பவித்ரா வெங்கடேசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பவித்ரா வெங்கடேசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 பிப்ரவரி, 2020

பவித்திரம்

82.கனவு
ஒரு நாள் கண்ட கனவு
ஒரு நாள் ஆகும் நினைவு
இருபால் கொண்ட துணிவு
நம் மனம் பெற்ற அமைவு
பெற்றதோர் திருமணம் என்ற உறவு.

83.நட்பு
கனம் கண்டு தயங்காதிருந்தால்
குணம் கண்டு மறுக்காதிருந்தால்
இனம் கண்டு வெறுக்காதிருந்தால்
இறுதிவரை இணைந்திருப்பவர்கள் மட்டுமல்ல
இரண்டு நிமிடம் பேசிச் சிரித்தவர்களும் மட்டுமல்ல
இமையசைக்கும் நேரத்தில் இழந்தவர்களும் நண்பர்கள் தான்

84.என்னுள்ளே எண்ணங்கள்
ஏதோ எண்ணங்கள் எண்ணுள்ளே தோன்றியதே
அதை எண்ணித்தான் பார்க்கையிலே
என்னைத்தான் காணலயே
விடியலையே காணாமல் என் விழிகள் இருக்கிறதே
இருளைத்தான் போக்கிவிட்டால் - என்
இதயம்தான் தவிக்காதே
எரிமலையே வெடித்தாலும் என்னுள்ளே
பனித்துளியாய்ப் பொழிகிறதே
பனிமலையே சரிந்தாலும்உன்
வெப்பம் என்னைக் கொல்கிறதே
சூரியனாய் நீ சுட்டெரித்தால்
சுகமாய் நான் செத்தொழிவேன்
நிலவாய் நீ ஒளிதந்தால்
நீங்காமல் நின்றிருப்பேன்
நீதிசொல்ல நீ வந்தால்
குற்றங்கள்தான் வாழாதே
நிஜத்தைச் சொல்லி நீ சென்றால்
என் மனமும் தான் வாடாதே
சொல்லாமலே உன் விழிசொல்ல
மெளனம் கொண்டு நீயும் ஏங்காதே

85.உன் நினைவு வேண்டும்
உன்னைப் பார்த்த சில நாட்கள் கடக்க நிலையாகும் 
இன்னேரத்தில் நீ என்னைப் பிரிய நேர்ந்த காரணம் என்னவோ 
அறிய மனமில்லை
உன் அன்பில் வாழவே இந்நொடியும் எனக்கு ஆசை கொள்ளை
அழாத விழிகள் உலகில் இல்லை அழுகின்ற விழிகள் உனக்கு
கொள்ளை புன்னகை தேடியதே உன்னை என் இடம் எங்கேயென
புலம்பலும் கூடியதே நீதானே என்
உன்னுள் உணா்வாய் வாழ ஆசைப்பட்ட என் இதயத்திற்கு
நினைவாய் வாழும் தகுதியேனும் கிட்டுமோ தெரியவில்லை
ஆனால் உன் நினைவோ என் நிறைவிலும் கூடநிற்கும்
நீண்டநாள் கனவு, நனவாகும் என்று எதிர்பார்ப்பது வழக்கம்
ஆனால், இன்று என் சிலநாள் நினைவு நீண்டகாலக்
கனவிலும் வேண்டும்
உறக்கத்தில் அணையா உயிராக
உணர்வில் உந்துகோலாக
உன் உறவு வேண்டுமடி என் உயிர்தான் வாடுமடி

86.தேடல்
உன்னைக் காணாத காரணமே
என் கண்கள் கலங்க
உன்னுள் வாழ்கின்ற உணர்வுகளே
என் காதல் சிறக்க
உன்னகம் சேர நாடுகிறேன்
உன்னைத்தான் - நான்
இங்கு தேடுகிறேன்

87.உன்னைத் தொடர்வேன்
தொட முடியாத உயரத்தை
நான் உன்னால் தொட்டேன் அன்று
இன்று உன்னுடன் தொடர்கிறேன்
என் உயிருடன் என்றும் தொடர்வேன்

88.வீழ்ந்தேன்
என் கண்கள் என்ன பாவம் செய்தன
உன்னைக் காணாது தவிக்கின்றன
என் நெஞ்சம் கொண்ட தவத்தின் வரவோ
உன் நினைவு கொள்கிறது
ஏன் பஞ்சம்? உன்னைக் காணாமலா
நீ சொல் கொஞ்சம் இதுவே முடிவா ?
நம் காதல் என்ன சிதறிய கடுகா
விரும்பியே விடத்தினை விழுங்கிவிடவா
வீரத்தை இழந்து வீழிந்தேன்  தலைவா

89.ஓடு
உயிர்வாழு உறவோடு
உன்னதம் உன் உயர்வோடு
உமக்காக விரைந்தோடு
வேர்த்தாலும் கரைந்தோடு
காற்றோடு கலந்தோடு
காயங்கள் கடந்தோடு
தலைகனம் தவிர்த்தோடு
சரிந்தாலும் நீ மீண்டும் எழுந்தோடு

