புதன், 12 செப்டம்பர், 2018

சுதந்திரத்தை போற்றுவோம்





Image result for independence



        நம்மில் பலர் போராடி பெற்ற சுதந்திரத்தை பொறுப்பின்மை காரணமாக உதாசீனப்படுத்திகின்றனர் . இந்த சுதந்திரம் பெற எத்துணை பெறோர்கள் தன் பிள்ளைகளையும் , எத்துணை  மனைவிகள் தன்  கணவன்மார்களையும், எத்துணை குழந்தைகள் தன் பெற்றோர்களை இழந்தனர்.
     ஆனால் நம்மில் பலர் சுதந்திரம் என்றால் என்ன என்பது அறியாமல்  பல படித்த  பள்ளி மற்றும்  கல்லூரி மாணவ மாணவிகள் வாழ்க்கையை கேளிக்கை  விருந்துகளிலும், தவறான செயல்களிலும் ஈடுபட்டு தன் அரிதினும் அரிதான வாழ்க்கையை அளித்து கொண்டு இருக்கின்றனர் . இந்த நிலை மாற வேண்டும் . இதை மற்ற நம்மால் மட்டும் தான்  முடியும். தன்  சொந்த நலத்தை தாண்டி தான்  பிறந்த நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம்  தோன்ற வேண்டும்.
      அப்துல் காலம் ஐயா  கூறியது 2020 இல் இந்தியா வல்லரசு ஆகா வேண்டும் என்றால் நம்மால் இயன்ற சிறு சிறு தொண்டை நாட்டிற்காக செய்ய வேண்டும்.  சிறு துளி பெருவெள்ளம் என்பதுக்கேற்ப   சிறு சிறு மாற்றமே நம் நாட்டின் முன்நேற்றத்திற்கு   காரணமாக இருக்கும்.  ஆனால் சிலரோ சிறு தவறு தானே என்று செய்யும் ஒவ்வொரு  செயலும் பெரிய தவறு செய்ய ஒரு சிறு பொறியாக மாறி  விடும்.    

ksrcasw Teen Talk Oct ' 2018








K.S.R.COLLEGE OF ARTS AND SCIENCE FOR WOMEN                                          TIRUCHENGODE - 637 215     
                                                  
KSRCASW TEEN TALK – 2018 REGISTRATION FORM                                                                                                                                                                    Event Date:            12.10.2018

Prize worth
Rs. 1 Lakh &
Best School Award




Name of the School


Address


Name of the Faculty
(Accompanying the students)
Mr./Ms.


Mobile Number



Students Details (Maximum 10 students per school & Female Candidates only)
S.No.
Student Name
Group/Std.
Mode of Speech
(Tamil / English)
Contact Number

1




2




3




4




5




6




7




8




9




10





                                                                      Signature of the Principal with Seal

No Registration Fee | No Spot Registration | Download the registration form from website | Email or Courier the registration
form | Refreshment and Lunch will be provided to the Participants | Prelims - 6 mins Speech | Finale – 8 mins Speech
Dr.R.Gunaselan – 9894829151 (Tamil) | Mrs.J.Mary Mimicklin Rexella - 8526738364 (English)
www.ksrwomenarts.edu.in | ksrcaswteentalk@gmail.com



K.S.R. COLLEGE OF ARTS AND SCIENCE FOR WOMEN
TIRUCHENGODE – 637 215
Teen Talk –OCT ‘ 2018
Rules and Regulations

Ø  Reporting Time : 9.30 am
Ø  Prelims – 6 mins (Speech – 5 mins, Queries – 1 min),
Final – 8 mins (Speech – 6 mins, Queries – 2 mins)
Ø  Lunch and Refreshment shall be provided
(Lunch Break : 12.30 pm - 1.30 pm)
Ø  Prelims Result will be declared at 1.45 pm
Ø  Event Finals : 2.15 pm - 4.00 pm
Ø  Chief Guest Speech and Prize Distribution : 4.00 pm – 4.45 pm
Ø  Students will be selected based on the performance
ü  Fluency  - 5 Marks
ü  Pronunciation  - 5 Marks
ü  Facial Expression - 5 Marks
ü  Body Language - 5 Marks
ü  Attractive Topics - 5 Marks
ü  Self Content Delivery - 5 Marks

Ø  The decision of Jury will be final
Ø  Student participants and faculty co-ordinators are requested to stay till Valedictory function.
Ø  The Presence of the student participants and faculty co-ordinators are mandatory to receive the Best School Award.
Ø  We are pleased to invite the Chairman /Headmaster/Headmistress for the Best School Award, if possible.


