பிப்ரவரி, 2019

My college

Place of Unity
Place of Humour
Place of Estacy
Place of Knowledge
Place of Interest
Place of Honour
Place of Humanity &
The place...
    Where I identified the real me.

என் விடியல் .🌅🌅🌅




  என்  வீட்டை சுற்றி பூங்காவாக மாற்றிய என் அம்மாவின் வீட்டு தோட்டத்தில் காலை வணக்கம் சொல்லும் குருவிகளின் ஆரவாரம் இல்லாத இனிமையான ஓசையில் என் விடியல் தொடங்க,வீட்டு அருகில் உள்ள புளிய மரத்தில் உள்ள புளியை உலுக்கி பறிக்கும் பாட்டிகளின் பேச்சு சத்தம்.காலையில் கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ள மலர்கள் அதன் மேல் உள்ள பனி துளிகள்.என் அம்மா தூவிய அரிசியை தின்ன காலையில் கூடும் மயில் கூட்டம். அதில் வெறும் பெண் மயில்கள், ஆண் மயில் வருமா என்று எதிர்பார்க்கும் என் கண்கள். நெல்லுக்கு போகும் நீர் புல்லுக்கும் செல்வது போல மயில்கள் திண்ணு மீதம் உள்ள  அரிசியை  திங்கும் மைனாக்களும், கொவ்தாரிகளும் அதனை துரத்தி விளையாடும் நாய் குட்டிகள்.இரவு என் வீட்டில் உள்ள பாலை குடித்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் காலையில் அமர்ந்து இருக்கும் என் பக்கத்து வீட்டு பூனை குட்டி.  இதை அனைத்தையும் ரசித்து நின்று போது,  நந்து கல்லூரிக்கு நேரமாகிறது கிளம்பு என்றது என் தாயின் குரல். கிராமத்து வாழ்க்கை மட்டும் இன்பம் அளிக்காது கிராமத்தை போல் நம் நகரத்து வீட்டை மாற்றினாலும் இன்பம் கிடைக்கும்.

ஒரு வாழ்க்கை


       

இந்த உலகத்தில் நல்லவர் கெட்டவர் என்று எவரும் கிடையாது. ஒரு நாள் என்றால் இரவு பகல் இருப்பது போல, ஒரு மனிதற்குள்ளும் நல்லதும் இருக்கும் கேட்டதும் இருக்கும்.ஒருவனின் சூழ்நிலை தான் ஒருவனை மாற்றுகிறது. மேலும் நீ ஒருவருக்கு ஆதரவாக பேசினால் நல்லவர் ஆனால் ஒருவர் செய்த தவறை சுட்டிக்காட்டி அவரை எதிர்த்து பேசினால் நீ கெட்டவர். அதனால் இந்த உலகத்தின் பேச்சுகளை கேட்காமல் நாம் வாழும் இந்த ஒரு நிரந்தரம் இல்லாத வாழ்க்கையை நம் மனதிற்கு பிடித்த படி , உண்மையாகவும் நேர்மையாக வாழ்வோம்.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

காலம் மாறிவிட்டது

                   காலம் மாறிவிட்டது
       35வயது மகன் 77 வயதுடைய தன் தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காலம் மாறி........
      77 வயதுடைய தந்தை தன் 35 வயது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காலமாக மாறி.........
    பணம் வைத்து இருப்பவகளை கண்டு பொறாமை கொண்ட காலம் மாறி.....
    ஆரோக்கியமானவர்களை கண்டு பொறாமை கொள்ளும் காலம் இனி வரும்.....!!!!
                                                   திவ்யாதுரை