திங்கள், 23 அக்டோபர், 2017

நியாயம்



‘உனக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. எதை முதலில் சொல்லட்டும்’ என்றான் மகன்.

‘நல்ல செய்தியை முதலில் சொல்லு’ – அம்மாஆவலுடன்,

‘உன் பொண்ணுகிட்ட அடிக்கடி சொல்லுவியே, எப்படியாவது தனிக் குடித்தனம் போயிடு அப்ப தான் உனக்கு நிம்மதின்னு’ – அதே மாதிரி தனிக்குடித்தனம் போயிட்டாளாம்.

‘ரொம்ப மகிழ்ச்சி. இப்பதான் மனச்சுமை குறைஞ்சது. ஏதோ கெட்ட செய்தினு சொன்னியே, அது என்னடா?’

‘நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் போறதுன்னு முடிவு எடுத்திட்டோம்’
family க்கான பட முடிவுஅம்மாவிற்கு அதிர்ச்சி. மனச்சுமை கூடியது. முகம் இறுகியது.யாரோ முகத்தில் அறைந்தது போல இருந்தது....

நன்பனிற்க்கும் உயிர்தோழனிற்கும் என்ன வித்தியாசம் ?

நன்பனிற்க்கும் உயிர்தோழனிற்கும் என்ன வித்தியாசம் ?

நான்; இன்று தேர்வு சரியாக எழுதவில்லை. மதிப்பெண் கண்டிபாக குறைவாகதான் வரும்,மிகவும் வருத்தமாக உள்ளது!
நன்பன் ; விடு அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்.வருத்தம் வேண்டாம்!
உயிர் தோழன் ; இப்ப அதிகமா வாங்கி என்ன பன்ன போற? போட்டு விடு? வா சாப்ட போலா.பைத்தியோ!friend best friend க்கான பட முடிவு

(அவனை கவலையிலிருந்து விடுபட செய்பவன் நன்பன்! கவலையே உனக்கு இல்லை என்பவன் உயிர் தோழன்)

எ.கா2;
பாலு ; என காதல் தோல்வி அடைந்து விட்டது?
நன்பன் ; வாழ்வில் நீ இனி இதை பற்றி யோசிக்கக் கூடாது! முன்னேறி செல் யாரையும் திரும்பி பார்க்காதே!
உயிர் தோழன் ; போட நீ அவள பாக்கும்போதே தெரியு இப்புடி ஆகூனு !

விடாமுயற்சி

ஒரு குரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். சீடன் விளையாட்டாக மரத்தில் ஏறிக் கொண்டிருந்தான். அங்கே பட்டாம்பூச்சியின் வலைப்பின்னலைக் கண்டான்.அந்த பூச்சி பின்னலை விட்டு வெளியே வர திணறிக் கொண்டிருந்தது.குழப்பத்துடன் சீடன், “ரொம்ப சிரமப்படுதே! அதற்கு உதவி செய்தாகணும்!” என்ற எண்ணத்துடன் அதை நெருங்கினான்.

கண் விழித்த குரு சீடனைக் கண்டார்.“சும்மாயிரு! அதன் போக்கிலேயே விட்டு விடு!” என்று சொல்லிவிட்டு மீண்டும் உறங்கினார்.சீடனுக்கு மனம் கேட்கவில்லை. குருவுக்கு தெரியாமல், தடுமாறும் அந்த பூச்சியை பின்னல் கூட்டில் இருந்து விடுவித்தான்.ஆனால், அந்த பூச்சி பறக்க முடியாமல் தரையில் விழுந்தது.கண் விழித்த குரு சீடனை நோக்கி,“சொல்லியும் கேட்கவில்லையே! அதன் சிறகை சேதப்படுத்தி விட்டாயே! பட்டாம் பூச்சி பறக்க வேண்டுமானால், அது தானாகவே கூட்டை விட்டு வெளியே வந்திருக்க வேண்டும்” என்று கடிந்து கொண்டார்.

பட்டாம்பூச்சி மட்டுமல்ல! மனிதனுக்கும் இது பொருந்தும். வாழ்வில் குறுக்கிடும் கஷ்ட நஷ்டங்களுக்காக பிறரது உதவியை நாடக்கூடாது. அவனாகவே சமாளிக்கும் ஆற்றலைப் பெற வேண்டும். விடாமுயற்சியுடன் செயலாற்றினால் தான், தடைகளைத் தாண்டி உயர முடியும்.butterfly க்கான பட முடிவு

தூரம்



மாட்டுவண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன்.

குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.
‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான்.
‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.
‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’
‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான்.
சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டுமாட்டு வண்டிக்காரனுக்குக் கோபம். ‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான்.
‘‘போய்த்தான் பாருங்களேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான்.
சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்தி கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.
வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.
கற்பிப்பவன் எவனாயினும் கல்வி என்பது பெறுமதியானது தானே?....mattu vandi க்கான பட முடிவு

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

இந்தியாவில் தடை செய்யவேண்டும் என்றால் என்னவெல்லாம் தடைசெய்வீற்கள்?

இந்தியாவில் தடை செய்யவேண்டும் என்றால் என்னவெல்லாம் தடைசெய்வீற்கள்?

1.மதுவை முற்றிமாக தடைசெய்வேன். ஏனெனல் நமது நாடு மிதமான தட்ப வெப்பம் கொண்டது,
2.அழகு சாதனப்பொருட்கள்
3.தேவையற்ற செய்திகளை பரப்பும் ஊடகங்கள்
1.நான் பத்தாம் வகுப்பு படிக்கையில் எனது வேதியல் பேரிசிரியர் மேற்கத்திய நாட்டவரால் அவர்களது நாட்டின் குளிரை தாங்க இயலாததால் அவ்வர்கள் மதுவைக்கண்டறிந்து அருந்துவார்கள் என்று.பிறகு அவை அனைத்து சூழல்களையும் தாங்கும் சக்தி படைத்த நம் நாட்டவருக்கு எதற்க்கு?
2.அழகு என்பது பெண்ணிற்க்கும் சரி ஆணிற்க்கும் சரி என்னை பொறுத்தவரை பிறர் ஒருவருக்கு கொடுகும் மரியாதையே அழகாகும். மரியாதை என்பது வருவர் மனிதத்தன்மையுடன் நடக்கும்போது பிறக்கும். மனிதனாய் பிறந்தவர் மனிதனாக நடந்துகொண்டாலே போதும் அதற்க்கு அவன் நிற அடிப்படையில் சாயம் பூச அவசியம் இல்லை.

3.போலியான செய்திகளை பரப்புவதில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. மக்கள் யார் பின்னே செல்லவேண்டும்? யாரை உண்மையாக கொண்டாட வேண்டும்? என்பது பெரும்பாலும் ஊடகங்கள் கையிலே உள்ளது.