வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

உளறல்களுக்கு பேச்சு வடிவம் கிடைத்த மேடை



எங்க அம்மாவுக்கும் எனக்கும் உள்ள உறவு தொப்புள்கொடி உறவு
திருப்பூர் குமரனுக்கும் இந்த தேசத்துக்கும் உள்ள உறவு தேசியக்கொடி உறவு.
கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உறவு தாலிக்கொடி உறவு.
இந்த மாதிரி எந்த ஒரு இணைப்பும் இல்லாமல் நண்பர்களிடையே மலர்ந்து மணம் வீசுகின்ற உறவு தான் நட்பு எனும் நேசக்கொடி உறவு.


இந்த வரிகளை என் வாழ்வில் எந்நாளும் மறக்க மாட்டேன் .
ஏனென்றால்
முதன்முதலாய்
தொலைக்காட்சி கேமாராவைப் பார்க்கிறேன்.
சந்தித்திராத கூட்டத்தை சந்திக்கிறேன்.
பெற்றோரை நீங்கள் பேசுவதைப் பார்க்க அழைத்து வாருங்கள் என்று சொல்லி கொடுக்கப்பட்ட சீட்டு இரண்டு கைப்பையிலே கண்ணுறங்குகிறது.


எட்டாம் வகுப்பு பாப்பா என்ன பேசப் போகுது என பார்க்கும் பெருங்கூட்டம்.
பேச்சாளர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் ஒருஙங்கிணைப்பாளர் வாசிக்க என் பெயரை மட்டும் காணவில்லை.
அழுகை கலந்த பயம்.

எல்லா பெயரும் சொல்லி முடித்த பிறகு மேடையில் இருக்கின்ற பேச்சாளர்களின் பெயரையெல்லாம் சொல்லிவிட்டேன்.
இந்த மேடையில் ஒரு  கத்தி அமர்ந்திக்கிறது என்று சொல்லி என்னை அறிமுகம் செய்தார்.

இப்படியெல்லாம் சொல்லுகிறாரே திக்காமல் ஒழுங்காக பேசி முடிப்போமா எனும் பயம் ஆழ்மனதில்...
பேசும் போது லியோனி ஐயாவிடம்
உங்களுக்கு எதாவது கஷ்டம் னா அதப்போய் உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லுவீங்களா.
இல்ல உங்க அண்ணன் தம்பி கிட்ட சொல்லுவீங்களா.
சொல்ல முடியாதுங்க ஐயா.
நமக்கு ஏற்படுற கஷ்டத்தையும் நஷ்டத்தையும் பகிர்ந்து கொள்ளக் குடிய உறவு ஒன்னு இந்த உலகத்துல இருக்குணா அது நட்பா மட்டுந்தாங்கயா இருக்க முடியும் என நான் இந்த வரியை முடிக்கும் போது அரங்கமை கையொலியால் நிரம்பிப் போனது.
இதற்குப் பின் லியோனி ஐயா என்னிடம் என்ன பத்தி எப்டிமா இவ்ளோ கரக்டா தெரிஞ்சு வைச்சுருக்க என கேட்ட போது ஒரு குழந்தையோட மனது தாய்க்கு தான் தெரியும்.
தாயோட மனது புள்ளைக்கு தான் தெரியும்.
அது போல ஒரு பேச்சுத் தலைவரோட மனசு இன்னொரு பேச்சாளருக்கு தானங்கய்யா தெரியும் என சொல்லினேன். மீண்டும் அரங்கம் கையொலியால் நிரம்பியது.
எப்படியொ வெற்றிகரமாக பேசி முடித்து விட்டேன் என்னும் மனமகிழ்வோடு
 சிறந்த பேச்சாளருக்கான விருதையும் அந்த அரங்கத்தில் வாங்கி விட்டேன்...

முதன்முதலாய் தொலைக்காட்சி காட்டிய கொடுத்த அணுபவம் தற்போது கூட இதை எழுதும் போது அந்த நினைவுகள் ஊசலாடிக் கொண்டே செல்கிறது.


நினைவுகள் மகதாதானவை தான்..

அஞ்சல் குறியீட்டு எண்

       
                                                          அஞ்சல் குறியீட்டு எண் அல்லது பின்கோடு என்பது இந்தியாவில் அஞ்சல்துறைகாக அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் எண் ஆகும். இந்த முறை ஆகஸ்ட் 15 1972ஆம் நடைமுறைக்கு வந்தது. இதில் மொத்தம் ஆறு எண்கள் உள்ளது. அஞ்சலக சுட்டு எண்ணின் முதல் இலக்கம் அஞ்சலகம் அமைந்துள்ள மண்டலம். இரண்டாவது இலக்கம் உள் மண்டலம். மூன்றாவது இலக்கம் மாவட்டத்தையும் குறிக்கிறது. இறுதி மூன்று இலக்கங்கள் குறிப்பிட்ட அஞ்சலகத்தை குறிக்கும்.

