புதன், 12 பிப்ரவரி, 2020

பவித்திரம்


12.உணர்ந்துவிட்டேன்
காலம் கடந்து நான் வந்துவிட்டேன்
காகம் கரையும் நான் உணர்ந்துவிட்டேன்
காதல் கடந்து நான் வந்துவிட்டேன்
கல்லும் கரையும் நான் உணர்ந்து கொண்டேன்.

13.மெய்தான்
கண்மூடித் திறக்கும் போதெல்லாம் நீ வந்தாய்
கண்னென்பதின்றியும் நீ என் நெஞ்சில் நின்றாய்
கண்கள் சொல்வது பொய்யானாலும்
கண்ணே நீ என்னை வென்றது மெய்தான்
இனி நம் வாழ்வோ தீபம் ஏற்றிய நெய்தான்

14.உன் பாசம் அறிந்தேன்
உன்னைக் கண்ட நொடியினிலே
நான் உனதானேன்!
உன்னைக் காணாத வலியினிலே
நான் உயிர் சாய்ந்தேன்!
உயிருறுகும் நிலையினிலும்என்
உள்ளிதையம் சொன்னதே
உன் பெயரையமனும் தவறிவிட்டான்
பாசக் கயிற்றை – நானும்
அறிந்து கொண்டேன்உன்
திடமான பாசக் கயிரை உயிரே.

15.தாமதம் வேண்டும்
உன் விழியால், நான் வீழ்ந்ததும்
என் வழியில், நீ நடந்ததும்
நம் காலத்தை, நாம் வென்றதும்
நம்முள் நாம் இணைந்ததும்,
நாமே இணையானதும், நம் இதயம்
நம்மைத் துறந்ததும், சிறகைக் கொண்டு
பறந்ததும்
நம் கனவில் நாம் கரைந்ததும்
காதல் அல்லவா
இனியும் தாமதம் இன்றி என்னை
அள்ளிச் செல்ல வாதலைவனே!.

16.உன்னை நான் சந்திக்கிறேன்
நான் சிந்திக்கும் ஒவ்வொரு நொடி சிந்திப்பிலும் நீ
என்னைச் சந்திக்கிறாய் நிலவாக
இவ்வுலகமே மாறியதே இருளாக! – என்னுடன்
இணைந்திடவே நீ வர வேண்டும்என்
ஜீவனின் ஒளியாக என் ஏழு
ஜென்மத்தின் வரமாக
காலங்கள் கரைந்து ஓடினாலும்,
கவிதையில் வரிகள் மாறினாலும்,
உன்னுள்தான் நான் வாழவேண்டும்
உன்னைத்தான் நான் உணரவேண்டும்
உயிரெங்கே ஓடினாலும்..
உறவெல்லாம் வாடினாலும்..
உன்னுள்ளத்தில் உயரவேண்டும்
உன் மடியில்தான் விழவேண்டும்..

17.நீங்காது
என்றும் நீங்காது உன்
நினைவு என்னுள்ளும்
என் நிறைவிலும் கூட.

பவித்திரம்


7.தனிமை
நான் தனி மரம்தான்
தனிமையும் ஒரு வரம்தான்
பல கிளைகளை நான் படைப்பேன்
பாசங்களை நான் கொடுப்பேன்
நேசமதைக் கோலைப் போட்டு
                     நந்தவன் சொல்லை ஏற்று  
நாளுமதை நான் வளர்பேன்
நல்லதொரு உலகம் படைப்பேன்

8.எண்ணம்
பாக்களின் பலவகை
புன்னகை ஓர் புதுசுவை
பூக்களில் பல மணம்
பதறுமோ என் மனம்
சலிக்கிறது ஏழு வண்ணம்
விழிக்கிறது உன் எண்ணம்..

9.காதல்
உன்னை நான் காதலித்த நாட்கள்
கடந்துவிட்டது
என்னை நீ கண்ட காட்சியெல்லாம்
கலைந்துவிட்டது
நாம் கொண்ட கனவெல்லாம்
கரைந்துவிட்டது
நம் காதல் மட்டும் மீண்டும்
ஏனோ, மலர்ந்துவிட்டது

10.மனமே நீயாக
நானும் கூடப் பார்த்ததில்லைஅந்த
மனம் என்னும் ஒன்றைஅதை
மறக்க நினைத்த நேரத்திலேதான்
தெரிந்தது, என் மனமே நீ என்று
தவித்தேன் உயிருடன், மறந்தேன் நான்
மறக்க நினைத்த நிகழ்வினைக் கூட

11.துணையானது
சில நினைவுகள் சிறிதாயினும்,
பல நினைவுகள் பெரிதாயினும்,
உன் நினைவுகளுடன் என் உயிர் சாயனும்
நாம் காதலில் மலர்வளையம் சூடனும்
காதல் அழியாதது, கனவோ களையாதது
மனமோ மாறாதது உன் நினைவே துணையானது


செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

பூப்போல ஒரு சிரிப்பு


பிரேமா மெய்யப்பன் 
முதுநிலை இரண்டாமாண்டு கணிதம்


வாழ்க்கையில் முயற்சிகள் தவறலாம். ஆனால் முயற்சிக்க தவறலாமா?
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் (குறள்).
முயற்சி திருவினை ஆக்கும் (ஆன்றோர் வாக்கு)

