வியாழன், 3 மார்ச், 2016

செல்லினம் பதிவிறக்க வழிமுறைகள்..!!

செல்லினத்தை உங்கள் ஆண்டிராய்டு கருவிகளில் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறை:
IMG_4575
1. Play Store செயலியைத் திறந்து Sellinam என்று தேடுக.
2. Install எனும் கட்டத்தைத் தொட்டவுடன் சில செயல்களுக்கான அனுமதிகளைக் கேட்கும்போது ‘Accept’ எனும் கட்டத்தைத் தொடுக.
3. செல்லினம் உங்கள் கருவியில் பதியப்பட்டவுடன், ‘Open’ எனும் கட்டம் தோன்றும், அதனைத் தொடுக.
4. செல்லினத்திற்கான அமைப்புச் செயல் தொடங்கும். Get Started எனும் கட்டத்தைத் தொட்டு, அதன்பின் தோன்றும் ‘Enable in Settings’ கட்டத்தைத் தொடுக.
5. உள்ளீட்டு முறைகள் வரிசையாகத் தோன்றும். அதில் செல்லினம் ‘ON’ செய்யப்பட்டிருக்க வேண்டும். இதனை உறுதி செய்தவுடன் முந்தைய திரைக்குச் செல்க.
6. இப்போது Switch Input Methods எனும் கட்டம் தோன்றும். அதனைத் தொட்டு செல்லினத்தை உங்கள் இயல்பான உள்ளீட்டு முறையாகத் தெரிவு செய்க.
7. இப்போது ‘Select Keyboards’ எனும் கட்டம் தோன்றும். இதனைத் தொட்டு, உங்களுக்கு விருப்பமான உள்ளீட்டு முறையைத் தெரிவு செய்க.
குறிப்பு: ஹுவாவே, ஆசுஸ் முதலிய கருவிகளை வைத்திருப்போருக்கு தமிழ் உள்ளீட்டு முறைகள் தோன்றா. ஆங்கிலமும் மலாய் மொழி உள்ளீட்டு முறைகள் மட்டுமே தோன்றும். உங்கள் கருவியில் அவ்வாறு இருந்தால், இந்தப் பதிவைக் காண்க: Issues with Sellinam on Huawei, Asus and other devices.
9. இனி உங்கள் ஆண்டிராய்டு கருவியில் உள்ள குறுஞ்செய்தி, வாட்சாப், மின்னஞ்சல், வைபர், முகநூல், டிவிட்டர் முதலிய செயலிகளில் ஆங்கிலத்தில் உள்ளிடுவதைப் போலவே தமிழிலும் உள்ளிடலாம்.
10. உங்கள் கருவியில் ஆங்கில உள்ளீட்டுக்காக சுவைப் போன்ற மற்ற முறைகளைப் பயன்படுத்தினால், அவற்றுக்குச் சென்று தமிழுக்காக மீண்டும் செல்லினத்துக்கு வந்துவிடலாம். லாலிபாப் (Lollipop) பதிப்பை வைத்திருப்போர், விசைமுகத்தின் கீழ் உள்ள விசைப்பலகைச் சின்னத்தைத் தொட்டு மற்ற உள்ளீட்டு முறைகளுக்குச் செல்லலாம். அதே சின்னத்தைக் கொண்டு செல்லினத்திற்கும் திரும்பி வரலாம்.  கிட்கெட், செலிபீன் பதிப்புகளை வைத்திருப்பவர்கள், செல்லினத்தில் உள்ள ‘மு’ சின்னத்தை சற்றுநேரம் அழுத்தி (long press), உள்ளீட்டுமுறைகளுக்கான பட்டியலைக் காணலாம்.
இதனை செய்து பார்த்து பயன் பெறவும் நண்பர்களே.இந்த பகிர்வு என் கல்லூரியில் இருக்கும் மாணவிகளுக்கு இருக்கும் பிரச்சனைக்கு உதவியாக இருக்கும் என்பதால் இணையத்தில் தேடி பகிர்ந்துள்ளேன்.அவர்களுக்கும் இதை இப்பொழுது படித்துக் கொண்டிருக்கும் தங்களுக்கும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நன்றி.