மனிதாபிமானம்

 தெரசா ஒரு நாள்  ஒருவரிடம் இல்லாதவருக்காக உதவி கேட்க அவரோ உமிழ் நீரை உமிழ்ந்தார் ஆனால் அன்னையோ கோப படாமல் எனக்கு இதை தந்து விட்டீர்கள் அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்ட தெரசா வாழ்ந்த இந்த ஊரில் ஏழைகளுக்கு உதவ அனைவரின் உள்ளம் மறுக்கிறது.                             ஒரு நாள் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தேன் அப்போது ஒரு மெலிந்த உடலும், அழுக்கான துணியையும், தடுமாறிய நடையும் உடைய முதியவர், ஒருவரிடம் பிச்சை கேட்க அவரோ கண்டு கொள்ளாமல் திரும்பி கொண்டார் அந்த ஈமுதியவரோ பாவமாக மீண்டும் தடுமாறி சென்று விட்டார். நான் அவரை தேடி போய் என்னால் முடிந்த பணத்தை தந்து உதவினேன். இன்றைய சமுகத்தின் அவலமே இது தான். இல்லாதவர்க்கு உதவ நம்மில் பலருக்கு மனம் வருவதில்லை காரணம் கேட்டால் அவர்கள் கூறும் விடையோ கோபம் அளிக்கிறது.  அவர்கள் இவர்களை ஏமாற்றிவிடுவாங்களாம். மாதம் முன்னூறு ரூபாய்க்கு போனுக்கு டேட்டா கார்டு போடுவோம், இருநூறு ரூபாய்க்கு பீட்ஸா வாங்கி மூன்று துண்டுகள் சாப்பிட்டு ஒரு துண்டை குப்பையில் எரியும் நாம் இல்லாதவருக்காக ஒரு பத்து ரூபாய் கொடுத்தால் ஏமார்ந்துவிடுவோமாம். 

நீங்களும் பட்டயக் கணக்காளர் (CA )ஆகலாம்.




                   




           







வணிகம் என்பது என்று நாம் சம்பாதித்ததில் இருந்து சேமிப்பிற்காக எடுத்து வைத்தோம அதிலிருந்து தான் தொடங்கியது.

இன்று வணிகவியல் துறை மேன்மேலும் தன்னை காலத்திற்கேற்றாற் போல் தகவமைத்துக் காக்கிறது. முன்பு,  பி. காம் மட்டுமே இருந்தது ஆனால், இன்று பி. காம் எவ்வளவு உட்பிரிவுகள் ஈ-காமர்ஸ்,பினான்ஸியல் மார்க்கெட்டிங்  என வளர்ந்துள்ளது.

எந்த ஒரு நிறுவனத்திலும் நிதிநிலை நடவடிக்கைகள் நடக்காமல் இருப்பது இல்லை.  எனவே பட்டயக்கணக்காளர் என்று சொல்லப்படுகின்ற சார்ட்டேடு அக்கவுண்டன்ட் படிப்பு  மிகச் சிறப்பானதாகும்.  ஏனெனில் ,  அவரின்  துணையின்றி வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாது. பொருளாதாரம், நிர்வாகவியல், தகவல் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றால் ஏற்படும் மாற்றத்தால் தொழில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

சி. எ என்று சொல்லப்படும் சார்ட்டேடு அக்கவுண்டன்ட்  எனும் படிப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ்  இயங்கும் தி இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டேடு அக்கவுண்ட் ஆஃப் இந்தியா (இ. சி. ஏ. ஐ) நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.

சி. எ முடிக்க
                    1.காமன் புரபசியன்ஷி(சி.பி.டி)
                    2.இன்டக்ரேட்டட் புரபஷனல் காம்படன்ஸ் கோர்ஸ்
                   3.ஆர்ட்டிக்கள்ஷிப் டிரெய்னிங்
ஆகிய நிலைகளை கடக்க வேண்டும்.

காமன் புரபசியன்ஷி நுழைவு தேர்வு எழுத பிளஸ் 2முடித்திருந்தாலே போதும்.  பொருளியல் வணிகவியல் சார்ந்த கேள்விகளே அதில் இடம்பெறும்.
  பி. காம் பட்டதாரிகள் சிபிடி தேர்வு எழுத தேவையில்லை. 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இந்த தேர்வு 4 பகுதிகள் கொண்டது. மைனஸ் மார்க் உள்ளது. குறைந்தது 100மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.  40  விழுக்காடு குறைவாக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் மறுதேர்வு எழுத வேண்டும்.

