செவ்வாய், 10 அக்டோபர், 2017

மின்னல்

தீப்பொறி
போல
வந்து
போவது
ஏனோ
கண்ணிமைக்கும்
நேரம்.....
உன்
தாக்கம்
என்னவோ
பலமணி
நேரம்.....

# மின்னல் #

----மு. நித்யா.

மொட்டுகள்

தேன் குடிக்கும்
வண்டுகளுக்கு கூட
தெரிந்திருக்கிறது,,
இதழ்
விரியும் நேரம்
எப்போது என்று ...
நானோ
அது தெரியாமலே
காத்துக்கொண்டு
இருந்தேன்
என்னையும் மறந்து....

# மொட்டுகள் #

----மு. நித்யா.

நிழல்

நான்
நடக்க,,
நீயும் என்னுடன்
நடந்தாய்...
அதுவரை தெரியவில்லை,
நீ இறுதி வரை
என்னுடன் வர
முடியாது என்று...
நீ மறைய
துவங்கினாய்..
நானும் நீ
வருவாய் என்று
காக்க துவங்கினேன்....
மீண்டும்
வருவாயா.......???

# நிழல் #

----மு. நித்யா.

அம்மா

நான் எப்படி இருப்பேன் என்று கூட
அவளுக்கு தெரியாது...
இருந்தும் என்னை உலகிற்கு
அறிமுகப்படுத்த அன்றே
அவளுடைய உயிருடன்
போராடியவள் அவள்....
ஒரு நாள் 
கோவிலுக்கு வா என்று
நீ அழைத்த போது
வர மனம் இல்லை...
ஏனென்றால்,,,
எனக்கு உயிர் கொடுத்த
கடவுள் நீ என் கண் முன்
நிற்கும் போது,,
எந்த உணர்வும்
இல்லாத
வெறும் கல்லை
எப்படி
வணங்குவது என்று......

# அம்மா #

---மு. நித்யா.

அலைகள்

நான் ஒவ்வொரு முறையும்
கரையின் உச்சம் அடைய
முயற்சி செய்தேன்...
என்னால்
முடியவில்லை...
இருப்பினும்,
நான் ஒருபோதும்
ஓயவில்லை,
என் இலக்கை
அடைய..
எனக்குள் ஒரு
நம்பிக்கை,
ஒரு நாள்
இந்த பிரபஞ்சமே
திரும்பி பார்க்கும் அளவிற்கு
ஆழி பேரலையாக
உருமாறுவேன் என்று....

# அலைகள் #

----மு. நித்யா.