மயக்கும் ஓவியம்

வில்லியம் காங்ரீவ்

                                             வில்லியம் காங்ரீவ்(19ஆம் நூற்றாண்டு)

வில்லியம் காங்ரீவ் பார்ட்செ என்ற இடத்தில் பிறந்தார்,தனது பட்டப்படிப்பை டிரினீடி கல்லூரி டப்லினில் படித்தார்.அங்கு அவர் ஜொனதன் ஸ்விஃட்டை சந்தித்து நன்பரானார்.அவரது அனைத்து நாடக நூல்கல் அனைத்தும் அவரது முப்பது வயதிற்குள் எழுதி முடித்தார்.ஏனைய காலங்களில் சமுதாயத்தில் நல்ல ஒரு தலைசிரந்த மனிதராய் களித்தார்.மேலும் அரசாங்கமிடம் இருந்து அவருக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.பின்பு வில்ஸ் தேனீர் விடுதியில் டிரைடனை சந்தித்து அவரது நெறிகளை பின்பற்றினார்.
இவர் பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர்.இவர் எழுதிய முதல் நாடகம்
                        ``த ஓல்ட்டு பாசுலர்’’.
இந்த நாடகம்``டுரூரி லேன்’’என்ற திரையரங்கிள் தயாரிக்கப்பட்டது.இதனையடுத்து
`                       ``டபுல் டீலர்’’
என்ற நாடகம் அவரது நகைச்சுவை நயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது.தம் முப்பது  வயதில் இவர்
``லவ் ஃஆர் லவ்’’,
``தி வே ஆப் தி வேல்ற்டு’’
என்ற நகைச்சுவை நாடகத்தை இயற்றினார் பின்னர்
``தி மார்னிங் பிரிட்ச்’’
என்ற ஒரு சோகக்கதை எழுதினார்.இவர் எழுதிய நூல்களில் சமக்காலத்தில் ஆண்ட அரசியான எலிசபெத்தின் ஆட்சியை பற்றியும் அந்த சமூகத்தை பற்றியும் இவர் குறிப்பிடவில்லை.
அவரது படைப்புகளில் ``நகைச்சுவை நயதை’’சிறந்த முறையில் வடிவமைத்திருப்பார்.மேலும் இவரது கதைளில் தெளிவு,உயிரோட்டம்,வரிகளில் இசையின் கலப்பு, கதாப்பாத்திரங்களை விவரிக்கும் முறை,ஆகியன தனித்துவம் வாய்ந்தவை.ஒரு நாடக எழுத்தாளராய் இவரது பணிகாலம் மிகவும் குறைவு.சிறு காலங்கள் இவர் கவிதை,மொழிபெயர்ப்பு ஆகியன செய்தார்.இவர் ஒரு திருமணம் ஆகாதவர்.ஆனால், ஹென்ரீடா என்ற பெண்னுடன் விவகாரம் இருந்தது.மேரி என்ற குழந்தையும் இருந்ததாக கருதப்பட்டது. இவர் கான்டிராஸ்ட்(கண்களில் நீர் வழிதல்) கவுட்(மூட்டுகளில் வலி)போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டார்.பின்பு லண்டனில் ஒரு விபத்தை சந்தித்து அதிலிருந்து மீள முடியாமல்1729இல் மரணம் அடைந்தார். இவரது சடலம் வெஸ்ட் மினிஸ்டர் அபே இல் புதைக்கப்பட்டது.

                  