திங்கள், 10 பிப்ரவரி, 2020

மடல்

     சங்ககாலத்தில் காதலில் ஏமாற்றம் உற்ற ஒருவன் தன்னைத்தானே வருத்திக்கொண்டு உயிர்விடத் துணிவதாகப் பாடும் துறை “மடல்” எனப்படும். பனை மடல்களால் குதிரை வடிவம் செய்து அதன்மேல் இருந்து தன் காதலியின் உருவத்தைத் தீட்டிய படத்தை ஏந்தி, ஊரார் நடுவே நின்று உண்ணா நோன்பு கிடந்து அழியத் துணிவதாகப் பாடும் கற்பனைத் துறை இது. தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் வழக்கம் ஆண்களுக்கு மட்டுமே உண்டு பெண்களுக்குப் பொருந்தாது என்ற மரபு உண்டு. ஆனால் அதற்கு மாறாகத் திருமங்கையாழ்வார் தம்மை நாயகியாகவும் திருமாலை நாயகனாகவும் கொண்டு பாடுமிடத்தில் அங்கே பெண்ணே காதல் கைகூடப் பெறாமல் ஏங்குவதால் மடல் ஏறும் முயற்சி பெண்ணுக்கு உரியது என்று சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகிய இரண்டு மடல் பாட்டுகளிலும் நாயகி மடல் ஏறும் முயற்சியே உள்ளது என்று திருமங்கையாழ்வார் கூறியுள்ளார்.

பவித்திரம்

1) எனது உனது
தன்னந்தனி வலிகள் எனது
எனக்குத் தன்னிகரில்லா உறவு உனது
மங்கைக் கனி மனது எனது
என்னை மாயம் செய்யும் மாமம் உனது
மண்வாச மாளிகை எனது 
இந்தப்  பொன்வாசப் பெண்மை உனது
கனாக்காணும் கண்கள் எனது
என்னைக் கைது செய்யும் படைகள் உனது
உன்னை எண்ணிய எண்ணம் எனது
உரைக்கின்ற உரிமை உனது
தவிக்கின்ற தனிமை எனது
அதைத் தவிர்க்கின்ற வலிமை உனது

2) எவன்
ஆளக் கற்றவன் மன்னன்
அடக்கக் கற்றவன் தலைவன்
ஆளாக்கியவன் தகப்பன்
அடைகாத்தவன்
அருளியவன் சிவன்இன்று என்னை
அழைக்கின்றவன் எமன்.

3) உன் வாழ்க்கை
உனது வாழ்க்கை உனது கொள்கை
உனது உரிமை உனது உலகம்
உய்வது நீ உயர்வதும் நீ
அழைப்பதும் நீ உணர்வாய் நீ
நின்னலம் உன் வளம்
உன்பலம் உனது மூலதனம்

4) உறவு
உறவுகள் கோடி சிறகுகள் வீசிப் பறக்கிறது
உனது இறகா அதனை மறக்கிறது
வறுத்தம் கண்டு வலிமை நின்று
வாழ்ந்தும் மாண்டு கிடக்கிறது

5) வலிகள்
நெஞ்சமெல்லாம் பஞ்சத்தில் ஆழ்ந்தது
உன் அன்பின் ஆதரவின்றி
கொஞ்சம் கொஞ்சம் பாசம் அறிந்தது
உன் பார்வை கனலில்
கெஞ்சக்கெஞ்ச நேசம் அறிந்து
உன் வியர்வைத் துளியில்
மிஞ்சமிஞ்ச வலிந்து நிறைந்தது
உன்னால் தான் வலிகளும் நேர்ந்தது
நேற்றைய நாளை காலம் மறந்தது
நேர்ந்ததை எண்ணி நெஞ்சம் கலைந்தது
இன்றைய நாளை ஏற்காது நின்றது
இறுதியில் தான் கண்கள் சிவந்தது
செம்மண்ணில் பனித்துளி வழிந்தது

6) வேண்டும்
இதழசைக்காமல் பேச வேண்டும்
இமைக்காத கண்கள் வேண்டும்
இசையின்றிப் பாடல் வேண்டும்
பகலிலும் நிலவு வேண்டும்
இரவினிலே வெப்பம் வேண்டும்
கண்ணீரில்லா அழுகை வேண்டும்
பரிமாறப் புன்னகை வேண்டும்
பசிக்கண்ட பாசம் வேண்டும்
ருசி கொண்ட நேசம் வேண்டும்
தாகமில்லாமல் தண்ணீர் வேண்டும்
தேகமெல்லாமல் செந்நீர் வேண்டும்
வேகமில்லா விவேகம் வேண்டும்
சோகமில்லா மனமும் வேண்டும்
சொர்க்கம் இப்புவியிலே வேண்டும்

கடமை

கடமையைச் செய்பவனுக்கு கவலை
விலகிப் போய் விடும் - அரவிந்தர்

பொன்மொழி

இன்றைய தினத்தைப்
புரிந்துகொள்ள
வேண்டும் என்றால்
நேற்றைய தினத்தை
நீங்கள் ஆராயவேண்டும்

தவறான முடிவுகள்

நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன
ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது
– பில் கேட்ஸ்

சனி, 8 பிப்ரவரி, 2020

அறிஞா்

பல அறிஞா்களுடன் உரையாடினால் நீயும் அறிஞனாவாய்.

உதடு ஒட்டாமல் உச்சரிக்கப்படும் குறள்

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் - (341)

ரோஜா

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும்
ரோஜாதான் கண்ணில் படும்;
முட்கள் இல்லை.
- கவிஞர் டிக்கன்ஸன்.

உண்மை

பொய் சொல்லிப் பரிசு பெறுவதை விட
உண்மையைச் சொல்லித் துன்பப்படுவதே மேல்.
ராக்ஃபெல்லர்.