சனி, 2 பிப்ரவரி, 2019

My college

Place of Unity
Place of Humour
Place of Estacy
Place of Knowledge
Place of Interest
Place of Honour
Place of Humanity &
The place...
    Where I identified the real me.

என் விடியல் .🌅🌅🌅




  என்  வீட்டை சுற்றி பூங்காவாக மாற்றிய என் அம்மாவின் வீட்டு தோட்டத்தில் காலை வணக்கம் சொல்லும் குருவிகளின் ஆரவாரம் இல்லாத இனிமையான ஓசையில் என் விடியல் தொடங்க,வீட்டு அருகில் உள்ள புளிய மரத்தில் உள்ள புளியை உலுக்கி பறிக்கும் பாட்டிகளின் பேச்சு சத்தம்.காலையில் கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ள மலர்கள் அதன் மேல் உள்ள பனி துளிகள்.என் அம்மா தூவிய அரிசியை தின்ன காலையில் கூடும் மயில் கூட்டம். அதில் வெறும் பெண் மயில்கள், ஆண் மயில் வருமா என்று எதிர்பார்க்கும் என் கண்கள். நெல்லுக்கு போகும் நீர் புல்லுக்கும் செல்வது போல மயில்கள் திண்ணு மீதம் உள்ள  அரிசியை  திங்கும் மைனாக்களும், கொவ்தாரிகளும் அதனை துரத்தி விளையாடும் நாய் குட்டிகள்.இரவு என் வீட்டில் உள்ள பாலை குடித்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் காலையில் அமர்ந்து இருக்கும் என் பக்கத்து வீட்டு பூனை குட்டி.  இதை அனைத்தையும் ரசித்து நின்று போது,  நந்து கல்லூரிக்கு நேரமாகிறது கிளம்பு என்றது என் தாயின் குரல். கிராமத்து வாழ்க்கை மட்டும் இன்பம் அளிக்காது கிராமத்தை போல் நம் நகரத்து வீட்டை மாற்றினாலும் இன்பம் கிடைக்கும்.

ஒரு வாழ்க்கை


       

இந்த உலகத்தில் நல்லவர் கெட்டவர் என்று எவரும் கிடையாது. ஒரு நாள் என்றால் இரவு பகல் இருப்பது போல, ஒரு மனிதற்குள்ளும் நல்லதும் இருக்கும் கேட்டதும் இருக்கும்.ஒருவனின் சூழ்நிலை தான் ஒருவனை மாற்றுகிறது. மேலும் நீ ஒருவருக்கு ஆதரவாக பேசினால் நல்லவர் ஆனால் ஒருவர் செய்த தவறை சுட்டிக்காட்டி அவரை எதிர்த்து பேசினால் நீ கெட்டவர். அதனால் இந்த உலகத்தின் பேச்சுகளை கேட்காமல் நாம் வாழும் இந்த ஒரு நிரந்தரம் இல்லாத வாழ்க்கையை நம் மனதிற்கு பிடித்த படி , உண்மையாகவும் நேர்மையாக வாழ்வோம்.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

காலம் மாறிவிட்டது

                   காலம் மாறிவிட்டது
       35வயது மகன் 77 வயதுடைய தன் தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காலம் மாறி........
      77 வயதுடைய தந்தை தன் 35 வயது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காலமாக மாறி.........
    பணம் வைத்து இருப்பவகளை கண்டு பொறாமை கொண்ட காலம் மாறி.....
    ஆரோக்கியமானவர்களை கண்டு பொறாமை கொள்ளும் காலம் இனி வரும்.....!!!!
                                                   திவ்யாதுரை

சிந்தனை துளி

                            சிந்தனை துளி
               வெற்றி என்பது இறுதியும்                      கிடையாது....!!
              தோல்வி என்பது உறுதியும்                கிடையாது...!!
             போராடுபவனுக்கே வெற்றியும் தோல்வியும்....!!!
                                             திவ்யாதுரை