தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டியதாம் என்ற ஒரு பழமொழி உண்டு.இப்போது அந்த பழமொழி உண்மையாகி வருகிறது.ஆமாங்க தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சையில் தான் இது நிலவுகிறது.இந்த கட்டுரையில் மீத்தேன் எரிவாயு குறித்த சிறிய விழிப்புணர்வை பகிரவுள்ளேன்.
செவ்வாய், 15 மார்ச், 2016
திங்கள், 14 மார்ச், 2016
ரசத்தின் மகிமை
சுவை அரும்புகள் தூண்டுவது; புரதத்தை உடைத்துச்
செரிக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் கொண்டது.
சீரகம்:
செரிமானத்திற்கான வயிற்றுச்சுவர்களைச் சரி செய்வது.
மனிதத் தேவைக்கான மக்னீசியம் கொண்டது.
பூண்டு:
கிருமிகளின் முதல் எதிரி. கொழுப்புகளை உடைப்பது;
பக்கவாதம் தடுப்பது; ரத்த அழுத்தம் சீர் செய்யும் செலினியம், கால்சியம், பொட்டாசியம்
கொண்டது.
கடுகு:
எட்டு மடங்கு உமிழ்நீர் சுரக்க வைப்பது; நல்ல
கொழுப்பு உடையது.
புளி:
வயிற்றுக் கோளாறு சரிசெய்து, இருதயம் வலிமை செய்வது.
தக்காளி:
வெய்யிலுக்கெதிராய்த் தோல்நலம் காப்பது; வைட்டமின்
ஏ, டி இரண்டும் உடையது. மாரடைப்பு புற்றுநோய் இரண்டையும் தடுப்பது.
மிளகாய்:
வைட்டமின் ஏ, சி இரண்டும் கொண்டது. ரத்த ஓட்டம்
அதிகரிப்பது.
கருவேப்பிலை:
தோல் தொற்று தடுப்பது; சிறுநீரக வலி நிவாரணியாய்ச்
செயல்படுவது; தாதுக்களும் நார்ச்சத்தும் மிக்கது.
மல்லித்தழை:
இரும்புச்சத்து மிக்கது; எழும்புத் தேய்மானம்
தடுப்பது.
(படித்ததில்
பிடித்தது)
நாம்
அன்றாடம் உட்கொள்ளும் ரசத்தில் இவ்வளவு மகிமை இருக்கிறது என்று தெரிய வரும் போது ஆச்சரியமாய்
இருக்கிறது. நம் முன்னோர்கள் உணவு பொருட்களில் கையாண்டுள்ள அறிவியலும் தெரியவருகிறது.
உன்னை உலக்கிற்கு அறிமுகம் செய்
உன்னை உலகிற்கு அறிமுகம்
செய்
v
துன்பத்தை
அனுபவித்த காலத்தை மறந்துவிடு,ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே!
v
ஒரு
முறை வந்தால் கனவு! இருமுறை வந்தால் ஆசை! பலமுறை வந்தால் லட்சியம்!
v
உலகம்
உன்னை அறிவதைவிட உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்!
v
வெற்றி
என்பது உன் நிழல் போல, நீ அதை தேடிப்போகவேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது,
அது உன்னுடன் வரும்!
v
கஷ்டம்
வரும் போது கண்ணை மூடாதே. உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார்; காணாமல் போய்விடும்.
-டாகடர் அப்துல் கலாம்
ஞாயிறு, 13 மார்ச், 2016
பொன்மொழிகள்
புத்தகங்கள்
“இறவாத புகழுடைய
புது நூல்கள்
தழிழ் மொழியில்
இயற்றல் வேண்டும்”
-
மகாகவி
பாரதியார்
“மூலையிலோர் சிறுநூலும்
புதுநூலாயின்
முடிதனிலே சுமந்துவந்து
தருதல் வேண்டும்”
-
பாவேந்தர்
பாரதிதாசன்
“ஊர்செல்லக் காட்டும்
வழிபோல வாழ்வுக்கு
நேர்பாதை சொல்வதே
நூல்”
-
சாமி
சிதம்பரனார்
“புத்தகங்கள் மனித
சமுகத்திற்காகப் பேரறிஞர்கள் விட்டுச்
சென்றுள்ள பரம்பரைச்
சொத்தாகும்”
-
அடிஸன்
“உலகில் சாகாவரம்
பெற்ற பொருள்கள் புத்தகங்களே!”
