வியாழன், 16 பிப்ரவரி, 2017

ஃப்ரூட்ஸ் ஆப் லோபர்

    ஃப்ரூட்ஸ் ஆப் லோபர்
மீன் பிடிக்கும் குழூ ஒன்று கடலுக்குல் சென்றனர்.அந்த குழுவின் தலைவர் வயதில்,அறிவில் மற்றும் புத்தியுடையவரும் ஆவார்.எப்போழுதுமே அவர்களை நல்வழியிலேயே செலுத்துவார்.கடலில் தன்னுடைய பரந்து விரிந்த வலையை விரித்தனர்.அதனை வெளியே எடுக்கும்போது அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.இது போன்று இரண்டு முதல் மூன்று முறை வலையை வீசினர்.அப்போழுதும் இவ்வாறே வெறும் வலை கிடைத்தது.ஆனாலும் அந்த குழுத் தலைவர் திரும்பத் திரும்ப முயற்ச்சி செய்ய கூறினார்.இந்த முறை அவர்களுக்கு சின்ன மீன்கள் சிறிதும் கடற்பாசிகளுமே நிறைய கிடைத்தது,அவையும் தூக்க கனமாக இருந்தது.
இருப்பினும் தலைவர் அந்த சிறியளவு மீன்களையும் படகுக்குள் கொட்டிவிட்டு பின் மறு முறை வீசுங்கள் என்று கூறினார்.
      அவர்கள் படகுக்குள் கொட்டும்போது,ஒரு பெட்டி கிடைத்தது.அதில் நிறைய பொற்காசுகளும் மாணிக்கங்களும் பல வகையான முத்துக்களும் இருந்தன.அவற்றை தன் வீரர்களுக்கு சரிசமமாக பிரித்துக்கொடுத்தார் அனைவரும் மகிழ்ச்சியாக வீடு திரும்பினர்.அதன்மூலம் ஒரு வேலையை திருத்தமாக செய்து முடிக்கும் வறையில் அதனை கைவிடக்கூடாது என்று அறிய முடிக்றிது.
                                                                  (தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி


கேரக்டர் ரிமைன்ஸ் ஸ்சேம்

                                             கேரக்டர் ரிமைன்ஸ் ஸ்சேம்
      ஒரு நாள் பூனை அழகான இளம் ஆணை பார்த்தது.பின்பு அவன் மீது அது காதலில் விழுந்தது.அவனை திருமணம் செய்ய ஆசைப்பட்டது.அனால், ஒரு பூனையால் எப்படி ஒரு மனிதனை திருமணம் செய்ய இயலும்.ஆதலால் அந்த பூனை கடவுளிடம்``அந்த பையனை நான் திருமணம் செய்து கொள்ள ஏதாவது வழி புனையுங்கள்’’என்று வேண்டியது.

      உடனடியாக கடவுள் அந்த பூனையை அழகான பெண்னாக மாற்றிவிட்டார்.அந்த பையனும் இந்த பெண்னை பார்த்து காதலில் விழுந்துவிட்டான்.அவளிடம் தன் காதலை சொன்ன பிறகு அவளை திருமணமும் செய்து கொண்டான்.
      எல்லா சடங்கும் நடந்து முடிந்தது.கடவுள் அந்த பெண்ணாகிய பூனையை சோதிக்க முடிவுஉ செய்தார்.ஆதலால், ஒரு எலியை அவர்கள் அரைக்குள் அனுப்பினார்.அந்த பெண்ணும் அந்த எலியின் மனத்தை நுகர்ந்து அதனை விரட்டி பிடித்தாள்.உடனடியாக கடவுள் அந்த பெண்ணை பழைய நிலையாகிய பூனைக்கு மாற்றிவிட்டாள்.கடவுள் ``ஒருவர் உருவத்திலோ, ஆடையிலோ நடந்த மாற்றத்தினால் எப்படி தன் இயல்பையே மாற்றிக்கொள்வர் என்று எண்ணினேன்?’’என தனக்குள் கேட்டுக்கொண்டார்.


கார்ட் அன்ட் மேன்

                                                               கார்ட் அன்ட் மேன்
கடவுள் விலங்கினங்களை படைத்தார்.சில மிருகங்கள் வேகமாக ஓடும்.சில மிருகங்களுக்கு வேருபாடான சக்தியையும் உருவத்தையும் படைத்தார்.சில பறக்கும் உறுவத்தை பட்த்தார் அதனை பறவை என நாம் அழைக்கிறோம். இந்த பறவை ஒரு இடதிலிருந்து மற்றோரு இடத்திற்கு இறையை தேடி பறந்து செல்லும்.இருதியாக கடவுள் மனிதனை படைத்தார்.
அவனையும் அந்த மனிதனை சுற்றி இருக்கும் விலங்கினங்களை பாதுகாகும் திறனை கொடுத்தார்.ஒரு நாள் மனிதன் கடவுளிடம்``கடவுளே,உலகின் அனைத்து உயிரினங்களுக்கும் பல விதமான சக்திகளை கொடுத்துள்ளீர்கள் எனக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்ச்சம்?’’ என்று வினவினார்.
            கடவுள் சிரித்துக்கொண்டே `` மனிதா உனக்கு நான் கொடுத்த சக்தியானது இவையனைத்தையும் மிக வலிமையானது.அதுதான் உன் பேசும் திறன்’’ என்றார்.இந்த சக்தியை பயண்படுத்திதான் இப்போழுது உன்னுடைய கேள்வியை இப்போது என்னிடம் கேட்கிறார்.வேறு எந்த பட்ப்பிற்க்கும் இப்படி பட்ட அரிய சக்தியை நான் கொடுக்கவில்லை.இன்னும் வேறு என்ன நான் உனக்கு தரவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறாய்?.அக்கணத்தில் மனிதன் அவனுக்கு கிடைத்த சக்தியின் வலு அர்ந்தான்.அதிலிருந்து நாம் எப்போழுதும் இருக்கின்றதை வைத்து அனுபவக்கவேண்டும்.இல்லாததை எண்ணி வருந்தக்கூடாது என்று எண்ணினான்.


செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

தத்துவத் துளிகள்


   தத்துவ  துளிகள் 
சை, கோபம், களவு, கொண்டவன்
        பேசத் தெரிந்த மிருகம்.
அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
        மனித வடிவில் தெய்வம்.   
                                       
1.  நம்பிக்கை இழக்காதே, அவநம்பிக்கையானது அறிவு, ஒழுக்கம் ஆகியவைகளுக்கு வீழ்ச்சியாகும்.
2.  செயற்கரிய செயலை துவக்கி வைப்பது நல்லறிவு அதை நிறைவேற்றி வைப்பது இடையறாத உழைப்பு.
3.  சினத்தை விட்டவன் எந்நாளும் துன்பப்படுவதில்லை. பேராசையை விட்டவன் பேரின்பம் அடைகிறான்.
4.  தேவைகள் குறையும் அளவுக்கே, தெய்வத் தன்மை அடைவோம்.
5.  பொறாமையில்லாதவனிடம் தத்துவ ஞானம் இருப்பதில்லை.
6.  ஒரு மனிதன் எப்படி இறந்தான் என்பது முக்கியமன்று, அவன் எப்படி வாழ்ந்து வந்தான்  என்பதுதான் முக்கியம்.
7.  துன்பம் இல்லாமல் வெற்றியில்லை, முயற்சியில்லாமல் பெருமையில்லை.
8.  செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு, எல்லா செல்வதையும் இயக்குவதும் அதுவே.
9.  பாவத்திற்கு பல கருவிகள் உண்டு,ஆனால் அவற்றிற் கெல்லாம் பொருத்தமான கைப்பிடு பொய்…
10.         அறிவு தெளிவுபெற வைக்கிறது, தெளிவு துணிவைத் தருகிறது, வேறென்ன வேண்டும்.
11.         மனிதனின் அறிவு உறங்கினால் கீழான இச்சைகள் கண் விழித்தெழுந்து குதியாட்டம் போடும்.

இலட்சியம்



                       இலட்சியம்

   …ஒரு  சீடன் தன் குருவிடம் சென்று, ‘ஐயா,எனக்கு ஆன்மீகம் வேண்டும்’ என்றான், குரு அந்த இளைஞனைப் பார்த்து அமைதியாகப் புன்முறுவல் பூத்தார், எதுவுமே பேசவில்லை. இளைஞன் ஒவ்வொரு நாளும் வந்து தனக்கு ஆன்மீகம் வேண்டுமென வற்புறுத்தினான். அந்த முதியவர் இளைஞனை விட விஷயம் தெரிந்தவர். ஒரு நாள் வெயில் கடுமையாக இருந்தது. அன்று அவர் அந்த இளைஞனைத் தம்மோடு ஆற்றுக்கு நீராட அலைத்துச் சென்றார். அவன் நீருக்குள் இறங்கி மூழ்கியதும், முதியவர் அவனைப் பிடித்து, பலவந்தமாக நீருனுள் அமிழ்த்தி வைத்துக் கொண்டார். அவன் திணறிப்போய் வெளியே வரப் போராடினான். சிறிது நேரம் அவர் விடவே இல்லை. பிறகு அவனை விட்டார். சோர்ந்துபோய் தலையை மேலே துக்கினான் அவன், அப்போது அவர் அவனிடம், ‘நீரினுள் இருந்த போது உனக்கு மிகவும் தேவையாக இருந்த்து எது? என்று கேட்டார். மூச்சுக் காற்று என்றான் சீடன். ‘ஆம்’ இறைவன் வேண்டும் என்று அவ்வாறே  நீனைக்கிறாயா?  அவ்வுளவு தூரம் இறைவனின் தேவையை உணர்ந்தாயானால் அவனைப் பெறுவாய்’ என்றார் குரு.
    அந்தத் தாகம் , அந்த ஆசை எழும்வரை, உன் அறிவாலோ, உனது சாஸ்த்திரங்கரலோ, உருவங்கலோ, நீ எவ்வுளவு தான் பாடுபட்டாலும் ஆன்மீகத்தைப் பெற முடியாது.அந்தத் தாக்கம் உன்னிடம் எழும் போது,நீ நாத்திகனைவிட மேலானவன் அல்ல. நாத்திகன் நேர்மையாகவாவது இருக்கிறான். உன்னிடம் அதுவும் இல்லை.
            
   
                              
 2-ம் ஆண்டு வணிகவியல் கணினிப்பயன்பாட்டுத் துறை
                        து.வைதேகி.