இந்த உலகில் இலவசமாகக் கிடைக்கும் விஷயங்களில் ஒன்று அன்பு. நமக்குச் சிலரைப் பார்த்தவுடன் பிடித்துவிடும். அவர்கள் மீது அளவு கடந்த அன்பு உருவாகும். ஆனால் அந்த அன்பு நமக்கு மீண்டும் கிடைக்காது என்று தெரிந்தும், அவர்கள் மீது செலுத்தும் அன்பைத் தடுக்கமுடியாது. அவர்கள் மீது நாம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்வோம் ஆனால் அவர்களுக்கு நாம் ஒரு முக்கியமான நபராக இருக்கமாட்டோம்.அதனால் யாரிடமும் அன்புக்காகப் பிச்சை எடுக்காதே. நீ தனித்து இருந்தாலும் தனித்துவமாக இருக்க செய்ய வேண்டியவற்றைச் செய். இருள் நிறைந்த பாதையில் தோன்றும் ஓளிபோல உன் வாழ்க்கையில் உனக்காக ஒருவா் உன்னிடம் மட்டுமே அன்பு செலுத்தக் காத்துக்கொண்டு இருப்பார்.
சனி, 5 அக்டோபர், 2019
அன்பு
இந்த உலகில் இலவசமாகக் கிடைக்கும் விஷயங்களில் ஒன்று அன்பு. நமக்குச் சிலரைப் பார்த்தவுடன் பிடித்துவிடும். அவர்கள் மீது அளவு கடந்த அன்பு உருவாகும். ஆனால் அந்த அன்பு நமக்கு மீண்டும் கிடைக்காது என்று தெரிந்தும், அவர்கள் மீது செலுத்தும் அன்பைத் தடுக்கமுடியாது. அவர்கள் மீது நாம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்வோம் ஆனால் அவர்களுக்கு நாம் ஒரு முக்கியமான நபராக இருக்கமாட்டோம்.அதனால் யாரிடமும் அன்புக்காகப் பிச்சை எடுக்காதே. நீ தனித்து இருந்தாலும் தனித்துவமாக இருக்க செய்ய வேண்டியவற்றைச் செய். இருள் நிறைந்த பாதையில் தோன்றும் ஓளிபோல உன் வாழ்க்கையில் உனக்காக ஒருவா் உன்னிடம் மட்டுமே அன்பு செலுத்தக் காத்துக்கொண்டு இருப்பார்.
வெள்ளி, 4 அக்டோபர், 2019
கருமை நிறக் கண்ணா
கருமேகம்தான் மழையை உண்டாக்கும்
கரும்புதான் சுவையை உண்டாக்கும்
கரங்கள்தான் உழைப்பை உண்டாக்கும்
கரும்பலகைதான் கல்வியை உண்டாக்கும்
கருமுடி தான் அழகை உண்டாக்கும்
கருநிறம் தான் ஈர்ப்பை உண்டாக்கும்
கருவிழி தான் காட்சியை உண்டாக்கும்
கற்பு தான் பெண்மையை உண்டாக்கும்
இவையனைத்தும்
கருக்கொண்ட இடம் எங்கோ
அறியவில்லை
இடம் கொண்டது
உன்னில் தான் என் கண்ணா
வியாழன், 3 அக்டோபர், 2019
எவன்
ஆளக் கற்றவன் மன்னன்
ஆளாக்கியவன் தகப்பன்
அடைகாத்தவன் தோழன்
அருளியவன் சிவன்
இறுதியில் நம்மை அழைப்பவன் எமன்
செவ்வாய், 1 அக்டோபர், 2019
பூ மகளே
பூமியின் வெப்பத்தினால்
பனிமலை உருகவில்லை ஏனோபூமகளின் வெட்கத்தினால்
படைத் தலைவனும் மிரளுகிறான்
உணர்வுகள் உள்ளத்தைத்
தெளிவடையச் செய்கின்றன
உன் கண்களோ
வீரத்தை உதிரியாய்ச் சரிக்கின்றன
திங்கள், 30 செப்டம்பர், 2019
பணிவு
எங்கு சென்றாலும் பணிவோடு நடக்கக் கற்றுக்கொள்
ஏனெனில் பணிவே பல இடங்களில் பாராட்டைத் தேடித்தரும்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