-
கதே
“பிறர் எழுதியுள்ள புத்தகங்களைக் கொண்டு உங்களைத்
திருத்திக் கொள்வதில்
நேரத்தைச் செலவிடுங்கள்; பிறர்
வருத்தி உழைத்ததைக்
கொண்டு நீங்கள் எளிதில் பெறக்
கூடிய பயன் இது!”
-
சாக்ரடீஸ்
“புத்தகங்களை இரவல் கொடிக்காதீர்கள். யாரும்
அவற்றைத் திருப்பிக்
கொடுப்பதில்லை. என் நூல் நிலையத்தில்
உள்ள புத்தகங்கள்
எல்லாம் பிறரிடமிருந்து இரவல் வாங்கியவை
மட்டுந்தான்!”.
-
அனடோல்
பிரான்ஸ்
“என் மனதுக்கு
உகந்த நூல்களை மட்டும் கொடுத்து,
என்னை என் வாழ்வு
முழுவதும் சிறையிட்டாலும் நான்
கஷ்டப்பட மாட்டேன்”.
-
மாஜினி
“புத்தகம் என்பது
வெறும் புத்தகம் மட்டும் அன்று. புத்தகத்தை
தொடுபவன் மனிதனையே
தொடுபவன் ஆகிறான்”.
-
வால்ட்
விட்மன்
“ஒரு புத்தகம்
எழுத அரைவாசி நூல் நிலையத்திற்கு மேல்
படிக்க வேண்டும்”.
-
ஜான்ஸன்
பங்குச் சந்தைக்கு போலாமா..!! (தொடர்ச்சி)
பொருளாதார வளர்ச்சி தேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.அதற்குச் சிறந்த பண மேலாண்மையும்,சரியான முதலீடும் நிச்சயமாக நாட்டின் பொருளாதாரத்தை நல்ல வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும்.அந்த வகையில் தான் வார வாரம் ஞாயிறு அன்று பங்குச் சந்தை குறித்த தகவல்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த எளிமையான முறையில் பதிவுகளை பகிர்ந்து வருகிறேன்.தவறாமல் படியுங்கள்.எனக்கும் பங்குச் சந்தை பற்றி ஒன்றுமே தெரியாது அதைப் பற்றி இப்போது தான் சிறிது சிறிதாக கற்றுக் கொண்டு வருகிறேன்.எனக்கு தெரிந்ததை தங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சியாக உள்ளது நட்பூக்களே..!!
கடந்த பதிவுகள்;
1.ஏன் தேவை பங்குச் சந்தையில் முதலீடு..??
2.பங்குச் சந்தை வர்த்தகம்.
3.பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்ச்சி.
கடந்த பதிவுகளை படிக்காதவர்களும் படிக்கலாம்.இன்று எல்லாமே வணிகமாக மாறிவிட்டது.அதைக் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் அனைவருமே ஏமாந்து வருகின்றோம்.சரி வாங்க பங்குச் சந்தைக்கு போகலாம்.
தனி நபர் நிறுவனம் (proprietorship concern) :
ஒரே ஒருவர், தனது கைப்பணத்தை (அல்லது தான் கடன் வாங்கிய பணத்தைப்) போட்டு ஒரு நிறுவனத்தைத் துவங்கி, நடத்திவருகிறார் என்று கொள்வோம், அந்நிறுவனத்தின் லாபமோ நட்டமோ அவரை மட்டுமே சேர்ந்தது. அந்நிறுவனத்தின் முழுப்பொறுப்பும் அவரையே சாரும். இத்தகைய நிறுவனத்தை ' தனி நபர் நிறுவனம் ' (proprietorship concern) என்று அழைப்போம். அந்நிறுவனதாரர் 'உரிமையாளர்' (proprietor) என்று அழைக்கப்படுவார்.
