சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

தன்னம்பிக்கை 2

  Image result for தன்னம்பிக்கை
  (தன்னம்பிக்கை தொடர்கிறது…)
   இந்த நிலையில் யாரிடம் யார் பேசுவது? இதுதான் பலரின் கேள்வி. சந்தோஷமாகப் பேசி எல்லாரும் சமாதானத்துடன் உறவுகொண்டாடினால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால் பெரும்பாலானோருக்கு அவர்களின் நாவில்தானே பிரச்சினையே இருக்கிறது.
  அப்படிப்பட்டவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்களிடம் அதிக ஜாக்கிரதையாகத்தான் இருந்தாக வேண்டும்.
  ஒவ்வோர் ஆண்டும் பாம்புகளால் கடிபட்டு இறப்பவர்களைவிட, தேனீக்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாம். தேனீ, மனிதனை ஒருமுறை கொட்டினால் அது தன் கொடுக்கை இழந்து விடுகிறது.
  ஆனால் கபட மனிதர்களின் நாவு, ஒருமுறை பேசியதும் அப்படியா விழுந்துவிடுகிறது. தனது வார்த்தைகளால் மற்றவர்களின் மனதை தொடர்ந்து நோகடித்துக் கொண்டால்லவா இருக்கிறது.

                                              (தொடரும்.)

சனி, 27 ஆகஸ்ட், 2016

தன்னம்பிக்கை 01


Image result for thannambikkai images

தன்னம்பிக்கை

   அளவோடு பேசினால் பல பிரச்சனைகளைத் தவிர்த்து விடலாம். பேச வேண்டியவற்றை மட்டும் பேசத் தெரிந்துகொண்டால் நேரத்தை மிச்சப்படுத்தலாம். கூடுமான வரையில் மவுனமாக இருக்கப் பழகிக் கொண்டால் பலரிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
   
  பேசிப்பேசி பெரிதாக என்ன கண்டுவிடப் போகிறோம்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நீங்கள் நியாயத்தைப் பேசினாலும்கூட, பல இடங்களில் உங்கள் வார்த்தைகள் அநியாய வார்த்தைகளாகத்தானே விமர்சிக்கப்பகின்றன.
   
  அண்ணனுக்குத் தம்பியிடம் பேச முடியவில்லை; கணவனுக்கு மனைவியிடம் பேசத்தெரியவில்லை; தந்தைக்கு மகனின் பேச்சில் உடன்பாட்டில்லை; பணக்காரனுக்கு ஏழையின் பேச்சில் அக்கறையில்லை; சந்தேகக்காரனுக்கு யாருடைய பேச்சிலும் நம்பிக்கை இல்லை.

                                       (தொடரும்)                       

சனி, 25 ஜூன், 2016

மாய மந்திரம்! இந்திர ஜாலம்!

Image result for maaya jalam photo



மாயா ஜாலாம் தொடர்கிறது..
அரசே நல்ல காட்சியை மங்களமாக முடிக்கவேண்டும் ஆகவே ஒரு திருமணக் காட்சியுடன் முடிக்க அனுமதி தேவை என்கிறான். உங்கள் மகளைப் போலவே அலங்கரிக்கப்பட்ட ஒரு மணமகளை வரவைக்கிறேன் என்றான். மன்னனும் திகைப்பிலிருந்து வெளியே வரவில்லை. ஆகவே என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்கிறான். ஒரு அழகான இளைஞன் மணப் பெண்ணுடன் வருகிறான். ஐயர் ஹோமம் வளர்த்து கல்யாணம் செய்துவைக்கிறார். எல்லாம் மாயாஜாலக் காட்சி போலவே நடக்கிறது. ஆனால் உண்மையில் மணப் பெண் போல வந்தது அவந்தி சுந்தரி. அவளை மணந்தவன் ராஜவாஹனன்.
கல்யாணம் முடிந்தவுடன், சூ! மந்திரக் காளீ! இரண்டு பேரும் மறைந்து போங்கள் என்கிறான். பெண்ணும் மாப்பிள்ளையும் அரண்மனையில் இருந்த ரகசிய சுரங்கக் கதவு மூலம் தப்பித்து ஓடிவிடுகிறார்கள். கதை எப்படிப் போனாலும் அந்தக் காலத்தில் மாயாஜாலக் காட்சிகள் அரண்மனையில் நடத்தப்பட்டதை நாம் அறிய இந்தக் கதை உதவுகிறது.