இடைநிலைத்தேர்வு (இன்டக்ரேட்டட் புரபஷனல் காம்படன்ஸ் கோர்ஸ்)  இதில் மொத்தம் 7 தாள்கள் உள்ளன. இதில் 50 விழுக்காடு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

இடைநிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு பட்டயக்கணக்காளரிடம் முன்று ஆண்டுகள் செயல்முறை பயிற்சி வழங்கப்படும்.  இந்த காலகட்டத்தில் ஊதியமாக 10,000 ஆயிரத்திற்கும் அதிகமாக வழங்கப்படும். இரண்டரை ஆண்டுகள் செயல்முறை பயிற்சியில் ஈடுபட்டிருந்தால் இறுதித்தேர்வை எழுதலாம்.

இறுதித்தேர்வில் 8 தாள்கள் இடம்பெறும். ஒவ்வொரு தாளிலிலும் 40 விழுக்காடு மதிப்பெண்ணுடன் மொத்தம் 50விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும்.
இதில் வெற்றி பெற்ற பிறகு "அசோசியேட் ஆஃப் சார்ட்டட் அக்கவுண்டன்ஷிப்" சான்றிதழ்  வழங்கப்படும். அதன்பிறகு ஐ. சி. ஏ. ஐ.  யில் சேர்ந்து  ஆடிட்டர் பணியைத் தொடரலாம்.

ஐசிஏஐ யில் இட ஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை.  மாறாக தகுதியான மாணவர்களுக்கு வாய்ப்பு அளித்து கட்டணச்சலுகையும் வழங்கப்படுகிறது.
எனவே சி. ஏ படிப்பை சாதிக்கும் வெறியோடும் அர்ப்பணிப்பு உணர்வுடன் படித்தால் குறைந்து முன்று நான்கு வருடங்களில் நீங்களும் சி. ஏ ஆகலாம்.




வியாழன், 30 ஆகஸ்ட், 2018

புறம் பேசுதல் ஒரு பெரு குற்றம்


சித்திர குப்தரும் எமனும் ஒரு வழக்கை பற்றி பேசி கொண்டு இருந்தனர்,  எம தர்ம ராஜாவிடம் தீர்ப்பு கேட்க விஷயத்தை கூறினார். ஒரு நாட்டில் ஒரு ராஜா தன் ஊரில் உள்ள அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார் அப்போது ஒரு கருடன் பாம்பை தூக்கி கொண்டு சென்றது அந்த பாம்பு வலி தாங்க முடியாமல் நஞ்சை கக்கியது அந்த நஞ்சோ உணவின் மீது விழுந்துவிட்டது அதை அறியாமல் அந்த உணவை சமையல்காரர் பரிமாற அதை உண்டு மூன்று பேர் இறந்து விட்டனர். சித்ர குப்தருக்கு இபோது இந்த இறப்பு பாவத்தை யார் மீது சுமத்துவது என்ற சந்தேகத்தை எமனிடம் கேட்டார்,ஏனென்றால் ராஜா நல்ல எண்ணத்தில் உணவு கொடுத்தார் அதில் விஷம் உள்ளது அவருக்கு தெரியாது, சமையல் காரரும் விஷம் உள்ளது தெரியாமல் பரிமாறி விட்டார், கருடன் தன் உணவிற்காக பாம்பை தூக்கி சென்றது, பாம்போ வலி தாங்காமல் விஷத்தை கக்கி விட்டது இவர்கள் யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்று குப்தர்  கேட்க எமனோ பொறுங்கள் காலம் வரும் போது விடை கூறுகிறேன் என்றார். சிறிது காலம் கழித்து அந்த ஊருக்கு புதிதாக  இரண்டு பேர் வந்தனர் அவர்கள் ராஜா அன்னதானம் வழங்குவதை அறிந்து அங்கு போக விரும்பி ஒரு பெண்ணிடம் வழி கேட்டனர் அனால் அவளோ அவர்களிடம் பாத்து போங்கள் எண்ணென்றால் அங்கு உணவு உண்பவர் அனைவரும் செத்து போகிறார்கள் என்று நக்கலாக கூறுகிறாள் இப்போது எமன் சித்ர குப்தரிடம் அந்த இறப்பு பாவத்தை இவள் மீது சுமத்து என்றார். பாவம் அவள் மீது சுமத்த படுகிறது. ஒரு நல்ல செயலை தப்பான எண்ணத்தில் பிறரிடம் புறம் கூறுவது கூட ஒரு பெரும் பாவம் தான்.