செவ்வாய், 11 செப்டம்பர், 2018

எதுவும் நன்மையே

வாழ்க்கையில் தள்ளிவிட்டவர்களை என்றும் மறக்காதிர்கள்
ஏன் என்றால் வாழ்க்கை கூட ஒரு ஊஞ்சல் போல்தான்
பின் இருந்து ஒருவர் தள்ளிவிட்டால் தான்
நாம் முன் உயர்ந்து வானில் பறக்கமுடியும்

திங்கள், 10 செப்டம்பர், 2018

கிராமம் அது சொர்க்கம்



எங்களின் கிராமத்து வாழ்க்கை மிகவும் அழகானது...

சேவல் கூவும் சத்தத்தில் தான் அந்த நாளின் யுத்தம் தொடங்கும்...

எட்டாத வேப்ப மரத்தை எட்டிப் பிடித்து.. வேப்பங்குச்சி ஒடித்து பல் விலக்கும் காட்சி...


காலையிலே அப்பாவுக்காய் அம்மா ஆசையோடு போடும் நாட்டுச் சக்கரை டீ..


மாட்டுச் சாணம் அள்ளுவதில் இருக்கும் மனமகிழ்வு...

தண்ணீர் கலக்காத சத்தான பாலை மக்களுக்கு தரும் மாண்பு...

லாபமென்றாலும் செயற்கை உரமெனும் விஷத்தை தாயின் மடியிலே தெளிக்க மாட்டேன் எனும் விவசாயி.‌.

சந்தைக்கு போகும் அவசியமில்லை..
காய்கறிகளெல்லாம் எங்கள் தோட்டத்தில் விளைவதனால்...

மருத்துவர் தேவையில்லை ஏனென்றால் பாட்டிகள் எங்களுடன் இருக்கிறார்கள்...

சத்து மாத்திரைகள் தேவையில்லை.
அதைவிட சத்தான கீரைகள் எங்கள் மண்ணிலே விளைகின்றன...

ஆரோ தண்ணீரை விட ஆரோக்கியமான தண்ணி எங்கள் ஆற்றுத் தண்ணீர்...


 அனைத்து உணவும் பிறருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதால் குளிர்சாதனப் பெட்டிகளுக்கு வேலை இல்லை...

வீட்டைச் சுற்றியும் மரங்கள் இருப்பதால் நாங்கள் மறந்து கூட ஏசியை ஓசியில் தந்தாலும் வாங்குவதில்லை..‌.

 அண்டை வீட்டாரிடமும் அயல் வீட்டாரிடமும் முகம் கொடுத்து பேசுவதனால் அதிக நேரம் முகநூலில் முகம் பதித்து கிடையாது...

தெருவுக்கு நான்கைந்து பாட்டிகள் இருப்பதால் எங்கள் கிராமங்களில் சிசிடிவி க்கும் வேலையில்லாமல் போனது...

உண்மையிலே கிராமத்து வாழ்க்கை மிகவும் அழகானது..

பணம் காசு சொத்து சுகம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம்..

முடிந்த வரை கிராமத்து வாழ்க்கையை வாய்ப்பிருக்கும் போதே அணுபவித்துக் கொள்ளுங்கள்.

கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பு...
முறித்து விடாதீர்கள்....

தீதும் நன்றும் பிறர் தர வாரா...

நாம் ஒரு செயலிலோ அல்லது போட்டியிலோ வெற்றி பெற்று விட்டோம் என்றால் அந்த வெற்றிக்கு நான் இப்படி பன்னேன் அதனால் ஜெயிச்சுட்டேன்.
நான் அப்படி பன்னேன் அதனால் ஜெயிச்சுட்டேன் என்று அந்த வெற்றிக்கு நாம் தான் காரணம் என மார்தட்டி பெருமைப் படுகிறோம்...

இதுவே தோல்வியைத் தழுவி விட்டோம் என்றால் அதனால் தான் நான் ஜெயிக்கல இதனால் தான் நான் ஜெயிக்கல அவுங்க இப்படி பன்னிட்டாங்க இவுங்க இப்படி பன்னிட்டாங்க என அந்த தோல்விக்கு காரணமாய் பிறரைக் காட்டுகிறோம்...


அது எப்படி நம் வெற்றிக்கு நாம் காரணமாய் இருக்கும் போது நம்முடைய தோல்விக்கு மட்டும் பிறர் காரணமாய் இருப்பார்கள்.....

தீதும் நன்றும் பிறர் தர வாரா...