90.சிறந்தது
குயிலின் அழகை விட
மயிலின் அழகு சிறந்தது
மயிலின் குரலை விட
குயிலின் குரல் சிறந்தது

பவித்திரம்

71.மீண்டும்  எழுவோம்
நிறைகுளம் இன்று
குறை நிலை எய்தியதே
கடந்தோடும் ஆறோ இன்று
காற்றாக மறைந்ததே
கடலாய் கொதித்தெழுந்தால்
கருமேகம் ஈட்டிடலாம்
கனமலையைக் கண்டிடலாம்
கடும்நிலையைப் போக்கிடலாம்

72.நான் என்செய்கிறேன்
ஏன் நான் பார்க்கிறேன்
ஏதோ நான் கேட்கிறேன்
எதையும் நான் இரசிக்கிறேன்
எங்கும் நான் வசிக்கிறேன்
எல்லாம் தன்னால் உந்தன் முன்னால்
எவையும் இனி உன் பின்னால்
இவை அனைத்தும் உன்னால்
உந்தன் கண்ணால்

                        73.நீ எந்தன் வரமே
தவமின்றிக் கிடைத்த வரமும் நீதான்!
தவமாகக் கிடைத்த வளமும் நீதான்!
தவிப்போடு கிடந்த வாழ்வில்
களிப்போடு காணவந்தாய்
கனத்தோடு கடந்த வழியில்
காற்றாகக் கடந்து சென்றாய்
துடிப்போடு குறுகிய நெஞ்சைத்
துயில்பாட குறையைக் கண்டாய்
துணையாகக் கூடவந்தாய்
இரையாக நானும் வந்தேன்
கரையேற்றி நீயும் வென்றாய்!

74.மகிழ்வோடு வாழ்வோம்
கண்ணுக்குள் தோன்றும் நிலவாய்
கனவினில் விடியும் பொழுதாய்
கவியிலும் அதுவே பொதுவாய்
கதையிலும் கற்பகப் புகழாய்
கடலினும் ஆழம் பெரிதாய்
அலையினும் அறிவில் புதிதாய்
வானின் உயரமும் அரிதாய்
பூமியின் பரப்பும் சிறிதாய்
அவ்வண்ணம் கையில்
இப்பூமிப் பையில்
வாழ்வோ பொய்யில் வசீகர மெய்யில்
உந்தன் செய்யில் எந்தன் சேயில்
தொடர்வோம்
என்றென்றும் மெய்யில் மகிழ்வோம்

75.அப்பன்
அதிகாலையில் அதிபதியாய்
அந்திமாலையில் அவையகளாய்
அன்றிரவின் நிலா அவளாய்
உன்னை மடி சேர்த்திடுவான்
அன்பு மனம் காட்டிடுவான்
அறிவு குணம் சூட்டிடுவான்
அமைதி வனம் ஆக்கிடுவான்
அய்யன் குறள் கூறிடுவான்
அன்னை மடி சார்த்திடுவான்
அழாய் எனச் சொல்லிடுவான் அன்பில்
அன்னையயே தோற்று இடுவான்

76.உலகம் உனதே
உண்மை சொல்லடா உன்முகம் எதுவென
உன்னைச் சொல்லடா என்முகம் புதிதென
உயர்வைக் கேளடா உச்சி எதுவென
உயிரே கேளடா உனதே பெரிதென
ஊரைப் பாரடா உறவுகள் எதுவென
உன்னைப் பாரடா உலகமே உனதென

77.என்னுடையான்
காந்தம் போன்ற கண்ணுடையான்
கட்டியணைக்கும் கரமுடையான்
காத்தல் என்னும் திறமுடையான்
காதல் கொள்ளும் மனமுடையான்
காலம் முழுதும் களைப்படையான்.

78.தவிப்பு
நீ சொல்ல நினைக்கிறாய்
நான் கேட்க இருக்கிறேன்
நீ சொல்ல மறுக்கிறாய்
நான் கேளாது தவிக்கிறேன்

79.உன்னுடன் கடக்கிறேன்
ஒரு நிமிடம் நான் உன் அணைப்பில் இருக்கையில்
பல ஜென்மம் கடக்கிறேன்
ஒரு நொடி நான் உன்னை விட்டுப் பிரியினும்
பல தலைமுறை இழக்கிறேன்
நீ உடன் இருந்தால் உறக்கமில்லை
உன் நினைவுகளுக்கோ இரக்கமில்லை
என்னைச் சிதைப்பதற்கு
இனி எல்லையில்லை - நாம்
நம் காதலை விளைப்பதற்கு

80.உன்னுடன் நானிருப்பேன்
உன்னுடன் வாழும்வரை உனக்கு உறவாக
வாழ்ந்தபின் உனது நினைவாக
நீ வளரும்வரை துணையாக
வளர்ந்து பின் தூணாக நானிருப்பேன்

81.இதயம் கொடுத்து
கலையான காதல் இருந்தால்
களையாத காதல் இருந்தால் - என்றும்
நிலையாக நீயும் இருந்தால் - உன்
நினைவோடு நான் உரைந்து கிடந்தால்
கடல் நீரில் மட்டும் அல்ல
கண்ணீரிலும் மீன் பிடிக்கலாம்
இதயம் கொடுத்து