படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 மார்ச், 2016

உன்னை உலக்கிற்கு அறிமுகம் செய்

   உன்னை உலகிற்கு அறிமுகம் செய்
 
Image result for அப்துல் கலாம்


v  துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு,ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே!

v  ஒரு முறை வந்தால் கனவு! இருமுறை வந்தால் ஆசை! பலமுறை வந்தால் லட்சியம்!

v  உலகம் உன்னை அறிவதைவிட உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்!

v  வெற்றி என்பது உன் நிழல் போல, நீ அதை தேடிப்போகவேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும்!

v  கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே. உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார்; காணாமல் போய்விடும்.




                          -டாகடர் அப்துல் கலாம்

ஞாயிறு, 6 மார்ச், 2016

மரகதப் புறா


                      Image result for மரகதப் புறா


 தமிழ்நாட்டின் மாநிலப்பறவையாக மரகதப்புறா உள்ளது.வெப்ப மண்டலத் தெற்காசியாவில் பாகிஸ்தானிலிருந்து இலங்கை வரையிலும்,கிழக்கே இந்தோனேசியா,வடக்கு,கிழக்கு ஆஸ்திரேலியா வரையிலும் காணப்படும் மனைவாழ் புறாவாகும்.இப்புறா பச்சைப்புறா எனவும், பச்சைஇறகுப் புறா எனவும் அழைக்கப்படுகிறது.இப்புறா ஐந்தடி உள்ள மரங்களில் கூடுக்கட்டி வாழ்கிறது.

மரகதப் புறாக்கள் தனித்தோ,இரட்டையாகவோ அல்லது சிறு குழுவாகவோ காணப்படுகிறது.இவை நிலத்தில் விழுந்த பழங்களை தேடி உண்ணுகிறது.இவை பெரும்பாலும் நிலத்தில் நடப்பதையே விரும்புகிறது.இவற்றின் கூப்பாடு மென்மையிலிருந்து வலுக்கும்.இவை மூக்கிலிருந்து "ஹு- ஹு- ஹுன்" என்று ஓசையிடுகின்றன.இவை கடந்த பத்து ஆண்டுகளில் முப்பது சதவீதம் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
.
 

திங்கள், 22 பிப்ரவரி, 2016

ஆசிரியர் பணியின் அடையாளம் எது?


அன்பான மாணவிகளுக்கு..



இன்று நான் வாசித்த பதிவுகளுள் மணம் கவர்ந்த பதிவு.




கலாம் தன் வாழ்நாள் முழுக்க நினைவு கூர்ந்த பெயர் லடிஸ்லாஸ்

சின்னத்துரை. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் விண்வெளி 

இயற்பியல் பாடம் போதித்த ஆசிரியர். தனது மரணத்துக்கு 9 நாள்களுக்கு

 முன்புகூட திண்டுக்கல் வந்த கலாம், தனது ஆசிரியர் சின்னத்துரையை 

சந்தித்து, கெளரவித்து நினைவுகளில் மூழ்கினார்.

91 வயதாகும் சின்னத்துரை, கலாம் பற்றி பெருமிதம் ததும்பப் 

பேசுகிறார்: 1952-54 இல் கலாம் என்னிடம் படித்தார். விண்வெளி 

இயற்பியலில் அவருக்கு கூடுதல் ஆர்வம். நிறைய சந்தேகங்களைக் 

கேட்டுக் கொண்டே இருப்பார். 

மூன்று மணி நேரம் பாடம் நடத்தி, பாடத்தை முக்கால் பாகத்தோடு 

நிறுத்தி விடுவேன். நிறைவுப் பகுதியை .....




தொடர்ந்து வாசிக்க...

வி.என்.எஸ்.உதயசந்திரன்: ஆசிரியர் பணியின் அடையாளம் எது?



நன்றி வி.என்.எஸ் உதயசந்தின்.