கூட்டு நிறுவனம் (Partnership company) :
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டுச் சேர்ந்து நடத்தும் ஸ்தாபனம், கூட்டு நிறுவனமாகும் (Partnership company). இதன் உரிமைதாரர்கள் கூட்டாளிகள்(partners) எனப்படுவர். லாபம், நட்டம் எதுவாயினும், சமமாகக் கூட்டாளிகளுக்குள் பிரித்துக்கொள்ள வேண்டும். நிறுவன நடவடிக்கைகளுக்கு, அனைவரும் பொறுப்பாவார்கள். நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளால், ஏதேனும் கடன் ஏற்பட்டாலோ, நிறுவனம் திவாலானாலோ, கூட்டாளிகளின் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் சொத்தைக்கூட பறிமுதல் செய்ய, கடன் கொடுத்தவருக்கு உரிமை உண்டு.
வரையறுக்கப்பட்ட (பங்கு) நிறுவனம். (Limited Company) :
மேற்கூறியவாறு ஒரு கூட்டு நிறுவனம் செயல் படும்பொழுது, தனிப்பட்ட முறையில் கூட்டாளிகள் அந்நிறுவனத்தின் கடன் சுமைக்குப் பொறுப்பாவார்கள் என்று கண்டோம். ஒரு நிறுவனம் விரிவாக்கப் படும்பொழுதோ, பெரிய அளவில் தொடங்கப்படும்பொழுதோ, இத்தகைய பொறுப்புக்களைத் தவிர்க்கவும், மற்றும் பல நிர்வாக வசதிகளுக்காகவும் வரையறுக்கப்பட்ட பங்கு நிறுவனங்கள் தொடங்கப் படுகின்றன. அதாவது கம்பெனியின் கடனுக்கு, பங்குதாரர்கள் பொறுப்பாக மாட்டார்கள். ஏனெனில், கம்பெனி என்பது ஒரு தனி நபராகக் (பங்குதாரர்களிடம் இருந்து வேறுபட்ட) கருதப்படுகிறது. இவற்றை மேலும் இரண்டு விதமாகப் பகுக்கலாம். அவையாவன:
தனியார் பங்கு நிறுவனம் (Private Limited Company) :
அனேகமாக கூட்டு நிறுவனங்கள் விரிவு செய்யப்படும்பொழுது, இவ்வகையான தனியார் நிறுவனங்களாக மாற்றப் படுகின்றன. இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் அநேகமாக, நண்பர்களாகவோ, உறவினர்களாகவோதான் இருப்பர். பொதுமக்களுக்கு பங்குகளை வினியோகம் செய்வதிலிருந்து, தனியார் பங்கு நிறுவனங்கள் தடுக்கப் பட்டுள்ளன. எனினும், தமது முதலீட்டின் அளவு வரை மட்டுமே, பங்குதாரர்கள் கம்பெனியின், கடன்களுக்குப் பொறுப்புடையவர்கள் ஆவர்.
ஒரே ஒருவர், தனது கைப்பணத்தை (அல்லது தான் கடன் வாங்கிய பணத்தைப்) போட்டு ஒரு நிறுவனத்தைத் துவங்கி, நடத்திவருகிறார் என்று கொள்வோம், அந்நிறுவனத்தின் லாபமோ நட்டமோ அவரை மட்டுமே சேர்ந்தது. அந்நிறுவனத்தின் முழுப்பொறுப்பும் அவரையே சாரும். இத்தகைய நிறுவனத்தை ' தனி நபர் நிறுவனம் ' (proprietorship concern) என்று அழைப்போம். அந்நிறுவனதாரர் 'உரிமையாளர்' (proprietor) என்று அழைக்கப்படுவார்.