புதன், 2 மார்ச், 2016

வியக்க வைக்கும் எறும்புகள்

           வியக்க வைக்கும் எறும்புகள்


முன்னுரை

எறும்புகள் வரிசையாக போவதைப் பார்த்து நாம் வியப்படைந்ததுண்டு. நாம் அதை சில நேரங்களில் கலைத்துவிட்டு மகிழ்ச்சி அடைவதுண்டு. எறும்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை குலையாமால் போவதிற்கு  காரணம் வாசனைதான். 
வாசனையால் பின் தொடரும் எறும்பு
முன்னாள் போகும் எறும்பு ஒருவித வாசனையை தரையில் அல்லது சுவரில் விட்டுச் செல்கிறது. பின்னால் வரும் எறும்புகள் அந்த வாசனையை முகர்ந்து கொண்டு ஒரே வரிசையாக செல்கின்றன. எறும்புகள் வரிசையாக செல்வதை  நீங்கள் பார்த்தால் அவற்றின் பாதையில் ஒரு இடைவெளி கிடைத்தால் அந்த இடத்தை தேய்த்து விட்டால், அப்போது அங்கு வரும் எறும்புகள் சற்று தடுமாறும். முன்னால் சென்ற எறும்பு விட்டுச் சென்ற அதற்கு வாசனை கிடைக்காமல் போவதுதான் இதற்கு காரணம். எறும்புகளுக்கு கண் உண்டு. ஆனாலும் வாசனையை வைத்துதான் வரிசையாக செல்கின்றன. 
ஒற்றுமையே பலம்
  ஒற்றுமையே பலம் சொன்னது நாம் தான். ஆனால் நாம் ஒற்றுமையாக இருக்கிறோமா என்றால் அது கேள்விக்குறிதான். ஆனால் மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களும் ஒற்றுமையாகத் தான் இருக்கின்றன. எறும்பைப் பார்த்தோம் என்றால் அது நமக்குப் புலப்படும்.அவற்றை போன்று ஒழுங்கான உயிரினத்தை பார்ப்பது கடினம். எல்லாமே மிகவும் சிநேகிதமாக இருக்கக்கூடியவை. எறும்புகள் தங்கள் கூட்டுக்குள் பூச்சிகளை கட்டிப்போட்டு வளர்கின்றன. சில எறும்புகள் மற்ற எறும்புகளின் கூட்டுக்குள் சென்று அங்கிருக்கும் எறும்புகளை கடத்தி வந்து அடிமைகளாக வைத்துக் கொள்கின்றன. 
ராணுவ அதிகாரிகள் வியப்பு
 எறும்புகளின் செயல்களைக் கண்டு ராணுவ அதிகாரிகளே வியப்பில் ஆழ்ந்ததுண்டு. இவ்வளவு சிறிய உயிரினத்துக்கு இந்த ஒற்றுமையை யார் சொல்லித் தந்தார் என்று நாமே வியப்பில் ஆழ்வதுண்டு.அவற்றிலும் ஆக்கிரமிப்பு உண்டு. நமக்கு படைகள் அதற்கு அதிகாரிகள் இருப்பது போன்று ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா எறும்பு வகைகள், ராணுவ அதிகாரிகள் வியக்கும்படி, தங்களது படைகளை படு எச்சரிக்கையுடன் நடத்திச் செல்கின்றன. அவைகளில் முன்னணிப்படை, பக்கவாட்டுப் படை, ஒற்றர்கள் எல்லாம் உண்டு. 
எறும்புகளின் ஆயுதம்

உடவை கச்சிதமாக அடுக்கி வைக்க சின்னக்குச்சி, இலை நுனி போன்றவற்றை ஆயுதமாக உபயோகிக்கும் எறும்புகளும் உண்டு. இவை எல்லாமே கூட்டமாக இருக்கும் போதுதான். தனி எறும்பு என்று பார்த்தால் ஒன்றுக்கும் பயன்படாத பூஜ்யம்தான். எறும்புகளில் ஆயிரம் வகைகள் உள்ளன. பாலைவனத்திலும் எறும்புகள் உண்டு. கடற்கரையில், மலைச்சாரலில் காட்டில் என்று எல்லா இடத்திலும் (எவரெஸ்ட் சிகரத்தைத் தவிர) இருக்கின்றன. 20 அடி உயரத்துக்கு புற்றுகள் கட்டும் எறும்புகளும் உண்டு.

நாலடியார்

         Image result for நாலடியார்

அறியாமையை நீக்கும் மருந்து;

        பாடல்:

            இம்மை பயக்குமால்; ஈயக் குறைவு இன்றால்;              
            தம்மை விளக்குமால்; தாம் உளராக் கேடு இன்றால்;
            எம்மை உலகத்தும் யாம் காணேம், கல்விபோல்
            மம்மர் அறுக்கும் மருந்து.

          பொருள்;

                 கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும் பிறர்க்குத் தருவதால் குறைவாகாது கற்றவர் புகழை எங்கும் பரவச் செய்யும்.நம் உயிர் உள்ளவரை கல்வி என்றுமே அழியாது. அதனால் இந்த உலகத்தில் கல்வியைப்போல அறியாமையைப் போக்கும் மருந்தையாம் கண்டதில்லை.