கயிறு வித்தை தவிர, மந்திரத்தால் மாங்காய் மரம் உண்டாக்குவது, கலர் நூல்களைப் பயன்படுத்தி (சூத்திர க்ரீடா) தந்திரங்கள் செய்வது, கணக்கு வித்தைகளைச் செய்வது, கைகளை லாகவமாகப் பயன்படுத்தி காசுகளை மறைப்பது (ஹஸ்த லாகவம்) முதலியன அக்காலத்தில் தந்திரக் காட்சிகளில் இடம்பெற்றன.
                                                                           (சுபம்)
குறிப்பு; எனவே மாயா ஜாலாம் என்பது நேரத்தை போக்குவது மட்டும் அல்லமல் ஒரு ஏமாற்று வேலையும் கூட…
                                நன்றி!!!!

புதன், 22 ஜூன், 2016

மாய மந்திரம்! இந்திர ஜாலம்!

                                                                     




Image result for maaya jalam inthara jalam photo





மாயா ஜாலாம் தொடர்கிறது..   

இதுபற்றி எண்ணி எண்ணிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தபோது, வித்யேஸ்வரா என்ற மந்திரவாதியின் தொடர்பு கிடைக்கிறது. அவன் உதவி செய்ய முன்வருகிறான். இருவரும் ஒரு திட்டம் தீட்டுகின்றனர். அதன்படி அவந்திசுந்தரி தனது தந்தை மானசாரனிடம் சொல்லி ஒரு மாயாஜாலக் காட்சியை ஏற்பாடு செய்கிறாள். அதில் அற்புதமான காட்சிகள் வருகின்றன.

தாரை ,தம்பட்டைகள் முழங்குகின்றன. ஒளி வெள்ளம் பாயும்போது விண்ணிலிருந்து பாம்புகளும் கழுகுகளும் இறங்குகின்றன. இரண்டு கழுகுகள் இரண்டு பாம்புகளைப் பிடித்துச் செல்லுகையில் மற்ற பாம்புகள் விஷம் கக்கி அரண்மனையை வலம் வருகின்றன. விஷ்ணுவானவர், நரசிம்ம வேடத்தில் வந்து இறங்கி ஹிரண்யகசிபுவைக் கிழித்து வதம் செய்கிறார். மக்கள் எல்லோரும் திகைப்புடன் பார்க்கையில் மந்திரவாதி மெதுவாக மன்னனிடம் சொல்கிறான்:
                                             (தொடரும்…)

செவ்வாய், 21 ஜூன், 2016

மாய மந்திரம்! இந்திர ஜாலம்!






மாயா ஜாலாம் தொடர்கிறது..                
           இந்த இந்திர ஜாலம் பற்றி 1300 ஆண்டுகளுக்கு முன் தண்டி என்ற கவிஞர் எழுதிய தசகுமார சரித்திரம் என்ற வடமொழிக் கதைப் புத்தகத்தில் ஒரு சுவையான கதை வருகிறது.
சுவையான மாய மந்திரக் கதை
மகத நாட்டில் ராஜவாஹனன் என்ற இளவரசன் வசித்து வருகிறான். அவனுடைய தந்தையை மாளவ மன்னன் மானசாரன் தோற்கடித்து காட்டுக்கு விரட்டி விடுகிறான். ராஜவாஹனன் தாய் தந்தையரின் அனுமதி கேட்டு நாட்டைச் சுற்றிப் பார்க்கப் புறப்படுகிறான். அவனுடன் வந்த பத்துப் பேரையும் இடையில் தவற விடுகிறான். பின்னர் அவன் மட்டும் தனியாகப் பயணம் செய்து உஜ்ஜையினி நகரை அடைகிறான். அதுதான் மானசார மன்னனின் தலை நகரம். அந்த மன்னனுக்கு அவந்திசுந்தரி என்ற அழகிய மகள் உண்டு.எதிர்பாராத விதமாக உஜ்ஜையினி நகரில் அவனுடைய பழைய நண்பனைச் சந்திக்கிறான். அவன், அவந்தி சுந்தரியின் தோழியைத் திருமணம் செய்துகொண்டு செல்வாக்குடன் விளங்குபவன். அவர்கள் மூலமாக அவந்தி சுந்தரியைச் சந்திக்கிறான். காதல் மலர்கிறது. ஆனால் தந்தையைக் காட்டிற்கு விரட்டிய மன்னனின் மகளைக் காதலிப்பதால் வெளிப்படையாக எதுவும் செய்ய முடியாது.இதுபற்றி எண்ணி எண்ணிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தபோது, வித்யேஸ்வரா என்ற மந்திரவாதியின் தொடர்பு கிடைக்கிறது. அவன் உதவி செய்ய முன்வருகிறான். இருவரும் ஒரு திட்டம் தீட்டுகின்றனர். அதன்படி அவந்திசுந்தரி தனது தந்தை மானசாரனிடம் சொல்லி ஒரு மாயாஜாலக் காட்சியை ஏற்பாடு செய்கிறாள். அதில் அற்புதமான காட்சிகள் வருகின்றன.


                                                                (தொடரும்..)