கூட்டு நிறுவனம் (Partnership company) :
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டுச் சேர்ந்து நடத்தும் ஸ்தாபனம், கூட்டு நிறுவனமாகும் (Partnership company). இதன் உரிமைதாரர்கள் கூட்டாளிகள்(partners) எனப்படுவர். லாபம், நட்டம் எதுவாயினும், சமமாகக் கூட்டாளிகளுக்குள் பிரித்துக்கொள்ள வேண்டும். நிறுவன நடவடிக்கைகளுக்கு, அனைவரும் பொறுப்பாவார்கள். நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளால், ஏதேனும் கடன் ஏற்பட்டாலோ, நிறுவனம் திவாலானாலோ, கூட்டாளிகளின் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் சொத்தைக்கூட பறிமுதல் செய்ய, கடன் கொடுத்தவருக்கு உரிமை உண்டு.
வரையறுக்கப்பட்ட (பங்கு) நிறுவனம். (Limited Company) :
மேற்கூறியவாறு ஒரு கூட்டு நிறுவனம் செயல் படும்பொழுது, தனிப்பட்ட முறையில் கூட்டாளிகள் அந்நிறுவனத்தின் கடன் சுமைக்குப் பொறுப்பாவார்கள் என்று கண்டோம். ஒரு நிறுவனம் விரிவாக்கப் படும்பொழுதோ, பெரிய அளவில் தொடங்கப்படும்பொழுதோ, இத்தகைய பொறுப்புக்களைத் தவிர்க்கவும், மற்றும் பல நிர்வாக வசதிகளுக்காகவும் வரையறுக்கப்பட்ட பங்கு நிறுவனங்கள் தொடங்கப் படுகின்றன. அதாவது கம்பெனியின் கடனுக்கு, பங்குதாரர்கள் பொறுப்பாக மாட்டார்கள். ஏனெனில், கம்பெனி என்பது ஒரு தனி நபராகக் (பங்குதாரர்களிடம் இருந்து வேறுபட்ட) கருதப்படுகிறது. இவற்றை மேலும் இரண்டு விதமாகப் பகுக்கலாம். அவையாவன:
தனியார் பங்கு நிறுவனம் (Private Limited Company) :
அனேகமாக கூட்டு நிறுவனங்கள் விரிவு செய்யப்படும்பொழுது, இவ்வகையான தனியார் நிறுவனங்களாக மாற்றப் படுகின்றன. இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் அநேகமாக, நண்பர்களாகவோ, உறவினர்களாகவோதான் இருப்பர். பொதுமக்களுக்கு பங்குகளை வினியோகம் செய்வதிலிருந்து, தனியார் பங்கு நிறுவனங்கள் தடுக்கப் பட்டுள்ளன. எனினும், தமது முதலீட்டின் அளவு வரை மட்டுமே, பங்குதாரர்கள் கம்பெனியின், கடன்களுக்குப் பொறுப்புடையவர்கள் ஆவர்.
பொதுப் பங்கு நிறுவனம் (Public Limited Company) :
தனியார் பங்கு நிறுவனங்கள் காலப்போக்கில் மிகவும் விரிவாக்கம் பெறும்பொழுது அல்லது ஏற்கனவே சந்தையில் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்கள் ஒரு கிளை/புதிய கம்பெனி துவக்கும்பொழுது, பொதுப் பங்கு நிறுவனம் உருவாகிறது. இத்தகைய நிறுவனங்கள் பல சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, தமது நிறுவனத்தின் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றன. வேறு விதமாகச் சொல்ல வேண்டுமாயின், பொதுமக்கள் பங்குதாரர்களாக, மூலதனத்திற்கும், நிறுவனத்தின் லாப நட்டத்திற்கும் உரியவர்களாக உள்ள நிறுவனமே பொதுப்பங்கு நிறுவனம் ஆகும்..
அடுத்த வாரம் பங்குச் சந்தையின் வகைகள் பற்றி பார்க்கலாம்.தொடர்ந்து இணைந்திருங்கள்.நன்றிகள்..!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)