குறிஞ்சிப் பாட்டு கூறும் 99 மலர்கள்


1.காந்தள்
2.ஆம்பல்
3.அனிச்சம்
4.குவளை
5.வெட்சி
6.செங்கொடு வேரி
7.குறிஞ்சி
8.தேமாம்பூ
9.மணிச்சிதை
10.உந்தூழ்
11.கூவிளம்
12.எறுழ
13.சுள்ளி
14.கூவிரம்
15.வடவம்
16.வாகை
17.குடசம்
18.எருவை
19.செருவிளை
20.கருவிளம்
21.பயினி
22.வானி
23.குரவம்
24.பசும்பிடி
25.வகுளம்
26.காயா
27.ஆவிரை
28.வேரல்
29.சூரல்
30.சிறுபூளை
31.குறுநறுங்கண்ணி
32.குருகிலை
33.மருதம்
34.கோங்கம்
35.போங்கம்
36.திலகம்
37.பாதிரி
38.செருந்தி
39.அதிரல்
40.சண்பகம்
41.கரந்தை
42.குளவி
43.மா(புளிமா)
44.தில்லை
45.பாலை
46.முல்லை
47.கஞ்சங்குல்லை
48.பிடவம்
49.செங்கருங்காலி
50.வாழை
51.வள்ளி
52.நெய்தல்
53.தாழை
54.தளவம்
55.தாமரை
56.ஞாழல்
57.மௌவல்
58.கொகுடி
59.சேடல்
60.செம்மல்
61.சிருசெங்குரலி
62.கோடல்
63.கைதை
64.வழை
65.காஞ்சி
66.மணிக் குலை
67.பாங்கர்
68.மரா அம்
69.தணக்கம்
70.ஈங்கை
71.இலவம்
72.கொன்றை
73.அடும்பு
74.ஆத்தி
75.அவரை
76.பகன்றை
77.பலாசம்
78.பிண்டி
79.வஞ்சி
80.பித்திகம்
81.சிந்துவாரம்
82.தூம்பை
83.துழாய்
84.தோன்றி
85.நந்தி
86.நறவம்
87.புன்னாகம்
88.பாரம்
89.பீரம்
90.குருக்கத்தி
91.ஆரம்
92.காழ்வை
93.புன்னை
94.நரந்தம்
95.நாகப்பூ
96.நள்ளிருணாறி
97.குருந்தம்
98.வேங்கை
99.புழகு


சனி, 20 பிப்ரவரி, 2016

பேசாதிருப்பதனால்..!!


நான் பேசாதிருப்பதனால் 

ஊமையென்றோ..!!

உணர்ச்சிகளற்றவள் என்றோ

எண்ணிவிட வேண்டாம்.

உங்களைத் திருப்பதியிலாழ்த்தும்

பொய்களைப் பேச

நான் விரும்பவில்லை..!!

நான் அமைதியாக இருப்பதனால்

உங்கள் வாக்குறுதிகளை

நம்பிவிட்டதாக

முடிவுகளுக்கு

தலை சாய்த்து விட்டதாக

கருதிவிட வேண்டாம்..!!

இலாபத்தைப் பார்க்கும் உங்களுக்கு

நியாயத்தைப் பார்க்கும் எனக்கும்

ஒரு போதும் ஒத்துவராது..!!

உங்கள் தீர்மானங்கள் வேறு

என் தேவைகள் வேறு..!!

உள்ளதையெல்லாம்

விலை  பேசுவது

விற்றுச் சம்பாதிப்பது

சந்தை வியாபாரிகளின்

தொழில்..!!

என்னை விட்டு விடுங்கள்

வாழ்வை

உரிமையை

எந்த விலைக்கும்

என்னால் விற்க முடியாது..!!

விசத்தைக் கக்கிய படியே

பார்வைக்கு அழகாய் நெளியும்

பாம்புகள் நீங்கள்..!!

முட்களோடு தான் என்றாலும்

ரோஜாவாக

ஜீவிப்பவள் நான்..!!

Image result for ரோஜா பூ