செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

அறிவுள்ள ஐந்தறிவு விலங்குகள் அறிவில்லா ஆறறிவு மனிதன்



   

           காட்டில் சுட்டெரிக்கும் வெயில். அங்கு வாழும் விலங்குகளுக்கு புலி தான் தலைவன். ஒரு நாள் புலி சொன்னது நாம் வாழ்வதற்கு நீர் வேண்டும் ஆனால் மழை இப்பொழுதெல்லாம் அவ்வளவாக பெய்வதில்லை காரணம்காடுகள் அழிவதேஎன்றது. அப்போது யானை காட்டை அழிப்பது நாம் இல்லை மனிதர்கள் தான் மரங்களை வெட்டி காட்டை அழிக்கின்றனர் என்றது. மேலும் அங்குள்ள விலங்குகள் அனைத்தும் அவர்கள் தங்கள் எதிர்காலத்தை பற்றி நினைப்பதில்லை. அவர்களாக திருந்தினால் தான் உண்டு என்று கூறியது. உடனே புலி கிளி, காகம் போன்ற பறவையிடம் கூறியது கிடைக்கும் பழங்களை தின்று அவற்றின் விதைகளை காட்டில் பரப்புங்கள் என்றது. நாங்கள் தும்பிக்கையால் தண்ணீர் ஊற்றுகிறோம் விதைகள் முளைக்கட்டும், செடிகள் வளரட்டும், காடே பசுமையாகட்டும் என்றது யானைகள். நாம் அனைவரும் உயிர்மூச்சாக கொண்டு காட்டை காப்போம் என்றது புலி. சில ஆண்டுகள் கழிந்தன. காடெங்கும் பசுமை திடீரென வானம் இருண்டது மழை கொட்டியது. காட்டில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பின. விலங்குகளும் பறவைகளும் மகிழ்ச்சியால் ஆடிப் பாடின. அவை புதிய உலகை உருவாக்கி விட்டன. ஆனால்மனிதனாகிய நாம்???????????”

அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல்கள்...


நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.

ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்கும்.

கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.

ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னு

ஆந்தையால் ஓரே நேரத்தில் இரு கண்களாலும் இரு வேறு காட்சிகளைக் காண முடியும்.

பெண் சிலந்திப் பூச்சிகள், ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.

மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு. 

பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகின்றன.
கிறது. 

வெள்ளி, 28 ஜூலை, 2017

காமராஜர் ஒரு நாள் வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் . அப்பொழுது அவரைப் பார்க்க ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே .வந்தனர் பரட்டை தலையும் அழுக்குத் துணியும் அவர்களின் ஏழ்மையை பறைசாற்றின . பணியாளர் ஒருவர் அவர்களை விரட்ட , முற்பட , கேட் வரை ஓடிய குழந்தைகள் தயங்கி தயங்கி நின்றார்கள் . தம்மை பார்க்க வரும் பிரமுகர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய காமராஜர் , அந்தக் குழந்தைகளை கவனித்து விடுகிறார் . அடுத்த நிமிடம் உற்சாகம் பொங்க " என்ன யாரை பார்க்க வந்தீங்க ?"" என்று கேட்டப் படி அவரே குழந்தைகளிடம் வந்து விட ...

அப்பொழுது அந்தச் சிறுமி தயங்கி பேசினாள் " உங்களைத் தான் பார்க்க வந்தோம் . எங்களுக்கு அப்பா இல்லை . அம்மா மட்டும் தான் . அண்ணனுக்கு டைப்ரைட்டிங் பரீட்சை பீஸ் கட்ட பணம் இல்லை . உங்களை பார்த்தா உதவி செய்வீங்கன்னு எல்லோரும் சொன்னாங்க அது தான் வந்தோம்" என்றாள் ...

அவர்களை அன்போடு தட்டிக் கொடுத்தப் படி , " அம்மா தான் அனுப்பிச்சாங்ளா ? என்று காமராஜர் கேட்க ... அந்த குழந்தைகளோ " இல்லை அய்யா , நாங்களாகத் தான் வந்தோம் . அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாக விக்கறாங்க அதுல தான் எங்களை படிக்க வைக்கிறாங்க """ என்று சொல்ல . அதற்கு மேல் கேட்க முடியாமல் . மாடிக்கு சென்ற அவர் ஒரு கவருடன் .வந்தார் சிறுமியிடம் கொடுத்து " இதில் கொஞ்சம் பணம் இருக்கு . அண்ணனுக்கு பீஸ் . கட்டிடுங்க அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளைங்களா நடந்துக்கணும் என்று சொல்லி அனுப்பி வைத்தார் ...."

