கவிதைத் தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைத் தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

பாசம்

மூலையில் நின்று எட்டிப் பார்க்கும்
முகம் காட்டாமல் அன்பு செலுத்தும்
கண்டதும் இயல்பு நிலைக்கு மாறும்
காரணமின்றி கண்ணீர் சிந்தும்
கஷ்டம் என்றால் உடனிருக்கும்
கனவிலும் கற்பனை செய்யும்
காதல் என்று பெயர் சொல்லும்
பிரிந்தாலும் பாசம் மாறாமல் இருக்கும்
.
.
.
.
அப்பாவாகவும், அம்மாவாகவும், ஆசிரியராகவும், உடன் பிறப்பாகவும், நண்பர்களாகவும் நம்மீது அன்பு செலுத்தும் அனைவருக்கும் நன்றிகள் பல கூற வேண்டிய தருணம். . . . . . .

புதன், 22 மார்ச், 2017

நம்பிக்கை



அண்ட வெளியில் சுற்றித் திரியும்
சூரியன், பூமி, நட்சத்திரம் யாவும்
தன்னைத்தவிர வேறு ஒருவரை
நம்பி இல்லை!
நண்பனே நீயும் உன்னை
முழுமையாக நம்பு
உன்னை வெற்றி கொள்ள
வேறொருவர் இங்கில்லை!

சனி, 18 மார்ச், 2017

கண்ணாடி

            Image result for கண்ணாடி      
நான் ஒரு கண்ணாடி நீ
சிரித்தால் நானும் சிரிப்பேன் நீ
அழுதால் நானும் அழுவேன் நீ
கோபம் பட்டால் நானும் கோவபடுவேன் நீ
அடித்தால் நான்  திருப்பி அடிக்க மாட்டேன்
ஏனென்றால் நான் உடைந்து விடுவேன்...

                                                                                                                

ஞாயிறு, 12 மார்ச், 2017

வாழ்க்கை


                              வாழ்க்கை

                                           

                        தானாக உயரும் வயது !!
                      விடாமல் துரத்தும் காலம் !!
                        தடுக்க முடியாத நேரம் !!
                      கடக்கத் துடிக்கும் இளமை !!
                      காலைத் தடுக்கும் சமூகம் !!
                       தொட வேண்டிய இலக்கு !!
                இத்தனை போராட்டம் தான் வாழ்க்கை !!
                                             

செவ்வாய், 17 ஜனவரி, 2017

பாரதம் யார் பிடியில். .??




நேற்றைய பாரதம்
ஆங்கிலேயர் பிடியில். ..!!

இன்றைய  பாரதம்
அரசியலின் பிடியில். ..!!

நாளைய பாரதம்
யார் பிடியில். ..???

இனியொரு விதி செய்வோம். ..!!!