மறுநாள் மீண்டும் அந்தக் குழந்தைகள் வந்தனர் . உதவியாளர் வைரவன் குழந்தைகளை உள்ளே அழைத்து வந்தார் .... " வாங்க வாங்க " என்று அவர்களை வாஞ்சையுடன் அழைத்த காமராஜரிடம் அந்தக் குழந்தைகள் . " பரீட்சைக்கு பணம் கட்டி விட்டோம் அய்யா . அந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க என்று காமராஜரிடம் அந்தச் சிறுமி ரசீதை நீட்டினாள் .... காமராஜர் கண் கலங்கி விட்டார் .

ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா ? குழந்தைகள் அவரை ...வணங்கினார்கள் அவரும் குழந்தைகளை வணங்கினார் .... வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

சனி, 22 ஜூலை, 2017

யார் அவர்?



                                                                               
சுகன சுமையாய் மார்பில் சுமந்து வளர்த்தவர்!
     தொலைநோக்கு சிந்தனைக்கு வித்திட்டவர்!
மிரட்டலில் பயந்து பணிய வைத்தவர்!
     அன்பில் நனைய வைத்தவர்!
தைரியத்தை ஊட்டி வளர்த்தவர்!
     தோள் கொடுத்து வளர்த்த தோழன்!
உன்னால் முடியும்
என்னும் வார்த்தையை அறிமுகப்படுத்தியவர்!
     என்றும் உறுதுனையாக இருப்பவர்;
என்னை நினைத்து என்றும் பெறுமைபடுபவர்!
     நான் செய்யும் தவறை சுட்டி காட்டுபவர்!
என் மேல் எனக்கு இல்லாத நம்பிக்கை
     அவருக்கு என்றும் இருக்கும்!
அவர் யாராக இருக்க முடியும் என் “தந்தை”யை தவிர?

வாசிப்பை நேசிப்போம்


  

நூல்களே நம்மை செதுக்கும் சிற்பியாகவும், நம்மை நல்வழியில் இட்டுச்செல்லும் நண்பனாகவும், வாழ்க்கையை போதிக்கும் ஆசானாகவும், நம்மை நமக்கே அடையாளம் காட்டும் அகக்கண்ணாடியாகவும் இருக்கின்றன.இத்தகைய எழுத்துகள் அன்று ஓலைச்சுவடிகளாகவும் பிற்காலத்தில் நூல்களாகவும் வடிவம் பெற்றன.இன்றோ நூல்கள் எல்லாம் மின்னூல்களாக மாற்றம் பெற்று உள்ளன.இனிவரும் காலத்தில் நூல் வாசிப்பு என்பது இருக்குமா..?? என்பது இன்றைய தலைமுறைக்கும் நாளைய தலைமுறைக்கும் புரிய வைக்க வேண்டிய நிலையே இன்று ஏற்பட்டுள்ளது.
இதனை விளக்கும் விதமாக வாசிப்பு குறித்து திரு.கலியமூர்த்தி எஸ்.பி அவர்கள் பேசிய காணொளியை இங்கு பகிர்ந்துள்ளேன்.

செவ்வாய், 20 ஜூன், 2017

பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா??
.
இனிமே தினமும் வைத்து கொள்ளுங்கள்!!
.
உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன.
ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன.
அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
.
பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
.
பூக்களைச் சூடும் கால அளவு
.
முல்லைப்பூ - 18 மணி நேரம்
அல்லிப்பூ - 3 நாள்கள் வரை
தாழம்பூ - 5 நாள்கள் வரை
ரோஜாப்பூ - 2 நாள்கள் வரை
மல்லிகைப்பூ - அரை நாள்கள் வரை
செண்பகப்பூ - 15 நாள்கள் வரை
சந்தனப்பூ - 1 நாள்கள் மட்டும்
மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ - சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.

மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ - இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.
.
பூக்களின் பயன்கள்:
.
ரோஜாப்பூ - தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
.
மல்லிகைப்பூ - மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.
.
செண்பகப்பூ - வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.
.
பாதிரிப்பூ - காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.
.
செம்பருத்திப் பூ - தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
.
மகிழம்பூ - தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.
.
வில்வப்பூ - சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.
.
சித்தகத்திப்பூ - தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
.
தாழம்பூ - நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.
.
தாமரைப்பூ - தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.
.
கனகாம்பரம்பூ - தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.
.
தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.
.
பூக்களைச் சூடும் முறை:
.
பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும்.
.
உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது.
.
மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது.
அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.
.
ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.
.
மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால்
மனம் அமைதி பெற உதவும்.
.
மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.
.
முல்லைப்பூ, வில்வப்பூவை
குளித்த பின்பு சூடலாம்.
.
உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.
.
பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:
.
பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.
.
இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.
.
தலையில் பூ வைப்பது,
மனமாற்றத்துக்கு உதவும்.
.
ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.
.
மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது.

.
பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது.

மனமாற்றத்துக்கு உதவுகிறது.
.
மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.
.
இருந்தாலும் மற்றவர் காதில் பூ சுத்துவது
நல்லதில்லை.
.